பாகம் – ௰௮

உனக்குள் நானே….

உருகும் இரவில்.. உள்ளத்தை

நான் சொல்லவா….. மருவும்

மனதின் ரகசிய அறையில்..

ஒத்திகை பார்த்திட வா…… சிறுக

சிறுக உன்னில் ….என்னை..

தொலைத்து மொழி சொல்லவா…..

சொல்லால் சொல்லும் என்னை..

வாட்டும் ..ரணமும் தேன் அல்லவா ……

(பாடல் மின்னும் பனிச்சாரல் )

நேரம் நடு இரவை தாண்டி இருக்க  கூடல் முடிந்த களைப்பில் தன் கணவனின் மார்பில் புதைந்த வண்ணம் பாடலின் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தாள் மேகமதி.

அந்த அறையில் கேட்ட இசையிலும் தன் மனைவியின் முணுமுணுப்பான குரலிலும் லயித்து, மார்பில் சாய்ந்திருக்கும் தன் மனைவியின் தலையை வருடிவிட்டவாறே கண் மூடி மோன நிலையில் இருந்தான் , ரகுநந்தன்.

இப்போதும் அந்தப் போர்வை அவர்களின் தலைவரை போர்த்திய வண்ணம் தான் இருந்தது.

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா” என்ற வரிகளை அவள் பாட,  “அதை நீ சொல்லவே வேணா மதிக்குட்டி எனக்கே தெரிஞ்சிருச்சு”, என்று நமட்டு சிரிப்புடன் கூறினான்.

“டேய் புருஷா என்னை கிண்டல் பண்ண, அவ்வளவுதான் பாத்துக்கோ”, என்று கோபம் போல் கூறிய மதி, தன் கையை அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு, மார்பிலிருந்த தன் முகத்தை சற்று மேலெழும்பி அவன் கழுத்துக்குள் புதைத்துக் கொண்டாள்

“ஹலோ மதி மேடம் என்ன நீங்க நேத்து வரைக்கும், என்னை “வாங்க போங்கன்னு” பேசிட்டு இருந்தீங்க.  அப்புறம் இன்னைக்கு என்னமோ “ங்க” மிஸ் ஆச்சு.   இப்போ “டே புருஷான்னு” கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்க. வரவர மரியாதை ரொம்ப தேயுதே”

“ஆமாம். என் புருஷன்ன நான் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுவேன் உனக்கு என்ன? பேசாம இருடா”

“ரைட்டு விடு”, என்றவன் சில நிமிடங்கள் மௌனமாக அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அச்சமயம் அவன் மனதில் ஒரு விஷயம் நினைவுக்கு வர, அதனைப் பற்றி சிந்தித்தவன், அவளிடம், “மதி உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்?” என்றான்.

அவளும் என்னவென்றுக் கேட்க,  “கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிஷன் பத்தி  பேசினல ஞாபகம் இருக்கா?”,  என்று கேட்க,  ஒரு நிமிடம் தயங்கியவள் “ஞாபகம் இருக்க”  என்றாள்.

“இப்போ உனக்கு அந்த கண்டிஷன் ஞாபகம் இருக்கா மதி” என்று அவன் கேட்க, அவன் கழுத்தில் புதைந்திருந்தவள், சற்று விலகி அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.  மதி நேராக அவன் கண்களை பார்த்து,

“ரகு முன்னாடி நான் அந்த கண்டிஷன் போட்டதுக்கு, என்கிட்ட ஒரு காரணம் இருந்துச்சு.  இப்போவும் அந்த காரணம்  இருக்கு. ஆனா அதை தாண்டி இப்போ ரகுக்கு மதி யாருன்னு எனக்கு புரிஞ்சிருச்சு”, என்றவள் பார்வை “சொல்லவா?” என்பது போல் ரகுவை கேட்டது.

அவனும் “சொல்”, என்பது போல் பதில் பார்வை பார்த்து வைக்க, மதி,

“ரகு நான் உனக்கு ஓகே சொன்னதுக்கு முக்கியமான காரணம், எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது.

முதல் பார்வையிலே உன்னை எனக்கு பிடிச்சது.  ஆனா காதலோ, கல்யாண பண்ணிக்கனுங்கிற ஆசையோ இல்லை.

ரெண்டாவது தடவை நீ என்னை மீட் பண்ணும் போது என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்ட.  அப்போ நான் யோசிச்சது, நான் உனக்கு ஏன் ஓகே சொல்லக்கூடாது என்கிறது மட்டும்தான்.

ஏன்னா எல்லா பொண்ணுக்கும் உன்ன மாதிரி ஒருத்தனா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருக்கும். அது நீ ரொம்ப ஃபேமஷ், ஸ்டார், ரிச் இந்த காரணங்களுக்கு கிடையாது.

முழுக்க முழுக்க உன்னை ஒரு சக மனிசனா ரொம்ப பிடிச்சது.  அதை தாண்டி கல்யாணம் பண்ணிக்காம இருக்க என்கிட்ட காரணம் இருந்தபோதும், அந்த சூழ்நிலைல  நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா நான் ஓகேன்னு சொன்ன அந்த நிமிஷத்துல இருந்து நீ பண்ண ஒவ்வொரு விஷயமும் எனக்கு ஸ்பெஷல் ரகு”, என்றாள்.

அதற்கு அவன், “அப்படி என்ன நான் பண்ணிட்டேன்? எனக்கே தெரியலையே? சொல்லேன் மதி,  கேட்கலாம்”, என்று அவளை பார்க்கும் வண்ணம் வாகாக திரும்பிக் கொண்டான்.

“நான் சென்னை வரதுக்கு ஒரு மாசம் முன்னாடி தான் அப்பா அம்மா தவறினாங்க‌.  30 நாள் காரியம் முடிஞ்சு ரெண்டு நாள்ல அங்கிருந்து நான் கிளம்பி இங்க வந்தேன்.

அடுத்து ரெண்டு வாரத்தில நான் உன்ன மீட் பண்ணினேன்.  அந்த 1 மாசத்துல நான் எவ்ளோ வேதனைய அனுபவிச்சேன்னு உனக்கு தெரியாது ரகு.

இப்பவும் சில வேதனைகள் சில காரணம் என் மனசுல இருந்தாலும் அதெல்லாம் தாண்டி நீ என்கூட இருக்கிறது எவ்வளவு பெரிய பலமா இருக்குன்னு உனக்கு புரியாது.

என் கல்யாணம் அப்பா  அம்மா இல்லாம நடக்கிதுங்கிற விஷயத்தை, நீ என்னை உணரவே விடலைத் தெரியுமா?  எங்க அம்மாக்கு என்ன மாதிரி டிசைன்ல என்ன மாதிரி கலர்ல என்ன மாதிரி எனக்கு கல்யாண புடவை அமையனும்னு ஆசைப்பட்டாங்களோ, அதே மாதிரி என் தங்கச்சிங்க கிட்ட கேட்டு, அதை உன் அம்மாக்கு தெரியப்படுத்தி அப்படியே எனக் கல்யாணப் புடவை செய்ய வச்ச.

இந்த கல்யாணம் நம்ம பேமிலி மெம்பர்ஸ் மட்டும் நின்னு நடத்தி இருந்தாலும்,  இதுல எங்க அப்பா அம்மா என்ன எல்லாம் செய்யணும்னு நினைச்சாங்களோ அத்தனை சம்பிரதாயம் நடந்துச்சு.

அதெல்லாம் இந்த வீட்டு சம்பிரதாயம் இல்லைன்னு எனக்கே கொஞ்ச நாள்ல தான்  புரிஞ்சது.  இப்பதான் எனக்கு புரியுது அதெல்லாம் நீ தான் ஏற்பாடு பண்ணி இருக்கேன்னு. அது மட்டும் இல்ல ரகு.

அதுக்கப்புறம் நடந்த எவ்ளோவோ விஷயம், ஒவ்வொரு விஷயத்துலயும் அப்பா அம்மாவை நினைச்சு ஏங்கிற நிலைமை எனக்கு வரவே இல்ல.   அப்படி பார்த்துக்கிட்ட நீ என்னை.

என்னை மட்டுமா அங்க சக்தியையும் ஜீவாவையும் கூட அப்பா அம்மா நினைச்சு ஏங்க விடாம பார்த்துக்கிட்டு, எப்பவும் அவங்களுக்காக கூட துணைக்கு ஆள் போட்டு, அவங்களுக்கு மனசளவுலையும் பாதுகாப்ப உணர்த்திருக்க.

அம்மாவும் அப்பாவும் கூட இருக்கிற மாதிரி அவங்க உணர்றாங்க.  நீ எங்க மூணு பேருக்கும் “நான் இருக்கேன்னு” உணர்த்தி இருக்க.

இதெல்லாம் விட நீ எனக்கு கொடுத்திருக்கிறது பெரிய விஷயம் நம்பிக்கை, பலம், …….இன்னும்…… உனக்கு நான்….. எப்படி….. சொல்றது ரகு. இது எல்லாம்……”

சிறிது நேரமாக நிதானமாக நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தவள், அம்மா அப்பா என்று ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தாள்‌.

அதன் விளைவால் அவள் வார்த்தைகள் திணற ஆரம்பிக்க, சரியாக மூச்சு விட முடியாமல் தவிக்க ஆரம்பித்தாள்.

அவளை தடுத்து நிறுத்த முயற்சி செய்தான் ரகு.  ஆனால் அவள்  பேச்சை நிறுத்த முடியாமல் போக திணறல் அதிகமானது‌.

இதற்கு மேல் தாங்காது என்று அவனே அவள் பேச்சை நிறுத்தி இருந்தான்.  அவளை அவளுக்கே மறக்கடிக்கும் வேலையில்.

மறுநாள் காலை ரகு எப்பொழுதும் விட தாமதமாக எழ,  மதி கிளம்பி தயாராகி கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தாள்.

எழுந்து தலை வாருபவளை பார்த்துக் கொண்டிருந்தவனை இவளும் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

எழுந்தவன் மெதுவாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.

திடீரென யோசனை வந்தவனாக அருகில் இருந்த தொலையியக்கி(remote control)யை எடுத்து இரவு  இசைத்துக் கொண்டிருந்த அதே பாடலை மீண்டும் ஒலிக்க விட்டான்.

அது மெதுவாக, “மின்னும் பனிச்சாரல்”  என ஆரம்பிக்க, மதி, அவன் செயலின் காரணம் புரிந்து கொணடாள்.

வேகமாக தலைபின்னி  முடித்தவள், துப்பட்டாவையும் போட்டு கொண்டு,  தன் பையில் தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்ப எத்தனித்தாள்.

அவள் வேகமாக புறப்படுவதிலேயே அவள் தப்பிக்க முயற்சிப்பதை அறிந்து கொண்டவன், கட்டிலில் இருந்து மெதுவாக இறங்க, அதற்குள் அவள் குடுகுடு என்று வெளியே சென்று கதவை முடியவள், கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே, அதனை திறக்கவிடாமல்  நின்று இருந்தாள்.

அவன், “மதி கதவை திற” என்று கதவை திறக்க முயன்ற படியே கூற, அவள், “முதல போய் குளி ரகு.  உன் ஐடியா எல்லாம் என்கிட்ட வேலை செய்யாது, இப்ப நீ வெளிய வந்த, அப்புறம் நான் உன்கிட்ட பேச மாட்டேன்”, என்றாள்.

அவள் வெட்கம் உணர்ந்தவன்,  “சரி, சரி கிளம்புறேன்.  ஆனா  நானும் நீயும் ஒன்னா தான் சாப்பிடணும்.  எனக்காக வெயிட் பண்ணு”, என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்து குளியலறை நோக்கி செல்ல,

அவன் உள்ளே செல்லும் சத்தம் கேட்பதை உணர்ந்தவள்,  மெதுவாக கைப்பிடியை விட்டுவிட்டு வேகமாக படிக்கட்டு நோக்கி நடந்தாள்.

குளியலறை நோக்கி சென்றவன் பாதியிலேயே மீண்டும் ஓடிவந்து கதவை திறக்க, அதற்குள் மதி படிக்கட்டில் இறங்கி கொண்டிருப்பது தெரிந்தது. அவளை பார்த்து சிரித்துக்கொண்டே மீண்டும் குளியலறை நோக்கிச் சென்றான்.

வேகமாக கிளம்பி உணவு மேஜை நோக்கி வந்தான்.  அப்போதுதான் சரியாக அனைவரும் சாப்பிட தொடங்கி இருந்தனர்.

ரகு வரட்டும் என காத்திருந்த மதியையும், கௌதமியும் தேவியும் அழைத்து வந்து அமர வைத்து இருக்க, அவள் ரகு வரும் பாதையை பார்த்த வண்ணம் இருந்தாள்.

சரியாக அவன் வந்ததும் அவனுக்கு ஒரு தட்டை வைத்தாள்.   ஆனால் இதில் இன்னொரு அப்பாவி ஜீவன் மட்டும் தனியாக நின்று ரகுவை முறைத்து வண்ணம் நின்றிருந்தது.

அது நம் ரவி தான்.  அவர்களுக்கு காலையிலேயே ஒரு வேலை இருக்க,  அவனை விரைவாக கிளம்ப சொல்லி நேற்று இரவே அவனிடம் கட்டளையாக கூறியிருந்தான் ரகு.

ஏனெனில் ரவி தான் காலையில் அதிக நேரம் தூங்குபவன்,   அவனை அலாரம் வைத்து எழும்ப சொல்லியவன், தாமதமாக எழுந்து வந்ததை பாரத்து தான் ரவி கோபமாக நின்றிருந்தது.

எப்போதும் நேரம் ஆகிவிட்டால் உணவு மேஜைக்கு செல்லாமல் அப்படியே செல்பவன், இன்று நேராக உணவு மேஜை நோக்கி செல்லவும் இன்னும் அவனுக்கு கோபம் வந்து அவனை பார்த்து முறைக்க, ஆனால் அதை அவன் நண்பன் கண்டுகொள்ளாதது தான் அங்கே சோகம்.

ரவியும் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.  ஆனால் ரகுவின் பார்வை எங்கே தன் நண்பனிடம் சென்றது, அருகில் இருந்த தன் மனைவியை தான் விழுங்கிக் கொண்டிருந்தது.

மதி அவன் தட்டில் உணவை வைத்த பிறகும், அவன் பார்வை அவளிடமே இருக்க, அவளுக்கும் அவன் பார்வையின் தாக்கம் தாங்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

அச்சமயம் ரவி, ரகுவின் தொடையில் நறுக்கென கிள்ளி வைக்க, உடனே ரகு “ஆஆஆ….” எனக் கத்தி வைத்தான்.

அனைவரும் அவனை என்னவென்று பார்க்க, மதி அவனிடம், “என்னாச்சு ரகு”, என்று பதட்டமாக கேட்டாள்.

“ஒன்னு இல்லை மதி சாப்பிடும் போது நாக்க கடிச்சிட்டேன்”

“நீங்க இன்னும் சாப்பிடவே இல்லையே?”

“சாப்பாட வாய்ல வச்சிட்டேன்னு நினைச்சு கடிச்சிட்டேன் மதி” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

அவன் பக்கத்தில் இருந்த ரவி தான் ஏதோ செய்து விட்டான் என புரிந்து கொண்ட மதி, நமட்டு சிரிப்புடன் தன் உணவில் கவனம் வைத்தாள்.

உடனே ரகு மறுபுறம் திரும்பி “ஏன்டா?”,  என்று மீண்டும் பல்லை கடித்திக் கொண்டே, தன் நண்பனை பார்த்துக் கேட்க,  அவனோ,

“தட்டை பாத்து சாப்பிடுறா பரதேசி.   லேட்டா வந்திட்டு கடுப்பேத்தாத.  வரவர நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கடா” , என்றான்.

ரகுவிற்கு அப்போது தான் இன்று சீக்கிரம் கிள்ளிப் வேண்டும் என்ற நினைவு வந்தது.  உடனே தன் மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தவன், தன் நண்பனிடம் சமாளிப்பாக,

“சரி சரி கோபப்படாத சாப்பிடு”, என்று அவன் உணவை தொடர்ந்தான்.

அவரவர் அவர் உணவை உண்டுக் கொண்டிருக்க அப்போது பரத் வந்தவன், கௌதமியிடம்,

“பெரிமா, நாளைக்கு  நான் தீப்தியை பாக்க ஊருக்கு போறேன். அடுத்து எப்படியும் குழந்தை பொறந்து பத்து நாளுக்கு அப்புறம் தான் வருவேன்.  அதுவரைக்கும் நீங்க மேனேஜ் பண்ணுவீங்க தானே”,

என்று கேட்க, அவர் தான் பார்ப்பதாகக் கூறினார்.

பின் பரத் ரகுவிடம்,  “உன்கிட்டயும் சிலது சொல்லிருக்கேன்ல,  அதை நீ மேனேஜ் பண்ணுடா, இப்படியே நம்ம பிஸ்னஸ் விட்டு தள்ளி இருக்காத”,  என்று கூறினான்.

“சரிடா “, என்ற ரகு அவனை யோசனையாகவே பார்த்துவிட்டு, மீண்டும் உணவில் கவனம் வைத்துக் கொண்டான்.

காவல் புரிவா(ள்)ன்…..

மகா ஆனந்த் ✨