உயிரின் துளி காயும் முன்பே   Final

சுமதி சொல்லச் சொல்லப் பூஜை அறையில் கர்மசித்தயாக அனைத்தையும் செய்துகொண்டிருந்தாள் அலக்நந்தா, ஓரமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே புன்னகையோடு பார்த்திருந்தான் வேந்தன், அவன் மனைவியாக அவன் வீட்டில்.

விளக்கேற்றும்போது விரல்கள் மெலிதாக நடுங்கியது உடனே அவள் அருகில் நெருங்கியன் தன் கையால் அவள் விரல்களைப் பற்றிக்கொண்டான்.

விலகி நின்றிருந்த பாதுகாப்பு உணர்வும் தைரியமும்  சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டது அவன் அழகியை, நிறைந்த புன்னகையோடு விளக்கேற்றி மன நிறைவோடு இறைவனை வணங்கினர்.

மித்ராவும் சச்சியும் வந்திருந்தனர் மித்ரா முதல் முறையாக இங்கு வருகிறாள், நந்தாவின் வருகைக்கும் தன்னுடைய வருகைக்கும் வித்யாசம் அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

தன்னுடைய தவறுக்கான தண்டனை என்று அமைதியாக நின்றுகொண்டாள், சுமதி நந்தாவிடம் ஒரு அறையைக் காண்பித்து ஓய்வெடுக்க கூறினார் “டிரஸ் மாத்திக்கோடா கொஞ்சம் நேரம் தூங்கி எழு  ஏதும் வேணும்னா என்னைக் கூப்பிடு” என்றார்.

சூர்யப்பிரியா அவர்களுடனே இருந்தாள் “நான் ஆண்ட்டிக்கு ஹெல்ப் பண்றேன் நந்தா நீ ரெஸ்ட் எடு” என்றவள் சுமதியுடன் சென்றாள்.

ஹாலில் சச்சியுடன் நின்றிருந்த மித்ராவை பார்த்த சுமதி “உள்ள போய் உன் தங்கச்சியோட இரு, குழந்தைகங்களுக்கு தூக்கம் வருது போல அவங்கள தூங்க வெச்சு நீயும் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று கூறிவிட்டு அடுக்களைக்குள்  சென்றுவிட்டார்.

அவளை உதவிக்குக் கூப்பிட அவருக்கு மனம் வரவில்லை,

அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டாள் நந்தா “அவங்களுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்” என்க.

 “எனக்குப் புரியுது நந்தா, அத்த இவ்ளோ பேசுவாங்கன்னு கூட நான் நினைக்கல, உனக்காகத்தான் இதைக்கூட செய்றாங்க எனக்கு அது தெரியும், நான் ஏற்படுத்தின காயம் பெருசு சீக்கிரம் ஆறது நீ இதெல்லாம் யோசிக்காத கொஞ்சம் நேரம் படு”.

“இல்லக்கா தூக்கம் வரல”.

“அப்படிதான் இருக்கும் சும்மாவாது கொஞ்சம்நேரம் கண்மூடு” என்றாள்.

நந்தாவும் பிள்ளைகளுடன் படுத்துக்கொண்டாள், உடல் அசதி ஏ.சி யின் குளிர்ச்சி மனதின் சந்தோசம் என்று மெல்ல மெல்ல உறக்கம் அவளைச் சூழ்ந்தது.

மேலே அவன் அறையில் இருந்த பாரிவேந்தனுக்கு விழிகளை மூட முடியவில்லை, மனம் சந்தோஷத்தில் திளைத்துக் கிடந்தது என்ன செய்ய என்று தெரியாமல் அறைக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.

அலங்காரம் ஏதும் அற்ற அறை, எதுவும் தேவை இல்லை என்று கூறிவிட்டான் அவன் விருப்பத்திற்க்கே விட்டுவிட்டார் சுமதி

நந்தாவின் கையில் பாலை கொடுத்து அறை வாசல்வரை விட்டு வந்தாள் மித்ரா, படபடவென்று அடித்துக்கொண்ட இதயத்தை ஆழ்ந்த மூச்சுக்களில் அமைதிப்படுத்தி உள்ளே நுழைந்தாள்.

அறை வெறுமையாக இருந்தது அவன் இல்லாமல், பாலை பணி மூடிய சாலையில் முகம் கொள்ளா புன்னகையோடு அவன் நின்றிருக்கும் புகைப்படம் அவள் கருத்தைக் கவர்ந்தது.

அதன் அருகில் நெருங்கி ரசித்துப் பார்த்திருக்க கதவு தாழிடும் சத்தத்தில் திரும்பிப் பார்க்க அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

அவன் நெருங்கி வர வர இவள் கால்கள் நகர மறுத்தது பின்னில் வந்து தன்னோடு அவளைச் சேர்த்து நிறுத்தியவன் விரல்கள் வெற்றிடையில் அழுத்தம் கூட்டியது.

விழிகளை இறுக அவள் மூடிக்கொள்ள அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்துக்கொண்டு “இந்தப் போட்டோ நான் யு.எஸ் போன புதுசுல எடுத்தது” என்றான்.

சிரம் தாழ்ந்திருக்க இதழில் மெல்லிய புன்னகை விரிந்தது அலக்நந்தாவிற்கு, நாணத்தில் சிவந்த முகத்தில் வர்ணஜாலங்கள் கண்டான் அவன்.

“கார்ஜியஸ் அழகி” என்றவன் இதழ்கள் கழுத்தில் ஊர்வலம் போனது.

“என்னோட எத்தனை வருஷ கனவு தெரியுமா நீ” என்றான் காதலாக  “என் அழகி என்னோடு உண்மைதானே!! இப்போவாரைக்கும் உண்மையா கனவானு உள்ள தவிக்குதுடி” என்றவனின் வார்த்தைகளில் கூடக் காதல் நிறைந்து தளும்பியது.

அலக்நந்தாவின் விழிகள் விரிந்தது, தனக்குள் தோன்றிய அதே எண்ணம், காலைமுதல் இது கணவல்லவே என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டாள்… கழுத்தில் கிடக்கும் மஞ்சள் மணக்கும் தாலிக்கொடி உண்மை என்று உரக்க கூறிக்கொண்டிருக்கிறது.

அவன் கன்னத்தைக் கைகளில் தாங்கியவள் அவன் இதழில் தன் முத்தத்தைப் பதித்தாள், மயிலிறகாய் அவள் வருட வன்மையான முத்த யுத்தமாக மாற்றினான்.

“இந்தச் சந்தோஷத்தைக் கடக்க முடியலடி உள்ள என்னமோ பண்ணுது” என்றான் முத்தத்தில் மூச்சுமுட்டியவளை பார்த்து.

கைகளில் அவளை அள்ளிக்கொண்டவனுக்கு கால்கள் கூடக் காற்றில் மிதப்பதாகத் தோன்றியது.

அவளோடு கட்டிலில் சரிந்தவன் முகம் அவள் கழுத்தில் மையம் கொண்டு மஞ்சள் கயிற்றின் வாசத்தோடு அவளின் மணத்தையும் நாசியில் நிரப்பி அவனைப் பித்தம் கொள்ள செய்ததது.

“அழகி ஐ காண்ட் வெயிட், ஐ ஆம் லாசிங் மைசெல்ப்…. உனக்குள்ள தொலைஞ்சு உனக்குள்ள என்னைத் தேடணும், வில் யு அலவ் மீ” என்பவனிடம் என்ன சொல்ல.

அவளுடைய இறுகிய அணைப்பே அவனுக்கான பதிலை உரைத்தது, சேலை விலகிய நொடி பெண்மை விழித்துக்கொண்டது, நாணம் திரையிட்டது அவனைத் தடை செய்தாள் நங்கை.

“வேந்தரே வெளிச்சம்” என்றவள் வார்த்தைகள் அவன் இதழ்களுக்குள் சென்று சேர்ந்தது.

அவன் சிரிப்பில் தெரிந்தே செய்கிறான் எனபது புரிந்தது, அவனை விலக்கி “வேந்தரே வெளிச்சம் வேண்டாம் ப்ளீஸ்” என்க.

“அழகை இருட்டுள்ள எப்படி ஆராதிக்க, அதும் என் மனைவி பேரழகி ஆச்சே” என்றவனின் விரல்கள் அவளில் மெல்லிசை மீட்டிக்கொண்டிருந்தது.

“இங்க மச்சம் இருக்கு நீ சொல்லவே இல்லையே!! மச்சம் எல்லாம் இருட்டுல எப்படி தெரியும் எத்தனைன்னு எண்ணிக்குறேன்” என்று அவளைச் சிவக்க வைத்தான்.

கெஞ்சல்கள் எல்லாம் கொஞ்சலாக மாறியது, காத்திருந்து கைச்சேர்ந்த பொக்கிஷத்தை மொத்தமாகக் களவாடிக்கொண்டிருந்தான்.

நெஞ்சை விட்டு
வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ்
கொண்டதோ
உன்னை விட்டு
உடல் மீளவில்லை என்
கால்கள் வேர் கொண்டதோ
பூமிக்கு வந்த பனி
துளி நான் சூரியனே என்னை
குடித்துவிடு
யுகம் யுகமாய்
நான் எரிந்து விட்டேன்
பனி துளியே என்னை
அணைத்து விடு

உறவே உயிரே
உணர்வே நெஞ்சில் வரும்
காதல் வலி பூவில் ஒரு
சூறாவளியோ ஓஹோ

காடு திறந்து
கிடக்கின்றது காற்று
மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது

ஆதவன் வெளிச்ச பூக்களை வாரி இறைத்துக்கொண்டிருக்க பாரிவேந்தன் விழித்தே இருந்தான், அவன் மார்பில் தலை சாய்த்து உறங்கும் மனைவியின் முகத்தைப் பார்த்திருந்தான்.

தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள், மணியைப் பார்த்தான் ஆறு…  நான்கு மணிபோல உறங்க விட்டதாக ஞாபகம் “என்னடா செய்திருக்கிறாய்” என்று தலைகோதி புண்ணகைத்துக்கொண்டான், உடல் ஓய்விற்கு கெஞ்சியபோதும் உறங்க முடியவில்லை.

முதல் நாளே “லேட்டாக எழுந்துவிட்டேன்” என்று அவள் வருந்த வேண்டாம் என்று நினைத்தவன் “அழகிமா” என்று அவள் தலைகோத அவளிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.

மீண்டும் அழைக்க “தூக்கம் வருது வேந்தரே” என்று அவனுடன் ஒன்றினாள் “சரியாப்போச்சு இப்படி பண்ணின நீ தூங்கின மாதிரி தான்” என்று எண்ணியவன் மெல்ல எழுந்து குளித்துத் தயாராகி தன் லாப்டாப்போடு அமர்ந்துவிட்டான்.

சுமதி சாப்பிடுவதற்காக அழைக்க “மேல குடுத்துவிடுங்கம்மா” என்றுவிட்டான்.

அவரும் புரிந்துகொண்டு மேலே உணவை வைத்துவிட்டு வரச் சொல்லிவிட்டார், எட்டு மணிபோலக் கடினப்பட்டு கண் திறந்தவள் பார்வையை சுழற்ற இரவின் நினைவில் முகம் செம்மையுற்றது.

மீண்டும் பார்வையை சுழற்ற பால்கனியில் அமர்ந்திருந்தவன் பார்வை அவள் மீதே, கலைந்த ஓவியம்போல அவனைச் சுண்டி இழுத்துக்கொண்டிருந்தாள்.

குயில் கூவும் ஓசையில் திரும்பிப் பார்க்க எட்டு மணியை அறிவித்துவிட்டு உள்ளே ஒளிந்து கொண்டது கடிகார கூண்டுக்கிளி.

விழிகள் தெரிந்துவிடும் போல அதிர்ச்சியில் விரித்தவள் முகம் அழுகைக்கு மாறியது, உடனே அவள் அருகில் ஓடி வந்தவன் அவளைக் கைவளைவில் நிறுத்தி “ஷ் ஷ், என்ன??” என்க.

“நேரம் ஆச்சு முதல் நாளே இப்படி தூங்கிட்டேன் எண்ணப்பத்தி என்ன நினைப்பாங்க” என்றவளை தன்னை பார்க்க வைத்தவன் “மகன் வாழ்க்கை சந்தோஷமா ஆரம்பிச்சுருக்குனு சந்தோஷப்படுவாங்க”.

“இங்க யாரும் யாரையும் ஜட்ஜ் பண்ண போறதில்ல, பண்ணினாலும் என் மனைவியைப் பேசற கேள்வி கேக்குற உரிமை யாருக்கும் கிடையாது, கல்யாணம் முடிஞ்சு நம்மளோட முதல் நாள்… உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் நான் தோத்துட்டதா அர்த்தம் அழகிமா” என்க.

அவனை இறுக்கமாக அனைத்துக்கொண்டவள் “அழல” என்றாள்.

அவன் அணைப்பில் நின்றவள் “குளிக்கணும்” என்க.

“நான் ஹெல்ப் பண்றேன்” என்றான் உடனே “அய்ய ஒன்னும் வேண்டாம் நானே குளிப்பேன்”.

“என்ன அநியாயம் இது இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றவன் அவளுடன்  குளியலறை நுழைந்துகொண்டான்.

நந்தாவின் வீட்டிற்கு அன்று மதியம் சென்றனர் சச்சிதானந்தன் மித்ராவையும் அழைத்திருந்தார் ராஜசேகர், எதையும் மாற்ற இயலாது வீம்பாக இருந்து என்ன செய்யப் போகிறோம் என்றுவிட்டார்.

அண்ணணும் தம்பியும் இருக்க ராஜசேகரின் அழைப்பை ஏற்று சம்பத்தும் குடும்பத்தோடு வந்திருந்தான் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போனது பெண்கள் அனைவரும் சேர்ந்து சமைக்க விரைவாக வேலைகள் நடந்து முடிந்தது.

மருமகன்கள் எந்தப் பந்தாவும் காட்டாமல் அந்த வீட்டில் தங்களை பொருத்திக்கொண்டனர் சந்தோஷமாக உண்டு விடைபெற்றுச் சென்றனர்.

அன்றே அலக்நந்தாவை அழைத்துக்கொண்டு கடற்கரை வீட்டிற்கு சென்றுவிட்டான், அழகியும் வேந்தனும் மட்டும் ஒவ்வொரு நாளும் புதியதாக இனிமையாக உறக்கம் மறந்து இணையுடன் இழைந்து என்று ஒருவாரம் காற்றாகத் தவழ்ந்து சென்றது.

வண்டாலூர் வீட்டில் தங்கள் வாழ்வை தொடங்கிவிட்டனர் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர்.

மாமியாரும் மருமகளும் அலைப்பேசியில் கதைகள் பேசிக்கொண்டனர், சாரதாவும் அதிகம் இல்லை என்றாலும் அவளை அழைத்து நலம் விசாரிப்பார்.

மித்ராவும் இரண்டு குடும்பத்திடமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தாள், திருமணத்திற்கு பத்மாவை அழைத்திருந்தார்கள் வந்தவள் உடனே சென்றுவிட்டாள்.

இப்பொழுது மாதத்திற்கு ஒருமுறை சுமதியை வந்து பார்த்து அனைவரை பற்றியும் விசாரித்துக் கண்ணீர் சிந்தி சுமதியையும் மஹேந்திரனையும் கரைத்தாள்.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் பாரிவேந்தன் வேலை விஷயமாக யு.எஸ் செல்ல வேண்டிய தேவை வந்தது, அவளுக்குப் பாஸ்போர்ட் இருந்தது விசா அப்ளை செய்து பார்மாலிடிஸ் முடிந்து அவளுடன் யு.எஸ் பறந்துவிட்டான்.

ஆனால் அவனின் வேலை அவளுடன் அவனை இருக்க விடவில்லை ஏற்படு செய்த ஆளுடன் அமெரிக்காவை இரண்டு நாட்கள் சுற்றியவள் மூன்றாம் நாள் வரவில்லை என்று மறுத்துவிட்டாள்.

அவளின் உணர்வு புரிந்தது அவனின் வேலை அப்படி அதை விட்டு வரவும் இயலவில்லை, அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது  ஐந்து நாட்கள் வேளையில் மூழ்கிக் கிடந்தவன் அன்று இரவு வீடுவர நள்ளிரவை நெருங்கி இருந்தது அவனை அவள் பார்த்தே ஆறு நாட்கள் ஆகிறது.

குளித்து உடைமாற்றி வந்தவன் அவள் அருகில் அமர்ந்து பார்த்திருந்தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், அவளை நெருங்கி அணைத்து படுக்கப் பதறி விழித்தவள் அவன் வாசம் உணர்ந்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

விழிநீர் அவன் மார்பை நனைக்க என்ன சமாதானம் சொல்ல என்று தெரியாமல் மருகி நின்றான் “வேந்தரே உங்கமேல கோவம் இல்ல உங்க வேலை அப்படி எனக்குப் புரியுது, ஆனா நீங்க இல்லாம இருக்க முடியல”.

“நான் வீட்டுக்குப் போகவா நீங்கச் சீக்கிரம் வேலை முடிச்சுட்டு என்கிட்டே வந்துடுங்க எனக்கு இந்த ஊரே புடிக்கல” என்றாள் தேம்பிக்கொண்டே.

அழைத்துவந்து தனிமையில் விட்டுச் சென்றதற்கு சண்டையிடுவாள் என்று எண்ணியிருக்க வீட்டிற்கு போகிறேன் என்கிறாள் குழந்தையாக.