பாகம் -உ
முதல்முறை மழைச்சாரல் தூவினாய்
மறுமுறை குடை தந்து போனாய்
அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன்
உன்னை முழுதாய் என்னில் சிறை செய்ய…..!
“அம்மா உன்ன பாக்க ஹோட்டல் வராங்க அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனுமா அதுக்கு உன்ன சம்மதிக்க வைக்க”,
இந்த வாக்கியத்தை புனலத்தில்(what’s app) கண்ட நொடி மனதில் குடிக்கொண்ட எரிச்சல் அவனை அசைவற்று வானத்தை வெறிக்க செய்தது.
அதனை தொடர்ந்து தன் சொந்தங்களின் மனதில் தான் இருக்கும் நிலையையும் எண்ணி மனம் வெறுமையை உணர்ந்தது.
அச்சமயம் தான் அழைப்பு மணியின் ஓசை கேட்க, தன்னிலை உணர்ந்து கதவை திறக்க சென்றான். அங்கே மதியை கண்டவன் மனதில் ஓர் நொடி வியப்பு ” இவள் இங்கு எப்படி” என்று.
ரகுவை கண்ட மதி மனதிலும் அதே வியப்பு தான். இருவரும் வியந்து நின்றது நொடி நேரம் தான், தன் இயல்பிக்கு திரும்பியவர்கள் ஒரே நேரத்தில் ஏதோ வினா எழுப்ப வாய் திறந்தனர்.
அச்சமயம் மதிக்கு பின் இருந்து ஓர் குரல் இவர்கள் கவனத்தை ஈர்த்தது. அது அந்த ஹோட்டலின் வரவேற்பு பகுதியில் நின்றிருந்த பணிப்பெண் தான் இவர்களை நோக்கி ஒரு பதட்டத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
மதியின் அருகில் வந்தவள்,”Mam, I am so sorry, I mistakenly told the wrong room number. Actually, the person whom you asked is in the room number 157 not here mam. Sorry for disturbing you sir.
(மேம், நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் உங்களுக்கு தவறான அறை எண்ண சொல்லிட்டேன். நீங்க தேடி வந்த நபர் 157வது அறையில் இருக்கிறார். சர், உங்களுக்கும் தொந்தரவு தந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க.) என படபடப்பாய் மதியிடம் ஆரம்பித்து ரகுவிடம் முடித்தாள், அந்தப் பெண்.
மதி அவள் பதட்டத்தைக் கண்டு அவளை சமாதானம் செய்யும் வகையில், “It’s okay, we are all humans, we may make mistakes sometimes. And I am sorry”
( இது பரவாயில்ல, நம்ம எல்லாரும் மனுசங்கதான, சில நேரம் தவறு செய்வோம்தான். அப்பறம், என்ன மன்னிச்சிடுங்க) என இவளும் பணிப்பெண்ணிடம் ஆரம்பித்து ரகுவிடம் முடித்தாள், முகத்தில் அழகான புன்னகையோடு.
ரகுவும் மதியைக் கண்டு “It’s ok” என்று ஒரு புன்னகையோடு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
பணிப்பெண்ணை வழி அனுப்பி வைத்த மதி தான் சந்திக்க வந்தவரின் அறையை கண்டறிந்து தான் வந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய தொடங்கினாள்.
இங்கு ரகுவோ வரவிருக்கும் பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் யோசனையின் பிடியில் இருந்தான்.
“என்னடா காலைல இருந்து பொழுது நமக்கு அம்சமா ஆனந்தமா இருக்கேன்னு நெனச்சே, வச்சாங்கல நமக்கு ஆப்பு”, இது தான் நம் நாயகனின் தற்போதைய யோசனையாக இருந்தது.
ஆனால் காலை என்றதும் சற்று முன் தன் அறை கதவின் பின் தெரிந்த புன்னகை முகமும் கூடவே நினைவில் வந்தது. அதனுடன் அந்த முதல் சந்திப்பும். ஆம் நமக்குத்தான் இது அவர்களின் முதல் சந்திப்பு. ஆனால் அவர்களுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு….
அன்று ரகுவும் அவன் படக்குழுவினுரும் சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் முகாம் இட்டிருந்தனர். படத்தில் இரண்டு காட்சிகள் மட்டும் இங்கு படமாக்க முடிவாகி இருந்தது.
அவை சீக்கிரம் முடியும் சூழல் இருந்ததால், ரகு ஒரு பேட்டிக்கு ஒப்புகை அளித்திருந்தான். அது மதி பணிபுரியும் “The society” எனும் வாரப்பத்திரி்கைக்குதான்.
ஜெய் தேவ் மற்றும் சாம் பிரசாத் என இருவர் அவனைப் பேட்டி எடுக்க வருவார்கள் என பத்திரிகை நிர்வாகம் கூறியிருந்தது. ரகுவும் படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து விட்டு “Caravan” என அழைக்கப்படும் வண்டி வீட்டிற்குள் புகுந்தான்.
அச்சமயம் தான் அந்த இருவரும் அவ்விடத்தை அடைந்தனர். அவர்களில் ஜெய் தேவ் ரகுவின் கேரவனில் இருந்து வெளியேறிய உதவி இயக்குநர் ஒருவரிடம் தாங்கள் வந்த காரணத்தை எடுத்துரைத்தான்.
அவர், “சார் இப்போ வந்திருவார் நீங்க வெயிட் பண்ணுங்க”, எனக் கூறி விட்டு சென்றார்.
இதனைக் கேட்ட இவர்கள் இருவரும் ரகு கேரவன் உள்ளே இல்லை என எண்ணிக்கொண்டு அதன் அருகிலேயே அவன் வருகைக்குக் காத்திருந்தனர்.
என்ன சீனியர்(senior) நான் எவ்ளோ ஆர்வமா சொல்லிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க. உங்களுக்கு எக்ஸைட்டா இல்லையா” என்றான் ஜெய்.
ரகுவிற்கு இவர்கள் யாரைப் பற்றி பேசிகின்றனர் எனத் தெரியாது ஏனெனில் அந்தப் படப்பிடிப்பு களத்தில் இன்னும் நான்கு பிரபலமான நடிகர்களும் இருந்தனர்.
எனினும் இது அவனைப் பற்றி என்றாலும் அவனுக்கு அது பெரிய விசயமும் இல்லை. ரகுவிற்கு அந்தப் பேச்சை கேட்கும் எண்ணமில்லை என்றாலும் அது அவனைச் சென்றடைந்தது.
இப்போது ஜெய்யின் கேள்விக்கு மறுபுறம் இருந்த நபரிடமிருந்து பதில் சற்றுக் கடுப்புடன் வந்துது. ” இப்ப நீ எங்கிட்ட ஒத வாங்கப்போற, வர மாட்டேன்னு சொல்லியும் வம்படியா கூட்டிட்டு வந்திட்டு இன்னும் பேசி வெறுப்பேத்திக்கிட்டிருக்க”.
“சீனியர் நான் உன் பாசக்கார தம்பில நீ வரலன்னா அந்த எருமைத் தலையன் என்னையும் மாத்திருவான் அதான் ப்ளீஷ் (please ).”
“நீ இப்படி கெஞ்சி கேட்டதால தான் நானும் வந்தேன். சரியா மூனு மணிநேரத்தில என்னை அனுப்பி விட்டிற்றேன்ன.
ஆனா இங்க வரவே ஒன்றரை மணிநேரம், இன்டர்வியூ ஒன்றரை மணிநேரம், இதுல இங்க நம்மை ரெண்டு பேரையும் வெயிட் பண்ணசொல்றாங்க நான் எப்போ என் வேலையப்பாக்க ஹம்ம்..”
“கோவப் படாதீங்க சீனியர், இப்ப வந்திருவார் ரகு சார். அவர். ரொம்ப பங்க்சுவல்(punctual). அவர் நமக்கு ஒன்னோ க்ளாக் டைம் (1’O clock time) தந்திருக்கார், மணி பாருங்க ஒன் ஆக ஃபைவ் மினிட்ஸ்(five minutes) இருக்கு. இப்ப வருவார் பாருங்க.”
இப்போது தான் ரகுவிற்கு இருவரும் தன்னைப்பேட்டி எடுக்க வந்தவர்கள் என்று விளங்கியது. ஆனால் ஒரு சந்தேகம் அவனுக்குள் வர, தன் அழைப்பேசியை எடுத்து தன் நண்பன் ரவி சரணுக்கு அழைத்து ஏதோ கூறிவிட்டு வைத்தான்.
” சரி சீனியர் நீங்க நிஜமாவே எக்ஸைட்டா இல்லையே ஏன்? முத இதுக்கு பதில் சொல்லுங்க.” தன் கேள்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தான், ஜெய்.
“எனக்கு இருக்க வேலைக்கு, இப்ப அந்த கடவுளே இறங்கி வந்து வரம் தந்தாலும் எனக்கு ஆர்வம் வராது.”
“ஆர்வமே இல்லாம எப்படி இன்டர்வியூ நல்லா பண்ண முடியும்.”
“பஸ்ட் டைம் ஒரு செலிபிரிட்டிய பாக்கிற ஆர்வத்தை பத்திதான் நீ கேட்ட, என் வேலைய பத்தி இல்லையே?.”
“சரி அத விடுங்க, ஆமா நீங்க ஏன் காலையில அந்த தொப்பி தலையன் குடுத்த பணத்தை வாங்கல”.
“இவர் பெரிய கவுண்டமணி மனுசங்க மண்டைக்கு வித விதமான பேர் வைக்கிறாரு, எருமை.
“அதெல்லாம் அப்படிதான் நீங்க சொல்லுங்க ஏன் வாங்கல, அதுல அஞ்சு லட்சம் இருந்துச்சு நீங்க கேட்டா இன்னும் பத்து லட்சம் கூட தருவான் அவன் ஏன் வேணாம்னு சொன்னீங்க”
“அவன் பணம் குடுக்கிறது அவன் ப்ராண்ட்(brand)ஐயும் அவன் பேரையும் பெரிசா வளக்க அதுக்கு அவன் தரமான பொருட்களை வியாபாரம் பண்ணாலே போதும் அதுக்கு என் கிட்ட பணம் குடுக்கிறது வேஸ்ட்(waste).”
“நீங்க எழுதுற எல்லாமே உண்மையான விசயங்கள், அதும் நீங்க எழுதுற ஒவ்வொறு வார்த்தையையும் மக்கள் முழுசா நம்புவாங்க அதனால நீங்க அவன் ப்ராண்ட் பத்தி எழுதினா அத மக்கள் கண்டிப்பா நம்புவாங்க அவன் பிஸ்னஸ்(business) பெரிசாகும்.
அதுக்கு தான உங்களை எழுத சொன்னான். அண்ட் (and) அவன் ப்ராண்டும் நல்ல க்வாலிட்டியானதுதான். இதுல என்ன தப்பிருக்கு”
“க்வாலிட்டி(quality) இருக்குனா அவன் என்கிட்ட பணம் கொடுத்து எழுத சொல்ல வேண்டியதில்லை. நான் குற்றங்கள் பத்தி எழுதிறேன் அதோட பூஜ்யத்தில இருந்து வளர்ச்சி அடைற மனுசங்கல பத்தியும்.
பட் ப்ராண்ட் பத்தி இல்லை. அப்புறம் எனக்கு லட்சகணக்கில பணத்தை ஹேண்டில் (handle) பண்ணவும் தெரியாது, இந்த தகவலே உனக்கு போதும்னு நினைக்கிறேன்”. ஒவ்வொரு வாக்கியமும் நிதானமாக வந்து விழுந்தது.
“Okay, zip close” என ஜெய் முடித்து விட்டு திரும்ப, அங்கு சரண் வந்து சேர்ந்தான். இவர்கள் இருவரையும் நோக்கி, “நீங்க தான் தி சொசைட்டி மேகசின்ல இருந்து வரிங்கலா” எனக் கேட்டான்.
ஆம் என்றவர்களை அழைத்துக்கொண்டு சரண் கேரவன் உள் சென்றான்.
கேரவன் உள்ளே ரகு முதலில் சரண் நுழைவதை கண்டான். அவனைத் தொடர்ந்து ஜெய் தன் ஆர்வத்தை அடக்கும் வழி அறியாது வேகமாக உள்ளே புகுந்தான்.
அவனைப் பின் தொடர்ந்து வந்த மதி ஜெய்யின் செயலைக் கண்டு ஓர் நமட்டு சிரிப்புடன் உள்ளே வந்தாள். ஆம், நம் மதி தான். அவள் தான் ரகுவைப் பேட்டி எடுக்க வந்திருந்தாள்.
உள்ளே நுழைந்த இருவரையும் ரகு வரவேற்கும் விதமாக தன் இருக்கையில் இருந்து எழுந்து ஹலோ என்றான். மதியும் தன் புன்னகை முகம் மாறாது பதிலுக்கு ஹலோ கூறினாள்.
ஆனால் ஜெய் ஓர் வணக்கத்திற்கு மாறாக தான் ரகுவிற்கு எத்தனை பெரிய விசிறி என ஆரம்பித்து அவன் படங்கள் பற்றி அவனுக்கே பெரிய விரிவாக்கம் அளித்து கொண்டிருந்தான்.
அவனை அமைதிப் படுத்த மதி எடுத்த முயற்சிகளை கண்டுக்கொள்ளாமல் பேசிக் கொண்டு இருந்தவனை ஓர் அதட்டல் போட்டு அமைதி அடைய செய்தாள்.
மற்ற இருவரும் இவர்கள் நடவடிக்கையை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர். ஜெய் போன்ற எத்தனையோ நபர்களை அவர்கள் சந்தித்து இருக்கின்றனரே.
இருவரும் அமர இருக்கையை காட்டிவிட்டு தாங்களும் அமர்ந்தனர் ரகுவும், சரணும். சரண் தான் தொடங்கினான், “ரெண்டு பேரும் மேல் ஸ்டாப்ஸ்னு (male staffs) தான் பஸ்ட் சொல்லி இருந்தாங்க பட் நீங்க ரெண்டு பேர் வந்திருக்கீங்க?”.
“லாஸ்ட் மினிட் ல (last minute) மிஸ்டர். சாம் பிரசாத்க்கு ஒரு சின்ன ஹெல்த் இஸ்யு. அதனாலதான், எடிட்டர் எனக்கு இந்த வொர்க் அஷைன் பண்ணிருக்காரு. அண்ட் அவர் இது பத்தி இன்பாஃம் பண்றேன்னு சொல்லியிருந்தாரே” என்றாள் மதி
“இல்லை அவர் பண்ணல நீங்க வந்திருக்கிறத பாத்து நாங்க தான் கால் பண்ணி கன்பாஃம் பண்ணோம்.”
“ஓ..”
“ஸ்டாட்(start) பண்ணாலாமா?” என்று ஆரம்பித்தான் ரகு.
“எஸ், இதோ”, என்று மதி கூற,
ஜெய் புகைப்படங்கள் எடுக்க தயார் செய்ய மதி கேள்விகள் அடங்கிய தாள்களையும் ஒலிப் பதிவு கருவியையும் கையில் எடுத்தாள்.
மதியின் முதல் கேள்வியே அனைவருக்கும் சற்று வியப்பாக இருந்தது.
“வணக்கம் டைரக்டர் சர், என்னோட முதல் கேள்வி இதுதான், உங்க பேர் என்ன சர்.”
ரகு சற்று வியப்படைந்தாலும் புன்னகை முகம் மாறாமல், “ரகுநந்தன் கவிதரன்”.
“என்னடா இவ பேர் என்னன்னு கேட்கிறான்னு நினைக்காதீங்க சர்.
ஒரு சோசியல் மீடியா பேஜ் ல உங்களோட ஒரு ரசிகர் கேட்டிருந்தார். நீங்க ஏன் உங்க பேர எந்த இடத்திலையும் சொன்னதில்லைனு.
நீங்க இயக்குநரான இந்த ஆறு வருஷத்தில இன்டர்வியூஸ் ஃபங்ஷன்ஸ் எதுலையும் உங்க பேர நீங்க உங்க வாயால சொன்னதில்லை. அதான் நான் முதல்ல இந்த கேள்விய கேட்டேன்.
இதுக்கு எதாவது காரணம் இருக்கா சர்”.
“நீங்க சொல்ற எல்லா இடத்திலையும் என்னை வெல்கம் பண்ணும் போதே என் பேர் சொல்லிடுவாங்க. அது மட்டுமில்லாம மக்கள் கிட்டேயும் அவுங்களே என்னை அறிமுகப் படுத்திடுறாங்க.
அதுக்கு மேல நான் என்ன பண்ண. இதுல வேற எந்த சிறப்பு காரணமும் இல்லை.” என்று ரகு வெகு இயல்பாய் கூறினான்.
இப்படி ஆரம்பித்த இந்தப் பேட்டி வெகு சுவாரஸ்யமாய் சென்று கொண்டிருந்து. பேசி கொண்டு இருந்த இருவருக்கும் பேட்டி இயல்பாக தான் இருந்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
ஜெய்க்கு கூட மதி வெளியே தன் வேலை பற்றி கூறியது எத்தனை உண்மை என்று விளங்கியது. பேட்டி முடிவுரும் நேரத்தை நெருங்க,
“கடைசி கேள்வி”, என்று ஆரம்பித்த மதி தன் கையில் இருந்த காகிதத்தை சற்று யோசனையாக பார்த்துவிட்டு மூடி வைத்தாள்.
ஓர் நொடி யோசனைக்குப் பின், “இந்த கேள்வி நீங்க சொன்ன முதல் கேள்விக்கான பதில்ல இருந்து கேட்கிறேன். டைரக்டர் ரகுநந்தன் – ரகுநந்தன் கவிதரன் ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் என்ன சர்?
அச்சமயம் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி ரகுவை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்த்து. “கன்பாஃம் நண்பா நீ அவளை தான் கட்டிக்கப் போற”. இவ்வாறு ரவி என பதிவு செயதிருந்த எண்ணில் இருந்து தகவல் வந்திருப்பதாக கைப்பேசி மின்னி காட்டியது.