இப்போ நடக்கறது எதுவும் நமக்கு நடக்கற பிரச்சனை இல்லை………….. நம்மால அடுத்தவளுக்கு நடக்கறது……. இதுல நீயோ நானோ கவலைபட ஏதும் இல்லை, கவலை பட வேண்டியவங்க அந்த பக்கம் இருக்காங்க……………
எத்தனை நாள் என்னை அவமானபடுத்தி இருப்பா, எந்த வழியிலாவது அவளை கதறவிடனும்………….. என்னைய என்னனு நினைச்சி இருக்கா………………… அது தான் எல்லாத்துக்கும் வைச்சேன் பார் ஆப்பு………………… இனி குழந்தைக்காக என் காலில் விழத்தானோ வேனும்…………………..
எல்லாம் எனக்கு சாதகமா இருக்கு, இன்னும் இரண்டு நாள், எல்லோர் தலை எழுத்தும் எப்படி மாறுதுனு பார்………… அவ அப்பாக்கு என்ன ஏத்தம் இருந்தா, அவளுக்கு இன்னோரு கல்யாணம் பன்ன நினைப்பார், அதுவும் அந்த கதிர் பைய கூட, இத்தனை நாள் இந்த எல்லா சொத்தையும் என் கண்ட்ரோல எடுக்க எத்தனை வேலை பார்த்து இருப்பேன். இத்தனை நடந்த பின்னாடியும் என் மாமன் என்னைய வீட்டைவிட்டு போக சொல்லாம இருக்க என்ன காரணம் தெரியும்மா…………………
அவ வீட்டைவிட்டு போன போது, இவரு எதிலும் தலையிடல, கதிரும் இவருகிட்ட முருக்கிட்டு திரிஞ்சான். அப்போத தான் உள்ள பூந்து எல்லாத்தையும், நான் எனக்கு கீழ கொண்டு வந்தேன். சொத்து எல்லாம் அவங்க பெயர்ல இருந்தாலும், எல்லா இடத்திலும் என் ஆளுங்க தான், என்னை வெளியில் அனுப்பி அவங்களா ஒன்னும் பன்ன முடியாது……………… ஆனா இந்த கல்யாணம் நடந்தா இந்த கதிர் பைய திரும்ப உள்ள வந்துடுவான். அதுமட்டும் இல்லாம, எப்படியும் சொத்துக்கு வாரிசு என் மவ தானே, அவளே என் கைக்கு வந்துடா? அதான் அந்த கல்யாணமும் நடக்க கூடாது…………. அவ எப்படியும் புள்ளைய விடமாட்ட, புள்ளைக்காக என்கிட்ட தான் வரனும்…….. அதுக்கு தான் எல்லாம்.
எல்லாத்தையும் விட அவ கடைசி வரைக்கும் என் பெண்டாட்டியா தான் சாகனும்………………….. என்றான்…………………..
அதை கேட்டு இருந்தவள், அப்போ நான் யாரு என்றாள் அவனை பார்த்து, அவன் அவள் கேட்க வருவதை புரிந்நுக்கொள்ளாமல், ஏய் ஏன் டி இந்த அர்த்த ராத்திரியில் இப்படி உருச வாங்குற……………… போய் தூங்கு என்றவன் உறங்கிவிட்டான்.
ஆனால் அவள் மனதில் அந்த கேள்வி அப்படியே இருந்தது, நான் யார் இவனுக்கு, அவளை தன் மனைவி என்கிறவன், என்னை எந்த இடத்தில் வைத்து இருக்கிறான்………………. என்று அவள் மனம் கேள்வி கேட்டு ஒய்ந்து போனது பதில் இல்லாமல்.
இப்படி இரு நாட்கள் கடந்து இருக்க, அன்று எல்லோரும் நீதி மன்றத்திற்க்கு வந்து இருந்தனர். இன்று தீர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தால், கனேசன், ரத்தினம், நந்தினி, அன்பு, மணிமேகலை, கதிர்வேலன், பாக்கியலட்சுமி, ராகவன், குழந்தை மதியை கூட அழைத்து வந்து இருந்தனர்.
கோர்டில் குழந்தையை அழைத்து வர வேண்டும் என்று அன்பழகன் சார்பாக நல்லதம்பி சம்மன் அனுப்பி இருந்தார்.
எல்லோருக்கும் முள் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது, குழந்தைக்கு ஏதும் புரியவில்லை என்றாலும், அங்கு தன் தாத்தா, பாட்டியை பார்கவும், அவகளிடம் தாவி இருந்தாள் குழந்தை. எல்லோரும் வந்து இருந்தனர். கேஸ் ஆரம்பித்து இருந்தது. முதலில் எழுந்த நல்ல தம்பி, எனது கட்சிகாரர் அன்பழகன் முதல் திருமணம் முடித்து, அவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் முன்னால் மனைவியின் விருப்பபடி விவாகரத்து பெற்றுள்ளார்.
தற்போது அவர் முன்னால் மனைவி கதிரழகி மற்றும் அவர்களின் குழந்தை மதியழகி தனியாக வசித்து வருகிறார்கள். இன்னிலையில் கதிரழகி மறுமனம் கூறித்து முடிவு எடுத்தாக தெரிகிறது. இந்த நிலையில் அன்பழகனும் இரண்டாவது திருமணம் முடித்து 3 வருடம் முடவடைந்த நிலையில், அவரின் மனைவிக்கு குழந்தை பெறுவதில் ஏற்பட்ட சீக்கலில், அவர்களுக்கு குழந்தை இ்ல்லை, அதனால் தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும்மாறு கேட்டு இருக்கிறார். மேலும் இவர்களின் விவாகரத்துக்கு கதிரழகியின் ஒழுக்கமின்மையும் காரணம் என்று இந்த கோட்டில் நிறுபிக்கபட்டுள்ளது. முதலில் இருந்தே இந்த திருமணத்தை கதிரழகி எதிர்த்து இருக்கிறார், பின் தந்தையின் பிடிவாத்த்தினால் இந்த திருமனம் நடந்தேறியது, அதன் பின் கூட அவர் அன்பழகனுடன் மனமொத்து வாழ முயற்சிக்கவில்லை. ஒரே வீட்டில் பிரிந்து தான் இருந்து இருகிறார்கள். பின் அதுவும் இல்லாமல் வீட்டைவிட்டு வெறியேறி தன் மனம் போன போக்கில் தனியே தன் மாமாவுடன் சென்னையில் வாழ்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவரிடம் குழந்தை வளர்ந்தால் அது குழந்தையின் எதிர் காலத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அன்பழகன் கருதுகிறார்.
எனவே வாரிசு இல்லாத தனக்கு தன் குழந்தையை நல்ல முறைபடி வளர்க்க முடியும் என்றும், அது குழந்தையின் எதிர்காலத்திறக்கு நல்லது என்றும் நினைகிறார்.
ஆகவே கனம் நீதிபதி அவர்கள் குழந்தையை அவளின் தந்தையான அன்பழகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளகிறோம். என்று தன் வாதத்தை முடித்து இருந்தார்.
அவர் முடித்ததும், நிதிபதி கண்ணன் புறம் திரும்பியவர், நீங்கள், ஏதோம் சாட்சியம் சமர்பிக்க உள்ளீர்களா? என்று கேட்க…………
கனம் நீதிபதி அவர்களோ, என் கட்சிகார் கதிரழகி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தார் என்று சொல்வதே தவறு, அவர் அந்த திருமண ஏற்பாட்டின் போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார். அந்த வயதில் அவர் திருமணம் செய்ய விரும்பவில்லை என்பது தான் சரி, மேலும் அவர் தந்தைக்காக திருமணம் செய்தாலும், அந்த திருமண வாழ்க்கையை நல்ல முறையில் வாழவே முயன்றார். ஆனால் அன்பழகன் அவரை நல்ல முறையில் நடத்தாமலும், அவரின் மேல் வீண் சந்தேகம் கொண்டும் அவரை மனதளவில் மிகவும் துன்ப படுத்தி இருக்கிறார். இதில் விசித்திரம் என்னவென்றால் அவரின் குடும்பத்தினரும், உண்மைபுரியாமல் அவருக்கு எதிராக நின்றது தான்.
அதில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான கதிரழகி, வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வீட்டு எடுத்து, தனது முன்னால் ஆசரியர் உதவியால் வேலை பார்த்துக்கொண்டு வசித்தும் வருகிறார். முதிலில் அவர் வீட்டினர் அவரை புரிந்து கொள்ளவில்லை என்றாலும், பின் அவருக்கு ஆதராவாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அவர் மறுமனம் செய்ய நினைத்தது தவறு இல்லையே?. அதுவும், கதிரழகி பிரிந்த 2 வாரத்தில் அன்பழகன் திருமணம் செய்துக்கொண்ட போது, கதிரழகி செய்ய கூடாதா?
கதிரழகி மீது தீராத காழ்புனர்ச்சி எப்போதும் அன்பழகனுக்கு உண்டு, அப்போதும் அவர் கதிரழகியை தனக்கு கீழாக இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். திருமணத்துக்கு பின் அவ்வாறு நடைபெறவில்லை என்றதும், அவருக்கு மனரிதியான நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார். அதை எல்லாம் தாங்கியவர். தன் கர்பமாக இருப்பதை அறிந்து அன்பழகன் குழந்தையை கலைக்க சொல்லவும், வீட்டைவிட்டு வெளியேறினார்.
அன்று அவ்வாறு கலைக்க சொன்னவர், இன்று அந்த குழந்தையின் நலனுக்காக அதை தாயிடம் இருந்து பிரிக்க நினைப்பதும், இப்போதும், அவர் அதோ மனநிலையில் தான் இருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது. அதாவது கதிரழகி எந்த விததிலும் மகிழ்ச்சியாக இருந்துவிட கூடாது என்று, நினைத்து இதை செய்கிறார். அவர் தனக்கு என்று ஒரு வாழ்க்கையை பற்றி யோசிக்கும் இந்த நேரத்தில் அவர் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க சொல்கிறார். அப்படி என்றால் அவர் தனியாக இருக்கும் வரை குழந்தையை பற்றி அறிந்து கொள்ள கூட முற்படவில்லை. அப்படி இருக்கும் போது இப்போது இவர் இப்படி வழக்கு தெடந்து இருப்பது, அவரின் பாதிக்கபட்ட மனநிலையை கான்பிக்கிறது.
குழந்தையை பற்றி பிரச்சனையை எழுப்பினால், கதிரழகி தன் திருமண ஏற்பாட்டை நிறுத்துவிடுவார் என்று அன்பழகன் நினைகிறார் என்று கண்ணன் வாதாட………………….
அப்ஜக்ஷன் யூவர் ஹானர். இது வீன்பழி, என் கட்சிகார் மீது வீண் பழி சுமத்தபடுகிறது. அதை நான் ஆட்சேபிக்கிறேன், எதிர்கட்சி வக்கீல் சொல்லுவதற்க்கு எல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இவை எல்லாம் வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்ல படுபவை. எங்க வழக்கி்ல் தோற்றுவிடுவோம்மோ என்ற பயத்தில், என் கட்சிகார், ஒரு மனரிதியாக கொடுமைக்கார் போல் அவர் சீத்தரிக்கிறார். இது ஏதற்கும் ஆதாரமோ, சாட்சியோ இல்லை………………….. என்று நல்லதம்பி பேசிக்கொண்டு இருக்க……………………..
இருக்கிறது யூவர் ஹானர். இவர் இப்படி பட்ட மனநிலை உள்ளவர் என்று சொல்ல எங்களிடம் சாட்சியம், ஆதாரம் அனைத்து இருக்கிறது. அதை இந்த நீதிமன்றத்தில் சமர்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கண்ணன் கூற கேட்டு இருந்த, நல்லதம்பிக்கும், அன்பழகனுக்கும் திக் என்று இருந்தாலும், அப்படி என்ன ஆதாரம் இவனிடம் என்று மெத்தனமாகவே அமர்ந்து இருந்தனர்.
ஆனால் அவர்களின் அந்த எண்ணம் எல்லாம் ஆட்டம் கானும் வகையில் கண்ணன் கூண்டில் ஏற்றி சாட்சியத்தை பார்த்து அவர்கள் திட்டங்கள் எல்லாம் தூள் தூளாக தகர்ந்து போனது…………………..