கனவுக்குள் காவல் -௫

கள்ளிருக்கும் தாமரையே

கையணைக்கும் வான்பிறையே

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிா்தான்

இனிவரும் எந்தப்

பிறவியிலும் உனைச் சேர

காத்திருப்பேன்

விழிமூடும் இமை

போல விலகாமல்

வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி – நன்றி சொல்ல)

மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து விட்டு உள் அறையில் இருந்து வெளியேறி மெத்தையில் வந்து அமர்ந்தாள்.

ரகுவின் உபயத்தில் அறைக்குள் இருந்த இசை அமைப்பு (music system) மெல்லிய ஒலியில் இசை மீட்டிக் கொண்டிருந்தது.

 அப்படியே சாய்ந்து மெத்தையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டவளுக்கு தூக்கம் வரவில்லை.  மாறாக அன்று மகிழுந்தில் இருவரும் சென்ற அந்த இரவு பயணம் தான் நினைவு வந்தது.

ரவியின் மகிழுந்து சாவியுடன் சென்ற ரகு, தன் முகத்தை மறைத்துக் கொண்டு காரை இயக்கி வந்து விடுதி வாசலில் நிறுத்தினான்.  மதி ஏறி அமர்ந்ததும் இருவருக்குமான அந்த முதல் பயணம் தொடங்கியது.

முதல் சில நிமிடங்கள் அமைதியாக கடந்தது.  “மதி, நீ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட. பட் எந்த  காரணத்துக்காக ஓகே சொன்ன. ஏன்னா நான் சொன்ன விசயங்களுக்காக மட்டும் சொல்லிருப்பன்னு எனக்கு தோனலை. அதான் கேட்கிறேன்.”

 ” ‘நோ’ சொல்ல தோனலை. அவ்ளோதான்.”

சாலையில் பதிந்திருந்த ரகுவின் பார்வை மதியிடம் சென்று திரும்பியது. ஆனால் மதியின் பார்வை சாலையை விட்டு விலகவில்லை.

“இதுக்கு மேல இந்த விசயத்தை பத்தி கேட்க என்கிட்ட கேள்வி இல்லை.  ஓகே மதி, இனிமே  இந்த கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசலாம்.  என் ஃபேமிலி பத்தி உனக்கு கொஞ்சம் தெரியும். இருந்தாலும் நான் கொஞ்சம் சொல்றேன்.

என் அப்பா கவிதரன் உயிரோட இல்லை. அம்மா கௌதமி அவங்களை பத்தி நான் ஆல்ரெடி சொல்லிட்டேன். அப்புறம் நீயே பாத்திருப்ப அவங்க என்கிட்ட பேசிறதில்லை. அப்பா இறந்தப்போ ஏற்பட்ட ஒரு ப்ராப்ளம் காரணமா இப்ப வர பேசாமா இருக்காங்க.

ரவி என் ஃப்ரெண்ட். சின்ன வயசுல இருந்து என் கூட இருக்கான். அவனுக்கு அப்பா மட்டும். அவர் பாதி நாள் ஃபாரின்ல இருப்பாரு.  அதனால அவன் எப்பவும் என் கூடவே இருப்பான்.

 அப்புறம் என் வேலை பத்தி உனக்கே தெரியுமே. ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச விசயம். ஒரு ஒன்பது வருஷமா என் வாழ்க்கையை என் ப்ரஃபஷன்காக மட்டும் செலவு பண்ணிட்டேன். இந்த நிமிசத்தில இருந்து என் வாழ்க்கைக்குள்ள நீ வர போற. இவ்ளோ தான் நான்.

 நான் முன்னாடியே சொன்ன மாதிரி உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீ என்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிற விசயத்தை மட்டும் சொல்லு. எனக்கு அதுவே போதும்.”

“ரகு”..

“சொல்லு மதி”

“என் சொந்த ஊர் மதுரை “

“அம்மாகிட்ட சொன்னப்பவே தெரிஞ்சிது”

“நான் முழுசா பேசி முடிக்கிற வரை நடுவிலைப்  பேசக் கூடாது “

“ஓகே “

“என் அப்பா ஞானவேல். அம்மா தனம். ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி அம்மா அப்பா ரெண்டு பேரும் ஆக்சிடன்ட்ல இறந்திட்டாங்க.”

சர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் அந்த இருண்ட சாலையில் ரகுவின் கையில் இயங்கிக் கொண்டு இருந்த அந்த மகிழுந்து குழுங்கி நின்றது. அதிர்ச்சியுடன் திரும்பி மதியைப் பார்த்தான் ரகு.

“சாரி மதி”

“நடுவில பேசக்கூடாதுன்னு சொன்னே”, ரகுவின் கை மேல் தன் கையை வைத்து தட்டிக் கொடுத்து விட்டு, “காலைல ரெண்டு பேருக்கும் செய்ய நிறைய வேலை  இருக்கு. நம்மகிட்ட டைம் இல்லை ரகு, வண்டிய எடுங்க”, என்றாள் மதி.

அவளையே பார்த்து இருந்த ரகு, அவள் கூற்றை உள்வாங்கி விட்டு மீண்டும் மெதுவாக வண்டியை இயக்கினான்.  அவளே முழுதாக சொல்லட்டும் என எண்ணிக் கொண்டு அமைதியாக கவனிக்க ஆரம்பித்தான்.

“எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. மூத்தவ சக்தி, ரெண்டாவது ஜுவா. சக்தி எம்.பி.பி.எஸ் படிக்கிறா நாலாவது வருஷம் மதுரை மெடிக்கல் காலேஜ். ஜுவா விஸ்காம் செகன்ட் எயர் படிக்கிறா.

இந்த சூழ்நிலையில் ரெண்டு பேரையும் தனியா  அங்க விட்டிட்டு வர வேணாம்னு தான் நினைச்சேன். பட் நான் முன்னாடியே செஞ்சு தரேன்னு ஓத்துக்கிட்ட ஒரு விசயம்,  என்னாலே நோ சொல்ல முடியலை.  அதான் நான் மட்டும் இங்க வந்து தங்கி இருக்கேன்.

நான் ரெண்டு மாசந்தான் இங்க இருக்க ப்ளான்ல வந்தேன். ஆனா இப்போ அவங்களை இங்க வர வைக்கனும். அதுவும் படிப்பு முடியாம கஷ்டம் தான். பட் எப்படியாது சமாளிக்கனும்.

நான் பாக்கிற வேலையைப் பத்தி உங்களுக்கு தெரியுமே. இவ்ளோ தான் என்னைப் பத்தின் விசயங்கள்.  ஆனா எனக்கு ரெண்டு கன்டிஷன்ஸ் இருக்கு.  அதுக்கு முன்னாடி இன்னும் ஒரு விசயம் சொல்லனும்.”

என்றுவிட்டு ரகுவை திரும்பி பார்த்து சில விசயங்கள் கூறினாள்.  மேலும், “ரகு என் கன்டிஷன்ஸ் இதுதான், என் தங்கச்சிங்களைப் பாத்திக்கிறது என் பொறுப்பு. அதை நீங்க தடுக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.

 அதே சமயம், உங்களுக்கு அவங்களை பிடிக்கலைன்னா அவங்களை விட்டு ஒதுங்கி இருங்க , அதை விட்டுட்டு வேறெதுவும் அவங்ககிட்டயோ, அவங்களை பத்தியோ பேசக் கூடாது.

ரெண்டாவது எப்பவாவது எனக்கு இந்த லைஃப் வேணாம்னு தோனிச்சுன்னா. நான் உங்களை விட்டு .ப்…….பிரியனுங்கிற முடிவுக்கு வந்தா நீங்க அதை ஏத்துக்கனும். அப்ப பிரச்சனைப் பண்ணக்கூடாது.

உங்களுக்கு இந்த கன்டிஷன்ஸ் ஓகேன்னா மட்டும் சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன ஓகேவா?”

“நீ முடிச்சிட்ட தான, நான் இடையிலைப்  பேசலையே.”

“முடிச்சிட்டேன். சொல்லுங்க. ஓகேவா?”

“ஓகே இல்லை.”

“அப்ப…”

“நான் இன்னும் முடிக்கலை மதி. நீ பேசும் போது நான் அமைதியா கேட்டேன்ல அதேமாதிரி நீயும் கேட்கனும். சூ..”ஆள் காட்டி விரலை தன் உதட்டின் மேல் வைத்து அழுத்தி காட்டினான்.மதி அமைதியாக அவனைப் பார்த்தாள்.

“எனக்கு உன் கன்டிஷன்ஸ் ஓகே இல்லை மதி. Marriage is not a game, நீ சொன்னது தான். அப்படியெல்லாம் நீ பிடிக்கலைன்னு சொன்ன உடனே பிரிஞ்சிட முடியாது. முதல்ல நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசும் போது நீ ஏன் பிரிவைப் பத்தி பேசுற?

ஒன் மோர் திங், நீ எப்பவும் என்னை பிடிக்கலைன்னு சொல்ல மாட்ட. அப்படி பாரக்காத. கான்ஃபிடன்ஸ் என் மேல் மட்டும் இல்லை. உன் மேலேயும் இருக்கு எனக்கு.  ஓ மை காட் ” பேசிக்கொண்டு இருந்தவன் மகிழுந்தை நிறுத்தி விட்டு சற்ற பலமாக கத்தினான்.

“என்னாச்சு” என மதி வினவ.

“நீ எங்க தங்கி இருக்கன்னு கேட்காமா, எங்க வீடு இருக்க ஏரியா போய்ட்டு இருக்கேன். நீ எந்த ஏரியா மதி? என்று கேள்வி எழுப்பினான்.

அவன்  கத்தியதில் சற்று பயந்து போன மதி, அவன் கூற்றை கேட்டு முறைத்துக் கொண்டே தான் தங்கி இருக்கும் இடம் பற்றி கூறினாள். வண்டியை திருப்பி வேறு பாதைக்கு மாற்றி இயக்க ஆரம்பித்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

 “என்ன சொல்லிட்டு இருந்தேன்.  ம்ம். ஹான்.  உன்னோட ரெண்டாவது கன்டிஷன் எனக்கு சுத்தமா ஓகே கிடையாது.  இப்ப பஸ்ட் கன்டிஷன்க்கு வருவோம்.

தங்கச்சிங்க விசயத்தில தலையிடக் கூடாதா நான்.  இங்க பாரு மதி, உன்னை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நீ,  என் மச்சினிச்சீஸ் எல்லாரும் எனக்கு உரிமை ஆகிடுவீங்க.

மாமன் மச்சினிச்சீஸ் இடையிலை  நடக்குற போர் எல்லாம் இங்கேயும் நடக்கும் நீ அம்பயர் வேலைப் பாத்துதான் ஆகனும். ஆனா அதுல என் மண்டை உடைஞ்சாலும் நீ ஏன் அப்படின்னு என் மச்சினிச்சீஸ் கிட்ட கேட்கக் கூடாது. அன்டர்ஸ்டேண்ட்?”

என்று ரகு முடிக்க கடைசி வாக்கியத்தில் சிரிப்பை வாய்க்குள் அடக்க வேண்டியதாகி விட்டது மதிக்கு.

மேலும் தொடர்ந்து, “நான் சொன்னதெல்லாம் உனக்கு ஓகேவா, இல்லையான்னு நீ யோசிச்சு சொல்லு. இப்ப எதுவும் பேசாத. நீ தங்கி இருக்க இடம் வர இன்னும் பத்து நிமிசம் இருக்கு அது வர யோசி” என்று அமைதியாகி விட்டான்.

சரியாக அவன் சொன்னப் பத்து நிமிடத்தில் மதி தங்கி இருந்த வீட்டை வந்தடைந்து இருந்தனர் இருவரும்.

மதியை பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்தவாறு, “இப்ப சொல்லு மதி. Tell me about your decision “, என்றான் ரகு.

“ரகு என் செகன்ட் கன்டிஷன்க்கு நீங்க ஒத்துக்கலாமே.  ஏன்னா நீங்கதான் நம்ம ரெண்டு பேர் மேலேயும் நம்பிக்கை வச்சிருக்கீங்களே?”

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை. இருந்தாலும் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்.  எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குங்கிறது உண்மை தான். பட் உனக்கு தான் என் மேல் நம்ம இல்லைன்னு தோனுது‌. நம்பிக்கை இல்லாம ஒரு உறவை ஆரம்பிக்க கூடாது அதுக்கு தான். “

“உங்க மேல நம்பிக்கை இல்லாம  உங்களுக்கு நான் ஓகே சொல்லல ரகு”

“அப்போ உன் மேல நம்பிக்கை இல்லையா?”

“நீங்க இப்ப கடைசியா என்ன சொல்ல வரீங்க. அதை மட்டும் சொல்லுங்க”

“இது சரிப்பட்டு வராது டா ரகு.” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு, “ஓகே மதி,  நான் சொன்னதை மறுபடியும் முதல்ல இருந்து யோசி. மார்னிங் நான் உன்னை பிக் பண்ண வரேன். அப்ப நீ என் கூட வந்தா உனக்கு ஓகேன்னு புரிஞ்சிப்பேன், இல்லைன்னா………… பாக்கலாம்.  குட் நைட் மதி. கிளம்பு” என்றான்.

மதியும் வேறெதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்று விட்டாள். ரகு அவள் உள்ளே சென்றதும் ஒளிர் விட்ட விளக்கு மீண்டும் அணைந்த பிறகே அங்கிருந்து கிளம்பினான்.

திரும்பி விடுதிக்கு வந்தவனை ரவி பிடித்துக் கொண்டான். ரகுவை சிறிது நேரம் மொத்தி எடுத்து மூச்சு வாங்க இருவரும் கட்டிலில் மல்லாக்க படுத்த பின் தான்,”என்னடா பண்ணி வச்சிருக்க”என கேள்வி எழுப்பினான்.

“எனக்கு ஜான்வி திரும்பி என் லைஃப்ல வர கூடாது. அது தடுக்க என்கிட்ட அப்ப என்ன வழி இருக்கின்னு யோசிச்சேன். அதில்ல…….”

“அதில்ல இருந்து தப்பிக்க வேற பொண்ண  கல்யாணம் பண்ணறதுதான் ஒரே சான்ஸ் . அதுக்காக அந்த முன்ன பின்ன தெரியாதைப் பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்ட. அதான?”

“இல்லை “

“வேற என்ன?”

“பொண்ணு மதியா இருந்தா மட்டும், அந்த முன்ன பின்ன தெரியாதை கல்யாணத்தைப் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

ரவி சட்டென்று எழுந்து அமர்ந்து விட்டான். அவன் கூறியதை மீண்டும் யோசித்துப் பார்த்து விட்டு ரகுவின் தோள்ளைப் பிடித்து குலுக்க ஆரம்பித்து விட்டான்.

“ஒழுங்கா சொல்லுடா. இல்லை மண்டைய உடைச்சிடுவேன்”

“சொல்றேன் விடுடா” என்று அவனிடம் இருந்து தன் தோள்களை விடுவித்துக் கொண்டு ரகு பேச ஆரம்பித்தான்.

“ரவி,  நான் மனுசங்களைப் படிக்கிற விசயத்தில எப்பவாவது தப்புப் பண்ணிருக்கேனா?”

“இல்லை டா. இப்ப நான் கேட்டதுக்கும், இதுக்கும் என்னடா சம்மந்தம்?”.

“பொறுமை டா. நான் அவளை மொத்தமே மூனு தடவை தான் பாத்துருக்கேன். ஆனா பஸ்ட் டைம் பாத்தப்பவே எனக்கு அவளைப் பிடிச்சிப்போச்சு. ஒரு மாதிரி என்னை அட்ராக்ட் பண்றா டா.

அம்மா வரதப் பத்தி நீ மெசேஜ் பண்ணல்ல.  அதுக்கு அப்புறம் தான் அவளைப் பார்த்தேன். எனக்கு இது ஒரு நல்ல சான்ஸ்னு தோனுச்சு. அதான் அப்ரோச் பண்ணேன் ஒர்க்கவுட் ஆகிடிச்சு.”

“அவங்களுக்கு உன்னை பிடிச்சிருக்கா?”

“அப்படி தான் நினைக்கிறேன்”

“நினைக்கிறியா??”

“ஆமாண்டா, ஆனா அவ அம்மா அப்பா ஒரு ஒன் அன்ட் ஹாப் மந்த் முன்னாடி தான் இறந்தாங்கலாம். அதனால கொஞ்சம் இன் செக்யூரா ஃபீல் பண்றான்னு நினைக்கிறேன்”.

“என்ன டா சொல்ற. இப்ப தான் இறந்தாங்கலா?”

“ம்ம்”

“அப்படின்னா உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்றது கஷ்டமா இருக்குமே அவங்களுக்கு?”

“அதைப் பத்தி யோசிச்சேன். பட் ஒரு வகையில அதுவும் நல்லது தான். இப்போ தான் அவக்கூட நான் இருக்கனும். அதுக்கு இந்த கல்யாணம் சீக்கிரம் நடக்கிறதும் நல்லதுதான். அது மட்டும் இல்லை ”  என்று தொடங்கி அவள் தங்கைகள் பற்றியும் கூறினான்.

“ரொம்ப கஷ்டந்தான். ஆனா அதை யார்கிட்டேயும் காட்டிக்க மாட்றாங்கல்ல. சரி நான் என்ன பண்ணனும் சொல்லு” ரவி இப்படி கூறியதும் ரகு அவனை அணைத்துக் கொண்டான்.

இது தான் ரவி, ரகு செய்யும் செயல்களை எதையும் காரணம் இன்றி செய்ய மாட்டான் என நம்புபவன். வந்ததும் அவனை அடித்தது எல்லாம் தன் நண்பன் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக தான்.

நண்பன் விரும்பியே அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளான் என்று அறிந்ததும், இனி எல்லாம் நண்பன் பார்த்துக் கொள்வான்.  தான் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

அதன் பின் இருவரும், சில விசயங்களை கலந்து பேசி திருமணம் சம்மதமாக திட்டமிட ஆரம்பித்தனர்.

ரகுவிற்கு மதி நாளை என்ன சொல்லுவாளோ என்ற அச்சமெல்லாம் இல்லை. அவன் மெத்தையில் சாய்ந்து கண் மூடியதும் அவள் உருவம் கண்ணுக்குள் வர அவன் மனம்,

“மேகமதி, நீ என் மேகம். என் கார்மேகம். உனக்குள்ள இருக்க மொத்தை மழைத் துளிகளையும் ஒன்னாக்கி,  அதை என் சிப்பிக்குள்ள தாங்கி, பளபளன்னு ஜொலிக்கிற முத்தா மாத்தி, அதை அப்படியே எனக்குள்ள பொதைச்சு வச்சிக்குவேன். உன்னை எப்பவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன், மேகமே…” என்று கூறிக் கொண்டது.

அதன் பின் எப்படி உறக்கம் கண்ணைத் தழுவியது என அறியாமலே உறங்கிப் போனான்.

காலை எழுந்தவுடன் விறு விறு என தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் ரகு. அவன் நல்ல நேரம் அன்றைக்கு வேலை அவன் எதிர் பார்த்ததுப் போல வேகமாகவும் வெகுச் சிறப்பாகவும் நடந்து முடிந்தது.

வேலையை முடித்து விட்டு ரவியுடன் மதியை அழைக்க சென்றான். மதியும் அவன் நினைத்தது போல அவன் வருகைக்குத் தான் காத்திருந்தாள். மதி மகிழுந்தில் பின்னால் அமர்ந்து கொண்டாள்.

மதி தங்கி இருந்த இடம் வந்ததும் ரகு அதுவரை வண்டி ஓட்டி வந்தவன். ரவியை ஓட்ட சொல்லி விட்டு பின்னால் அமர்ந்து கொண்டான்.

மதி தன் உடன் வேலை செய்யும் ஜெனிபர் உடன் தங்கி இருந்தாள். அவள் காலையிலேயே அலுவலகம் சென்றுவிட்டாள்.

மதிக்கு பணி அதிகளவில் வெளியில் தான் இருக்கும் என்பதால் அவள் எங்கு இருக்கிறாள் என யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

அதனால் அவள் ரகுவுடன் வெளியேறுவது யாருக்கும் தெரியவில்லை.

பயணம் தொடங்கியதும் ரவியையும் மதியையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் ரகு. அதன் பின் மதி பேசத் தொடங்கினாள்.

“ரகு, இப்பவும் நீங்க என் கன்டிஷக்கு ஒத்துக்காதது எனக்கு ஓகே இல்லை தான். பட் நான் உங்க அம்மாகிட்ட சொன்ன விசயத்தில இருந்து பின் வாங்க விரும்பலை.”

“ஓகே மதி. நீ மேல சொல்லு “

அவன் நக்கலாக பதில் கூற ரவிக்கு”பாவம் இந்த பொண்ணு இவன்கிட்ட மாட்டிக்கிச்சே”என தோன்றியது.

அவன் நக்கல் செய்வது புரிய மதி முழுதாக ஒரு நொடி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்க அம்மாகிட்ட நீங்க எந்த கதையும் சொல்ல வேணாம் நானே சொல்லிக்கிறேன். எனக்கு தெரிஞ்சு அவங்க என்கிட்ட தான் எல்லாத்தையும் கேட்டாங்கன்னு நினைக்கிறேன்.

“கன்ஃபாம்,  உன்கிட்ட தான் கேட்பாங்க. அதான் நாங்க ரெண்டு பேரும் ஒரு ஸ்டோரி ரெடிப் பண்ணிருக்கோம்.”

“உங்க ஸ்டோரி நல்லாவே இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும். பட் அதை நீங்களே வச்சிக்கோங்க.”

“சரி” என்று சலிப்பாக சொல்லிவிட்டு,”உன் ஸ்டோரிய சொல்லு கேட்போம்.”என்றான்.

“அதை ஆன்ட்டிகிட்ட சொல்லும் போது கேட்டுக்கோங்க”

“மதி நேத்தும் நீ இப்படி தான் பண்ண “

“ஆமா”

“எனக்கு அந்த சமயம் சமாளிக்க முடியாம போச்சின்னா என்னப் பண்றது”

“நீங்க சூட்டிங் ஸ்பாட்ல எந்த பிரச்சனை வந்தாலும் டக்குன்னு முடிவெடுத்து அந்தப் பிரச்சனைய தீர்க்கிற ஆளாமே. உங்க கூட வேலை பார்த்த ஆர்டிஸ்ட் எல்லாரும் எல்லா இன்டர்வியூலையும் இதே விசயத்தை சொல்றாங்க.

உங்க ப்ரஃபஷன்ல யூஸ் பண்ற  ஷென்ஸ் ஆஃப் ஹுயூமர் (sense of humour) அ … சீ சீ..சாரி.. ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் (Presence of mind) அ கொஞ்சம் உங்க சொந்த வாழ்க்கைக்கும் பயன்படுத்துங்க.” என்று கூறி விட்டு வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

தான் நக்கல் செய்ததற்கான பழிவாங்கும் படலம் என தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது ரகுவிற்கு.

 இது ரவிக்கும் விளங்கிவிட, அவனோ , “டேய் மவனே, உன்கிட்ட அந்தப் பொண்ணு சிக்கல்ல.  நீதான் அந்தப் பொண்ணு கிட்ட சிக்கி இருக்க. இனிமே உன் தொல்லை எனக்கில்லை.” என மனதோடு எண்ணி நகைத்துக் கொண்டான்.

இப்படி கலகலப்பாகவே தொடர்ந்த அந்தப் பயணம் “தரண் மாளிகை” வாசலில் நிறைவுற்றது.

-காவல் புரிவா(ள்)ன்.

-மகா ஆனந்த் ✨