உயிரின் துளி காயும் முன்பே – 15
மகனை எதிர்பார்த்து ஆசையாகக் காத்திருந்தார் சுமதி கணவன் மனைவி இருவரும் பிரிவியூ ஷோவிற்கு செல்ல வில்லை.
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நந்தாவிற்கு சூர்யபிரியாவிடமிருந்து அழைப்பு வந்தது, அலைபேசி அடிப்பதை பார்த்தாலும் அடமாக அவள் கையை விடாமல் அவன் இருக்க, இடக்கையால் போனை ஆன் செய்து செவியில் வைத்தாள் நந்தா.
“எங்க இருக்க நந்தா” என்ற சூர்யபிரியாவிடம் “வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன் பஸ்ல” என்றாள் இவள்.
“ஓஹ்” என்று சில நொடிகள் தயங்கியவள், “பாரி அண்ணா எங்கன்னு தெரியுமா” என்று கேட்க.
“ஐயோ! யார்கிட்டயும் சொல்லாமலே வந்துட்டாரா, இப்போ என்கூட இருக்கார் சொன்ன என்ன நினைப்பாங்க” என்று அவளைப் பதட்டம் சூழ்ந்தது.
அவளையே பார்த்திருந்தவன், அவள் கையில் இருந்த அலைபேசியை பார்க்கச் சூர்யபிரியாவின் எண், தன் கையில் அதை வாங்கிக்கொண்டவன் “சொல்லுமா” என்றான் அவளிடம்.
ஒருநொடி சூர்யாவுக்கு பேச்சே வரவில்லை, அவளால் எதையும் யோசிக்கவும் முடியவில்லை “ஹலோ” என்று அவன் மீண்டும் அழைக்க.
“அண்ணா நீங்க நந்தா கூடவா இருக்கீங்க” என்று கேட்டாள் அதிர்ச்சி விலகாமல், மெல்ல அரும்பிய புன்னகையுடன் அலக்நந்தாவை பார்த்தவன் “ஆமா” என்றான்.
“இங்க குடு” என்று அலைப்பேசியை வாங்கிய சம்பத் “டேய் நல்லவனே போகும்போது சொல்லிட்டு போக மாட்டியா” என்றான் காண்டாக.
“நான் என்ன சின்னக் குழந்தையா காணாம போக”.
“சரிதான்… எங்கடா இருக்க” என்க.
“பஸ்ல” என்று அவனுக்கு அதிர்ச்சி கொடுத்தான்.
“பஸ்லயா!? எங்க போற”.
“நானும் என் அழகியும் பஸ்ல வண்டலூர் போறோம், போதுமா? நை நைன்னு தொல்லை பண்ணாம போய் வேலையைப் பாரு” என்று துண்டித்துவிட்டு அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவள் எழுந்துகொள்ள, அவனும் எழுந்துகொண்டான் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை அங்கே, இருள் சூழ தொடங்கியிருந்தது.
“இனி என்ன” என்று அவள் தயங்கி நிற்க, அவளிலிருந்து விழிகளை அகற்றமுடியாமல் அவனும் நின்றான்.
“போட்டுமா” என்றவள் கேள்வியில் “ஹ்ம்ம்” என்றவன் அவள் செல்வதை அங்கேயே நின்று பார்த்திருந்தான்.
திரும்பி அவனைப் பார் என்று சண்டித்தனம் செய்த மனதை அடக்கி வீடிருக்கும் சந்தின் தொடக்கம் வரை நடந்தவள் அதற்குமேல் முடியாமல் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவள்மேல் பதித்த பார்வையை மாற்றாமல் நின்றவன் தலை அசைக்க உள்ளே நுழைந்தாள், ஆனால் இரண்டடியை கூட வைக்க முடியவில்லை அங்கேயே நின்றுவிட்டாள்.
உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு மனதை பிசைந்தது, வீட்டிற்கு சென்றுவிட்டால் பிறகு வெளியில் வர இயலாது, அவன் இன்னும் அங்கேயே நிற்பது அவளை ஏதோ செய்தது, வேறு ஒன்றும் சிந்தையில் ஓடவில்லை திரும்பி நடந்துவிட்டாள்.
அவள் அந்தச் சந்திலிருந்து வெளியில் வருவதை பார்த்தவுடனே அவன் முகத்தில் புன்னகை விரிந்தது, உப்ப் என்று மூச்சை இழுத்துவிட்டு தலை கோதிக்கொண்டான்.
அவனை நெருங்க நெருங்கக் கால்கள் பின்னியது “என்ன செய்கிறாய் அலக்” என்று தன்னையே கடிந்துகொண்டாள், “ஏன் இந்தத் தடுமாற்றம், என்ன நடக்கிறது எனக்குள்” என்று.
அருகில் வந்தவளின் கைப்பற்றி மறைவாக நிறுத்தியவன் அவளின் தாடை பற்றித் தன்னை பார்க்கவைத்தான், விழிகள் இரண்டும் பின்னிக்கொள்ள “உனக்குள்ள நான் வந்துட்டேன் அழகி இந்தத் தடுமாற்றம் அதனாலதான்” என்றான் நிறைந்த புன்னகையோடு.
உண்மைதானே மனம் முழுதும் நிறைந்து நிற்கிறானே, அந்தப் பெரிய விழிகளில் நீர் நிறைய தொடங்க தன் கைகளில் அவள் முகத்தைத் தாங்கியவன்.
“பத்து நாள் ஆச்சு வீட்டுக்குப் போய் அம்மா எனக்காக வெயிட் பண்ணுவாங்க, உன்கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் நினச்சேன், உண்மைல கார்ல வந்திருந்தாகூட இவ்ளோ நல்ல பீல் கிடைச்சிருக்காது” என்றவன்.
அவள் செவியின் அருகில் தன் இதழ்களைக் குவித்து “தேங்க்ஸ் போர் தி ஒண்டெர்புள் மெமோரப்பில் டே அழகி” என்க அவன் குரல் அவளை மொத்தமாக நிலை இழக்க செய்தது.
என்ன அவஸ்தை இது உடல் தளர்வதை போல அவள் நிலை உணர்ந்து “போ…. எனக்கு வண்டி வரும், நான் வீட்டுக்குப் போய்டுவேன் நீ கெளம்பு” என்றவன் விலகி நிற்க, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நடையில் வேகத்தைக் கூட்டி வீட்டை அடைந்தாள் அலக்நந்தா.
சம்பத் வாகனம் அனுப்பியிருக்க இவன் வீடு செல்லுகையில் நேரம் இரவு பதினொன்று, சோபாவில் மகனை எதிர்பார்த்து காத்திருந்து உறங்கிப் போயிருந்தார் சுமதி.
சத்தம் செய்யாமல் உள்ளே நுழைந்தவன் தன் அறை சென்று குளித்துக் கீழே வந்தான், உணவு வேண்டும் என்று தோன்றவில்லை பசியில்லை அதோடு இரவு அதிகம் உண்ணுவதில்லை அதனால் பால் மட்டும் சாப்பிடலாம் என்று வந்துபார்க்க கையில் பாலோடு கிச்சனிலிருந்து வெளியில் வந்தார் சுமதி.
பார்த்தவனுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது தாயை தனிமையில் தவிக்க விட்டிருக்கிறோம் என்று “மா” என்று அருகில் வந்தவன் கையில் அதைக் கொடுத்தவர் அமைதியாக உணவு மேசையில் அமர்ந்துகொண்டார்.
அவர் அருகில் ஒரு சேரை போட்டு அமர்ந்தவன் “மாக்கொஞ்சம் வேல இருந்தது அதான் வர முடியல” என்க.
“இது உண்மை இல்லனு உனக்கே தெரியும் பாரி, உங்க அப்பா மேல உனக்கு இருக்குற கோவம் இன்னும் போகல, பாவ புண்ணியம்னு உனக்கு விருப்பம் இல்லாம வீணாவை உனக்குக் கட்டி வெச்சுட்டோம்னு என் மேலயும் வருத்தம்”.
“அதான் இங்க வரத தவிர்க்குற எனக்குப் புரியுது, கல்யாணம் ஆயிட்டா உனக்கு அவளையும் அவளுக்கு உன்னையும் பிடிச்சுடும்னு நெனச்சுட்டேன் அது தப்பா போய்டுச்சு” என்றார் வருத்தத்துடன்.
பாரி அவரின் கையைத் தன் கரங்களுக்குள் பொதிந்து பிடிக்க “கல்யாணம் பண்ணிக்கோ பாரி உனக்கு அநியாயம் பண்ணிட்டேன்னு எனக்கே தெரியுது அந்தத் தப்ப திருத்திக்க ஒரு வாய்ப்பு குடேன்” என்றார் மகனின் முகம் பார்த்து.
தாயும் மகனும் பேசுவதை அறையின் வாயிலில் நின்று கவனித்தார் மகேந்திரன், இரு பிள்ளைகளும் விலகி நிற்பது இப்பொழுது அவரை மிகவும் தளர்த்தியது.
திடமாக இருந்த காலத்தில் செய்தது எல்லாம் சரியாகத் தோன்றியது, வயதான காலத்தில் தாங்கி நிற்க வேண்டிய பிள்ளைகள் தள்ளி நிற்க மிகவும் தனிமையை உணர்ந்தார் மகேந்திரன், யாருக்காக ஓடி ஓடி உழைக்கிறேன் என்ற வெறுப்பு வந்துவிட்டது அவருக்கு இப்பொழுதெல்லாம்.
பிள்ளைகள் தன்னோடு பேசிவிட்டால் போதும் என்ற நிலையில் ஏங்கி நிற்கிறார்.
“கல்யாணம் பண்ணிக்கிறேன்மா” என்ற மகனின் வார்த்தையில் இருவருமே மகிழ்ந்துவிட்டனர்.
“நாளைக்கே தரகர வரச் சொல்லவா” என்றவரை பார்த்துப் புன்னகைத்தவன்.
“அம்மா… அம்மா… கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இந்தத் தடவ எனக்குப் பிடிச்ச வாழ்க்கை மனசுக்கு பிடிச்சவளோட” என்க அவனை ஆச்சர்யமாகப் பார்த்த சுமதி.
“பாரி பொண்ண பாத்துட்டியா” என்க அவன் முகத்தின் புன்னகை இன்னும் விரிந்தது.
“யாரு” என்று அவர் ஆர்வமாகக் கேட்க மகேந்திரன் முழு கவனத்தையும் அங்கே பதித்தார்.
தன்னுடைய அலைப்பேசியை எடுத்தான், இன்று அவள் உள்ளே நுழைந்தது முதல் பல கோணங்களில் அவளைத் தன் கைபேசியில் சிறைப்படுத்தி இருந்தான்.
அதில் அந்தப் பெரிய விழிகளை விரித்து நிறைந்த புன்னகையோடு அவள் நின்றிருந்த புகைப்படத்தை அன்னையிடம் காண்பித்தான்.
பார்த்தவுடனே சுமதியின் மனதை நிறைத்துவிட்டாள் “ரொம்ப அழகா இருக்காடா பேர் என்ன பாரி” என்ற அன்னையிடம்.
“அழகி மா” என்றான் ரசனையாக.
மகனின் குரலிலே அவனுக்கு அவளை எத்தனை பிடித்திருக்கிறது என்பது விளங்கிவிட்டது சுமதிக்கு, எங்கேயோ பார்த்த முகம் என்ற யோசனையில் அவர் மீண்டும் மீண்டும் பார்க்கச் சட்டென்று பிடிபட்டது.
மகனை நிமிர்ந்து பார்த்தவர் “பாரி இது !..” என்க.
“ஹ்ம்ம், அலக்நந்தா உங்க மூத்த மகன் சச்சியோட மனைவி சங்கமித்ராவோட தங்கச்சி” என்று அலுங்காமல் இடியை இறக்கினான்.
அவர் அதிர்ச்சி விலகாமல் அவனைப் பார்க்க “ஐ காண்ட் ஹெல்ப் இட்மா, ஐ லவ் ஹேர் சோ மச், இந்தப் பாரி வேந்தனுக்கு மனைவியா ஒருத்தி வந்தா அது என் அழகி மட்டும்தான்”.
“உங்க பிள்ளை சந்தோசம் முக்கியம்னு நினைசீங்கன்னா அவளை எனக்குச் சொந்தமா ஆக்கிக்க கூட நில்லுங்க” என்றவன் எழுந்து மாடிப்படி அருகில் வருகையில் தந்தையை பார்த்தான்.
“சச்சியோட லைஃப்ல பண்ண தப்ப இப்போ பண்ண மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்” என்று கூறி சென்றான் அவரைக் கூர்மையாகப் பார்த்தபடி, மகனை அப்படியே பார்த்து நின்றார் மகேந்திரன்.
கணவனின் அருகில் வந்த சுமதி “என்னங்க” என்று அழைக்க.
சுமதியை பார்த்தவர் “அவங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க, நாம கொஞ்சம் பொறுமையா நின்னு எப்படியாவது இத நடத்திடனும் சுமதி” என்ற கணவனை நம்பாமல் பார்த்தார் அவர்.
“உன்னால நம்ப முடியாது தெரியும், இன்னும் எவ்ளோ நாள் இருக்க போறேன் தெரியல” என்றவரை “என்னங்க ஏன் இப்படிலாம் பேசுறீங்க” என்று கடிந்துகொண்டார் சுமதி.
“இல்லமா சரி செய்ய முடியாத தப்பை பண்ணிட்டேன், என் புள்ளைங்க நிம்மதியா வாழறத பார்த்தா போதும், சச்சிய கூட வீட்டுக்குக் கூப்பிடலாம்னு நெனைக்கிறேன் நீ என்ன சொல்ற” என்ற கணவனைக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினார் சுமதி.
அலக்நந்தாவிற்கு ஒரு நொடி கூடக் கண்கள் மூடவில்லை, கால் முட்டியில் முகத்தைப் புதைத்து உடலைக் குறுக்கி அமர்ந்திருந்தாள், அவன் குரலும் வாசமும் அவளைச் சுற்றிக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.
விழிகளை மூடினாள் தன்னுடைய வலியக்கரத்தால் அவளை மொத்தமாகத் தனக்குள் இறுக்கிக்கொள்கிறான் அவள் இரவு விழித்தே கிடந்தது.
தன் விரல்களோடு பிணைந்து கிடந்த அவளின் தளிர் கரங்களின் மென்மையை இப்பொழுதும் உணர முடிந்தது பாரிவேந்தனால்.
கண்ணழகா, காலழகா,
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்