அத்தியாயம் -26

தீரன் வீட்டின் நடு ஹாலில் முகம் இறுக அமர்ந்திருந்தான் சத்யா. அனைவரும் அங்கு கூடி இருக்க,
மலையும், கண்ணம்மாவும் சத்யாவின் பின்புறம் நின்றிருந்தனர்.
சீனு, குமாரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “என்ன தம்பி ஏன் எல்லாரையும் வர சொன்னீங்க”என்று கேட்க,
“ஆமா. ப்ரோ என்ன ஆச்சு?”என்று அஷ்வினும் கேட்டான்.
தீரன் அமைதியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து நடப்பதை கவனிக்க துவங்கினான்.
“நான் பல விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். இருந்தாலும் அதை நீங்க உங்க வாயால சொல்லணும்னு நினைக்கறேன் சொல்லுங்க” என்று அழுத்தமாக சொல்ல,
தீரனோ அவனை மெச்சுதலாக பார்த்து “அதான் தெரிஞ்சுக்கிட்டீங்களே ஆடிட்டர் சார்.அப்புறம் என்ன? வேற யாரையாவது இப்போ இங்க எதிர் பாக்குறீங்களா”என்று கேட்க,
சத்யாவோ “நீங்க சில விஷயங்களை சொல்லணும்னு எதிர் பார்க்குறேன். வேற யாரையும் பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை”என்றவன் கோபமாக கூற,
தளிர் நடையிட்டு வரும் இரண்டு குழந்தைகளையும் கண்ணால் காட்டிய தீரன் அவங்களையும் பார்க்க விருப்பம் இல்லையா”என்க,
திகைத்து போனவன் தீரனை விழி விரித்து பார்க்க, அவனும் கண்களை மூடி திறந்து ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்க ,
இறுகிய ஆண் மகனின் கண்களும் தன் மகவை கண்டு கண்ணீரை சுரக்க ஆரம்பித்தது. உடனே எழுந்து நின்றவன் குழந்தைகளையே விழி எடுக்காது பார்த்தாலும் மனதில் ‘மண்டபத்தில் நான் தூக்கி வைத்திருந்தது என்னோட குழந்தைகளா எனக்கு ரெட்டை குழந்தைகளா’என்று மெய் மறந்து நின்றிருந்தான்.
குழந்தைகள் இரண்டும் “மாமா….”என தீரனிடம் செல்ல,
அவனோ “அங்க போங்க. உங்க அப்பா….”என்று சொல்ல,
அவர்கள் இருவரும் திரும்பி தன் முட்டை விழிகளை உருட்டி சத்யாவை பார்க்க, அந்த அழகை கண்டு ரசித்தவன் கண்கள் கண்ணீரை உகுத்தாலும் இதழ்கள் சிரிப்பை வெளிப்படுத்த கைகளை நீட்டி அவர்களை அழைக்க,
“ப்பா….. என்ற அழைப்போடு குழந்தைகள் ஓடி வந்து அவனை அணைத்து கொள்ள, அவனும் அவர்களோடு ஒன்றி போனான்.
மலையோ “எதே….. அப்பாவா….இங்க என்ன நடக்குது. எனக்கு ஒன்னும் புரியல”என்று சொல்லும்போதே அவன் தலையில் ஒரு மென்மையான கரம் பதிய திரும்பி பார்த்தவன் திகைத்து போனான்.
கண்ணம்மாவும் திரும்பி பார்த்தவள் அங்கு கண்ணீரோடு நின்றிருந்த மீனாட்சியை கண்டு நடுங்கிய குரலோடு “அக்கா……”என்றழைக்க,
இருவரும் ஒரு சேர அவளை ஓடி போய் அணைத்து கொண்டனர்.
மலை,“எங்க அக்கா போன? உன்னை பார்க்காம, என்ன பன்றன்னு தெரியாம எவ்ளோ தவிச்சு போய்ட்டோம் தெரியுமா? ஆமா…. குழந்தை….”என்றவுடன்தான் சற்று முன் தீரன் சொன்னது நினைவு வர,
மலையும், கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு டக்கென்று திரும்ப, அங்கு இரு குழந்தைகளும் சத்யா கை அணைப்பில் இருந்தனர்.
இருவரையும் பார்த்து ஆச்சர்யத்தில் விழி விரித்த கண்ணம்மா தன் குறும்பு குணம் தலை தூக்க,
“மாமா….. சாதிச்சுட்டீங்க போங்க. ஒரே டைம்ல ட்வின்ஸ். சூப்பர் மாமா”என்க,
சத்யாவிற்கு அவள் பேச்சில் வெட்கம் கூட வந்தது. பின்னந்தலையை கோதி தன்னை சமாளித்தவன் அழகை அவன் மனையாள் விழி எடுக்காது பார்க்க,
“ம்கூம்…. மேடம் நாங்களும் இங்கதான் இருக்கோம். எங்களையும் கொஞ்சம் பாருங்க”என்று ஸ்ரீ சொல்ல, அந்த இடமே சிரிப்பில் ஆழ்ந்தது.
சத்யா மீனாவை ஒரு பார்வை பார்த்தவன். அதன்பின் எதுவும் பேசவில்லை. கணவன் தன்னிடம் எதாவது பேச மாட்டானா என்று ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தீரன் சத்யாவை பார்த்தவன் இந்த இரண்டு வருடங்களில் நடந்தவைகளை சொல்லி, அவன் மகவுகள் பிறந்த அன்று நடந்ததையும் சொல்ல, அமைதியாக கேட்டு கொண்டவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவன் மடியில் குழந்தைகளை அமர வைத்து இனி யாரும் இவர்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்பது போல் இறுக்கமாக பிடித்திருந்தான்.
சற்று நேரம் அங்கு அமைதியே ஆட்சி செய்ய, தன் குரலை செருமிய சத்யா,
“ரொம்ப நன்றி. என் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்டது”என்று சொல்ல,
குமாரியோ வேகமாக “அவர்கள் எங்க வீட்டு குழந்தைகளும்தான்”என்று சொல்ல,
“அது உங்க பெருந்தன்மைம்மா. எல்லாரும் உங்களை மாதிரி இருந்திருந்தா பிரச்சனையே இருக்காது. சரி இப்போ நான் அதை பேச விரும்பல. இப்போ பொண்ணு வீட்டுக்காரனா சில விஷயங்களை நான் உங்களுக்கு சொல்ல விரும்பறேன்”என்றவன் கண்ணம்மா பார்க்க,
அஷ்வினோ “அதெல்லாம் எதுக்கு இப்போ முடிஞ்சதை பத்தி எதுவும் பேச வேண்டாம். எங்க வீட்ல யாரும் அதை எதிர் பார்க்கவும் மாட்டாங்க” என்க,
அவனோ “இல்லங்க. எதிர்காலத்துல இதனால ஒரு பிரச்சனை வர கூடாது. எங்க பொண்ண நீங்க தப்பா நினைக்க கூடாதுங்கறதுக்காகதான் சொல்றேன். நீங்க நினைக்க மாட்டீங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
ஆனா அவங்களால கண்டிப்பா உங்களுக்கு பிரச்சனை வரும். அதை சமாளிக்க எல்லாமே நீங்க தெரிஞ்சுக்கறது அவசியம்”என்க,
கண்ணம்மா முகம் வேதனையில் கசங்கியது. மலையும் தலை குனிந்து நிற்க, மீனா இருவர் கையையும் ஆறுதலாக பிடித்திருந்த, அதே சமயம் தன் தங்கைகாக பெண் வீட்டுக்காரனாக பேசிய கணவனை கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ள அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள். அங்கிருந்த யாரும் அவள் கருத்தில் பதியவில்லை. எப்போதும் போல் அவள் கணவன் மட்டுமே அவள் எண்ணம் முழுதும் நிறைந்திருந்தான்.
சீனு, “அந்த பொண்ண பார்க்கும்போதே நல்ல பொண்ணுன்னு எங்களுக்கு தெரியுது. எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாததனாலதான் எங்க மருமகளா ஏத்துக்கிட்டோம். ஆனாலும் உங்க மன திருப்திக்காக நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கறீங்களோ சொல்லுங்க. ஆனா அது உங்க விருப்பத்துக்காக மட்டும்தான்”என்றவர் சொல்ல,
சத்யாவும் அவர்களின் குணத்தை எண்ணி ஆச்சர்யம் கொண்டவன் பின் பெருமூச்சுடன் பேச துவங்கினான். “என் வாழ்க்கைல நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். அதை கூட ஏதோ பொண்ணு வாழ்க்கை கெட்டு போக கூடாதுங்கற எண்ணத்துல பண்ணுனாங்கன்னு விட்டுட்டாலும்….”என்றவன் சொல்ல, மீனாட்சி முகம் வாடி போனது.
மேலும் அவன் “கண்ணம்மா விஷயத்துல நடந்ததே வேற என்றவன் சொன்ன விஷயங்கள் இதுதான்.
மீனாட்சி விஷயத்தில் கடுப்பாக சுற்றி வந்து கொண்டிருந்த சென்னப்பனின் கோபத்தை தணிக்கும் வகையில் கண்ணம்மா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்க, அருகில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இருந்து வந்தவர்கள் தங்கள் கல்லூரியில் சேர்த்து கொள்ள சொல்லி கேட்க,
பெருமையில் மிதந்த சென்னப்பனும் மகளை மருத்துவ கல்லூரியில் சேர்த்தார். (நீட் எக்ஸாம் வராத டைம்ங்க. வந்து யாரும் கேள்வி கேட்காதீங்க…ஜக்கம்மா சொல்றா…. ஜக்கம்மா சொல்றா)
என் வீட்டில் இரண்டு டாக்டர் என்று பெருமைப்படவே மலையையும் அதே கல்லூரியில் சேர்த்தார்.
எல்லாம் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. அந்த நாள் வரை.
கண்ணம்மா முதல் வருட படிப்பை முடித்து இரண்டாம் வருடம் சென்று கொண்டிருந்த சமயம். படிப்பு படிப்பு என சரியாக சாப்பிடாமல் இருந்தவளுக்கு மாதாந்திர தொல்லைகள் வர துவங்கியது.
அந்த மாதம் மகள் தலை குளிக்காமல் இருப்பதை கவனித்த தனம். கணவன் காதில் சென்று என்ன சொன்னாரோ. அவர் முகம் கோபத்தில் சிவந்து போனது.
“எடு அந்த அருவாளை அவளை வெட்டி கண்ட துண்டமா ஆக்கிடறேன். இப்படிப்பட்ட புள்ள இருந்தா என்ன செத்தா என்ன?” என்று திட்டி கொண்டிருக்க
தனமோ, “அவசரப்படாதீங்க முதல்ல அதுதானானு உறுதிபடுத்திக்கலாம்”.
“என்னடி உறுதிபடுத்திக்கறது. எங்க போய் உறுதிபடுத்துறது. இந்த விஷயம் கடுகளவு கூட வெளிய கசிய கூடாது”.
“அதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்க. ஊர்ல எல்லாருகிட்டயும் கோயிலுக்கு போறோம்னு சொல்லிட்டு கிளம்பலாம். எந்த ஊர்னு சொல்ல வேண்டாம்.
மருதைக்கு போய் ஹாஸ்பிடல செக் பண்ணலாம்.அங்கதான் நம்மளை யாருக்கும் தெரியாதே. காதும் காதும் வச்ச மாதிரி எல்லாம் முடிஞ்சுடும்.
அப்படியே எதுவும் இருந்தாலும் வர்ற வழில வண்டில இருந்து தள்ளிவிட்டு, ஆக்சிடண்ட்னு சொல்லி சோலிய முடிச்சிடலாம்”என்று சொல்ல,
மீசையை முறுக்கி மனைவி சொன்னதை யோசித்த சென்னப்பனும் “சரி….. ஆனா மலைய கூட்டிட்டு போக வேண்டாம். அவன் சின்ன பையன். படிக்கட்டும். நாம மட்டும் அந்த ஊர் மேயற கழுதைய கூட்டிட்டு போயிட்டு வரலாம்.
எல்லாம் என் தலையெழுத்து. பொட்ட புள்ளைய பெத்தாலும் பெத்த இப்படி ரெண்டும் இப்படி என் மானத்தை வாங்கவே வந்திருக்குங்க ச்ச…..புள்ள பெத்து வச்சிருக்கா பாரு”என்று மனைவியை ஓங்கி அறைந்தவர் வெளியே சென்றுவிட,
கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றிருந்த தனத்திடம் “ம்மா தக்காளி தொக்கு செம்மையா இருக்கு. இன்னும் கொஞ்சம் குடு…”என்று கண்ணம்மா கத்த,
ஏற்கனவே அவள் மேல் கொலை வெறியில் இருந்தவர் மகள் இப்படி பேசவும் கடுப்பானவர் “ஆடுகாலி நாயே எல்லாம் உன்னாலதான். நீ ஒழுங்கா இருந்தா அந்த மனுஷன் என்னை ஏன் அடிக்க போறாரு. எல்லாம் என் தலையெழுத்து மொத்துபட்ட மாங்காவா வாழணும்னு”என்று மகள் தலையில் கொட்ட,
அவளோ பாவமாக முழித்து “ம்மா.. மாங்கா இல்லம்மா. தக்காளி தொக்கு…அதைதானே கேட்டேன். இல்லைனா…. இல்லைனு சொல்லி பழகு அதென்ன பழக்கம் கொட்டுறது. இது எல்லாம் நல்லாவே இல்ல சொல்லிட்டேன்”.
“அடியே சண்டாளி வாய மூடிட்டு போயிருடி. எவ்ளோ பெரிய விஷயத்தைபண்ணிட்டு இப்படி சாதாரணமா இருக்கியேடி. எனக்கு ஈர குலையே நடுங்குதடி”என்று சொல்லி மேலும் ரெண்டு கொட்டு கொட்ட,
‘இப்போ நாம என்ன கேட்டுட்டோம்னு, இந்த அம்மா இப்படி அடிக்குது. தக்காளி தொக்கு கேட்டது ஒரு குத்தமா. ரைட்டு விடுங்கடா. நான் வெறும் சோறே சாப்பிட்டுக்கறேன்’என்று தனக்குள் பேசி கொண்டவள் வெள்ளை சாதத்தை அள்ளி வாயில் திணித்துவிட்டு சென்றுவிட்டாள்.
அடுத்த நாளே சென்னப்பன், தனம், கண்ணம்மா மூவரும் மதுரை வந்திடடைந்தனர். கோவிலுக்கு என்று சொன்னதால் மகிழ்ச்சியாக கிளம்பி வந்த கண்ணம்மா, பெற்றோர் ஹாஸ்பிடலுக்கு கூட்டி வரவும் முதலில் பயந்துதான் போனாள்.
“யாருக்கு என்னம்மா ஆச்சு? ஏன் இங்க வந்திருக்கோம்?” என்று கேட்ட மகளை முறைத்த தனம் “அமைதியா வா. இல்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன்”என்று பற்களை கடித்து சொல்ல,
ஒன்றும் புரியாமல் விழித்தவள் அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டாள்.
“கண்ணம்மா….” என்று அங்கிருந்த நர்ஸ் அழைக்கவும் எழுந்தவள் “எனக்கு பார்க்கவா வந்திருக்கோம். ஆனா… எனக்கு ஒன்னும் இல்லம்மா” என்ற மகளின் கையை நறுக்கென்று கிள்ளியவர் “உன்னை வாய மூட சொன்னனா…இல்லையாடி. வா பேசாம”என்று மகளை அழைத்து சென்றவர் டாக்டர் முன் அமர்ந்து சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்து போனாள்.
அமர்ந்திருந்த சேரில் இருந்து வேகமாக எழுந்தவள் கண்கள் கலங்க “என் மேல நம்பிக்கையே இல்லையாம்மா. என்னம்மா இது…” என்று அடிபட்ட குரலில் கேட்க,
அவரோ “உன்னை பேசாதன்னு சொன்னேன். உட்காருடி மானத்தை வாங்கம்ம”என்க,
“முடியாது…. நீங்க பண்ண சொல்ற விஷயம் எவ்ளோ கேவலமான விஷயம் தெரியுமா. என்னை…. என் நடத்தையை அசிங்கப்படுத்தர விஷயம் . இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”என்றவள் எழுந்து ஓட துவங்கினாள்.
ஆம், அவள் தாய் அவளுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட்தான் எடுக்க சொன்னார்.
மகள் ஓடவும் அவள் பின்னோடு வந்தவர் அவள் கூட்டத்தில் எங்கு சென்றாள் என்று தெரியாமல் விழிக்க,
மாடிக்கு சென்ற கண்ணம்மா ‘பெற்ற தாய், தந்தையே தனக்கு இழைத்த அநியாயத்தை எண்ணி கதறி அழுதவள் தன் வாழ்க்கையை முடித்து கொள்ள மாடியில் இருந்து கீழே குதிக்க போக, அப்போதுதான் அஷ்வின் வந்து அவளை காப்பாற்றியது, அவள் தாய், தந்தை பிரச்சனை செய்தது என அனைத்தையும் சொன்னவன், தன் கையில் இருந்த செக்கை எடுத்து டேபிள் மேல் வைத்து “இதுல ஒரு கோடிக்கு சைன் பண்ணியிருக்கேன். பொண்ணு வீட்டு சார்பா நாங்க தர்ற சீரா இதை வச்சுங்கோங்க”என்று கூற,
அதை மறுத்த சீனு “எதையும் எதிர்பார்த்து. நாங்க இந்த பொண்ண மருமகளா ஏத்துக்கலப்பா அஷ்வின். அதை நீயே வச்சுக்கோ”,
“உங்க பெருந்தன்மை என்னன்னு எனக்கு தெரியும் சார். இருந்தாலும் இது என் மன திருப்திக்கு கல்யாணம் பண்ணி குடுக்கற பொண்ண வெறும் கையோட அனுப்பறது எங்க பழக்கம் இல்ல. அதுக்காகதான் இது”
அஷ்வின், “கண்ணம்மா உனக்கு விருப்பம் இருந்தா அந்த பணத்தை எடுத்துக்கோ. அது எப்போதும் உன் அக்கவுண்ட்ல பத்திரமா இருக்கட்டும்” என்று சொல்ல,
மீனாட்சியோ கணவனின் செய்கையில் திகைத்து போனாள். ‘என்னால் உண்டான உறவிற்கு நீ இவ்வளவு முக்கியத்துவம் குடுப்பாயா. என் குடும்பத்தை உன் குடும்பமாக ஏற்று கொண்டு நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஈடாக நான் இது வரை உனக்கு என்ன செய்தேன். காயத்தை தவிர’ என்றவள் மனதில் குமுறி கொண்டு இருந்தாள்.
சத்யா, “சரி சார். அப்போ நான் கிளம்பறேன்….”என்று எழ,
அவனிடம் வேகமாக சென்ற கண்ணம்மா “மாமா என்கூட இருங்கன்னு சொன்னனே”.
“அது அப்போம்மா. இப்போதான் உனக்கு தெரிஞ்சவங்க இங்க இருக்காங்களே அவங்க உனக்கு துணைக்கு இங்க இருப்பாங்க. நான் கிளம்பறேன். அம்மா, அப்பா அங்க தனியா இருப்பாங்க”
தீரன், “இங்க உங்க குழந்தைகளும் நீங்க இல்லாம தனியாதான் இருப்பாங்க ஆடிட்டர் சார்”.
சத்யா, “ம்கூம்……”என்று பெரு மூச்சுவிட்டவன். “இவ்வளவு நாளும் அவங்க அப்படிதானே சார் இருந்தாங்க. இனியும் இருந்துப்பாங்க. என்னை அவங்க எதிர் பார்க்க மாட்டாங்க” என்றவன் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,
சின்ன சிட்டுக்கள் இரண்டும் அவன் காலை வந்து கட்டி கொண்டனர்.
“அவங்க எதிர் பார்க்க மாட்டாங்கன்னு நீங்களே முடிவெடுத்துக்ககூடாது ஆடிட்டர் சார். அவங்களை இன்னும் எவ்வளவு நாள் அப்பா பாசத்துக்காக ஏங்கவிட போறீங்க” என்றவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றவன் பின் பெருமூச்சுடன் “இல்ல சார் என்னால இங்க தங்க முடியாது. நான் கிளம்பறேன்”.
சீனு, “அட என்னப்பா கிளம்பறேன்…. கிளம்பறேன்னுட்டு இருக்க. இப்போதான் லேட் நைட் ஆகிடுச்சே, காலைல வேணா ஊருக்கு போ. அட்லீஸ்ட் நைட் மட்டுமாவது குழந்தைங்க கூட இரு. அந்த புள்ளைங்க வாங்குன வரம் அப்படி. பெத்த அப்பன் கூட இருக்க முடியல” என்று சோகம் போல் சொல்ல,
சத்யா குனிந்து தன் குழந்தைகளை பார்த்தவன் “சரி சார். நைட்டு தங்கிட்டு காலைலயே கிளம்பறேன்”என்க,
அவனுக்கான அறையை காட்டிய அஷ்வின் “உங்க கோபம் புரியுது ப்ரோ. ஆனா….. மீனாட்சி நிலைமையையும் யோசிச்சு பாருங்க. அவளும் நிர்பந்தத்துக்கு உட்பட்டதாலதான் அப்படி பேச வேண்டியதா போச்சு. உங்க கோபத்தை தள்ளி வச்சுட்டு குழந்தைகளைபற்றி இனி யோசிக்கலாமே”என்றுவிட்டு செல்ல,
சத்யாவோ யோசனையோடே அறையினுள் சென்று குளித்து உடை மாற்றி அமர, அதற்கென்றே காத்திருந்தது போல் “ப்பா……”என்ற அழைப்போடு குழந்தைகள் ஓடி வர, அவர்களை அணைத்து கொண்டவன் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவர்களுடன் ஒன்றி போனான்.

சத்யா காலை என்ன முடிவு எடுப்பான். மீனாட்சியை உடன் அழைத்து செல்வானா மாட்டானா?….
அஷ்வின், கண்ணம்மா வாழ்க்கை இனி எப்படி செல்லும்.
இரு மகள்களின் வாழ்க்கையை குலைக்க சென்னப்பன் வேறு எதாவது திட்டம் போடுவானா?…. அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.