அத்தியாயம் -33

“ச்ச….. என்னய்யா நீ. திங்க போக…. திங்க போகன்னு….. என்னால சுத்தம் பண்ணி மாளல. இனி ஒரு நேர சாப்பாடு குறைச்சுடறேன் இரு” என்று கணவனை திட்டி கொண்டே பின்கட்டில் இருந்து முந்தானையில் கையை துடைத்து கொண்டே வந்தார் தனம்.

மலை, “ம்மா…. நான் அக்கா வீட்டுக்கு போறேன். புள்ளைங்க பிறந்தநாள் பங்சனுக்கு வர சொல்லிருக்காங்க. வேலை எதுவும் இருந்தா சொல்லு. முடிச்சுட்டு போறேன். போற வழில ரெண்டு பேருக்கும் செயின் வாங்கிட்டு போகணும் நேரமாகிடும்”.

“டேய் அந்த ஓடு……” என்று சொல்லும்போதே அங்கிருந்த இரும்பு பக்கெட்டை எட்டி உதைத்த மலை “ம்மா.,….. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அக்காவ அப்படி சொல்லாதன்னு.

மாமா நீங்க பார்த்து கட்டி வச்ச மாப்பிள்ளைதான் அது உங்களுக்கு நியாபகம் இருக்கா இல்லையா. சும்மா எப்போ பாரு ஓடுகாலி…ஓடுகாலி…. குடும்ப மானத்தை வாங்கிட்டான்னு.

அக்கா பண்ணுனது தப்பா நீங்க பண்ணுனது தப்பா. சும்மா கிளம்பற நேரத்துல என்னை பேச வைக்காதீங்க. எதாவது வேலை இருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லுங்க”.

“ம்ம்….. எல்லாம் என் நேரம் குஞ்சு குழவான் எல்லாம் என்னை அதிகாரம் பண்ணுது. அதான் அந்த மனுசன குளிக்க வச்சுட்டியே அப்புறம் என்ன போ” என சிடு சிடுக்க,

“அதை கொஞ்சம் சந்தோஷமா சொன்னாதான் என்னவாம். நீங்க வர்றீங்களா….”

“டேய் மறுவாதியா போயிடு. என்னை கடுப்பாக்காத”என்றவர் வீட்டு திண்ணையில் சென்று அமர்ந்து ஊர் கதை பேச ஆரம்பித்துவிட்டார்.

ஆம், சென்னப்பன் படுத்த படுக்கை ஆகிவிட, அவருக்கு வேண்டியதை செய்த தனத்திற்கு மூன்று நாட்களிலே சலிப்பு தட்டிவிட்டது.

“டேய் மலை பெட் வாடை அடிக்க ஆரம்பிச்சுரும்டா இவரை தூக்கி இரும்பு கட்டில்ல படுக்க போடு”என்றார்.

அடுத்த மூன்று நாளில் “இல்லப்பா இந்த கட்டில் துறு பிடிக்குது. ரூம் வேற ஒரு மாதிரி வாடை வருது. இவரை தூக்கி பின் கட்டுல தனியா இருக்க ரூம்ல கயித்து கட்டில்ல போடு. நான் போய் சுத்தம் பண்ணி வேணுங்கறதை பண்ணிக்கறேன்”என்றுவிட,

சென்னப்பன் சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்டார். மனைவி செய்கையில் எதுவும் கோபம் வந்து அவர் திட்டினால் அன்றைய நாள் முழுதும் கணவனை பட்டினி போட துவங்க, வேறு வழி இல்லாமல் அமைதியாகி ‘எப்படி இருந்த நான்…. இப்படி ஆகிட்டேன்……’ என்று தனக்குள்ளே புலம்பி கொண்டார்.

சென்னப்பன் ஆணவம் கொண்டு ஆடிய ஆட்டத்திற்கு தக்க தண்டனை கிடைத்துவிட்டது என்றுதான் தோணுகிறது. எந்த வாயால் உன் வாழ்க்கை ஹாஸ்பிடலில் முடிந்துவிடும்.

இனி படுக்கைதான் உன் வாழ்க்கை முழுதும் துணை என்று சொன்னாரோ இன்று அந்த வாய் மட்டும்தான் பேசுகிறது. உடல் தன் செயல்பாட்டை நிறுத்தி படுக்கை மட்டுமே அவருக்கு துணையாகி போனது.

தனம் இனி தன்னை மிரட்ட ஆள் இல்லை என்ற சுதந்திர உணர்வோடு திண்ணையில் அமர்ந்து ஊர் வம்பு பேச, சமைக்க சொன்ன மகனிடம் “என்னடா அவரை தூக்க முடியாம தூக்கி உட்கார வச்சு சாப்பாடு ஊட்டியே என் இடுப்பு எல்லாம் வலி எடுத்துக்கிச்சு இதுல எங்க நான் நின்னு சமைக்கறது. அடுத்த தெரு பர்வதம் அக்காவை சமைச்சு போட வர சொல்லியிருக்கேன்.

இனி வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. நான் அப்படியே மேல் பார்வை பார்த்துக்கிட்டு அந்த மனுஷனை பார்த்துட்டு இருக்கறேன்.

“ஹப்பா……” என்று இடுப்பை பிடித்து கொண்டு போனவர் ‘முன்ன மாதிரி வேலை எல்லாம் இப்போ செய்ய முடிய மாட்டிக்கிது.

மருமக வர்ற வரைக்கும் உசுரோட இருப்பனான்னு கூட தெரியல’ என்று புலம்பி கொண்டே செல்ல,

மலை தாய் சொல்வதும் சரிதான் என்று சம்மதம் சொல்லிவிட்டான்.

அக்கா வீட்டிற்கு கிளம்பி வந்த மலையிடம் “அடேய் போனமா வந்தமான்னு டக்குன்னு வந்து சேருடா. அப்பே ஆத்தால மதிக்காம போனவ நல்லவா இருப்பா…. நன்றி கெட்டவ. பெத்த அப்பன்னு கூட பார்க்காம இப்படி படுக்கைல படுக்க வச்சிட்டாய்ங்களே.

ம்கூம்…. என் தலையெழுத்து ஒரே பையனதான் பெத்தேன்னு நெனச்சு வாழ வேண்டியதுதான்” என்றவர் முணக,

மலையோ சில ஜென்மங்களை திருத்த முடியாது என்று நினைத்து பெரு மூச்சுடன் கிளம்பிவிட்டான்.

சத்யா வீடு அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் பங்சன் என்பதால் சிரமம் எடுத்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார் ஜெகன்.

குழந்தைகள் இருவருக்கும் ஒரே நிறத்தில் அழகாக உடையணிந்து கிளப்பி கீழே தாயிடம் கொண்டு வந்து கொடுத்த சத்யாவிடம் “மருமக பொண்ணு எழுந்துடுச்சாப்பா” என்று லதா கேட்க,

“ம்ம்…. எழுந்துட்டா ம்மா. ரெஸ்ட் எடுன்னு சொன்னா கேட்காம குழந்தைகளை ரெடி பண்ண வரேன்னு நின்னா. நான்தான் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லன்னு சொல்லி உட்கார வச்சுட்டு. நானே இவங்களை ரெடி பண்ணுனேன்”

“சரிப்பா. இந்தா”

“என்னம்மா….”

“பால்ப்பா மீனாக்கு போய் குடு. நான் குழந்தைகளை பார்த்துக்கறேன்”.
“அசோக் எங்கம்மா?”

“அதை ஏன் கேட்கிற. அது ஒரு பெரிய கதை. நீ மீனாவையும் பார்த்துகிட்டு, பங்சன் வேலையும் பார்த்துட்டு இருக்கறதால சொல்லல”.

“என்னாச்சுமா”

“நாம அன்னைக்கு பொண்ணு பார்க்க போனோமே…” என்றவுடன் அவன் முகம் இறுகியது. அன்று அவர்கள் மீனாவை பேசியதை எண்ணி.

“அந்த பொண்ணு திருச்சிக்கே போய் மாமாட்ட மன்னிப்பு கேட்டு. நான் அவரை ஒரு வருஷமா லவ் பண்றேன் எங்களை சேர்த்து வைங்கன்னு நின்னுருக்கு. அண்ணன் என் பையன் விருப்பம்னு சொல்ல, இந்த பொண்ணு அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கு.

இங்க வர்றதுக்கு கூட ஒழிஞ்சு ஒழிஞ்சு வந்தேன்னு சொல்லிட்டு குளிக்க போனான். ஆனா பாரு அந்த பொண்ணு நம்ம வீட்டு வாசல்லதான் நிக்குது” என்று சொல்ல,

புருவம் சுருக்கிய சத்யா சற்று நேரம் யோசித்துவிட்டு “அந்த பொண்ண உள்ள வர சொல்லுங்கம்மா. அசோக் வந்தவுடனே என்னை பார்க்க சொல்லுங்க”

“சரிப்பா” என்றுவிட்டு அவர் சென்றுவிட,

சத்யா யோசனையோடே தன் அறைக்கு சென்றான். அங்கு புடவை கட்டி கொண்டிருந்த மீனாட்சி கணவன் வரவை எதிர்பார்க்காததால் பயந்து கையில் பிடித்திருந்த முந்தானையை கீழே விட,

மனைவியை அந்த கோலத்தில் பார்த்தவன் அவள் முகத்தில் இருக்கும் பதட்டத்தை கண்டு ரசித்து அவளை சீண்ட எண்ணி “வாவ்….. மார்னிங் ஷோவா. ரொம்ப நாள் ஆச்சு….” என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி செல்ல,

பெண்ணவளோ வேகமாக முந்தானையை எடுத்து மேலே போட்டு “ஏ…ஏ….ங்க… வி…. வி…..விளையாடாதீங்க. நா…. நா….நான் கிளம்பிட்டேன். எ….எல்லாரும் வந்திடுவாங்க. போ….போய் நீங்க மு….. மு….முதல்ல கிளம்பி வாங்க” என்று திணற,

அவனோ மீனாட்சி அருகில் சென்று அவள் வெற்றிடையில் தன் கரத்தை அழுத்தமாக பதிக்க,

உடல் அதிர கணவனை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் ஆணவனின் தாப பார்வையில் மூச்சடைத்துதான் போனாள்”.

“ஏ…. ஏங்க….”

“ஷ்……” என்றவன் அவளை தின்று விடுவது போல் பார்க்க, அந்த பார்வையில் உடல் கூசி போனவள், தன் கரங்களால் அவன் கண்களை மூடி “எதுக்கு இப்படி பாக்குறீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று சொல்ல,

அவள் கையை தன்னில் இருந்து விலக்கியவன் “என்ன மாதிரிடி பொண்டாட்டி இருக்கு”என்று கேட்டு கொண்டே அவள் உடலில் அவன் கைகள் சுதந்திரமாக சுற்றி வர துவங்க,

அவளோ வெட்கம் கொண்டு “போங்க அதெல்லாம் எனக்கு சொல்ல தெரியல” என்றவள் சொல்லும்போதே அவன் கைகள் அவள் பெண்மையின் மென்மையை நோக்கி செல்ல,

அந்த கையை தடுத்து பிடித்தவள் “என் செல்ல புருஷன் இல்ல. லேட் ஆகிருச்சுங்க. எல்லாரும் வந்துடுவாங்க” என்க,

புருவம் உயர்த்தியவன் “பார்றா என் பொண்டாட்டிக்கு கொஞ்ச எல்லாம் தெரியுது” என்றவாறு அவள் நெற்றியில் இருக்கும் கட்டில் தடவி கொடுத்தவன் “சும்மாடி. எனக்கு உன் பக்கத்துல இருந்தாலே போதும். பயப்படாத.
ஆனாலும் இந்த பார்வை மாறவே இல்லைடி. இந்த பார்வதான்டி உன்னை வம்பிழுக்க தோணுது” என்றவனை தள்ளி நிற்க வைத்தவள் “தோணும்…. தோணும்.. போங்க எப்போ பாரு என்னை நோண்டிட்டே” என்றுவிட்டு செல்ல,

செல்லும் மனைவியை சிரிப்புடன் பார்த்த சத்யா “ஹேய் மீனுக்குட்டி. போ…. போ…. நைட் பார்த்துக்கறேன்” என்று சொல்ல,

அவனை திரும்பி பார்த்தவள் “ம்கூம்… வெறும் பேச்சுதான். காயத்தை பார்த்து வருத்தப்பட்டே நாள் போகுது இதுல பார்த்துக்க போறாராம். பார்த்துக்க வெறும் பேச்சுதான்….” என்று நாக்கை துருத்தி அழகு காட்ட”.

“எதே….. ஒன்னும் இல்லையா. உன்னை……பாவம் பொண்ணு அடிவாங்கி இருக்கேன்னு பார்த்தா. கிண்டலா பண்ற உன்னை….” என்று அவளை பிடிக்க போக,

“வவ்வ…வவ்வ……” என்றுவிட்டு அவள் அறையைவிட்டு ஓடிவிட, “கைல மாட்டுவல்ல அப்போ இருக்குடி பொண்டாட்டி உனக்கு” என்றவன் குரல் அவளை தொடர்ந்தது.

கீழே வந்தவளை பார்த்து முறைத்த ஸ்ரீ “ஹேய் மீனம்மா எதுக்கு இப்படி ஓடி வர்ற. மெதுவா வர மாட்டியா அடி பட்டிருக்க விஷயம் மறந்துட்டியா என்ன” என்று கோபம் போல் கேட்க,

“ஈஈஈ….. சாரிக்கா. எப்போ வந்தீங்க. அண்ணா, அஷ்வின் சார், கண்ணம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா. எங்க அவங்க” என்று பேசி கொண்டே போனவள் முகத்தில் இருக்கும் தெளிவையும், மகிழ்ச்சியையும் இது வரை ஸ்ரீ பார்த்தது இல்லை.

“ஹப்பா…. நான் பதில் சொல்ல கேப் விடும்மா. எல்லாரும் நல்லா இருக்காங்க. வெளிய டெக்கரேசன் வேலைய பார்த்துட்டு இருக்காங்க” என்று சொல்ல,

அப்போது “த்தி…..” என்று ஓடிவந்து அணைத்த தீரன் மகனை தூக்கி கொண்டவள் “என்னடா கண்ணா சித்திய பார்க்க வந்திங்களா” என்று கேட்க,

அவனும் அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி “ஆமா த்தி…ண்ணா…க்கா…. ங்க…” என்க,

அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் “அங்க பாட்டிகிட்ட இருப்பாங்க போய் பாருங்க” என்று அனுப்ப அவனும் அவர்களை தேடி ஓடிவிட்டான்.

ஸ்ரீ, “துரை ஒரு வாரமா அண்ணா…. எங்க…அக்கா எங்க…..சித்தி எங்கன்னு கேட்டுட்டே இருக்கான். அடிக்கடி மதுரை பக்கம் வந்திட்டு போகலாம்ல”என்று சொல்ல,

“நீங்களும் கோயம்பத்தூர் பக்கம் வரலாம்”என்றவாறு அங்கு வந்து சேர்ந்தான் சத்யா.

“ம்கூம்….. கேள்வி இங்க கேட்டா பதில் அங்க வருது. என்னப்பா நடக்குது இங்க”என்க,

அப்போது அங்கு வந்த தீரன் “என்னாச்சு எல்லாரும் இங்கயே நிக்கிறீங்க. கேக் கட் பண்ண டைம் ஆச்சு. நிதி போலாமா. நான் உன்னை வெளிய தேடிட்டு இருக்கேன். உள்ள போறேன்னு சொல்லிட்டு வரலாம்ல” என்று சொல்ல,

சத்யா சத்தமாக சிரிக்க ஸ்ரீ முகம் சிவந்து நின்றாள்.

சத்யா, “அடே அப்பா கொஞ்ச நேரம் கூட பொண்டாட்டி பக்கத்துல இல்லாம சார் இருக்கமாட்டாரு போலயே. இதுல எங்கள கலாய்க்கறது” என்று சொல்ல,

அங்கு வந்த அஷ்வின் “அடடா இந்த ஓல்ட் கப்பில் கோல்ஸ் தொல்லை தாங்க முடியல நாராயணா” என்க,

கண்ணம்மாவோ “சும்மா இருங்க எப்போ பாரு. அவங்களை வம்பிழுத்துகிட்டு டைம் ஆகிடுச்சு எங்க இன்னும் மலைய காணோம்”

“இதோ வந்துட்டேன் என்று உள்ளே வந்த மலை. சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”.

“சத்யா, “அதெல்லாம் ஒன்னும் லேட் ஆகல, வா போய் கேக் கட் பண்ணலாம். அம்மா…. அப்பா….அசோக்….” என்று அழைக்க,

அசோக் அங்கு வருவதை பார்த்த வெண்பா எழுந்து நின்று அவனையே பாவமாக பார்க்க, அவனோ அவளை கண்டு கொள்ளவே இல்லை.

சத்யா வெண்பாவை அருகில் அழைத்தவன் “உங்க குடும்பத்து மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்ல.
நாளைக்கு பொண்ணு பார்க்க வரோம்னு உங்க அம்மா, அப்பாட்ட சொல்லும்மா” என்க,

அசோக்கோ “சத்யா……” என்று ஏதோ சொல்ல வர,

“உனக்கு அந்த பொண்ண பிடிக்கும்னு எனக்கு தெரியும். சும்மா தேவையில்லாம எங்கள பத்தி யோசிச்சு. உன் வாழ்க்கைய கெடுத்துக்கத” என்க, அவனும் சரிஎன்றுவிட,

வெண்பாவிற்கு மிக்க மகிழ்ச்சி ஆகி போனது. உடனே அவள் அசோக்கை பார்க்க அவனோ யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான். அதில் முகம் சிவந்து போனவள் தலையை குனிந்து கொண்டாள்.

அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட, மீனாட்சியும், சத்யாவும் ஆளுக்கு ஒரு குழந்தையின் கையை பிடித்து கேக் கட் செய்தனர்.

மலை குழந்தைகள் இருவர் கழுத்திலும் செயினை மாட்ட, மற்றவர்களும் தாங்கள் வாங்கி வந்த பரிசை கொடுத்தனர்.

அந்த இடமே மகிழ்ச்சியாலும், குதூகலத்தாலும் நிறைந்திருக்க, அனைவர் முகத்திலும் சிரிப்பு நிறைவாக இருந்தது.

இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைக்கட்டும் என்ற வேண்டுதலோடு இவர்களிடம் இருந்து நாம் விடை பெறுவோம்.

நேசம் மறந்து போவாளோ…