எப்படி இந்ந பிரச்சனையை பேசுவது என்று அவருக்கு புரியவில்லை. பரிதி மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு மகளுக்கு இப்போதாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று எண்ணி இருந்தவர் இடையில் இவன் வேறு என்ன  செய்வான் என்று மனதில் பயந்து போனார்.

எல்லோர் முகத்தையும் பார்த்தவன், இனி இவர்கள் தனக்கு எதிராக ஏதும் செய்ய கூட நினைக்க கூடாது…………………. எல்லோரும் ஆட்டமா காட்டிங்க நான் காம்மிக்கிறேன் என் மகளை வைத்து…….. முக்கியமா அவளுக்கு என்று நினைத்தவன் வேலைக்கு கிளம்பி இருந்தான்.

இருக்கும் வேதனையில் இது வேறா என்று தான் இருந்தது கனேசனுக்கு, ஏற்கனவே பாக்கியாவிடம் எப்படி பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை, என்ன இருந்தாலும் அவர் தன் மகளை திருமணம் செய் எப்படி சம்மதிப்பார் என்று அவர் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது, ஒரு வேளை அவர் குழந்தையை காரணம் காட்டினால் அவளை தான் தன் பெறுப்பில் எடுத்துக்கொள்வதாக சொல்லிவிடாலாம் என்று எண்ணி இருந்தார். இதில் இவன் வேற இப்படி பேசுகையில், அடுத்து என்ன என்று தான் தவித்து போனார்.

அன்று சென்னை செல்ல திட்டம் இட்டு இருந்தவர் கதிருக்கு அழைத்து தான் நாளை வருவதாக கூறிவைத்துவிட்டார், அவனிடம் ஏதும் சொல்லவில்லை…………. அவன் இந்த விஷயத்தை கேட்டால் பிரச்சனை இன்னும் பெரியதாக கூடும் என்று எண்ணியே அவனிடம் ஏதும் சொல்லவில்லை அவர். அடுத்த என்ன என்று மனதில் யோசித்த படி அமர்ந்து இருந்தார். என்ன தான் அன்புவுக்கு மகள் மேல் பாசம் என்றாலும் இதில் அது மட்டும் இல்லை. அவனுக்கு மகள் மேல் பாசம் இருக்கிறது…………….. அதை அன்று அவன் கண்களில் பார்த்தார் தான்……………… அவரும் ஒரு தந்தையாக அவன் உணர்வுகளை புரிந்துக்கொண்டார் தான்………….. ஆனால் அதை தாண்டி, அது மட்டும் இவன் இப்படி நடந்துகொள்ள காரணம் இல்லை……………….. எப்படி என்றாலும் என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவேன் என்று மனதில் நினைத்க்கொண்டு, அதை தொடர்ந்து சில முடிவுகளையும் எடுத்துக்கொண்டார். 

அடுத்த நாள் அவர் சென்னை சென்று இருந்தார். மகள் வீட்டில் இல்லை என்று உறுதி படுத்திக்கொண்டு, சென்று இருந்தார் வீட்டில் பரிதியின் அம்மா, அப்பா இருந்தனர் அவர் கதிரை கூட அழைத்து செல்லவில்லை……………..

காலையில் அவர் இப்படி தீடீர் என்று வந்து நிற்பார் என்று எதிர்பார்காதவர்கள், அவரை அழைத்து அமரவைத்தனர். ஒரு சங்கடமான சூழ்நிலை அனைவருக்கும்………………………… எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார். பாக்கியவோ இவர் இப்போது என்ன பேசுவார் என்று பார்த்து இருந்தார்…………

சிறிது நேரம் அமைதியாக இருந்த பரிதியின் அப்பா சொல்லுங்க என்ன விஷயம் என்று அவரை பார்த்து கேட்டார், அதில் அவர் பாக்கியாவின் முகத்தை பார்தவர், பின் தன் ஒருவாரு தேற்றிக்கொண்டு, என் பெண்னை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும், சொல்ல போன என்னைவிட உங்களுக்கு தான், நல்ல தெரியும், அவ கஷ்டத்தில் இருக்கும் போதும் நீங்க தான் அவ கூட நின்னு இருக்கீங்க……………….

ஒரு அப்பாவா நான் அவ கூட நிக்க வேண்டியே நேரத்தில் நிக்கல ஆனா அந்த நேரத்தில் அவளுக்கு எல்லாமும் நீங்களா தான் இருந்தீங்க. இப்பவும், இருக்கிங்க…………….

இப்படி நான் செய்ய தவறிய எல்லாத்தையும் நீங்க தான் அவளுக்கு பக்கத்தில் இருந்து செய்து இருக்கீங்க……. ஆனா இப்போ நான் அவளை புரிந்துக்கொண்டேன், அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் நினைக்கிறேன், அதுவும் அவளுக்கு பிடிச்ச மாதிரி அவ சந்தோஷமா இருக்கனும். அவ எந்த தப்பும் செய்யலயே……………………

அவளுக்குகாக உங்க கிட்ட ஒன்னு கேட்க வந்து இருக்கேன்……………… அவருக்கு தான் அவர் என்ன கேட்க போகிறார் என்று தெரிந்து இருந்தே……. அதனால் அவரையே பார்த்து இருந்தார்…………. என் மகளை உங்க பையனுக்கு கல்யாணம் பன்னி வைப்பிங்களா…………………. உங்க மகனுக்கு அவளை பிடித்து இருந்தால்……………………..

ஏன்னா………… இதுல நம்ம எல்லார் சம்மதம்,சந்தோஷத்தைவிட வாழ போற அவங்க சந்தோஷம் தான் முக்கியனும் நினைக்கிறேன்…….. ஏன்னா என் அனுபவம் அப்படி விரும்பம் இல்லாமல் ஓரு திருமணம் நடந்தா அதோட விளைவுகள் எப்படி இருக்கும் தெரிஞ்சதுனால சொல்லுறேன்…………………….. என்றாவர் மேலும் இதுல என் பெண்ணோட விருப்பம் மட்டும் இல்ல, உங்க பையனுக்கும் விருப்பம் இருக்கனும் நினைக்கிறேன்…………………… நீங்களும் இந்த கல்யாணத்துக்கு முழுமனச சம்மதிச்சா நான் இன்னும் சந்தோஷபடுவேன். என்றவர் தான் எல்லாவற்றையும் பேசிவிட்டேன் என்ற எண்ணத்தில் அவர் முகம் பார்க்க……………………..

கனேசன் இப்படி வந்து நேரடியாக கேட்டுவிடுவார் என்று பாக்கியாவும் எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த ஊரில் வேலை பார்க்கும் போது அந்த ஊரில் அவரின் செல்வாக்கை அறிவார். அப்படி பட்டவர் தன் மகளுக்காக தன்னிடம் இப்படி தன்மையாக பேசியது அவருக்கு ஆச்சரியம் தான். என்ன தான் அவர் சொன்ன செய்திகள் யாவும் உண்மை என்றலும், அதை ஏற்க தான் அவரால் முடியவில்லை. திருமணம் முடிந்து, கையில் குழந்தையுடன், விவாகரத்தான ஒரு பெண்ணுக்கு என் மகன் மாப்பிள்ளையா……………….. அவனுக்கு என்ன குறை எதற்கு இப்படி ஒரு பெண், ஊரில் வேறு பெண்ணே இல்லயா என்ன? என்று தான் அவர் எண்ணம் ஒடிக்கொண்டு இருந்தது. அதே நேரத்தி் நல்ல வேளை இவருக்கு தன் மகன் அவர் மகளை விரும்புவது தெரியவில்லை……………………….. அப்படி தெரிந்து இருந்தால் இவர் இப்படி தன்னிடம் நிற்பாரா என்ற எண்ணமும் சேர்ந்தே இருந்தது. கூடவே நிம்மதியும். ஆனால் அந்த நிம்மதி அடுத்து 1 நிமிடம் கூட நீடிக்கவில்லை. காலையில் வெளியில் சென்று இருந்த பரிதி அப்போது தான் வீட்டுக்கு வந்து இருந்தான். கனேசன் பேசியது முதலில் அவனுக்கு புரியவில்லை………. யார் இவர் என்று பார்த்த படி வெளிவராண்டாவில் நின்றுவிட்டான். பின்பு தான் அவர் அழகியின் தந்தை என்று கண்கொண்டான். அவர் பேசுவதை எல்லாம் கேட்டவன், அவன் அம்மாவின் முகமாற்றங்களையும் கண்டுக்கொண்டான். கனேசன் பேசி முடித்ததும் தன் அம்மா வாய் திறக்கும் முன்……………. எனக்கும் உங்கள் மகளை ரொம்ப பிடித்து இருக்கு, எனக்கு உங்க மகளை திரமணம் செய்ய சம்மதம் என்றான்.

கூடியவிரைவில் என் வீட்டில் இருப்பவர்கள் முழு சம்மத்த்துடன் நான் உங்கள் மகளை தி்ருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறி பாக்கியாவின் தலையில் இடியை இறக்கி இருந்தான்.

அவன் வந்ததையே எதிர்பார்க்காதவர், அவன் இப்படி சொல்லவும் அடுத்து என்ன என்று அதிர்ந்து நின்றுவிட்டார். இனி இதில் தான் என்ன செய்ய முடியும் என்று தான் அவருக்கு தோன்றியது. கனேசனுக்கும் அவரது முக மாற்றத்தில் அது புரிந்து தான் இருந்தது. ஆனாலும் ஏதும் சொன்னாலும், எல்லாம் யார் மனசும் சங்கடபடமா  நடக்கனும் அப்படினு அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் தம்பி என்றவர் கிளம்பிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில், அன்பு செய்த செயல் எல்லோர் முடிவையும் மாற்றி இருந்தது. அவன் அனுப்பிய வக்கீல் நேட்டீஸ், கதிரழகியை கொதிநிலையில் வைத்து இருந்தது. அதில் அவன் சொல்லி இருந்த காரணங்கள் எல்லாம் அவளை அடுத்து என்ன என்று யோசிக்க வைத்து இருந்தது.

அவனும் அதே நேரத்தில் அதை பற்றி தான் தன் வக்கீலிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

இங்க பாருங்க அன்பழகன் நீங்க சொன்ன படி அவங்குளுக்கு வக்கீல் நேட்டிஸ் அனுப்பியாச்ச…………………….. ஆனா கேஸ் உங்களுக்கு சாதகமாக தான் இருக்கும் அப்படினு என்னால் எந்த உத்திரவாதவும் தர முடியாது என்றார்.

அதை கேட்டுக்கொண்டு இருந்தவன் எல்லாம் எனக்கு சாதகமா தான் இருக்கும், இருக்கனும்……………………… என்றவன் வீட்டிற்க்கு வந்து இருந்தான். வீட்டில் இருந்த சூழ்நிலையே அவனுக்கு உணர்த்தியது வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது என்று புரிய அவன் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டான். 

ரத்தினம் தான் ஆத்திரம் தாளாமல் அவன் அறை கதவை தண்டினார். வெளியில் வந்தவன் சட்டைபிடித்துவிட்டார் ரத்தினம்………. உன் மனசில் என்னடா நினைச்சுட்டு இருக்க இதுவரைக்கும் அவ வாழ்க்கையை கெடுத்தது போதாதுனு இப்போ இப்படி வக்கீல் நேட்டீஸ் அனுப்பி இருக்க………….. இங்க பார் அன்பு இதோட அவள் வாழ்கையில் இருந்து விலகிக்கே இல்லை உனக்கு யாரும் இல்லாம அனாதையா தெருவில் தான் நிக்கனும் நீ என்றார்.

அவர் கையை உதறிவிட்டவன் என் இன்னிக்கு மகள் மேல பாசம் பெங்குதோ……………………… என்னமோ நீ பெத்த பெண்மாதிரி………………….. முத்த தாரத்து பெண்ணு மேலநே உனக்கு இவ்வளவு பாசம் இருக்கும் போது எனக்கு பெறந்த பெண்ணு மேல எனக்கு இருக்காதா……………….

இங்க பார் க்கா……. எனக்கு என் பெண்ணு வேனும். அவளை நான் யாருக்கும் விட்டு தறமாட்டேன். என் பெண்ணுக்கு அந்த கதிர் பையன் அப்பனா இருப்பானா……………… யார் பெண்ணுக்கு யார் அப்பா……………………………….

என்றவனை கொலைவெறியில் முறைத்தவர், உனக்கு அந்த அறிவு இருந்து இருந்தா இன்னிக்கு இந்த நிலை வந்து இருக்குமா? நீ புத்தி கெட்டு போய் பன்னிய வேலைக்கு அவளை குறை சொல்லுற என்றார்…………..

நீ தான் அவள் வேண்டாம், அந்த குழந்தை உன் குழந்தை இல்லைனு சொல்லிட்ட இல்ல………………………… அதோட உனக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பன்னிகிட்ட……………… இப்ப எதுக்குடா அவ வாழ்க்கையில் தலையிடுற……………………

நீ சொல்லுவது எல்லாம் சரிதான். அன்னிக்கு இருந்த சுழ்நிலை அது என் குழந்தையா இருகாதுனு நினைச்சேன். அப்போ மதியா பார்த்தா அப்படியே என்ன மாதிரியே இருக்க……………. அவ என் பெண்ணு தான் சொல்ல இதவிட வேற என்ன ஆதாரம் வேணும்…………………….

நீ சொல்லுற மாதிரி எனக்கு பிடிச்ச பெண்ண கல்யாணம் பன்னி என்ன பிரோசனம், இத்தனை வருஷமா அவளுக்கு புள்ளையே இல்லை………….. அதுக்கு நான் காரணம் இல்லை………… அதவாது குறை எண்கிட்ட இல்லை……………….. அதுக்கு சாட்சி என் பெண்ணு மதி தான். 

அப்படி இருக்க…….. நான் புள்ளைக்காக இன்னோரு கல்யாணமா பன்ன முடியும். அதான் என் குழந்தையை என்கிட்ட கொடுக்க சொல்லுறேன். அவ தான் வேற கல்யாணம் பன்ன போறாளே அப்போ இன்னோரு குழந்தையை பெத்துக்க சொ்லூங்க……………………………….. எனக்கு என் குழந்தை வேணும்…………    

 டேய் அம்மாவும், புள்ளையும் பிரிக்கனுங்கற……… நீ எல்லாம் மனுசனா………… என்றார் ஆத்திரத்தில்………………. ஒ அப்படி ஒன்று இருக்கோ சரி அவளுக்கும் வேணா. எனக்கும் வேனா……………… அவள இங்க வந்து இருக்க சொல்லு. என் பெண்ணுக்காக அவளையும் ஏத்துக்கிறேன் என்றான் அவன்.

அவன் பேச்சில் பெரியவர்கள் ஆடி போனார்கள் என்றால்……. கேட்டு இருந்த நந்தினியோ அதிர்வில் மயங்கியே இருந்தாள்.

இவ்வளவு பேசும் இவனுக்கு பரிதி தான் மாப்பிள்ளை என்று தெரியாது தெரிந்தால் இவன் முடிவு என்னவாக இருக்குமோ?

பரிதி கையில் அன்பு அனுப்பி நேட்ஸ் இருந்தது. அவன் எந்த குழந்தையை வைத்து இந்த திருமணத்தை செய்ய சம்மதித்து இருந்தானோ அந்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு அன்பு அனுப்பி இருந்த நோடீஸ் 

பார்த்து பரிதியின் முடிவு என்னவாக இருக்கும்…………………………………..

தொடரும்…………….