அழைப்பு மணி அழைக்க யார் இவ்வளவு காலையில் என்று நினைத்தவள், வந்து கதவை திறக்க அப்பாவை எதிர் பார்க்கவில்லை இவ்வளவு காலையில். அதனால் திகைத்து நின்றாவள், வழிவிட்டு விலகி நின்றாள். வீட்டுக்குள் வந்தவர் பாப்பா எங்கமா என்றார் உள்ளே எட்டி பார்த்தபடி, தூங்கறா என்றாள்.

இத்த நாட்களில் மகள் இப்போது தான் அவருக்கு பதில் சொல்லி இருக்கிறாள், அதில் மகிழ்ந்து போனவர் முகத்தில் புன்னகை. ஆனால் அவள் தான் மனதால் குழம்பி போய் இருந்தாலே, அதனால் இது ஏதும் அவள் கருத்தில் பதியவில்லை. 

அதோ மகிழ்வுடன் மகளிடம் உன்கிட்ட பேசனும் வந்து இருக்கேன்மா என்றவர். அமர்ந்துக்கொண்டார். அவளும் சற்று தள்ளி அமர்ந்தவள் அவரை பார்த்து இருக்க………………….. சற்று தயங்கியவர்……………. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்க போறமா என்றார். அப்பாவின் கேள்வியில் நிமிர்ந்தவள் அவரையே பார்த்து இருக்க. உனக்குனு ஒரு வாழ்க்கை வேனாமா? 

முதல் தடவை தான் நான் தப்ப முடிவு பன்னிட்டேன், அது உன் வாழ்க்கையை தலைகீழா புரட்டி போட்டது மாதிரி இந்த முறை ஏதும் நடக்க கூடாது. அதனால் உன் சம்மதம் எனக்கு ரொம்ம முக்கியமா……… உனக்கு இன்னோறு வாழ்க்கையை நான் இருக்கும் போதே ஏற்படுத்தி கொடுத்து நீ நல்லா வாழ்வதை பார்த்துவிடனும்மா…………………… 

என்றவர் மேலும் இந்த முறை உன் விருப்பத்துக்கு மாறா ஏதும் நடக்காது. என்றவர் மகள் முகத்தை பார்த்தார். அதில் அவரால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. உன் கல்யாணத்து முன்னாலேயே கதிர் உன்னைய கட்டிக்க கேட்டான். இப்பவும் உனக்காக எல்லாத்தையும் விட்டு இங்க வந்து இருக்கான். அவனைவிட உன்ன யார் நல்ல பார்த்துபா. உனக்கும் இதுல சம்மதம்னா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பன்னி வைச்சுடுறேன் நீ அங்க வந்து இருக்கனும் கூட இல்லை. உங்களுக்கு எங்க விருப்பமோ இங்க இருந்துக்கோங்க. என்று பேசிக்கொண்டே போனவர் மகளின் அமைதியில் நிமிர்ந்து பார்க்க…………

என்னமா என்றார் 

இந்த கல்யாணம் யாருக்காக நடக்குது? என்றாள்

புரியல மா நீ என்ன கேட்குற? என்றார்  அவளை பார்த்து புரியாமல் 

இல்ல இந்த கல்யானத்தை யாருக்காக நடத்துறிங்க, என் வாழ்க்கையை இப்படி ஆகிடுச்சே அந்த குற்ற உணர்ச்சி போகிக்க நடந்தி வைக்கிறீங்களா? இல்லை கதிருக்காக நடத்தி வைக்கிறீங்களா?

அதுவும் இல்லைனா இந்த ஊர் உங்கள ஏதாவது சொல்லுனு நடத்த நினைக்கிறீங்களா?

என்றாள் நிதானத்துடன், அதில் அவர் அவளை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் பார்வையை எங்கயோ வெறித்து பார்த்து இருந்தார், இங்க பாருமா இந்த கல்யாணம் எந்த காரணத்துகாகவே நடக்கலாம். ஆனா எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். ஒரு அப்பாவா உன் கூட நான் நிக்க வேண்டிய இடத்துல நிக்காம தவறி இருக்கலாம். ஆனா அதுக்காக உன்னை அப்படியே விட்டுவேன் எப்படி நினைச்ச…………… 

நான் தப்பு செய்த்தாகவே இருக்கட்டும், அதுக்காக நீ நல்லா இருக்கனும் நான் நினைக்க மாட்டேன்னா……………………. உன் அம்மா நம்மளவிட்டு போனப்ப, ஏதுவும் வேனா, உன்னைய மட்டுமே நினைச்சிட்டு இப்படியே இருந்துடலாம் தான் இருந்தேன். ஆனா, சில நேரத்தில் தோனும் நீ வளந்து பெரியவளா ஆனா அப்புறம், உனக்கான படிப்பு, கல்யாணம் ஆன அப்புறம் நான் என்ன பன்னுவேன். தனியா? எனக்காக யார் இருப்பா………………. என் வாழ்க்கை எப்படி போகும் இப்படி அடிக்கடி கேள்வி எனக்குள்ள வரும்……………….. ஆனாலும் இன்னோரு கல்யாணம் பன்னனும் நினைக்கல, உன் பாட்டி தான் எனக்கு வற்புருத்தி கல்யாணம் பன்னிவச்சாங்க, அப்ப கூட அந்த வாழ்க்கைய வாழனும் தோனல, சில நேரம் நம்ம சுய நலத்துக்காக வேற பெண்ணோட உணர்வுகளோட இப்ப விளையாடுறோம் தோனும். ஆனா ரத்தினம் அப்படி இல்லை, உன்னையும் அவன் தன் மக மாதிரி தான் பார்த்துகிட்டா, ஆனாலும் அவகிட்ட உனக்கு ஒரு சின்ன ஒதுக்கும் இருக்கும்.

அப்புறம் சில வருஷம் கழித்து நான் வாழ ஆரம்பித்தாலும், உனக்கான என நிலை அப்படியே தான் இருந்தது. அத்தனை வருஷத்துல ரத்தினம் அவளுக்காக ஏதும் எனகிட்ட கேட்டது இல்ல, அவ தம்பிக்கு கேட்ட அப்ப கூட, உன்னைய என் கூடவே கண்ணுமுன்னால  வெச்சிக்காலம் நினைச்சி தான் அந்த கல்யாணத்தை ஏற்பாடு பன்னேன். ஒரு வேளை கதிர் அதுக்கு முன்னாலேயே என்கிட்ட வந்து கேட்டு இருந்தா, நான் ஒத்துகிட்டு தான் இருந்து இருப்பேன். ஆனா அவன் என்கிட்ட வந்து அப்படி பேசவும், என் தன்மானம் என்னைவிட இவன் என்ன பெரியவன் ஒரு திமிர், எல்லாத்தையும் தப்பா பார்க்க வெச்சுது…………… அதை தொட்டு எல்லாம் தப்பாவே முடிஞ்சும் போச்சு……………….. இத்தனை நாள் உன்னைய தேத்திக்க நான் உனக்கு நேரும் கொடுத்து இருந்தேன். 

இப்போது, நா முடிவு எடுக்க வேண்டிய நேரம், நான் உனக்காக தேர்ந்து எடுத்த வாழ்க்கை தப்பா போச்சு, இப்போ நீயே முடிவு எடு, உனக்கான சரியான வாழ்க்கையை தேர்ந்து எடு, அப்பா அதை எப்படியாவது உனக்கு அமைச்சி தருவேன் மா…………… என்றார்.

மேலும் கதிர் என்னோட முடிவு, ஏதும் தெரியாத ஒருத்தன கட்டிகறதவிட, எல்லாம் தெரிந்தவன் உன்னைய நல்லா பார்த்துபான் தான்………………. ஆனா முடிவு உன்னோடது தான் நீ சொல்லு என்று அவள் முகம் பார்த்தார்.

ஒரு பெருமூச்சு வெளிவந்தது அவளிடம். என்னால கதிர் மாமாவை கல்யாணம் பன்னமுடியாதுபா, நான் அவரை அப்படி நினைக்கல, எனக்கு தெரிந்து கதிர் மாமா கூட இதுக்கு சம்மதிக்க மாட்டார். எங்க இரண்டு பேருக்கும் இருக்க உறவு, அம்மா, பிள்ளை உறவு, அதை தாண்டி எங்களா போகமுடியாது. என்ற அவள் பேச்சில் அவர் முகம் வாடியது.

கதிர் அவளை எத்தனை சரியாக புரிந்து வைத்து இருக்கிறான். அவர் இந்த திருமண விஷயத்தை பற்றி கதிரிடம் பேசும் போது அவனும் அப்படி தானே கூறினான். இவர்களுக்கு இருக்கும் இந்த புரிதல் ஏன் என் பெண் மேல் எனக்கு இல்லாமல் போனது…………..

ஆனா எனக்கு ஒருவரை பிடித்து இருக்கு, இத்தனை நாள் என் வாழ்க்கையை பற்றி யோசிக்கமாக இருந்த நான், எனக்குன் ஒரு வாழ்க்கை வேனும் அவரை பார்பின் தான் யோசிக்கிறேன், எனக்கு ஏன் இப்படி ஒருத்தர் வாழ்க்கை துனையா வரல அப்படினு யோசிக்க வைக்கிறார். அவர் வந்தா நல்ல இருக்கும் தோனுது……………..

என்ற மகளின் பேச்சில் அது யார் என்று அவர் மகள் முகத்தையே பார்த்து இருக்க, கதிரழகி அவர் முகத்தை பார்த்து சொன்னாள், பரிதி பாக்கியா மேம்  ஒட பையன் என்று அவள் சொன்னதில் அதிர்ந்து நின்றது அவர் மட்டும் அல்ல, கனேசன் நேற்று இரவே சென்னை வருவதாகவும், திருமணம் பற்றி பேச போவதாகவும் கதிரிடம் சொல்லி அவனையும் வர சொல்லி இருந்தார், அதனால் கதிரும் வந்து இருந்தான் வந்தவன், அழகி பேசுவதை கேட்டு வாயில் அருகில் நின்றுவிட, அவன் வந்த சிறிது நேரத்தில் மணிமேகலையும் அவன் பின்னால் வந்து இருந்தாள்.

நேற்று இரவு தான் பாக்கிய அவளிடம் திருமணம் பற்றி பேசி இருந்தார். இரவு எல்லாம் அதை பற்றி யோசனையில் இருந்தவள், காலையில் கதிரழகியிடம் அது பற்றி பேச வந்து இருந்தாள். வந்தவள் காதிலும் கதிரழகி சொன்னது விழுந்தது. அதிர்ந்து நின்றுவிட்டாள் அவளும். 

கதிரழகி தனக்கு பரிதியை பிடிக்கு இருக்கு என்று சொன்னதே அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சியாக இருக்க. அடுத்து அவள் பேசியதை கேட்டவர்கள் மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டனர்.

கதிரழகி தொடர்ந்து பேசினாள், ஆமா பா அவரை எனக்கு பிடிச்சி இருக்கு, ஒரு நல்ல மனுஷனா, நல்ல அப்பாவா, நல்ல கனவனா இருப்பார்னு எனக்கு தோனுது. என் பெண்ணு மேல அவர் காட்டும் அக்கரை, பாசம் எல்லாம் என்னைய அவர் பார்க்க வைக்குது, ஆனா இது சாத்தியமா………… ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தை இருக்குற எனக்கு இது சாத்தியம் இல்லை. இப்ப நான் என்ன பன்ன என்றாள் கனேசனை நோக்கி.

அவள் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. நான் பாக்கியத்தம்மாவிடம் பேசுறேன்மா………. நீ……………. கவலை படதோ…………………… நீ நினைச்ச மாதிரி, உனக்கு வாழ்க்கை அமையும். உன் மனசுக்கு எல்லாம் நல்லதாகவே அமையும் மா என்றவர். கிளம்பிவிட்டார். அவருக்கு இந்த விஷயத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிக்க விருப்பம் இல்லை. தன் மகளுக்கு ஒரு எண்ணம் இருப்பது போல், அந்த பையன் மனதிலும் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் இந்த திருமணத்தை எப்படியும் நடத்திவிடுவார்,ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் மகளை எப்படி தேற்றுவது என்று அவர் சிந்தனை இருந்தது.

கதிரோ அவன் அழகி ஆசைபட்டுவிட்டாள், எப்படியாவது அதை நடத்திவைக்க அவனுக்கு ஆசை, பரிதியிடம் எப்படி பேசலாம் என்று அவன் யோசித்து இருக்க. மணிமேகலையோ தன்னைவிட, கதிரழகிக்கு தான் ஒரு துனை கண்டிப்பாக வேண்டும், அது பரிதியாக இருந்தாள் அவளுக்கு மகிழ்ச்சியே,தான் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி விலகி கொண்டாள். நிச்சயம் அவன் கதிரழகியை திருமணம் செய்துக்கொள்ளவான். என்று நினைத்தவள் பாக்கியாவின் விட்டு சொன்றாள்.

அங்கே கூடத்தில் பாக்கியாவும், அவர் கனவரும் அமர்ந்து இருக்க, இவள் நூழைந்தும் அவளை ஆவளாக எதிர் பார்தவர் என் முடிவு எடுத்து இருக்க என்றார். அந்த நேரத்தில் தன் அறையில் இருந்து வந்த பரிதி, நான் இந்த பெண்னை கல்யாணம் பன்னிக்கிறேன் என்றும், எனக்கு இந்த கல்யாணம் விருப்பம் இல்லை என்று மணிமேகலையும் ஒரே நேரத்தில் சொல்லி இருக்க. இருவர் பதிலில், பாக்கியவும் மற்றவர்களும் என்ன சொல்லுவது என்று புரியாமல் அதிர்ந்து நின்று இருந்தார்……………………………………..

தொடரும்…………….