மெல்லிய மலரின் நறுமணம் அறை எங்கும் நிறைந்திருக்க, அழகாக அலங்காரம் செய்யப்பட்ட கட்டிலில் ‘ஐ….. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு…. இனி எனக்கான வேலைய செய்ய, எனக்காக பேச ஒரு சில் வண்டு சிக்கிடுச்சு’ என்ற குதூகலத்துடன் அமர்ந்திருந்தான் அஷ்வின். (ஏன் ராசா பேச உனக்கு வாய்ல புண்ணா)
கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் அங்கு மெல்லிய புடவையில் அளவான அலங்காரத்துடன் வந்த கண்ணம்மாவை கண்டு ‘அட…. அட…. அடா… ரசகுல்லா மாதிரி இருக்காளே’ என்று ஜொல்லுவிட்டு பார்த்து கொண்டிருக்க, அவன் முன் பால் டம்ளரை நீட்டியவள் “பால்”என்று கூற,
அவனோ அவள் கை தூக்கி நின்றதில் தெரிந்த இடையை ரசனையாக பார்த்தான். அவன் பார்வை சென்ற இடத்தை கண்டவள் கடுப்பாகி அவன் இடையில் கிள்ள,
“ஆஆஆ…..” என்ற அலறலோடு எழுந்தவன் “அடி பாவி எதுக்குடி கிள்ளுன”
“ம்ம்…. பார்வை எக்குதப்பா போனா அப்படிதான் கிள்ளுவேன்”.
“நான் உன் புருஷன்டி. நான் பார்க்கலைனாதான் தப்பு”.
“இங்க பாருங்க. உங்க பேச்சு, பார்வை எதுவும் சரியில்ல. நான் எங்க அக்கா மாதிரி சாப்ட் கிடையாது. நான்லாம் எங்க ஊர்ல பெரிய ரவுடியாக்கும். எங்க காலேஜ்ல வந்து கேட்டு பாருங்க.
எங்க சீனியர்ஸ் எல்லாம் என்னை பார்த்தாலே தெறிச்சு ஓடுவாங்க”என்று கெத்தாக சொல்ல,
வேட்டியை மடித்து கட்டியவாறு அவளை நெருங்கியவனை கண்டு மனதில் அரண்டவள் “எ…. எ… என்ன….. எதுக்கு இப்போ….. இ…. இப்படி பாக்குறீங்க. வேணா…. நி…நில்லுங்க…. நில்லுங்க…. சொல்றேன்ல”என்று பட படத்த மனதுடன் அவள் சொல்ல,
அவனோ கூலாக “நானும் ரவுடி டாக்டர்தான்டி. பார்ப்போமா. யார் பெரிய ரவுடின்னு”என்றவன் கரம் அவள் இடையில் பதிய,
வெடுக்கென்று துள்ளிய உடலுடன் அவனை பார்த்தவள் “இ…இ…ம்கூம்… இல்ல வேண்டாம். அதெல்லாம் ஒன்னும் பார்க்க வேண்டாம். எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன். நீ…நீ…நீங்க கைய எடுங்க”.
“அதெல்லாம் முடியாது போட்டின்னு வந்தா. அதுல யாரு பெருசுன்னு பார்த்தே ஆகணும். இல்லை நான் சொல்றதை செய்யணும்”என்றவன் கரம் இடையில் இருந்து மேல் நோக்கி நகற, அவன் கையை தடுத்து பிடித்தவள் “சரி என்ன போட்டினு சொல்லுங்க” என்று அரண்ட விழியுடன் கேட்டவள் மனதில் ‘ஹப்பா…. நல்லவேலை கைய புடிச்சிட்டேன்’என்று நிம்மதியானாள்.
“ம்ம்…. அப்படி கேளு” என்றவன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து நிற்க,
“ப்பூ….. இவ்ளோதானா. இப்போ பண்றேன் பாருங்க” என்றவள் வேகமாக அவளும் சுவற்றின் அருகில் போய் நின்று அதில் சாய்ந்து கொண்டு அவனை கெத்தாக பார்க்க,
அவனோ அவனை கிண்டலாக பார்த்து கைகளை பர பரவென தேய்க்க, அவளும் கைகளை பர பரவென தேய்த்தாள்.
கைகளை தேய்த்து கொண்டிருந்தவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன் தன் ஷர்ட்டை கழட்ட,
அதிர்ந்து போனவள் “என்ன பண்றீங்க…” என்க,
“நான் ஷர்ட்டை கழட்டறேன். நீயும் …”
“எதே….. அதெல்லாம் முடியாது”.
“ஏன்…. ஏன் முடியாது. நீதானே நான் பண்றதை எல்லாம் பண்ணுறேன்னு சொன்ன. இப்போ முடியாதுனு சொன்னா என்ன அர்த்தம்”.
“அதுக்குன்னு இப்படி அதற பழைய செய்கைய செய்வீங்களா. பொண்ணுங்கன்னா இப்படி ஏடா கூடமாதான் எதாவது பண்ணனுமா. இதுக்கும் வீரத்துக்கும் என்ன சம்மந்தம்.
இந்த சிங்க பெண் செய்யற மாதிரி வேற எதாவது செய்ங்க”
“ஹோ….. அப்படியா. ரைட்டு சிங்க பெண்ணா…. வீரமாதானே செஞ்சுட்டா போச்சு. ஆனா நான் பண்ணுன அப்புறம். நீ முடியாதுனு சொல்ல கூடாது”.
“ம்ம்…. முன்னாடி பண்ணுன மாதிரி சின்ன புள்ள தனமா பண்ணாம. என்ன மாதிரி காலேஜ் ரவுடி பண்ற மாதிரி பண்ணுங்க”என்க,
அவளை மேலும் கீழும் நக்கலாக பார்த்தவன் “ஓகே…”என்றுவிட்டு தலைகீழாக நிற்க,
கண்ணம்மா கண்கள் தெரித்துவிடுவது போல் பார்த்தாள்.
“என்ன பாக்குற. இது சாதாரண யோகாதான். உன்னை மாதிரி ரவுடிக்கு இது எல்லாம் ஜூ ஜூபி செய்” என்று சொல்ல,
கையை பிசைந்து கொண்டு நின்றவள் “இல்ல…. முடியாது”,
“அட என்னம்மா நீ என்ன சொன்னாலும் முடியாதுனு சொல்ற, அப்போ நீ என்கிட்ட தோத்துட்டேன்னு ஒத்துக்கோ” என்று கூற,
தான் அப்படி நின்றாள் நிலை என்ன என்பதை யோசித்த கண்ணம்மா “ம்கூம்…ச்சி…த்து….கேவலமா இருக்கு. காசா பணமா…தோத்துட்டோம்னு ஒத்துக்கலாம். என்ன பண்ணிட போறாரு”என்று நினைத்தவள் “சரிங்க நான் தோத்துட்டேன் போதுமா”.
“ஒத்துக்கிட்டா மட்டும் போதுமா. நான் சொல்றதை நீ செய்யனும்
“அட வாடி….. சும்மா நொய்…நொய்னு பேசிட்டு…”என்றவன் அவள் கையை பிடித்து தன்னருகில் இழுக்க,
சுழன்று போய் அவன் மார்பில் மோதி நின்றவளின் கன்னங்களை பற்றியவன் “லொட…லொடன்னு பேசற இந்த வாயை”என்றவன் அவள் இதழை சிறை செய்ய,
திகைத்து போய் கண்களை விரித்தவள் முதலில் அவனை விலக்க போறாட, ஆணவனை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை.
சற்று நேரத்திற்கு பின் அமைதியானவள் அவனுடன் ஒன்றி போக, மனையாளின் ஒத்துழைப்பு அவனுள் குதூகலத்தை ஏற்படுத்த, அவன் கைகள் அவள் இடையில் அழுத்தமாக பதிந்து, பெண்ணின் மென்மையை நோக்கி செல்ல,
பெண்ணவளோ அவன் தொடுகையிலும், இதழ் அணைப்பிலும் உருகி போய் நின்றிருந்தாள்.
இருவரும் தன்னிலை மறந்து போயினர். ஆணின் கரம் வெயில் கூட படாத அவள் இளமைகளில் அழுத்தமாக பதிய,
‘ஹக்……’என்ற சத்தத்துடன் அவன் சட்டையை இருக்கியவளின் கரம் நடுங்க,
ஆணவனும் தடுமாறிதான் போனான்.
கண்ணம்மா மூச்சு காற்றுக்கு திணறவும் அவளைவிட்டு விலகியவன், ‘விருப்பம் இல்லாத பொண்ணை என்னடா பண்ற ‘ என்று தன்னை தானே திட்டி கொண்டவன், தன் பின்னந்தலையை கோதி தன்னை சமாளிகொண்டு அவளை பார்க்க,
அவளோ அணிந்திருந்த புடவை கலைந்து இதழ்கள் வீங்கி போய், தலை குனிந்து நின்றிருந்தாள்.
“சாரி…. நீ தூங்கு நான் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரேன்” என்று பால்கனி நோக்கி சென்றவன் கரங்களை பிடித்து நிறுத்தியவள் “எ…. எ…என்னங்க ஆச்சு?”
“இல்லம்மா. நீ படிக்கணும். நான் சும்மா உன்னை வம்பிழுக்க ஆரம்பிச்சேன். ஆனா…. அது எனக்கே ஆபத்தா முடிஞ்சுடுச்சு. ஒன்னும் இல்ல. நீ தூங்கு” என்றவனை அவன் மனையாள் அணைத்து கொள்ள,
கைகளை இறுக்கியவன் “ப்ளீஸ் ரசகுல்லா. நான் சாதாரண மனுஷன். எனக்கும் உணர்வுகள் இருக்கு. நீ என்னை இப்படி பிடிச்சுட்டு இருந்தா. என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. நீ படிக்கணும். என்னைவிடு” என்க,
“ஏன் விடணும். என் புருஷன். நான் கட்டி பிடிப்பேன். ஏன் இப்படி முத்தம் கூட குடுப்பேன்”என்றவள் அவன் இதழில் மென்மையாக இதழ் பதித்து எடுக்க,
சித்தம் கலங்கியவன் அவளையே வெறித்து பார்க்க,
“உங்களால காப்பாத்தப்பட்ட உயிர் இது. பெத்த அம்மா, அப்பாவே என்னை நம்பாம போனப்ப. என் மேல நம்பிக்கை வச்சு, உங்க வாழ்க்கைல சரிபாதியா ஏத்துக்கிட்டீங்க.
சூழ்நிலையால ஆனா திருமணம்னு காரணம் காட்டி விலகாம ரிசப்சன் வச்சு இந்த உலகத்துக்கு எனக்கான அங்கீகாரத்தை குடுத்துருக்கீங்க. உங்களை நம்பி நான் என்னை தர மாட்டேனா. நான் என்னோட பயத்தை போக்கதான் வந்தவுடனே அப்படி எல்லாம் பேசுனேன்.
கண்டிப்பா என் வாழ்க்கை முன்ன இருந்ததவிட, இனி சிறப்பா இருக்குங்கர நம்பிக்கை எனக்கு இருக்கு. இதுதான் நம்ம வாழ்க்கை. இதை ஏத்துக்கனும்ங்கற மனநிலையில்தான் இங்க வந்தேன்.
ஒரு வேலை உங்களுக்கு என்னை ஏத்துக்க டைம் வேணும்னா எடுத்துக்கோங்க. நான் வெயிட் பண்றேன். இங்க இருந்த நாட்களிலேயே உங்களைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். இது திடீர்னு எடுத்த முடிவு இல்ல.
நீங்க என் கணவன்ங்கற உரிமையை தாண்டி உங்களோட இருக்கும்போது நான் பாதுகாப்பா உணரறேன். இந்த உணர்வு என் அப்பா, அம்மாகூட இருக்கும்போது கூட தோணல, எப்போ என்ன பிரச்சனை பண்ணுவாங்கன்னு பயந்துட்டே இருப்பேன். என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்.
உங்க மனசுல வேற யாரையாவது……”
“ச்ச…. ச்ச…. என்ன பேசற. இன்னொரு பொண்ணை மனசுல வச்சுட்டு. உனக்கு எப்படி என்னால தாலி கட்ட முடியும். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நீ சொன்ன விஷயம்தான் என்னை யோசிக்க வைக்குது. நீ படிக்கணும் அது மட்டும் இல்லாம செகண்ட் இயர்தான் படிக்கற சின்ன பொண்ணு வேற….”
“ஹோ…. அதுதான் உங்க கவலையா. படிக்கணும்னா…. நீங்க எனக்கு சொல்லி தர மாட்டீங்களா. நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை முன்னை விட இனி நல்லா படிப்பேன். உங்க உதவியோட”என்றவள் சொல்ல,
அப்போதும் குழப்பத்தில் இருந்தவன் “ஆனா……”
“அட…என்னப்ப உங்களை என்னமோ ஸ்ரீ அக்கா பெரிய ரோமியோனு சொன்னாங்க. நீங்க என்னன்னா இப்படி தத்தி புருஷனா இருக்கீங்க. இன்னும் உனக்கு எப்படிதான் சொல்றது. நானே…….”என்றவள் குரல் அதன்பின் அவன் இதழுக்குள் சிறை ஆனது.
வெகுநேரம் நீண்ட அந்த முத்தத்தில் இருவரும் தங்களை மறந்து போயினர்.
ஆணவன் கண்களாலேயே தன் மனையாளிடம் சம்மதம் கேட்க, தன் சம்மதத்தை தெரிவித்தவள் நாணத்தில் விழிகளை தாழ்த்தி கொள்ள, அவளிடம் இருந்து விலகியவன், கைகளில் அவளை அள்ளி கொள்ள,
அவளோ முகம் சிவந்து அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“பார்றா காலேஜ் ரவுடிக்கு வெட்கம் எல்லாம் வருது. இவ்ளோ நேரம் பேசுன பேச்சு என்ன. இப்போ…. ஹா.. ஹா…ஹா…” என்று சிரிக்க,
“என்ன டாக்டர் சார் கிண்டலா”.
“கிண்டல் எல்லாம் இல்ல. வந்த உடனே பேசுன வீர வசனம் பார்த்து நானே கொஞ்சம் பயந்துட்டேன்”
“எது நீங்க பயந்தீங்களா. நம்பிட்டேன்”என்று பேசி கொண்டிருக்கும்போதே அவளை பெட்டில் படுக்க வைத்தவன் “ஹேய் ரசகுல்லா நிஜமா உனக்கு ஓகேதானே. இல்லைனாலும் பரவால்ல சொல்லு”
“உங்களுக்கு வேண்டான்னா சொல்லுங்க. எனக்கெல்லாம் ஓகேதான். என்னை சொல்லிட்டு நீங்கதான் நிறைய சீரியல் பார்ப்பீங்கன்னு நினைக்கறேன். கொஞ்ச நாள் பழகலாம், பேசலாம்னு வசனம் பேசிகிட்டு” என்று சொன்னவள் இடையில் கிள்ளி துள்ளவிட்டவன்.
அவள் மேல் படர்ந்து “நான் சீரியல் எல்லாம் பார்க்க மாட்டேன். நிறைய படம் பார்ப்பேன். அதுவும் கலர் கலரா”என்றவன் கண்ணடிக்க,
“படமா…. என்ன படம்…”என்று அப்பாவியாக கேட்டவளின் விழிகள் சாசராக விரிய,
“உன்னை யாரும்மா அப்படி எல்லாம் ஒரு முடிவுக்கு வர சொன்னது”என்றவன் கரங்கள் பெண்ணவள் உடலில் எல்லை மீற அவள் உடல் துடித்து அடங்கியது.
“என்ன படிப்ஸ் நீ தியரில தெரிஞ்சுகிட்ட விஷயத்தை இப்போ பிராக்டிக்கலா கத்துக்க ரெடியா. எதுவும் டவுட்னாலும் சொல்லு, நான் எல்லாத்தையும் பொறுமையா சொல்லி தரேன்”என்றவன் அவள் ஆடைகளை கலைந்து தானே ஆடையாக, அவளோ வெட்கத்தில் உடல் சிவந்து போனாள்.
“ம்ம்…. நீ சின்ன பொண்ணுன்னு தப்பா…நினைச்சிட்டேன்டி நல்லா…..” என்றவன் வாயை கரங்களால் மூடியவள் “ச்சி…. என்ன பேசுறீங்க” என்று அவன் முகத்தை பார்க்க முடியாமல் பேசியவள்,
முதன் முதலில் ஆழமான தாம்பத்யத்தை கண்டதால் உடல் நடுங்கி போனாள்.
“என்ன ரவுடி ஆரம்பிப்போமா”என்றவன் பேசி பேசியே அவள் பயத்தை போக்க, பெண்ணவளும் அவன் பேச்சில் மயங்கிதான் போனாள்.
ஆணவன் செயல்கள் வேகமாக, பற்களை கடித்து தன் வலியை தாங்கியவள் கண்களில் இருந்து கண்ணீர் வழித்தோட, அவள் இமைகளில் மென் முத்தம் பதித்தவன் “ஈசிடி…. ஈசி…. அவ்வளவுதான்” என்றவன் குரல் உணர்ச்சி வேகத்தில் கனத்து வர, அவன் முதுகில் கரம் பதித்தவளின் கைகள் உண்டான வலியால் இறுக்கியது.அதன் பின் அங்கு மென் சிணுங்கல்களும், பெண்ணவளின் கொலுசு சத்தங்களும் மட்டுமே கேட்டது.அழகான தாம்பத்யம் அங்கு அரங்கேறியது.
ஆதவன் தன் பணியை துவங்க செல்லும் காலை வேலை. வழக்கம் போல் மீனாட்சி சீக்கிரம் எழுந்து கந்த சஷ்டி கவசம் பாட, அப்பொழுது எழுந்து வந்த குமாரி “காலைல உன் குரல் கேட்டாதான் நல்லா இருக்கு. ஆமா…. வழக்கத்தை விட, உன் முகம் டால் அடிக்குதே என்ன விஷயம்” ,
அவர் அப்படி கேட்கவும் கேட்கவும் வெட்கப்பட்டு சிரித்தவள் “என்னம்மா நீங்க. எப்போ பாரு என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க. டாலும் இல்ல, ஒன்னும் இல்ல. நான் எப்போதும் போலதான் இருக்கேன்”.
“அப்படியா. எனக்கு அப்படி தோணலையே. சரி குழந்தைங்க இன்னும் எழுந்துக்கலையா. எங்க உன் வாலு உன் முந்தாணிய பிடிச்சுட்டே எழுந்துப்பானே”.
ஆம், அவள் மகன் அம்மா கோண்டுதான். எப்போதும் தாயின் முந்தானையை பிடித்து கொண்டே சுற்றுவான்.
“நைட் ரெண்டு பேரும் அவங்க அப்பாகூட விளையாடிட்டு அப்படியே தூங்கிட்டாங்க. இனிதான் போய் அவங்கள எழுப்பனும்”.
“ஆனா…. மீனாட்சி உன் புள்ளைங்க மாதிரி தங்கமான புள்ளைங்கள நான் பார்த்ததே இல்லம்மா. அப்பாவை பார்த்தவுடனே எப்படி ஒட்டிக்கிட்டாங்க பாரு.
ஒவ்வொரு புள்ளைங்க டெய்லி பார்க்கற ஆள்கிட்டயே போக மாட்டாங்க. ஆனா நம்ம புள்ளைங்க அப்பான்ன உடனே நல்லா ஒட்டிக்கிட்டாங்க”என்க,
மீனாட்சி “ஆமாம்….”என்பது போல் தலையசைத்து சிரித்தாள்.
அவளை ஆதுரமாக பார்த்த குமாரி “உன் முகத்துல இப்போ இருக்கற சந்தோஷம் எப்பவும் இருக்கனும்மா”என்றவுடன் முகம் வாடியவள்.
“என் தலைல இந்த சந்தோஷம் நிலைக்கணும்னு அந்த கடவுள் எழுதி வைக்கலம்மா. என் அப்பா எப்போ என்ன பண்ணுவாரோன்னு பயந்துட்டே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போல,
இன்னொரு டைம் என்ன வச்சு அவரை எதாவது பண்ணிடுவாரோருன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. இன்னொரு டைம் என்னால அவருக்கு ஆபத்து வந்தா. அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன்ம்மா”என்க,
உடனே குமாரி “என்னம்மா காலைல என்ன பேசற”.
“இல்லம்மா. நான் உண்மையதான் சொல்றேன். நான் அவர் பக்கத்துல போனாதான் அவருக்கு ஆபத்து நான் இப்படி விலகியே இருந்துக்கறேன். தூரத்தில இருந்து அவரை பார்த்துக்கறதே எனக்கு போதும்.”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அங்கு படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த சத்யா காதிலும் அந்த வார்த்தைகள் விழ,
ஒரு நிமிடம் அப்படியே நின்றவன் அடுத்த நொடி அதை கண்டுகொள்ளாதது போல் சாதாரணமாக வந்தான்.
மீனாவோ வைட் ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் அணிந்து வந்தவனை கண் இமைக்காமல் பார்க்க துவங்கினாள்.
சத்யா “இல்லம்மா அவங்க இன்னும் எழுந்துக்கல. நைட்டு ரொம்ப நேரம் விளையாடியதுல டயர்டா தூங்கறாங்க”என்றவன் குமாரிக்கு பதில் சொன்னாலும், மனைவி தன்னை இமைக்காமல் பார்ப்பதை கவனித்து கொண்டுதான் இருந்தான்.
‘எப்படி பாக்குறா பாரு. இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கா. அப்படியே கண்ணாலையே என்னை தின்னுடுவா போல, இப்படி பார்த்து பார்த்துதான் என் கழுத்தை அறுத்தா. இப்போ என்ன பண்ண இப்படி பாக்குறாளோ’என்று மனதில் திட்டியவன்,
‘முதல்ல இங்க இருந்து போயிடலாம்.அதுதான் நல்லது. இங்க இருந்தா இவ பேசுன பேச்சுதான் நியாபகம் வரும்’என்று நினைத்தவன் குமாரியிடம் “நான் கோயம்புத்தூர் கிளம்பறேன்ம்மா”என்க,
மீனாட்சிக்கு கண்கள் கலங்கிவிட்டது.’போக போறாரா, எங்களைவிட்டு போக போறாரா… மறுபடியும் தனிமையும், அழுகையும்தான் என் துணையா. குழந்தைகள் வந்து அப்பா எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்.
இனி அவங்களை எப்படி சமாளிப்பேன். இனி எப்போ உங்களை பார்க்க போறேன்னு தெரியலையே’என்று எண்ணியவளுக்கு மனம் பாரமாக,கலங்கிய விழிகளோடு அவனை பார்த்தாள்.
சத்யா கோயம்பத்தூர் சென்றால் மீனா நிலை என்ன ஆகும். இருவரும் சேர்வார்களா இல்லையா. சென்னப்பனால் இவர்களுக்கு எதுவும் ஆபத்து வருமா.
கண்ணம்மா, அஷ்வின் வாழ்க்கையில் சென்னப்பன் எதாவது பிரச்சனை செய்வானா அனைத்தையும் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.