இருவரில் நந்தித்தாதான் அதிகமாக பேசுவாள்.. அவள் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த இவனின் ராஜ்யத்தில் ‘இந்த பையன் இப்படி சம் போட்டான்.. எப்படி மார்க் எடுக்க போறானோ’ என புலம்பல் சத்தமாக.. ‘அத்தையும் நானும் ஷாப்பிங் போனோம்..’ ‘ஊரில், அம்மாக்கு கால் வலியாம்..’ என எல்லாபக்கமும் நடக்கும் விஷயங்கள் பற்றி, கணவன் கேட்க்கிறானோ இல்லையோ, இவளே பேசுவாள். ‘தாத்தாக்கு, BP அதிகமாகிடுச்சாம்.. விழுந்துட்டாராம் தோட்டத்தில்.. பொம்மு போன் செய்தார்..’ என எல்லாம் பேசுவாள்.
இன்று, மனையாள் அமைதியாக இருக்கவும்.. பசுபதியினால் எதோ இருக்கிறதென்று உணர முடிந்தது. “என்ன நந்து அமைதியா இருக்க..” என்றான் திருவாய் மலர்ந்து.
நந்தித்தா கணவன் கேட்டதே போதும் என “ச்சு, பெரியம்மா இன்னிக்கு.. ஒன்னு சொன்னாங்க” என்றாள்.
பசுபதி தன் லாப்டாப்’பினை ஷட்டவுன் செய்துக் கொண்டே.. “என்ன சொன்னாங்க” என சலிப்பாக கேட்டான்.
நந்தித்தா “உங்களை, சின்ன வயதில்.. ஊரில் கொண்டு வந்து விட்டுட்டாங்களாம்..” என பேச பேச..
பசுபதி “எப்போ.. என்ன சொன்னாங்க” என அதட்டினான்.
நந்தித்தா ஏதும் பேசாமல் பார்த்தாள், கணவனை.
பசுபதி “வேற என்ன சொன்னாங்க” என்றான் லேசாக பதட்டத்தோடு.
நந்தித்தா “உங்களுக்கு அம்மா மேல பாசம் ஜாஸ்தி, ஊரில் அவங்க உங்களை விட்டுட்டு வந்துட்டாங்க, நீங்க உங்க அம்மா கூட பேசவில்லையாம், நிறைய அழுதீங்களாம்” என சொல்ல சொல்ல..
பசுபதி “அஹ.. அப்படி எல்லாம் இல்லை, இந்த பெரியம்மாவிற்கு வேறு வேலையே இல்லை, பழசெல்லாம் கிளரிகிட்டு” என சொல்லிவிட்டு, பால்கனிக்கு எழுந்து சென்றுவிட்டான்.
நந்தித்தா அருகில் வந்து “உங்களுக்கு அம்மான்னா, அவ்வளவு இஷ்ட்டமா” என்றாள்.
பசுபதி “இதென்ன கேள்வி, சின்னத்தில் எல்லோரும் அப்படிதானே இருப்பாங்க.. அது எதோ சிறு வயதில்.. விடு, அதெல்லாம் ஒண்ணுமில்ல, எனக்கு தூக்கம் வருது” என சொல்லி.. அறைக்கு சென்றுவிட்டான்.
பசுபதி என்னமோ மனையாளிடம் தன்னை பகிர விரும்பவில்லை. ஒருமாதிரி, மரியாதை குறைவாக உணர்ந்தான். இதுவரை தன் தந்தை தன்னை அங்கேவிட்டு.. சென்றதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.. பத்து வயதில் நடந்திருந்தாலும்.. அவனுக்கு அது கெளவ்ரவ போராட்டமாகத்தான் இப்போது தெரிகிறது. அதனால், அப்போது தொடங்கி யாரையும் அவன் எளிதில் நம்பமாட்டான்.. ஏற்க மாட்டான். அதில் திவி மட்டும் விதிவிளக்கு. ஆனாலும், அவளுக்கே இதெல்லாம் தெரியாது.
இப்போதுதான் வந்திருக்கிறாள்.. நந்தித்தா. அதனால், தன்னை பற்றி அவளிடம் பேச.. சொல்ல ஒரு கூச்சம். என்னை அவள் என்ன நினைப்பாள்.. எதோ யாருமில்லாதவன்.. கொஞ்சமாக இறக்கம் காட்டினாலும் போதுமென எண்ணிக் கொள்வாள்.. என எண்ணிக் கொள்வாள்.. வேண்டாம்.. இந்த இறக்கம். அத்தோடு, பழைய கதைகள் எதற்கு தெரிய வேணும்.. நாளை ஏதேனும் பிரச்சனை என்றால், அதனை கொண்டு பேசவா.. இனிமையான எங்களின் எதிர்கால வாழ்வுதானே முக்கியம்.. என எண்ணம் அவனுக்கு.
ஆழ்மனதில் தனக்கானவர்கள் என யாருமில்லை என அவன் மனது பத்து வயதிலிருந்து நம்பி வருகிறதே… இந்த கணவன் மனைவி உறவு.. அவனின் மூளையில் இருக்கிறது மனதிற்கு வரவில்லை. அதனால் நெருக்கம் வரவில்லை, மனையாள் தன்னைபற்றி என்ன நினைப்பாள் என எண்ணத்தில் எதையும் சொல்ல தோன்றவில்லை அவனுக்கு. வந்து படுத்தவன், வலுக்கட்டாயமாக உறங்கினான்.
அவனின் மனையாளுக்கு.. கணவனின் இந்த ஒதுக்கம், நெருடியது. கணவன் மனைவி உறவில், இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தால்தானே எதிர்காலம் இருக்கும். எப்படி, ஒருவர் மற்றொருவரை.. தன் மனதுள் நெருங்கவிடாமல்.. உறவில் மட்டும் பங்கு கொள்வது.. என்பது சரியாக வராதே.. என நெருடுகிறது பெண்ணுக்கு. ஆனால், ஏதும் கேட்க முடியவில்லை. கணவன், அவளுக்கான உறவில் சரியாகத்தான் இருக்கிறான். இப்படி பேசமாட்டேன் என செல்பவனை எப்படி அவள் தெரிந்துக் கொள்வாள். குழப்பம்தான் எஞ்சியது நந்தித்தாவிற்கு.
நந்தித்தாவின் ப்ரியட்டு சைக்கிள் இன்று, இரவில் பெண்ணவள் இந்த நேரத்தில்.. எப்போதும் தன்னறையில்தான் உறங்குவாள். இன்றும் அப்படியே செய்ய.. கணவன், மனையாளை காணாது.. அவளின் அறைக்கு வந்தான், பசுபதி.
நந்தித்தாவிற்கு கணவனை தன் அறையில் பார்க்கவும் ஆச்சர்யம்.. “என்ன..” என்றாள் புருவம் உயர்த்தி.
பசுபதி லேசாக தலைகோதிக் கொண்டே “என்ன இன்னும் உன்னை காணோமேன்னு பார்த்தேன்” என சொல்லி கொண்டே அவளின் கட்டிலில் அமர்ந்தான்.
நந்தித்தா “ம்.. அப்படியா, போன மாசமெல்லாம் இப்படி யாரும் என்னை தேடவேயில்லையே” என்றாள் புன்னகையோடு.
பசுபதிக்கு சட்டென முகம் மாறிபோக “ச்சு..” என உச்சுக் கொட்டி எழுந்தான்.
நந்தித்தா கணவனின் கைபற்றிக் கொண்டு “சும்மா சும்மா சொன்னேன்” என்றாள். கணவனின் இந்த கோவத்தினை ரசித்துக் கொண்டே.
பசுபதி அமைதியாக அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.. மனையாளுக்கு வார்த்தைகள் தேவையாக இருக்கவில்லை.. அவன் தன்னை தேடி வந்ததே போதுமென கணவனின் தோளில் சாய்ந்தாள்.
“அட என்ன இது.. என்ன இது..
எனக்கே தெரியவில்லை..
இது பிடிக்கிறதா.. பிடிக்கலையா..
யாரிடம் கேட்டு சொல்வேன்..
இதை.. யாரிடம் கேட்டு சொல்வேன்..”
நாட்களும் வேகமாகவே கடக்க தொடங்கியது.. கணவன் மனைவி இருவரின் புரிதலில்லா நாட்களை.. நேர் செய்யும் கூடல்களோடு.
முன்போல.. அடைமழை இல்லைதான்.. ஆனால், அவ்வப்போது சாரல்கள் வீச.. மணவாழ்க்கை நிறைகுறையோடு சென்றது.
நந்தித்தா, தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களின் இறுதி தேர்வு நெருங்குவதால்.. அவர்களுக்கு அதிக நேரம் வகுப்பெடுக்க தொடங்கினாள். டெஸ்ட் வைப்பது.. அதை அவர்களை விட்டே கரெக்ஷன் செய்ய வைப்பது என கொஞ்சம் பிசியாக இருந்தாள்.
பசுபதியும் கம்பெனி ஆடிட்டிங் என் வெளியே செல்ல தொடங்கினான். முன்போல இருவருக்கும் நேரம் வாய்க்கவில்லை. அடையமழையான காதல் சற்று ஓய்ந்தது. இருவரும் காலையில் பேசிக் கொள்வதோடு சரி, அதிலும் பசுபதி வெளியூர் சென்றால் வருவதற்கு மூன்று நான்கு நாட்கள் ஆகியது.
ஆனாலும், வேலை சரியாக இருந்ததால் இருவருக்கும் தூரம் பெரிதாக தெரியவில்லை.
அன்று பசுபதி கிருஷ்ணகிரி சென்றிருந்தான், கம்பெனி ஆட்டிட்டிங் என. இது புது கம்பெனி இந்த வருடம்தான் தங்களிடம் வந்திருக்கின்றனர்.
முதல் இரண்டுநாட்கள் நன்றாக சென்றது வேலை.. மறுநாள் அவன் அந்த அந்த ஆபீஸ் அறையில் அமர்ந்திருக்க.. ஒரு பெண் குரல் “பஷூபதி.. எப்படி இருக்க” என்றது.
முதல்முறை அவன் சரியாக காதில் வாங்கவில்லை போல.. இரண்டாம்முறை “ஹேய் பஷூபதி” என்றாள் திவ்யா.
பசுபதி அந்த குரலை உணர்ந்து சட்டென திரும்பினான். எதிர்பாராத அதிர்வு அவனின் இதயத்தில் “திவி” என இதயம் முணுமுணுத்தது.
என்ன முயன்றும் அந்த சாதாரண பார்வையை அவனால் கொண்டு வர முடியவில்லை.. இதயத்தின் வேகம்.. அவனின் கண்களில் தெரிந்தது. ஜீவனில்லாமல் திவ்யாவை ஏறிட்டான்.
திவ்யா அப்படியே இருந்தாள்.. அவனை விட்டு செல்லும் போது எப்படி இருந்தாலோ.. அப்படியே இருந்தாள். முகத்தில் எதோ தெளிவு மட்டும் இப்போது புதிததாக வந்திருந்தது. மற்றபடி.. கொடியென உடல்வாகு.. அவன் ரசித்த மருண்ட விழிகள்.. புன்னகைக்கும் இதழ்கள்.. என திவ்யா அவனை புன்னகையோடுதான் எதிர்கொண்டாள்.
அவனின் எதிர் சேரில் வந்து அமர்ந்தாள் பெண்..
பசுபதி, அவசரமாக அவளின் கழுத்தில் தாலி செயின் இருக்கிறதா என ஆராய்ந்தான்.. ம்கூம் இல்லை. ம்.. அவள் அவனை விட்டு செல்லும் போது எப்படி இருந்தாலோ அப்படியே இப்போதும் இருந்தாள்.. சின்ன செயின் அணிந்துக் கொண்டு இருந்தாள். பொறுமையாக எதிரில் அமர்ந்தவள்.. “கல்யாணம் ஆகிடுச்சி போல..” என்றாள்.
பசுபதிக்கு, அதிர்ச்சிதான் பதில் சொல்ல கொஞ்சம் சங்கடமாக இருந்தது. தலையசைத்தான்.
திவ்யா “எப்படி இருக்க..” என்றாள்.
பசுபதி கொஞ்சம் சுதாரித்திருந்தான் “அப்புறம் பேசலாமா.. இ..ப்போ.. வேலை இருக்கு” என்றான்.
திவ்யா “அப்படியா, அவங்க பார்க்கட்டும், வா.. என் கேபின் போலாம்.. கண்டிப்பா நான் உன்கிட்ட பேசனும்” என்றாள் உறுதியான குரலில்.
பசுபதிக்கு கடவுளை திடீரென மார்க்கெட்டில் கண்ட பக்தன் நிலை.. முதலில் இது கடவுள் என புரியவே நிமிடங்கள் ஆனது. அதை க்ரகிக்கும் முன்.. அவர் தன்னிடம் பேசுகிறார் என்றதும்.. இன்னும் அதிர்ச்சி. பசுபதி உறைந்து நின்றான்.
இப்போது, எல்லோரும் உள்ளே வந்தனர்.
திவ்யா “வாங்க சர், என்னோட கேபின் போலாம்” என அழைத்தாள்.
பசுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் ஜூனியர்களை பார்த்து “இதோ வரேன்” என சொல்லி திவ்யாவின் கேபின் சென்றான்.