அத்தியாயம் -28

சத்யா கிளம்புகிறேன் என்றவுடன் மீனா முகம் வாடி நிற்பதை கண்ட குமாரி “என்னப்பா அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்ற”.

“இல்லம்மா.அம்மா போன்பண்ணிட்டே இருக்காங்க. நேத்து நான் வேற அவங்ககூட பேசல, அதான் பாவம் ரொம்ப பயந்துட்டாங்க”,

“சரி காலை டிபன் மட்டுமாவது சாப்பிட்டு போப்பா. யாரும் இன்னும் எழுந்துக்க கூட இல்ல”

“இல்லம்மா. அவங்ககிட்ட நீங்க சொல்லிடுங்க. நான்……”

“அட என்னப்பா நீ. காலுல சுடு தண்ணி ஊத்துனாப்புல போறேன்…. போறேன்னுட்டு. முதல்ல உட்காரு. டீ கொண்டு வரேன். குடி. தீரன் ஜாக்கிங் போயிருக்கான். இப்போ வந்துருவான் அவன்கிட்ட பேசிட்டு இரு.

காலை டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டு அப்புறம்தான் போற. ஆமா… சொல்லிட்டேன்” என்றவர் கிச்சனுக்குள் செல்ல, அவர் பின்னோடு சென்ற மீனா “அம்மா அவருக்கு நான் டீ போடறேன்”என்று  ஆசையாக சொன்னவள் டீயை போட்டு,

“ நீங்களே போய் குடுங்கம்மா. நான் குடுத்தா…. அவர் குடிப்பரோ என்னவோ தெரியல”என்க,

அவளை பரிதாபமாக பார்த்தவர் “பாரு மீனும்மா. புருஷன் பொண்டாட்டி விட்டு கொடுத்து போனாதான் வாழ்க்கை. அப்பா பேச்சை கேட்டு தப்பா முடிவெடுத்தது நீ. அவர்கிட்ட போய் முதல்ல நீ பேசறதுல ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்ட யோசிடா.

அன்னைக்கு என்ன நடந்ததுன்னு அவர்கிட்ட நீ சொன்னாலே. உன் மேல தப்பில்லைன்னு அவர் புரிஞ்சுப்பாரு. போடா போய் பேசு”.

“இல்லம்மா. அவர்கிட்ட விட்டு கொடுத்து போகறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா…. நான் அவருக்கு வேண்டாம்மா. என்னை கல்யாணம் பண்ணி அவருப்பட்ட கஷ்டம் போதும்.

இனியும் என்னால அவர் வருத்தப்பட வேண்டாண்ணுதான் விலகி இருக்கேன்”.

 “நீ விலகி இருப்ப. உன் குழந்தைங்க நிலைமையை யோசிச்சியா. அவங்களுக்கு அப்பா வேண்டாமா. முதல்ல உனக்கு சரி எது தப்பு எதுன்னு பிரிச்சி புரிஞ்சுக்க முடியாத பதின் பருவ வயசு. அப்போதான் உன்னால சரியா முடிவெடுக்க முடியாம ஓடி வந்த,

இந்த ரெண்டு வருஷம் நிறைய பாடம் உனக்கு கத்து குடுத்திருக்கும். யாருக்கு பயப்படணும், யாரை நம்பனும், என்ன முடிவெடுக்கணும்னு  நல்லா யோசி.

அம்மா புள்ளையானாலும் வாயும் வயிறும் வேற வேறதான். மத்தவங்களை பத்தி யோசிச்சு உன் விருப்பம் எதுன்னு தெரியாம, அவங்க போக்குல நீ போனது போதும். இனி யாரு முக்கியம். யாருக்காக வாழறோம். யாரைபத்தி மட்டும் நினைக்கணும்னு உட்கார்ந்து நல்லா யோசிச்சு  முடிவெடு”என்றவர் டீ கப்பை எடுத்து கொண்டு சென்றுவிட,

மீனா கண்ணீருடன் சுவற்றில் சாய்ந்தாள் “எனக்கு மட்டும் அவர்கூட சேர்ந்து வாழணும்னு ஆசை இல்லையா. ஆனா…. அவர் என்ன சொல்ல போறாரோங்கறதை நினைச்சுதான் நான் பயப்படுறேன்.

ஹாஸ்பிடல், வீடுன்னு என்னால அலைய முடியாதுனு சொல்லிதான போனா. அன்னைக்கு என்கூட இருக்க கசந்தது. இப்போ அது என்ன ஆச்சுனு?ஒரு வார்த்தை என்னை பார்த்து அவர் கேட்டாருன்னா. என்னால அதை தாங்க முடியாதும்மா.

ஆனா… குழந்தைகள்…அவங்களை நினைச்சா எனக்கு பயமாதான் இருக்கு. என்ன முடிவெடுக்கறதுனு  குழப்பமா இருக்கு’என்று தலையில் கை வைத்தவள் காதில் “இல்லம்மா நான் டீ குடிக்கறதை நிப்பாட்டிட்டேன்” என்ற சத்யாவின் குரல் விழ,

ஒருவேளை நான்தான் டீ போட்டேன்னு கண்டு பிடிச்சிருப்பாரோ, அதான் குடிக்கலையோ என்று நினைத்தவள் கிச்சனில் இருந்து எட்டி பார்க்க,

சத்யாவோ அமைதியாக அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க துவங்கிவிட்டான்.

மீனா அருகில் வந்த குமாரியிடம் பால் வேணா காய்ச்சி தரட்டுமாம்மா. அவர் குடிக்கிறாரா கேளுங்க.

“வேண்டாம்மா. பிளாக் காபி கேட்டாரு. அதுவும் நீங்க போட்டு தாங்கன்னு சொல்லிதான் அனுப்பினாரு. டீ நீதான் போட்ருக்கன்னு கண்டுபிடிச்சுட்டார் போல”என்றவர் சொல்ல,

முகம் கூம்பி போனவள் “சரிம்மா. நான் போய் குழந்தைகளை எழுப்பறேன்”என்று அமைதியாக சொன்னாலும், மனம் பலத்த யோசனையில் இருந்தது.

மீனாட்சி செல்வதை பெரு மூச்சுவிட்டு பார்த்த குமாரி ‘கடவுளே இந்த பொண்ணுக்கு எப்போ நல்ல காலம் வருமோ’என்று காபி போட சென்றார்.

அதன்பின்னான நேரம் அவருக்கு வேகமாக செல்ல, காலை டிபனை ரெடி செய்தவர் அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

மீனாட்சி வெகுநேரம் யோசித்தவள் தன் விருப்பப்படி ஒரு முடிவை எடுத்து தெளிவான முகத்துடன் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

அப்போதுதான் அஷ்வின் வராததை கவனித்த குமாரி மீனாவிடம் அவர்களை சாப்பிட அழைத்து வர சொல்ல,

“ம்மா…. நானா….”என்று சங்கடப்பட்டவள் கையை பிசைந்து கொண்டு நிற்க,அவள் உதவிக்கு வந்த ஸ்ரீயோ “சரி வா ரெண்டு பேரும் போலாம். நீ சங்கடப்படற அளவுக்கு அங்க ஒன்னும் நடந்திருக்காது. என் நண்பனைபத்தி எனக்கு நல்லா தெரியும்.

உன் தங்கச்சி படிக்கற புள்ளைன்னு முதல்ல படி. மீதிய அப்புறம் பார்த்துத்துக்கலாம்னு சொல்லியிருப்பான். என் நண்பன் அம்புட்டு நல்லவன்”என்றவள் பெருமையாக சொல்ல,

மீனாவோ ‘ஆனா…. என் தங்கச்சி நல்லவ இல்லையே. சரியான அராத்து என்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியலையே பாவம் அஷ்வின் சார்’என்று மனதில் புலம்பியவள் வெளியில் ஸ்ரீயிடம் சிரித்து மட்டும் வைத்தாள்.

அஷ்வின் அறை முன் போய் நின்ற ஸ்ரீ “ஓ….. நண்பனே…. அஷு….. டேய்…நண்பா அஷு….. அஷு……”என்று கதவை தட்ட,

மீனா தங்கையை திட்டி கொண்டு இருந்தாள் ‘இவ தூங்குனா உலகமே அழிஞ்சாலும் எழுந்துக்க மாட்டாளே. அடியேய் எந்திரிடி’என்று.

உள்ளே கண்ணம்மா அஷ்வின் மார்பில் முகம் புதைத்து தூங்கி கொண்டிருந்தாள்.

கதவு தட்டும் சத்தத்தில் தூக்கம் கலைந்த அஷ்வின் தன் மேல் பாரமாக இருக்கவும் ‘எவண்டா அது என் மேல அரிசி மூட்டைய தூக்கி போட்டது’என்று சத்தமாக பேசிக்கொண்டே கண்களை திறக்க,

 அவன் கலைத்த ஓவியம் பத்ரகாளியாக அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தது.

“ஹேய்…. யாரும்மா நீ? என் ரூம்ல இப்படி அரையும் குறையுமா இருக்க”என்று அலறியவன் அவள் பார்வை உக்கிரமாகவும் “ஹி…. ஹி…. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல, மறந்துட்டேன்.

ஆமா…நீ ஏன் செல்லம் மாமாவ இவ்ளோ பாசமா பார்க்குற”என்றவன் முடியை பிடித்து மாவாட்டியவள் “நான் உனக்கு அரிசி மூட்டியாடா. நைட் புல்லா பஞ்சு மூட்ட மாதிரி இருக்கடினு சொல்லிட்டு…இப்போ அரிசி மூட்டையா…. உன்னை….” என்றவள் அவன் கழுத்தில் கடிக்க,

“ஆஆ…. ராட்சசி கழுத்துல கடிக்கறதை பாரு. வாய் தவறி தூக்க கலக்கத்துல சொல்லிட்டேன்டி என்னை விடுடி….”என்று கத்தியவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாதவள்

“ஆமா…. ஆமா…பர்ஸ்ட் நைட் முடிஞ்சுதுல்ல நான் உனக்கு ராட்சசி மாதிரிதான் தெரிவேன்”என்று மீண்டும் சண்டை வர,

ஸ்ரீயோ “அடேய்…. பிரியா போன் பண்ணாடா வரேன்னு சொன்னா”என்று கத்த,

கண்ணம்மாவிடம் அடி வாங்கி கொண்டிருந்தவன் அவள் கையை தட்டிவிட்டு “எது பிரியாவா…. இதோ வந்துட்டேன்…”என்றவன் அப்போதுதான் கவனித்தான் தான் இருக்கும் நிலையையும்,

உடனே போர்வையை இழுத்து நன்றாக மூடி கொண்டவன் “ஐயோ கல்யாணம் ஆன அடுத்த நாளே என்னை கொடுமைபடுத்தறாளே. பிரியா வர்றாளாம் போடி”என்றவன் அவளை தள்ளிவிட்டு போர்வையை வேட்டியாக கட்டி கொண்டு வேகமாக சென்று கதவை திறக்க,

அவனை அந்த கோலத்தில் எதிர்பார்க்காத ஸ்ரீயும், மீனாவும் திகைத்து உடனே திரும்பி கொள்ள,

அஷ்வினோ “பிரியா எப்போ வரேன்னு சொன்னா….”என்று ஆர்வமாக கேட்க,

கடுப்பான ஸ்ரீ “நீ எல்லாம் மனுஷனாடா. நீ நல்லவன்னு இப்போதான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன். ஆனா நீ என்ன பண்ணி வச்சுருக்க”

அஷ்வின், “நான் என்ன பண்ணுனேன்”.

 ஸ்ரீ, “அந்த பொண்ணு படிக்கற பொண்ணுடா”.

 “எதே அவ படிக்கற பொண்ணா. சரியான அராத்து, ரவுடி, அது மட்டும் இல்லாம என் பொண்டாட்டி என் உரிமை”என்றவனை கேவலமாக பார்த்த ஸ்ரீ “அப்புறம் எதுக்குடா பிரியான்ன உடனே நாக்கை தொங்க போட்டுக்கிட்டு ஓடி வந்த”

“அதுவா. இவ பொண்டாட்டி. பிரியா என் க்ரஷ்…ஷீ ஸ்டோல் மை ஹார்ட்…” என்றவனை,

  நமுட்டு சிரிப்புடன் பார்த்த ஸ்ரீ “பாத்தியா கண்ணம்மா உன் முன்னாடியே இவன் என்ன சொல்றான்னு. ஷீ ஸ்டோல் மை ஹார்ட்டாம். என்னன்னு இப்போவே விசாரிச்சு வை.

இவனை நல்லா கவனிச்சுட்டு வா. சாப்பிடலாம்”என்றுவிட்டு போக,

‘அடி பாவி கோர்த்துவிட்டாளே’என்று பம்மியவன் மனைவியை பார்த்து “ஹிஹிஹி…. அது சும்மா ரசகுல்லா”.

 “ஓ…. நான் ரசகுல்லான்னு இப்போதான் நினைப்பு வருதா”என்றவள் அவனை அடிக்க துரத்த,

“ஹேய் அவ வேணும்னே போட்டு குடுத்துட்டு போறாடி. அவ பேச்சை நம்பாத”என்றவன் முன்னால் ஓட,

“நீ பேசுனதை நானே கேட்டேனே. அப்புறம் ஸ்ரீ அக்காவை குறை சொல்ற”என்று அடிக்க துரத்தியவளிடம் இருந்து தப்பிக்க அந்த அறையை சுற்றி சுற்றி வந்தவன் ஒரு கட்டத்தில் அப்படியே நிற்க,

அவனை வேகமாக துரத்தி வந்தவள் அவன் மார்பிலேயே மோதி விழ போக, வளைத்து பிடித்தவன் அவள் சுதாரிக்கும் முன் இதழை அழுத்தமாக சிறை செய்தான்.

அவன் மார்பில் அடித்து தன்னிடம் இருந்து விலக்க போறாடியவளின் கரத்தை தன் மற்றொரு கையால் பிடித்தவன் அப்படியே கட்டிலுக்கு இழுத்து செல்ல,

முடியாது என்று போராடிவளை சமாளித்து தன் காரியத்தை சாதித்து  கொண்டு விலகி படுத்தவனை அவள் அடிக்க,

அதை வாங்கி கொண்டவன் அவளை ஆழ்ந்து பார்த்து “சந்தேகமா…”என்று கேட்க,

அவளோ “இல்லை பொறாமை. என்னைவிட இன்னொருத்தி உனக்கு முக்கியமான்னு”என்றவள் சொல்ல,

“அப்போ நம்பிக்கை இருக்கா”

“அது இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்”என்றவளை வாறி அணைத்து கொண்டவன் “லவ் யூ டி பொண்டாட்டி”என்க,

அவளோ “ஆமா…பிரியா ரொம்ப அழகா இருப்பாங்களோ”என்று இழுத்தவாறு கேட்க,

சத்தம் போட்டு சிரித்தவன் “அவ எவ்ளோ அழகா இருந்தா என்ன. நீதான் என் பொண்டாட்டி அதில் நான் தெளிவா இருக்கேன் போதுமா”என்க,

அவளும் “ம்ம்….”என்று அவனை அணைத்து கொண்டாள்.

அப்போது மீண்டும் கதவு தட்டப்பட, “டேய் மதிய சாப்பாட்டுக்காவது வருவீங்களா மாட்டீங்களா. சீக்கிரம் வாடா பசிக்குது. உன் ஆத்தா நீ இல்லாம மதிய சோறு போட மாட்டேங்குது” என்று ஸ்ரீ கத்த,

“இதோ வரோம்……” என்று இருவரும் ஒரு சேர சொல்லி சிரித்து, ஒன்றாக குளித்து கொஞ்சி, காதலித்து, விளையாடி என அவர்கள் கீழே வர இரண்டு மணி ஆனது.

அவர்களை முறைத்து கொண்டு அமர்ந்திருந்த மொத்த குடும்பத்தையும் பார்த்த அஷ்வின் “ஏன் எல்லாரும் இப்படி பாசமா பாக்குறீங்க. சின்னஞ் சிறுசுக அப்படி இப்படிதான் இருப்போம். நீங்கதான் அதை கண்டுக்க கூடாது”என்று சொல்ல,

கண்ணம்மாவிற்கு வெட்கம் பிடிங்கி தின்றது. அவள் அப்படியே கணவனின் பின் ஒழிந்து கொள்ள,

ஸ்ரீ, “இங்க யாரும் ஹைட் அண்ட் சீக் எல்லாம் விளையாடல. நீ ஏம்மா உன் புருஷன் பின்னாடி மறையர. வா சாப்பிடலாம் பசி உயிர் போகுது.

அடேய் நண்பா உன்னை நல்லவன்னு சர்ட்டிபிகேட் எல்லாம் குடுத்தேன்டா. எல்லாம் வேஸ்ட்”என்க,

அவனோ அலட்டாமல் தோள்களை குலுக்கி “உங்களை விடவா ஒருத்தன் காருக்குள்ள பீதில உட்கார்ந்து இருக்கும்போது அவனை கண்டுக்காம நீங்க……”

“ம்கூம்…. சரி…. சரி…. பசிக்குது வாங்க சாப்பிடலாம்”என்ற தீரன் குரலை கேட்டு, கொடுப்புக்குள் சிரித்து கொண்ட அஷ்வின், தோழியை பார்க்க, அவளோ அவனை முறைத்துவிட்டு கணவன் பின்னால் சென்றுவிட்டாள்.

அனைவரும் அவரவர் ஜோடியோடு அமர்ந்திருந்தனர். மீனா சத்யா அருகில் அமர செல்ல, கண்ணம்மா அருகில் அமர போன மலை கையை பிடித்து தன் அருகில் அமர வைத்த சத்யா சாப்பிட துவங்க மீனாட்சிக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

இருந்தாலும் அதை அடக்கி கொண்டவள் “எனக்கு பசி இல்ல. எதுவும் வேண்டாம்” என்றுவிட்டு குழந்தைகளை தூக்கி கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.

சாப்பிட்டு முடித்த சத்யா அனைவரிடமும் சொல்லி கொண்டு கிளம்ப போக “அப்பா……”என்று குழந்தைகள் அவன் காலை அணைத்து பிடித்து கொண்டு நின்றனர்.

இவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய் என்பது போல் மொத்த குடும்பமும் அவனை பார்க்க, அவனோ அவர்களை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு “நீங்க அம்மாகூட இருங்க. அப்பா வேலை விஷயமா வெளிய போறேன். அது முடிஞ்ச அப்புறம் வரேன்”என்று சொல்ல,

குழந்தைகளோ உதட்டை பிதுக்கி அழ தயாராகினர். அதேநேரம் கையில் பெட்டியுடன் அங்கு வந்து சேர்ந்தாள் மீனாட்சி.

அவளை கவனித்த ஸ்ரீ “என்ன மீனும்மா நீ திருச்சி கிளம்பிட்டியா. இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போலாமே”என்க,

அவளோ “இல்லக்கா நான் குழந்தைங்களோட போறேன்”என்றாள்.

தீரன் மீனாட்சியை அழுத்தமாக பார்த்தவன் என்ன புரிந்து கொண்டானோ நக்கலாக சத்யாவை பார்த்துவிட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட்டான்.

ஸ்ரீயோ பதட்டமாக “குழந்தைங்க கூட போறியா அவங்க தனியா எங்க போக போறாங்க”என்று புரியாமல் கேட்க,

“குழந்தைங்க தனியா எங்கயும் போகல. அவங்க அப்பா கூட போறாங்க”என்க,

மொத்த குடும்பமும் மகிழ்ந்து போனது. சத்யா முகம் இறுக “உறவு இல்லாதவங்களை அதுவும் ஒரு பெண்ணை என் வீட்டுக்கு  அழைச்சிட்டு போறது சரியில்ல. அவங்க வர வேண்டாம் தீரன்”.

 “குழந்தைங்க அப்பா…அப்பான்னு…கேட்பாங்க, அவங்களை என்னால சமாளிக்க முடியாது”

“இவ்ளோ நாள் எப்படி சமாளிச்சாங்களாம். அப்படியே சமாளிக்க சொல்லுங்க தீரன்”

“அண்ணா இவ்வளவு நாள் அப்பாவை அவங்க பார்க்கல, அவருக்கூட அவங்க விளையாடல. இப்போ எல்லாம் செய்துட்டு விட்டுட்டு போனா அவங்க ஏங்கி போக மாட்டாங்களா.

அதோட நான் ஒன்னும் யாரோ இல்லை. அவர் கட்டிய தாலி இன்னும் என் கழுத்துலதான் இருக்கு”என்றவள் சொல்ல,

வேகமாக அவளை திரும்பி பார்த்தவன் கண்கள் கேட்ட கேள்வி என்னவோ அவளுக்கு புரியவில்லை.

உடனே தன் பார்வையை திருப்பி கொண்டவள் நான் உன்னுடன் வந்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் நின்றிருக்க,

சத்யாவோ உன்னை அழைத்து போக மாட்டேன் என்னும் பிடிவாதத்துடன் நின்றிருந்தான்.

மீனாட்சி தன்னுடன் வர சத்யா ஒத்து கொள்வானா? அவளை மீண்டும் தன் வாழ்வில் ஏற்று கொள்வானா? பொருத்திருந்து பார்ப்போம்…