பாகம் – ௩

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகையில்…

எனக்குக் காய்ச்சல் வரும்…

வெயிலில் நீ நடக்கையில்…

எனக்கு வேர்வை வரும்…

உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)

    அந்த அறையில் மெல்லிய ஒலியில் இப்பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. கூடவே ஒரு குரல் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது.

 “WILL YOU MARRY ME?”

“…..”

“எதாது பதில் சொல்லுமா”,  என்று விடாது கேட்டுக் கொண்டிருந்த அந்த குரல் ரகுவுடையது.

“…..”

“நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும்தாமாக் கேட்கிறேன் பதில் மட்டும் சொல்லுமா,, just say,  yes or no.”

“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன், அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு பதில் சொல்லுங்க. நீங்க ஏன் என்கிட்ட இந்த கேள்விய கேட்கிறீங்க?”.  என்கிட்ட என்ற வார்த்தை மட்டும் அழுத்தி வந்தது.

“அப்பாடி பேசிட்டியா, பத்து நிமிஷமா நீ பேசவும் இல்லை, எழுந்து  போகவும் இல்லை நான் என்ன நினைக்கிறது?”

“பதில்”

“Ok, நான் உடனே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணியாகனும். அது நீயா இருந்தா எனக்கு ஓகே. அதுக்கு தான் உன்கிட்ட இந்த கேள்வி”,   இம்முறை ரகு உன்கிட்ட என்ற வார்த்தையை அழுத்தி கூறினான்.

“என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?”

“Honestly, உன் பேர்,  உன் வேலை இதை தவிர உன் குடும்பம் மேல நீ வச்சிருக்க பாசம், வேற எதுவும் தெரியாது.”

“பாசமா?” புருவம் சுருங்க வந்து விழுந்தது அந்த கேள்வி.

“மார்னிங் ராமபுரம் சிக்னல்… பாத்தேன்”

“அந்த ப்ளாக் கலர்…..ம்ம்..BMW”

“எஸ்”

“ஓ..”

காலை எட்டு மணி,

ஏலே லே லே லே லே  லே லே லே லே லே லே லே லே லே லே  லோ….(இயற்கை).

ரகுவிற்கு மிகவும் பிடித்தமான இசை அது. கார் கண்ணாடி சற்று இறங்கி இருக்கவும் உள்ளே கேட்டது. இசை வந்த திசையை திரும்பி பார்த்தான்.

அங்கே அலைபேசியில் வழிந்த இசையை நிறுத்தி அதை காதுக்கு கொடுத்து பேசிக் கொண்டு இருந்தாள் மதி.  இருசக்கர வாகனத்தில் இன்னொரு பெண்ணோடு அந்த போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்தாள்.

“சொல்லு ஜீவா”

“…..”

“சரி போய் வின் பண்ணிட்டு வாங்க பட்டுக்குட்டி, ஆல் தி பெஸ்ட் “.

” ….”

“ஆமா இன்னைக்கும் எப்பவும் போல ட்ராஃபிக் “

“…..”

“சரிடா தங்கம் காம்படிஷன் முடிஞ்சதும் கால் பண்ணு, ஓகே பாய்”. அலைபேசியை அணைத்து உள்ளே வைக்கவும் அவள் பின்னால் அமர்ந்திருந்த பெண்,

“என்ன ஒரே பாசமழையா இருக்கு” என்றாள்.

“ஆமா அதுக்கு என்ன?”

“ஒன்னுமில்லை” சற்று அழுத்தமாக கூறிவிட்டு, “தங்கச்சியை ஏதோ பாய் ஃப்ரண்ட கொஞ்சிர மாதிரி கொஞ்சிரீங்களே அதான் என்னன்னு கேட்டேன்.”

மதியிடம் இருந்து வெறும் சிரிப்பு மட்டும் பதிலாக வந்தது. இத்தனை நேரம் அவர்கள் அருகில் காருக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரகுவும் சரணும் கூட முதலில் அப்படித்தான்  நினைத்தனர்.

அவள்  தொடர்ந்து, ” நான் ஒரு வாட்ஸ் அப் டிபில இந்த கோட் படிச்சேன். ப்ரேக் அப்ல கூட ப்ரேக் ஆகாத மனுசங்க ஃபேமிலிக்கு ஒரு ப்ராப்ளம்னா ப்ரேக் ஆகிடுவாங்கலாம். இது உங்களுக்கு செம்மயா மேச் ஆகும்னு நினைக்கிறேன், சீனியர். நீங்க என்ன நினைக்கிறீங்க?”.

“உண்மைதான் எனக்கு என் ஃபேமிலி மேல எக்கச்சக்க பாசம் தான்.  நீ சொல்ற மாதிரி கண்டிப்பா அவங்களுக்கு ஒன்னுன்னா நான் ப்ரேக் ஆகிடுவேன். பிக்காஸ் எனக்கு கிடைச்ச ஃபேமிலி அப்படி.

பட்  நீ சொன்ன விசயத்தில  எனக்கு ஒன்னு மட்டும் புரியல, ஜெனி”.

“நான் என்ன குறுந்தொகை பாடலா சொன்னே புரியலன்னு சொல்றீங்க?”

“ம்ம்ம்…” என முறைத்து பார்த்தாள் மதி.

“ஈஈஈ…, கோவப் படாதீங்க சீனியர்.  என்ன டவுட் கேளுங்க நான் க்ளியர் பண்றேன்”.

“ஃபேமிலிக்கு ஒன்னுன்னா ப்ரேக் ஆவோம் சரி, ஆனா ஏன் ப்ரேக் அப் பண்ணா ப்ரேக் ஆகமாட்டோம்‌. உண்மையா நம்ம ஒருத்தர காதலிச்சா அவுங்களை நம்ம மனசு ஆட்டோமேட்டிக்கா நம்ம ஃபேமிலின்னு கன்சிடர் பண்ண ஆரம்பிச்சிடும். அப்போ அவுங்க நம்மை விட்டு பிரிஞ்சாலும் நமக்கு ப்ரேக் ஆகனும் தான?”.

“இப்ப நான் என்ன சொல்றது????, ” ஜெனி என்ன சொல்வது என்று தெரியாமல் உளற, மதி நகைக்க ஆரம்பித்து விட்டாள்.

உடனே ஜெனி, “என்ன சிரிப்பு வேண்டிருக்கு, ரொம்ப புத்திசாலி தனமா கேள்வி கேட்டதா நெனப்போ. போங்க போய் அந்த டி பி வச்சவன் கிட்ட கேளுங்க”

“சரி விடு, ஆனா ஒரு விசயம் சொல்றேன் அது மட்டும் நல்லா கேட்டுக்கோ.   நம்மை உண்மையா நேசிக்கிற எந்த உறவு நம்மல பிரிஞ்சாலும் நமக்கு அது ப்ரேக் அப் தான் மனசளவில.

அதே சமயம் நம்மை கூட இருக்க எந்த உறவையும் நம்ம துச்சமா நினைக்கவேக்கூடாது. அதே மாதிரி எல்லா  உறவையும் உண்மையான அன்போட பாத்துக்கனும்”

“பாத்து கிட்டா..?”

“பாத்துக்கனும் அவ்ளோதான் “

“ரைட்டு ” என உரையாடல் முடிய, வாகனங்கள் சற்று விலக இடம் கிடைக்கவும், இவர்கள் வாகனங்கள் இரண்டிற்கும் இடையே ஒரு மூவுருளி வந்து இடத்தை நிரப்பிக் கொண்டது.

இப்போது,

      மதி சொன்ன “ஓ..” முடியும் முன் ரகுவும் மதியும் காலை போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்த அந்த உரையாடலை மின்னல் வேகத்தில் நினைவுக்கூர்ந்து திரும்பினர்.

     “Marriage is not a game”,  மதி மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

    “எஸ், கல்யாணம் விளையாட்டு இல்லை, எனக்கு தெரியும். அதே சமயம் இந்த கல்யாணத்தால என் வாழ்க்கை விளையாட்டா ஆகிடக் கூடாது, மதி.”

  “கொஞ்ச தெளிவா பேசுவோமே?”

 “ஓகே நான் எல்லா விசயத்தையும் உனக்கு ஃசாட்டா சொல்றேன். அதுக்கு அப்புறம் நீ முடிவு பண்ணு. ” ஒரு நீண்ட மூச்சை உள் இழுத்து வெளியேற்றி விட்டு பேச ஆரம்பித்தான் ரகு.

” மதி, என் அம்மா கௌதமி,  அவுங்க பிறந்ததும் அவுங்க அம்மா இறந்திட்டாங்க. அதனால எங்க அம்மாவுக்கு எல்லாமே எங்க தாத்தா மட்டும் தான். அப்பா மட்டும் உலகம்னு வளந்ததால கல்யாணம் பண்ணிக்கக் கூட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

         ஆனா தாத்தா ரொம்ப போராடி அம்மாவுக்கு 26 வயசு இருக்கும் போது எங்க அப்பா கவிதரன் கூட கல்யாணம் பண்ணி வச்சாங்க.  அப்பா தாத்தா ரெண்டு பேருமே பெரிய பிஸ்னஸ் மென். தாத்தா அம்மாக்கு குடுத்த சீர் எல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தான்.

      தாத்தா எனக்கு பத்து வயசு இருக்கும் போது இறந்துப் போய்ட்டார். போகும் போது சீர் போக மீதமிருந்த சொத்து எல்லாத்தையும் வித்து, அதுல வந்த  மொத்த பணத்தையும் வச்சு என் பேர்ல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சார்.

   ஆனா அந்த ட்ரஸ்ட்டை  பாத்திக்கிற பொறுப்பை அம்மாக்கோ எனக்கோ தரல. அவருக்கு ரொம்ப நம்பிக்கையான அவர் உதவியாளர் கிட்ட கொடுத்திட்டார். ஏன்னா அம்மா அப்பா கூட சேர்ந்து ஆல்ரெடி நிறைய பிஸ்னஸ் பாத்திட்டிருந்தாங்க.”

     ரகு பேசிக் கொண்டு இருந்த போது மதி ஏதோ அசௌகரியமாக இருப்பதைக் கண்டான்.  . ஏனெனில் அவள் ஒரு முறை  தன் இடது கையால் தலையை மெல்ல தடவினாள், பின் கண்களை சற்று அழுத்திக்  கசக்கிவிட்டாள்.

  அதைக் கண்டவன், “Are you alright?, நீ ஓகே தான”,  என்றவாறு முன்னால் மேஜையில் இருந்த தண்ணீர் கோப்பையின் மூடியை நீக்கிவிட்டு அதனை அவள் அருகில் நகற்றி வைத்தான்.

  “நைட் லேட் ஆகுதில்ல அதான் ஒரு மாதிரி இருக்கு, வேற ஒன்னுமில்லை ” என்று தண்ணீரை பருகியவாறு கூறினாள் மதி.

  ரகு திரும்பி நேரம் பார்த்தான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஓ…, நீ பத்து மணிக்கு எல்லாம் தூங்கிற ஆளா” என்றான் நமட்டு சிரிப்புடன்.

      மதி நிமிர்ந்து அவனை ஒருப் பார்வை பார்த்துவிட்டு, ” முழுசா சொல்லி முடிங்க ” என்றாள்.  ரகு மீண்டும் ஆரம்பித்தான்.

“ஓகே சீக்கிரம் உன்னை அனுப்பி விட்டிற்றேன். ஆமா எங்க விட்டேன் ம்ம்ம்..ஹான்.. அம்மா அப்பா கூட சேர்ந்து ஆல்ரெடி நிறைய வேலை பாத்திட்டு இருத்தாங்க. அதான்  தாத்தா அம்மாவை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பொறுப்பை அவுங்களுக்கு குடுக்கல.”

ஆனா தாத்தா தான் தங்கி இருந்த வீட்டை மட்டும் விக்கல.  அதை என் பேருக்கு மாத்தினாரு வித் ஒன் கன்டிஷன் “.

“என்ன கன்டிஷன்?”

“எனக்கு முப்பது வயசுக்குள்ள கல்யாணம் ஆகனும் அப்போதா எனக்கு அந்த வீடு கிடைக்கும் இல்லைன்னா அந்த வீடு எங்க தாத்தாவோட பார்ட்னர் ஒருத்தருக்குப் போய்டும்.

அன்ட் அந்த பார்ட்னர் வீடு கிடைச்சா அது இடிச்சிட்டு அங்க ஒரு பெரிய ரெசாட் கட்டிற ஐடியால இருக்காரு. அதான் அம்மாவுக்கு இப்ப பிரச்சனை. அந்த வீட்டில் தாத்தாவோட மெமரீஸ் நிறைய இருக்கே.”

“உங்களுக்கு முப்பது வயசு ஆகிடிச்சா?”

“அடுத்த வாரம் எனக்கு 30த் பர்த் டே”

“ஓ…… மேல சொல்லுங்க “.

      “ஒன் எயர் முன்னாடியே எங்க வக்கீல் அம்மாவுக்கு இதை ரிமைன்ட் பண்ணாரு.  அம்மா என்கிட்ட கேட்டப்போ நீங்க சொல்ற பொண்ண கட்டிக்கிறேன்னு சொன்னே. அப்புறம் கொஞ்ச நாள்ல சித்தப்பா தவறிட்டாரு. வீட்டில எல்லாரும் இந்த விசயத்தை சுத்தமா  மறந்திட்டோம்.

 ஒரு கேஸ் விசயமா டெல்லி போயிருந்த வக்கீல் இப்போதான் திரும்பி வந்தார்.  அவர் மறுபடியும் இன்னைக்கு மார்னிங் அம்மாகிட்ட பேசவும் தான் எங்களுக்கு நினைவே வந்திச்சு. இப்போ எனக்கு ஒன் வீக்குள்ள கல்யாணம் பண்ணனும். அதுக்கு அம்மா…” என்று சற்று இழுக்க ஆரம்பித்தான் ரகு.

“…….” மதியின் பார்வை முன்னைவிட உன்னிப்பாக மாறியது.

“க்க்க்….. அம்மா இப்ப ஒரு பொண்ண இங்க கூட்டிட்டு வராங்க. அவ என் எக்ஸ்..”

மதி இப்போது பலமாக சிரித்து விட்டாள்.

“இப்ப எதுக்கு சிரிக்கிற”, ரகு குரலில் கோபம் காட்ட முயற்சித்தான். ஆனால் அவள் சிரிப்பை பார்த்து அவனுக்கும் சிரிப்பு தான் வந்தது.

“சரி சரி நான் சிரிக்கல, யூ கன்டின்யு”, சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினாள்.

ரகுவும் சிரிப்பை மறைத்துக் கொண்டு மீண்டும் கூற ஆரம்பித்தான்.  “அவளை நான் காலேஜ் செகன்ட் எயர் படிக்கும் போது பாத்தேன் ரெண்டு பேருக்கும் பிடிச்சிது லவ் பண்ணோம்.   அப்ப அவ பஸ்ட் எயர் படிச்சிட்டு இருந்தா. ஆனா அவ செகன்ட் எயர் ஜாயின் பண்ணல. லண்டன்ல படிக்கப் போறேன்னு சொன்னா. போகும் போது ப்ரேக் அப் பண்ணிட்டு போய்ட்டா.

 ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி அவளே வந்து என்னை பாத்தா. இப்பவும் லவ் பண்றேன்னு சொன்னா. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னே. புரிஞ்சுக்காம பாக்கிற இடத்தில எல்லா அதைப்பத்தி பேச ஆரம்பிச்சா. நாலு வருஷமா இதே கதைதான்.

  இன்னைக்கு மதியம்தான் வக்கீல் வந்த விசயம் எனக்கே தெரியும். ஆனா இவ இந்த நைட்ல அம்மாவ நேரா பாத்து பழைய கதைய பேசி,  அவுங்களை கிளப்பிவிட்டு புது கதை ஆரம்பிக்கிறா.

  அவளை நான் முன்னாடி லவ் பண்ணேன்ற ஒரே காரணத்துக்காக,   இப்ப அவளுக்கு நான் ஓகே சொல்லிடுவேன்னு  நினைச்சு அம்மாவும் அவளை கூட்டிட்டு வராங்க.  அதுவும் இப்பவே கேட்டாதான் நான் சம்மதிப்பேன்னு இந்த இராத்திரில இரண்டு பேரும் வந்திட்டு இருக்காங்க.”

“இதுக்கு தீர்வு நீங்க இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்‌.  அதுக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா?” மதி காட்டமாக கேட்டாள்.

     “மதி, எனக்கு ரவி மெஸேஜ் பண்ணப்போ மனசுல வெறுமை தான் அதிகமா இருந்துச்சு. நான் அவளை கல்யாணம் பண்ணி கிட்டா அது தான் எனக்கு வாழ்க்கை முழுக்க கிடைக்கும். அந்த நிமிஷம் எனக்கு வேற ஐடியா எதுவும் தோனலை.  ஐ வாஸ் ஜெஸ்ட் பிளான்க்.

     பட் கதவுக்கு பின்னாடி உன்ன பாத்ததும், முன்னாடி உன்னை மீட் பண்ணது, நீ பேசுனது,  எல்லாம் ஞாபகம் வந்திச்சு. அப்புறம் தான் எனக்கு இந்த யோசனையே  தோனிச்சு.” என்று நிறுத்தி விட்டு, இருக்கையில் இத்தனை நேரம் சாய்ந்து அமர்ந்து இருந்தவன்,  நிமிர்ந்து சற்று உடலை முன்னோக்கி நகர்த்திப் பேச ஆரம்பித்தான்.

     “நான் முதல்ல உன்கிட்ட, நான் உடனே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணியாகனும். அது நீயா இருந்தா எனக்கு ஓகேன்னு சொன்னே. ஆனா உண்மையிலையே உன்னை பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே  வந்திச்சு.

     அதாவது, கல்யாணம் பண்ணியே ஆகனும் அதுக்கு பொண்ணு நீயா இருந்தா ஓகேன்னு சொல்லல, பொண்ணு நீயா இருந்தா மட்டும் கல்யாணம் ஓகேன்னு சொல்றேன், புரிஞ்சதா?” என்றான் ரகு.

     கடைசி வாக்கியத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக வந்து விழுந்தது.

      “ஓஹோ……,…” என்று  இழுத்து சற்று நக்கலாக பார்த்தாள், மதி.

     ரகு சற்றும் புன்னகை குறையாமல், “சரிமா, நான் எல்லாமே சொல்லிட்டேன். இப்ப நீதான் பதில் சொல்லனும். அம்மா இப்ப வந்திருவாங்க நீ யோசிக்க இந்த டைம் தான் இருக்கு.

      எந்த முடிவா இருந்தாலும் பரவாயில்லை கொஞ்ச டைம் எடுத்து….. இல்ல.. இல்ல …கொஞ்ச சீக்கிரமே சொல்லிடு. நான் உனக்கு டீ  போடுறேன்.”

     ரகு அதன் பின் தேநீரில் மும்முரமாகிவிட,  மதி பார்வையால்  அவனையே தொடர்ந்து கொண்டு இருந்தாள்.  சிறிது நேரத்தில் ரகு, “என்ன என்னையே பாத்திட்டு இருக்க?”, என்றான்.

“யோசிச்சுட்டு இருக்கேன்”

“எதாது முடிவு கிடைச்சுதா?”

“இன்னும் இல்லை”

“ஓகே ஓகே “என்றவாறு தேநீர் கோப்பையை அவளிடம் நீட்டினான்.

   தன் கோப்பையுடன் தானும் அமரும் நேரம் சரியாக அழைப்பு மணி இசைத்தது. இருவரும் ஒரே நேரத்தில் கதவு பக்கம் பார்த்து விட்டு திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“உன் பதில் என்னமா?”, தீவிரமான குரலில் கேள்வி எழுப்பினான் ரகு.

“முத கதவை திறங்க என் பதிலை அவுங்க வந்ததும் சொல்றேன்”

“என்கிட்ட பஸ்ட் சொன்னா நான் கொஞ்சம் ப்ரிப்பர் ஆகிப்பேன்ல”.

“போய் கதவை திறங்க” சற்று அழுத்தமாக கூறினாள் மதி.

ரகு அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, ஓர் நெடிய மூச்சை இழுத்து விட்டான்.  அதன் பின் சென்று கதவை திறந்தான்.

     முதலில் கௌதமி, பின் ஜான்வி,  கடைசியாக ரவி என வரிசையாக மூவரும்  உள்ளே வந்தனர். மூவருக்கும் முறையாக தன் வணக்கத்தை தெரிவித்தாள் மதி. மூவருமே அவளை வெவ்வேறு உணர்வுகளுடன் பார்த்தனர்.

முதலில் கௌதமி தன் உரையாடலை ஆரம்பித்தார். பின் ரகு பேசினான்.  அதனை தொடர்ந்து மதி பேசினாள். இப்படி இவர்கள் உரையாடலின் இறுதியில் கௌதமி, ” இந்த கல்யாணத்தில உனக்கு சம்மதமா? இல்லையா ? அத மட்டும் சொல்லு” எனக் கேட்டார்.

“எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம் இல்லை”, எனத் தெளிவானக் குரலில் மதியிடம் இருந்து பதில் வந்தது.

                                                                                                                             -காவல் புரிவா(ள்)ன்..

                                                                                                                               ..மகா ஆனந்த் ..✨