அடுத்த ஓரு வாரம் சென்று இருந்தது, கதிரும், பரிதியும் வழக்குக்கு வேண்டியவைகளை கண்ணன் சொன்னது போல் செய்துக்கொண்டு இருந்தனர். இதற்கு இடையில் பரிதியின் விடுமுறை முடிய இன்னும் 3 நாட்களே இருந்தது. கண்ணனிடம் இது பற்றி கேட்டான். நீ இங்க இருந்து என்ன செய்ய போற, எனக்கு எது வேண்டும் என்றாலும் கதிரிடம் கேட்டுக்கொள்கிறேன். நீ கிளம்பு அப்படி நீ இங்க இருக்க வேண்டி இருந்தா, உன்னை கூப்பிடுகிறேன். பிளைட் பிடித்து வந்துடு. அதுவும் இல்லாம நீ இங்க இல்லாம இருப்பது தான் நல்லது. இன்னும் அன்பு கண்ணுக்கு நீ தெரியல, இதுக்கு அப்புறம் அவன் எல்லாத்தையும் கவணிக்க ஆரம்பித்துவிடுவான்.
நீ கிளம்பு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவன். அடுத்து கதிரை அழைத்துக்கொண்டு, அன்பு வேலை செய்யும் வங்கிக்கு சென்று இருந்தான். அன்று அன்பு விடுமுறை என்று அறிந்த பின் தான் வந்து இருந்தான். அங்கு இருக்கும் ப்யூன் மட்டும் அன்புவை பற்றி விசாரித்து இருந்தான். சற்று நேரம் அங்கு இருந்து பார்த்துவிட்டு கிளம்பி இருந்தான்.
அதை அடுத்து கதிரழகி விபத்து ஏற்பட்ட போது அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு சென்று அங்கும் சில தகவல்களை திரட்டி இருந்தான்.
அன்புவுக்கு அவன் வங்கிக்கு வந்து போனதும், மருத்துவமனை வந்து போனதும் தெரிந்து தான் இருந்து. அதை அவன் நல்லதம்பி இடம் சொல்ல, அவர் அவனுங்க எந்த வழியில் கேஸ் எடுத்து போனாலும் பாத்துக்கலாம். என்று கூறியவர், அவர்களை தெடர்ந்து கண்காணிக்க சொல்லி இருந்தார்.
அவனும் இவர்களை தெடர்ந்துக்கொண்டு தான் இருந்தான். இதை எல்லாம் அறிதாலும் இருவரும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.
அப்படி இப்படி என்று பரிதி ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. அன்று மதியை பார்க்க அவள் வீட்டுக்கு வந்து இருந்தான். கதிரழகி சமைத்துக்கொண்டு இருந்தாள். குழந்தை எதையோ எழுதிக்கொண்டு இருந்தாள். இவன் வருவதை பார்த்து பூவாய் மலர்ந்தது அவள் முகம் பரிடீ என்று அவள் புன்னகை பூக்க இவனுக்கும் முகத்தில் புன்னகை. அவள் அருகில் அமர்ந்தவன். என்ன செய்றிங்க மதிகுட்டி என்றான்.
அது ஹோம் ஓர்க் என்றாள், அவள் நோட்டில் அ………. ஆ…………………….. என அவள் வகுப்பு ஆசிரியர் எழுந்தி இருக்க, அதன் மேல இவள் எழுதி பழகிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த பரிதி மதிகுட்டி அழகாக இருக்கு என்று சொல்லி பாராட்ட, வெக்க சாயல் அவள் முகத்தில். இவன் பேச்சுக்குரல் கோட்டதும், இவன் வந்ததை அறிந்த இருந்தாள் கதிரழகி, ஆனாலும் வெளியில் போகவில்லை………………. அது என்னவோ அவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதும் போக அவளுக்கு பிடிப்பது இல்லை, இருவருக்கும் இருக்கும் இந்த பினைப்பையும், பேச்சுக்களையும் தள்ளி இருந்து ரசிப்பது தான் அவள் பிடித்தம்.
அவன் ஊருக்கு செல்ல இருக்கிறான் என்று அறிவாள். அதானல் தான் இந்த சந்திப்பு, ஆனால் இவன் இல்லாமல் தன் மகள் எப்படி இருப்பாள் என்ற கேள்வி மனதினுள்…………….. நீ மட்டும் இருந்துவிடுவாய்யா? என்ற மற்றோரு கேள்விக்கு பதில் இல்லை அவளிடம்…………………
சிறிது நேரம் அமைதியாக இருக்க, இவள் வெளியில் வந்து எட்டி பார்த்தாள் பரிதி அவளை தன் மடியில் அமரவைத்து அவளை எழுத செய்துக்கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் அமர்ந்து இருந்த காட்சி அத்தனை பாந்தமாக பொருந்தி இருந்தது. அதை பார்த படியே நின்றுவிட்டாள். நிமிர்ந்து அவளை பார்தவன். அவளை வரும் படி அழைக்கவும் அருகில் சென்று இருந்தாள். நான் இன்னிக்கு மத்தியம் கிளம்புறேன். ம்மம்மம்மம்மம்மம்மம்மம என்று தலை அசைத்தாள்.
அதற்கு மேல் அவளிடம் பேச்சு இல்லை…….. மெல்ல குழந்தை அறியாத வண்ணம் அவள் கையை பிடித்தவன். எதை பத்தியும் கவலை படாத, இங்க கதிர் கண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பாங்க…………. அப்படி ஏதாவதுனா……….. நான் உடனே இங்க வந்துடுவேன்…………………….. என்றான்………… அதற்கும் அவளிடம் தலையாட்டல் தான். எல்லாம் சீக்கரம் சரியாயிடும். அடுத்த தடவை நான் வரும் போது உங்க ரெண்டு போரோட தான் திரும்பி போவன் என்றான். அதுவரை அமைதியாக இருந்தவள், அவன் முகம் பார்த்தாள். அவள் கையை சற்று அழுத்தி பிடித்து அவள் கண்களை பார்த்து இருந்தான். பெரும் அமைதி குடிக்கொண்டது அவள் மனதில்
பாக்கல………… பாக்கல…………………… நான் ஏதும் பார்க்கல என்ற குரல் இருவரையும் கலைத்து இருக்க. வாயிலில் மணிமேகலை நின்று இருந்தாள். அப்போதும் இருவர் கையும் இனைந்தே இருந்தது. அதை பார்த்தவள் ஒரு நமுட்டு சிரிப்புடன், மதிகுட்டி வாங்க நம்ம கீழ போய் பாட்டி என்ன பன்றாங்கனு பார்க்கலாம் என்று குழந்தை அழைத்து சென்றுவிட, இருவரும் அப்படியே அமர்ந்து இருந்தனர்.
இதுவரை இல்லாத வகையில் மனம் அமைதி அடைந்து இருந்தது. சிறிது நேரம் இருந்தவன் அவளிடம் தன் அலைபேசி என்னை கொடுத்தான். எதுவானலும் என்னை கூப்பிடு, தினமும் இரவு மதிக்கு போன் பன்றேன் என்றவன். எழுந்து சென்றுவிட்டான்.
…………………………….
அன்புவின் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. கனேசனும், ரத்தினமும் மனதில் கொதித்து க்கொண்டு இருந்தாலும், வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பிள்ளைகள் வழக்கம் போல் இருந்தனர். இதில் நந்தினி தான் மிகவும் ஒடுங்கிவிட்டாள். ஏற்கனவே வீட்டில் யாரும் அதிகம் அவளுடன் பேச மாட்டா்கள் இப்போது இன்னும் அது குறைந்து போனது. அவள் மருத்துவமனையில் இருந்த போது கூட யாரும் அவளை சென்று பார்கவில்லை. அன்பு இப்போது தன் முழுகவனத்தையும் வழக்கில் வைத்து இருந்தால் நந்தினியின் புறம் அவன் கவனம் திரும்பவில்லை. அவன் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட ஒன்று உறங்கிக்கொண்டு இருப்பாள் அல்லது ஏதாவது யோசனையில் இருப்பாள். இப்படியே நாட்கள் செல்ல. அன்று நீதிமன்றத்திக்கு செல்லவேண்டிய நாள்.
வழக்கம் போல் அன்பும் தன் வக்கீல் உடனும், கனேசன் தனியாகவும். கதிர் கண்ணனுடன் வந்து இருந்தார்கள். குழந்தை வீட்டில் பாக்கியாவிடம் இருந்தாள்.
அன்றைய விசாரசனை ஆரம்பித்து.
நல்லதம்பி தான் முதலில் தன் விசாரனையை ஆரம்பித்தார். அவர் முதலில் அழைத்து. கதிரழகியின் தந்தையை தான், இதை கண்ணனும் எதிர்பார்த்து இருந்தான் தான். அதனால் நடப்பதை கவணித்தான்.
கனேசன் சாட்சிக்கூண்டுக்குள் நிற்க, நீங்கள் தான் அன்பழகனின் மாமா என்றார்………………….
அதற்கு கனேசன் ஆமாம், என்று தலையாட்டியவர், நான் கதிரழகியின் அப்பா என்றார். ஓ…… என்று ராகம் இழுத்தவர். சரி சொல்லுங்கள். உங்கள் மகள் திருமணம் எப்படி நடந்தது. என்றார். என் அம்மாவிற்க்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாங்க………. பேத்தி கல்யாணத்தை பார்க்கனும் அவங்களுக்கு ஆசை அதனால் என் மகளுக்கு, என் மனைவியின் தம்பியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தோம். என்றார். மனைவியின் தம்பி என்றால் என்று அவர் இழுக்க…. என் இரண்டாம் மனைவியின் தம்பி அன்பழகன் என்றார் அவர்.
ஏன் அவரை தேர்ந்து எடுத்திங்க…………… என்றார் நல்லதம்பி……….. ஏன்னா? எனக்கு புரியலை என்றார் கனேசன்.
இல்லை அதுவரைக்கும் உங்க மனைவி தம்பியுடன் தான் நீங்க தெருக்கமா இருந்து இருக்கீங்க…… அப்புறம் எப்படி அன்பழகனை மாப்பிள்ளையா தேர்ந்து எடுத்தீங்க என்றார்……………..
ஆமா எனக்கு அன்புவைவிட கதிரு தான் நெருக்கம், எனக்கு மட்டும் இல்லை, என் மகளுக்கும், சொல்ல போனா என்னைவிட அவன் அதிக நெருக்கம் அதிகம், என்றார் அதை இடைமறித்த நல்ல தம்பி அப்புறம் ஏன் நீங்க கதிரை மாப்பிள்ளையா தேர்ந்து எடுக்காம…… அன்பழகனை மாப்பிள்ளையாக்க நினைச்சீங்க என்றார்.
ஏன்னா கதிரை நான் என் மகன் போல தான் பார்த்தேன். அவங்க இரண்டு பேரும் சிறு வயதில் இருந்து ஒன்னா வளந்தவங்க, அவங்களை அப்படி என்னால நினைச்சி பார்க்க முடியல…….. அவன் என் மகளுக்கு இன்னொரு அம்மா மாதிரி தான் இருந்தான்.
அது எல்லாத்தையும்விட, நான் என் மகள் கிட்ட கல்யாணம் பத்தி பேசும் போது என் மகளும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக என்னிடம் சொல்லவில்லை. என்றார்.
சரி உங்க மகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமா? அதாவது உங்க மகளின் முழு சம்மத்துடன் தான் இந்த திருமணம் நடந்தா? என்றார் நல்லதம்பி………………..
என் மகளுக்கு படிக்கும் போது இடையில் திருமணம் செய்யவிருப்பம் இல்லை. எங்க அம்மாவுக்காக ஒத்துகிட்டா என்றார்.
பின்பு ஏன் நீங்கள் கதிரை உங்க பன்னைவீட்டில் அடைத்துவைத்து இருந்தீங்க என்றார். அது…………. அது………… கதிருக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அதனல் அவன் கல்யாணத்தில் ஏதும் பிரச்சனை பன்ன கூடாதுனு அப்படி பன்னேன் என்றார் இறங்கிய குரலில்.
யூவர் ஹானர், இவர் சொல்லுவதை வைத்து பார்த்தால். கதிர்வேலன், இவர் மகள் கதிரழகியை விரும்பி இருக்கிறார். இவரின் எல்லா சொத்துக்களையும் கதிர்வேலன் தான் அதுவரை நிர்வகித்து வந்துள்ளார். ஒருவேளை தன் மகளை திருமணம் செய்து அவர் எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டில் எடுத்துக்கொண்டாள் என்ன செய்வது என்று இவர் அன்புவை மாப்பிள்ளையாக தேர்ந்து எடுத்து உள்ளார். அதே சமயத்தில் கதிரழகிக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இருந்து இருக்கவில்லை. அவரும் கூட கதிரை விரும்பி இருக்கலாம்.
இதை எல்லாம் இவர்கள் திருமணத்திற்க்கு பின்னும் தொடர்ந்து இருக்கிறார்கள். திருமணத்துக்கு அடுத்த நாள் அன்பழகனும், கதிரழகியும் சென்ற வண்டியை விபத்துக்குள்ளாக்கி, கதிர்வேலன் கதிரழகியை அழைத்து சென்று இருக்கிறார். அவரை பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். இது பற்றி அவர் வீட்டில் யாருக்கும் தகவல் தரவில்லை. மேலும் மருத்துவமனையில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று பதிவு செய்து உள்ளனர். ஓர் இரவு, மற்றும் இரு பகல் முழுவதும் இவர்கள் அந்த மருத்துவமனையில் தனியறையில் தங்கி இருந்து இருக்கிறார்கள்.
அடுத்த நாள் இவர்கள் வீட்டுக்கு வந்த போது பெரியவர்கள் எழுப்பி கேள்விகளுக்கு சரியான பதிலை இவர்கள் சொல்லவில்லை. அதில் இருவருக்கும் தகராறு நடந்து ஒரே வீட்டில் தனிதனியாக இருந்து வந்துள்ளனர். இவை அனைத்தும் கனேசன் மற்றும் அவர் வீட்டில் இருக்கும் ஆனைவருக்கும் தெரியும். அதன் பின் இவர்கள் இருவருக்கும் உடல் ரிதியான தெடர்பும் இருந்து இருக்கவில்லை. இந்த நிலையில் கதிரழகி கர்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதை கேட்டு அதிர்ந்த என் கட்சிகாரர், என்ன செய்வது என்று அறியாமல் அதிர்வில் இருந்த அவர் அந்த குழந்தையைகலைக்க சொல்லி இருக்கிறார். அப்போதும் அவருக்கு கதிரழகியை கைவிடும் எண்ணம் இல்லை. ஆனால் அதையே பெரிய பிரச்சனையாக மாற்றிய கதிரழகி தன் காதலன் கதிர்வேலன் உடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டார்.
இப்படி ஒருவரை திருமணம் முடித்து, தனக்கு சாதகமான சூழ்நிலை வந்ததும் தன் முன்னால் கதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறி, சென்னையில் வசித்தும் வருகிறார் கதிரழகி, இந்த நிலையில் குழந்தை பிறந்த பின் அன்பழகனிடம் இருந்து விவாகரத்து பெற்றும்விட்டார்.
ஆனால் சமீபத்தில் கதிரழகியும் குழந்தையும் பார்த்த அன்பழகன் அது தன் சாயலில் இருப்பதை பார்த்து, அது தன் குழந்தை தான் என்பதை உறுதிபடுத்தியவர், இப்படி ஒழுக்கம் இல்லாத ஒரு தாயிடம் தன் குழந்தை வளர்வதை வரும்பவில்லை. அதன் காரணமாகவே குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்து உள்ளார் என்று தன் பெரிய உறையை முடித்து இருந்தார் நல்லதம்பி.
நீங்கள் ஏதும் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா என்றார் நீதிபதி கண்ணணை பார்த்து. நத்திங் யூவர் ஹானர் என்றவன் அமர்ந்துக்கொண்டான். நல்லதம்பி மிதப்பான ஒரு பார்வையை பார்த்து வைக்க, அவர் சென்ன கதைகளை கேட்ட அனைவரும் அதிர்ந்து தான் போயினர். கண்ணன் மட்டும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.
மீண்டும் எழுந்து நல்ல தம்பி, யூவர் ஹானார் எனது தரப்பில் இருந்து மற்றும் ஒரு சாட்சியான, மருத்துவ ஊழியர்களை விசாரிக்க விரும்புகிறேன் என்றார். பர்மிஷன் கிரன்ட்டடு என்று நீதிபதி சொல்ல.
அன்று கதிரழகி மருத்துவமனையில் அனுமதித்து இருக்கும் போது, அவளை பார்த்த மருத்துவரை அழைத்தான். அவரும் சத்திய பிராமானம் எடுத்தபின். அவரிடம் அன்று மருத்துவமனையில் நடந்தை பற்றி கேட்க. அவரும் அன்று காலை கதிர்வேலன் கதிரழகியை மயங்கிய நிலையில் மருத்துவமனை அழைத்து வந்தார். அவர் வண்டியில் போகும் போது கீழே விழுந்துவிட்டார் என்று சொல்ல, நான் அவரை பரிசோதனை செய்த்தில் எனக்கும் அப்படி தான் தெரிந்தது. அதனால் அவருக்கு முதல் உதவி செய்தேன். மேலும் அவர் களைப்பிலும், அதிர்விலும் மயக்கமாகி இருப்பது தெரிந்து, அவரை அன்று ஒய்வு எடுத்து செல்ல சொல்லி இருந்தேன் என்று மருத்துவர் கூற அதையே அந்த மருத்துவமனையின் செவிலியும் கூறினார்.
யூவர் ஹானார் மருத்துவர் சொல்லுவதை வைத்து பார்த்தால் அன்று அவருக்கு உடல் நிலை மிகவும் மோசாகவெல்லாம் இல்லை. கதிர் நினைத்து இருந்தால், அவர் மருத்துவமனையில் இருக்கும் தகவலை வீட்டிற்க்கு தெரியபடுத்தி இருக்கலாம். ஆனால் அவர் திட்டம்மிட்டே அதை செயவில்லை. மேலும் இருவரும் இப்படி தனியாக இருக்கும் சந்தர்பத்தை அவர் தவரவிட விரும்பவில்லை என்றே தெரிகிறது என்றார்.
இதுவே இவர்கள் இருவருக்கும் தவறான பழக்கம் இருப்பதற்க்கு சாட்சி என்று முடித்தார். மேலும் உன்மையில் தன் மகள் மீத் தவறு இல்லை என்றால் இன்று வரை அன்பழகன் தங்கி இருப்பது கனேசன் வீட்டில் தான்,அதுவும் இரண்டாவது திருமணம் முடித்து. யாராவது, தன் பெண்ணை கைவிட்ட மருமகனை தன் வீட்டில் வைத்து இருப்பார்களா…………. இதில் இருந்தே தெரிகிறது தவறு யார் பக்கம் என்று.
நீதிபதி கண்ணனிடம் கேட்க அவன் நோ கொஸ்டின்ஸ் யூவர் ஹானார் என்று முடித்து இருந்தான்.
அதை எல்லாம் பார்த்து இருந்த நல்ல தம்பிக்கும், அன்பழகனுக்கும் வெற்றி தங்கள் பக்கம் தான் என்று முடிவே செய்துவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நீங்கள் எந்த சாட்சியும் ஆஜர் படுத்தவில்லையா என்ற நீதிபதி கேள்விக்கு, எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும் என்று கண்ணன் சொல்ல, சரி இந்த வழக்கை இன்னும் 4 நாட்கள் ஒத்தி வைக்கிறேன்,அப்போதும் நீங்கள் எந்த சாட்சியமும் கொடுக்கவில்லை என்றால், இருக்கும் சாட்சிகளின் அடிப்படையில் அன்று வழக்கின் தீர்ப்பு வழங்கபடும் என்று கூறி நீதிபதி சென்று இருக்க.
எல்லோரும் வெளியேறினர். கண்ணன் தன் அறைக்கு செல்ல, நல்லதம்பி என்ன கண்ணா இப்படி ஆகி போச்சு என்றார் முகத்தை சேகமாக வைத்துக்கொண்டு.
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு…
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு…
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு…
பல கிறுக்கு உனக்கு இருக்கு… இப்போ எண்ணாத மனக்கணக்கு…
பல கிறுக்கு உனக்கு இருக்கு… இப்போ எண்ணாத மனக்கணக்கு…
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு…
போடா போடா புண்ணாக்கு… போடாத தப்பு கணக்கு…
என்று கண்ணன் போன் அலறியது………………… இவன் எனக்காக பாட்டு போடுறானா, இல்ல இவனுக்கு போன் உண்மையில் வருதா…………