பாக்கியாவிற்க்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. பரிதி இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று அவர் நினைக்கவில்லை. அதே சமயம் அவன் முடிவுக்கு அவரால் சம்மதிக்க முடியாது…. படித்தவர், ஆசிரியர்…… பரந்து மனம் கொண்டவர்…………….. முற்போக்கு சிந்தனை கொண்டவர் தான்……….. அழகிக்கு நடந்தது எல்லாம் தெரியும், அந்த நேரத்தில் அவளை புரிந்துக்கொண்டு அவளுக்கு பக்கபலமாக இருந்தவர். அவ்வளவு ஏன் அவள் வேறு திருமணம் செய்விரும்பினால் அதற்கும் துனையிருப்பார் தான்…….. ஆனால் கதிரழகியுடன் திருமணம் என்பதை அவரால் ஏற்க முடியவில்லை. தன் மகனுக்கு திருமணம் செய்ய வாழ்வு இழந்த ஒரு விதவை பெண்னை ஏற்றுக்கொள்ள முன்வந்தவர் தான். 

ஆனால் அந்த பெண் ஒருவருடன் வாழ்ந்து ஒரு குழந்தைக்கு பெற்று எடுத்தவள் என்பதில் அவர் மணம் அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. மணிமேகலை அப்படி இல்லை அவள் தன் வாழ்வில் அடி எடுத்தே வைக்கவில்லை. ஆனால் கதிரழகி அப்படி இல்லையே என்று அவர் மனம் கதிரழகியின் பக்கம் சாயமறுத்தது. அவனுக்கு மணிமேகலை வேண்டாம் என்றால் வேறு பெண் பார்க்கலாம். ஆனால் கதிரழகி வேண்டாம் என்பதோ அவர் முடிவாக இருந்தது. ராகவனுக்கு மகன் பின்னால் இருப்பதா? மனைவிக்கு துனை இருப்பாதா என்று தெரியவில்லை. ஆனால் இன்று பேசிவரையில் பரிதியின் மனதை இதில் இருந்து மாற்ற முடியாது என்று அறிந்து இருந்தார். சிறு வயது முதல் அவன் முடிவுகளில் எத்தனை ஸ்திரமாக இருப்பவன் என்று அறிந்தவர், எப்படியும் மகன் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வான். ஆனால் இதில் யாரின் மனமும் கோனாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

எல்லோரும் ஒரு மாதிரியான மனநிலையில் இருக்க, மதி பரிதியுடன் அவன் அறையில் அவர்கள் உலகத்தில் இருந்தனர். பாக்கியாவிற்க்கு மகனின் இந்த மகிழ்ச்சியை பார்க்க பார்க்க எங்கே தானே இந்த திருணத்துக்கு சம்மதித்துவிடுவோம்மோ என்று தோன்றியது……………..

அதனால் தன் முடிவை மகனிடம் திடமாக கூறிவிட நினைத்து அன்று இரவு உணவின் போது, மகனிடம் இது சரிவராது பரிதி, இந்த திருமணத்துக்கு நான் சம்மதிக்க முடியாது………. உனக்கு மணிமேகலை வேண்டாம் என்றால் வேறு பெண் பார்க்கிறேன் என்றார் அவன் முகத்தை பார்த்தபடி……………. அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அம்மா எனக்கு அழகி மட்டும் இல்ல, மதிகுட்டியும் வேனும், உங்களுக்கு இந்த கல்யாணத்தில் வருப்பம் இல்லைனா பரவாயில்லை. எனக்கு இப்படியே இருப்பதில் கஷ்டம் இல்லை. ஆனால் மதியைவிட முடியாது……………… என்றான் முடிவாக…………. இவன் என்ன சொல்லுகிறான் குழ்ந்தையை பிரியமுடியாமல் திருமணம் செய்துக்கொள்ள நினைக்கிறான்னா என்ன? அப்படி என்றால் இவன் வாழ்க்கை என்று அவரும் குழம்பி போனார்…..

கதிரழகிக்கு உறக்கம் இல்லை………… பரிதி திடீர் என்று இப்படி போசுவான் என்று நினைக்கவில்லை……… பாக்கிய மேம், ராகவன் ஸார் என்ன நினைப்பாங்க என்னை பற்றி, இதுக்கு அப்புறம் எப்படி அவங்களை பார்த்து பேசுவேன் என்ற நினைப்பே அவளுக்கு தலை வேதனையாக இருந்தது.

தன் விருப்பம் எல்லாம் அவளுக்கு பின் சென்று இருந்தது. என்ன நடந்தாலும் தன்னால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தவள், அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் உறங்கி இருக்க………. என்ன நடந்தாலும் இந்த திருமணத்தை நடத்தியே தீருவது என்ற முடிவுடன் உறங்கி இருந்தான் பரிதி……. 

……………………………….

மணிமேகலைக்கு மனதில் ஏக சந்தோஷம் அவளுக்கு தெரியுமே……. பெணுக்கு மறுமணம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல, தனக்கே அதை ஏற்றுக்கொள்ள மனதில் எத்தனை திடம் தேவைபடும் என்று அறிவாளே…………….. கதிரழகி போல் ஒரு பெண்ணுக்கு, அதுவும் பரிதி போல் ஒருவன் அவளை முழுவதும் புரிந்துக்கொண்டு அவளுடன் அவள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுவான் என்று அவளுக்கு தெரியும்…………….. என்னை விட அழகி தான் அவனுக்கு பெருத்தம்………. காலையில் அழகி தந்தையுடன் பேசியது முதல் இதை எப்படி பாக்கியாவிடமும், பரிதியிடமும் பேசுவது என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தவள். முதிலில் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு பின் பரிதியிடம் அழகி பற்றி பேசலாம் என்று நனைத்து இருந்தாள்.

ஆனால் காலையில் பரிதி பேசியது அவள் எதிர்பார்க்காத ஒன்று.  அடேய் திரி உனக்குள்ள இத்தனை பெரிய காதல் மன்னன்னா…………………. நம்ப முடியவில்லை இல்லை இல்லை என்று எண்ணிய(பாடிய)படி அவர்களுக்கு ஆதரவாக இருக்க முடிவு எடுத்து இருந்தாள்.

ஆனால் அவளுக்கு தெரியவில்லை, அவளுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் அவன் எல்லாவற்றையும் தாண்டி இரு அழகிகளையும்  தன் வசம் செய்வான் என்று…………………….

……………..

அன்பு வக்கீலின் முன் அமர்ந்து இருந்தான். எப்போது அழகிக்கு திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேச்சு எழுந்தோ, அப்போதே, அவன் முடிவு எடுத்து இருந்தான், அவன் சென்னை வந்து சொன்றதில் இருந்து அவன் பார்வை மதியழகி மேல் விழுந்து இருந்தது. எந்த குழந்தையை காரணம் காட்டி அவளை பிரிந்தானோ, அவளை வைத்தே கதிரழகியை அவனிடம் வரவைக்க திட்டம் தீட்டி இருந்தான். நந்தின்யுடன் அவன் வாழ்வு ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் நாட்கள் கடக்க அவள் எண்ணம் எல்லாம் சொத்தில் மேல் என்று அறிந்துக்கொண்டான். அவளுக்கு தன் மேல் காதல் இருக்கிறது, ஆனால் அதை தாண்டி இந்த சொத்தும் அவளுக்கு வேண்டும்…………………….. இந்த வசதி வாய்ப்புகள் இல்லை என்றாள் அவள் தன்னை மருந்துக்கும் மதிக்கமாட்டாள் என்று நினைத்தவன். அழகிக்கு திருமணம் முடிந்தால் தன் நிலை என்ன………………………..

இப்போது அவன் இந்த வீட்டில் தான் இருக்கிறான். இந்த சொத்துக்கள்,தொழிகள் மேல் அவன் ஆதிக்கம் சொலுத்தி வருகிறான். ஆனால் நாளை அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டால் இந்த நிலை நீடிக்குமா.? அதுவும் அந்த கதிர் எப்போது என்னை முடிக்காலம் என்று நினைத்து இருக்க, மாமா நினைத்து போல் இந்த திருமணம் நடந்துவிட்டால் பின் எல்லாம் அவன் வசம்………. தன் நிலை என்று அவனால் யோசிக்க முடிவில்லை.. அது எல்லாவற்றைய்யும்  விட கதிரயழகியை அவனுக்கு தெரியும் மதி அவன் குழந்தை, அதுவும் தன்னையே பிரதிபலிக்கும் நிறமும், அவள் கண்களும் அது அவன் குழந்தை என்று யாரும் சொல்ல தேவையில்லை………… அவளை எப்படி யாருக்கோ விட்டு கொடுத்துவிட முடியும்………………….

யாரே ஒரு பெண் என்று நினைத்த போது வராத உரிமை மகள் என்றதும் வந்து இருந்தது. அவள் என் மகள், அவளை நான் ஏன் யாருக்கே விட்டு கொடுக்க வேண்டும். 

நந்தினிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும், திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அழகிக்கு அவன் செய்த துரோகம் தான் தனக்கு இப்படி என அவன் நினைக்க ஆரம்பித்து இருந்தான். பிறரின் ஜாடை பேச்சுக்குளும் அப்படி தான் இருந்தது. அதனால் தான் எப்படியாவது ஒரு குழந்தைக்கு தாய்யாகி விட வேண்டும் என்ற நந்தினி அவனை நெருக்குகிறாள்.  தனு நிலையை தக்க வைக்க நினைக்கிறாள் என்று அவனுக்கு தெரியும், அது அவனுக்கு ஒருவித எரிச்சலை தான் கொடுத்து இருந்து. என்ன தான் நந்தினியின் அழகு அவனுக்கு மயக்கத்தை கொடுத்து இருந்தாலும். அவனால் அவளிடம் முழுவதுமாக ஒன்றமுடியவில்லை என்பது தான் நிஜம், அவள் தனக்கு பிடித்த மாதிரி இருக்கிறாள், தன் மனம் போல் நடக்கிறாள் ஆனாலும் ஏதோ ஒன்று அவனுக்கு குறைந்தது. இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள். தான் வாழ, தன் தேவைக்கு எதையும் எப்படியும் மாற்ற நினைப்பவர்கள். இவர்களிடம் இந்த குணமே இவர்கள் மனதளவில் ஒருவர் மற்றவரை நம்பாமல் போனதற்க்கு காரணம். காந்தத்தின் எதிர் எதிர் திசைகள் தானே ஈர்க்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!

கதிரழகியிடம் அவனுக்கு எப்பொதும் முரண்படும், ஆனாலும் அவள் தன் அருகில் இருப்பதை தான் அவன் விரும்பினான். அவள் மேல் எப்போதும் அவனுக்கு ஈர்ப்பு இருந்துக்கொணடே இருக்கும். எப்போதும் அவன் நினைப்பதற்க்கு மாறாக தான் அவள் செயல்கள் இருக்கம். அடுத்து அவள் என்ன செய்வாள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே இருப்பாள். அவளை எப்படியாவது தன் கீழ் வைத்துக்கொள்ள தான் அவன் மனம் விரும்பியது. அடுத்து அவள் என்ன செய்வாள் என்று எப்போதும் அவள் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த ஈர்ப்பு இன்று வரை அவள் மேல் அவனுக்கு குறையவில்லை. அவள் வேண்டும், தனக்கு கிழ் இருக்க வேண்டும்………… இந்த வசதி வேண்டும்……….. நந்நிதினியும் வேண்டும் ஊரில் உள்ளவர்கள் அவனை குறை கூற கூடாது. அவனுக்கு கூழுக்கும் ஆசை………. மீசைக்கும் ஆசை…………… 

இப்போது அவனுக்கு கதிரழகி வேண்டும்… ஆனால் அதை நேரடியாக சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை…… குழந்தையை காரணம் சொல்லி அவளை தன்னிடம் வரவழைதக்க நினைத்தான். அவன் அறிவானோ குழந்தைக்காக அவள் ஏதும் செய்வாள்…….. இந்த குழந்தைகாக தானே இவனை விட்டு சென்றாள், இப்போது அந்த குழந்தைக்காக தன்னிடம் அவள் வந்தாக வேண்டும். வருவாள்…………… வரவைப்பேன் என்று நினைத்தவன் அதற்க்கு உண்டான வேலைகளை வக்கீலைக்கொண்டு செய்துக்கொண்டு இருந்தான்…..

அவனுக்கு தெரியவில்லை வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் இருப்பான் என்று, இத்தனை நாள் அவன் கதிரழகியிடம் பார்த்து எல்லாம் ஒன்றுமே இல்லை…………. அவனை அடியோடு அடித்து சாய்க்கவே அவளுக்கு பக்கபலமாக ஒருவன் அங்கு இருக்கிறான் என்று…………

அவளுக்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அவன் அறியவில்லை,  இவன் மட்டும் அல்ல யாரும்மே அறிவில்லை. இருக்கும் எல்லாம் தடைகளையும் தகர்த்து அவளை தன் இடத்துக்கு தூக்கி சொன்றுவிடுவான் என்று……………………

 

தொடரும்…………….