Advertisement

பெண்ணியம் பேசாதடி – 7
எழுத்தாளன் நியாயம் கேக்கிறேன்,
என் காதலுக்கு என்ன வழி?
என் காத்திருப்புக்கு என்ன வழி?
என் தேடலுக்கு என்ன வழி?
விளக்கம் சொல்லி விலகி செல்ல பார்த்தால்,
இரக்கம் கொள்ளாமல் இறுக்கி கொள்வேன்,
வசதி எப்படி?
நியாயம் கேட்கும் எழுத்தாளரே!
ஒரே வரியில் என் பதில்,
ரசிகையின் உறவு ரசனையோடு மட்டுமே!. ……………..
அடுத்த நாள் விடிந்தும் இன்னும் வாமனன் வீட்டுக்கு வரவில்லை.வளவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது உடனே ரமேஷுக்கு அழைத்து விட்டான்.
ஆழந்த நித்திரையில் இருந்த ரமேஷ் போன் அலறியதில் அடித்துப் பிடித்து எழுந்தவன் போனை காதுக்கு கொடுத்து சிறு எரிச்சலாக “என்னடா காலையிலே போன் பண்ணியிருக்க”.
“அப்பா இன்னும் வரல ரமேஷ் பயமா இருக்கு” அவன் சொன்னதும் எரிச்சலும் சோம்பலும் விலக,
“டேய் உங்க தாத்தா வீட்டுக்குப் போன் போட்டு கேளு.நான் ஓர் அரை மணி நேரத்துல கிளம்பி வரேன்”
“சரிடா சீக்கரம் வாடா பயமா இருக்கு”.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது ரொம்பப் பயப்பிடாத  உங்க அப்பா உலகத்தையே வித்துடுவாரு”.
“டேய் ஜோக்கா? வாடா கிளம்பி.. நேரம் காலம் தெரியாம” போனில் வளவன் கத்த.
“கத்தி தொலையாதடா வரேன். பயமா இருக்காம் பயமா அந்த மகராசன் தலைமறைவுன்னா அந்த பொண்ணை இழுத்துகிட்டு தேன்நிலவு கொண்டாட போயிருப்பாரு” முனகி கொண்டவன்  வாமனனை சரியாகக் கணித்து வைத்திருந்தான் .
நண்பனிடம் பேசிய கையோட தாத்தாவிற்கு அழைக்க.அவர் சொன்ன பதிலில் இன்னும் சோர்ந்து போனான் வளவன்.
***********
இவர்கள் இங்கு அல்லாட அங்கு நல்ல உறக்கத்தில் இரு ஜீவன்கள். பல வருடங்கள் கழித்து ஆழ்ந்த உறக்கத்தில் பேரிளம் பெண் என்றால். நிம்மதியான உறக்கத்தில் எழுத்தாளர்.இருவரும் விழிப்பதற்காக விதியே சற்றுப் பொறுமை காத்தது தான் விந்தை.
அனைவரையும் தவிக்க விட்டு வாமனனும் பேரிளம் பெண்ணும் ஒருவழியாக மதிய உணவுக்கு வந்து சேர்ந்தனர்.கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வளவனும் ரமேஷும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.
ரமேஷுக்கு விடயம் தெரிந்தாலும் நேரில் வந்து இறங்கிய இருவரையும் பார்க்கும் போது நெஞ்சு வலிக்கத் தான் செய்தது.
வளவனுக்கோ பேரிளம் பெண்ணைப் பார்த்ததும் பயம் போயி கோபம் வந்து விட்டது.அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
அவனிடம் வந்த பேரிளம் பெண் “டேய் எரும வழிய மறைச்சுக்கிட்டு நின்னா நான் எப்படி உள்ளார போறது” அவனைப் பேசியது மட்டும் இல்லாமல் இடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
ஆம் நீங்கள் எண்ணுவது சரிதான் பேரிளம் பெண் வேறு யாருமில்லை நம் காஞ்சனை தான்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வாய் அடிக்கும் காஞ்சனையை என்ன செய்வது என்பது போல்  பார்த்து வைத்தான் ரமேஷ்.
அவன் பார்வையை எதிர் கொண்டவள் “நீ என்னடா ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிச்சுகிட்டு இருக்க”
சொன்னது தான் தாமதம் பொங்கி விட்டான் நமது ரமேஷ் “யாரு நான் திருடனா….. நீ தான் சித்தி பிராடு பார்த்தாலும் பார்த்தேன் உங்க குடும்பம் மாதிரி பார்த்ததே இல்லடா சாமி”
“ஓய்!…ஏன்டா எங்க குடும்பத்துக்கு என்ன குறைச்சல்”
“ஒரு குறையும் இல்லையே எல்லாமே நிறைஞ்சு கடக்கு தாயி அதான் இங்க பிரச்சனை”
“அது!..” என்றவளை கை பற்றி இழுத்துச் சென்றான் வளவன்.
“அடேய்!… எரும கை வலிக்குது விடுடா” என்று கத்தியவளை கண்டு சினம் பொங்க.
“இன்னும் உன் வாய் அடங்குதா பார்”  
“துரோகி கைய விடுடா”.
“நீ தான் துரோகி நான் இல்ல ஒழுங்கா வா!..”.
இருவரும் வழக்காடுவதை ஆச்சிரியமாகப் பார்த்தார் வாமனன்.அவருக்கு இவர்களது உறவு தெரியாது அல்லவா.
அது சரி அவர் மாமனார் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தால் தெரிந்திருக்கும். அல்லது அவர்களுடன் சுமுகமான உறவு வைத்திருந்தால் மகனுக்கும் சிற்றன்னைக்கும் உள்ள பிணைப்புத் தெரிந்திருக்கும்.
மது இருந்த போதே அவர் தங்கியதில்லை.அவள் இறந்த பின்பு இன்னும் உறவு தூரம் தான். காஞ்சனை யை  அங்குள்ள சோபாவில் தள்ளி இவர்களது உறவை பார்த்து வாய் பிளந்து நிற்கும் தந்தையிடம் சென்றவன் அவரை இறுக்க அனைத்துக் கொண்டான் “ஐ மிஸ் யூ அப்பா”
அவரும் அவனை அனைத்துக் கொண்டார். காஞ்சனை முகத்தில் சிறு புன்னகை என்றால் ரமேஷ் முகத்தில் பெரும் எரிச்சல்.
பின்பு அனைவரும் கூடத்தில் அமர சங்கடமான அமைதி அங்கு.மூவரையும் மாறி மாறி பார்த்தவாரே ரமேஷ் அமர்ந்திருந்தான் அவனுக்கு தலையே வெடித்து விடும் நிலை போலும்.
முதலில் துவங்கியது வளவன் தான் “ஏன் சித்தி இப்படி பண்ணுன?”
“எப்பூடி?……..” நக்கலாக எதிர் கேள்வி கேட்டவளை.
“இங்க பாரு நான் கோபமா பேசிகிட்டு இருக்கேன் எதுக்கு எங்க அப்பாவ ஏமாத்துன?”
“அடிங்க ….. யாருடா ஏமாத்துனா உங்க அப்பனை” என்றவளை கன்னத்தில் கை ஊன்றி ஸ்வாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார் பேரிளம் பெணின் எழுத்தாளர்.
“பின்ன நீ பண்ண வேலைக்குப் பெயர் என்ன? இத்தனை வருஷம் வீட்டுல இருந்து கிட்டு யாருக்கும் தெரியாம அப்பாவ லவ் பண்ணி இருக்க” வளவன் சாட்டிய குற்ற சாட்டை அதுவும் காதலிப்பதாகச் சொன்னதை எண்ணி வாமனனுக்கே சிரிப்பு தான்.
வளவன் சொன்னதைக் கேட்டு நெஞ்சில் கை வைத்த காஞ்சனை “அடேய்! கிறுக்கா யாருடா சொன்னது நான் லவ் பண்ணுனேனு”.
அவளது கேள்விக்கு “இரு வரேன்” என்றவன் உள்ளே சென்று கை கொள்ளாக் காகிதங்களையும்,டைரியும் எடுத்து அவள் பக்கம் இருந்த டீபாய் மேல் போட்டான் .
அதில் முழுக்க முழுக்க வாமனனின் கவிதைகள் காதல் கிறுக்கல்கள் என்று பல புத்தகங்கள்.அவரது கையெப்பம் இட்ட துண்டு காகிதங்கள் என்று வாமனனே காகிதம் முழுமையுமே நிரம்பி இருந்தார்.
“இதுக்குப் பெயர் என்ன? எல்லாம் உன் ரூம்ல இருந்து தான் எடுத்தேன்.இனியும் பொய் சொல்லி தப்பிக்காத பிராடு சித்தி.
உன் அக்காக எங்க அப்பாவ விட்டு கொடுத்துட்டியா? இல்ல எங்க அம்மா அப்பாவ லவ் பண்ணங்களா? அதுனால தாத்தா உங்கிட்ட விட்டுக் கொடுக்கச் சொன்னாங்களா?
லவ் சொல்ல போற நேரத்துல அப்பாகும் அம்மாக்கும் கல்யாணம் பேசிட்டாங்களா? அதான் உன் லவ் சொல்லலையா?”
இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று உண்மை தெரிந்த நாள் முதலாகக் குழப்பிக் கொண்டு இருந்த அத்தனை கேள்விகளையும் மூச்சு விடாமல் கேட்டு வைத்தான் வளவன்.அவன் கேள்வியில் காண்டன காஞ்சனை.
“டேய்!…. அப்பன் தான் கற்பனை கதைனு சுத்துற ஆள்னு பார்த்தா. நீ அவருக்கு மேல இருப்ப போல  உன் கற்பனை குதிரையைக் கொஞ்சம் நிறுத்துடா சாமி யாருடா சொன்னா உனக்கு? நான் உங்க அப்பனை லவ் பண்ணுனேன்” என்றவள் வாமனன் புறம் திரும்பி.
“நீங்க தான் அவன்கிட்ட சொன்னிங்களா?”என்று கேட்டு வைக்க.அதுவரை சிறு புன்னகையுடன் அவர்கள் வழக்காடுவதைப் ரசித்துக் கொண்டு இருந்தவர்.
காஞ்சனை திரும்பியதும் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு தன்னை நோக்கி திரும்பிய காஞ்சனையைக் கடுமையாக முறைத்தார்.
அவர் பார்வையில் அள்ளுவிட நல்ல பிள்ளையாகக் குரலின் ஒலியை குறைத்த காஞ்சனை,
“ஹி!.. ஹி!.. இல்ல எழுத்தாளரே! சின்னப் பையன் அவன் கிட்ட யாரு இது மாதிரி கிறுக்குத் தனமா சொல்லி வச்சான்னு கேட்டேன் வேற ஒன்னுமில்லை” அநியாயத்துக்குக் குரல் குழைந்து வந்தது.
“ஓ!….. என்ன காதலுக் கிறது உனக்குக் கிறுக்கு தானாமா எனக்குத் தேவை தாண்டி இது” என்றவரை கலவரமாகப் பார்த்த காஞ்சனை
‘ஐயோ இந்த மனுஷன் கோபமாகி பசங்க முன்னாடி கோக்கு மாக்கா பேசி வச்சுட போறாரு’ மனதுக்குள் அலறியவள் தப்பிக்கும் பொருட்டு.
சடாரென வளவனிடன் திரும்பினாள் “உனக்கு என்ன இப்போ தெரியணும் நான் உங்க அப்பாவ லவ் பண்ணுனேனா? இல்லையா? அதானே”என்றதும் ஆம் என்று தலை ஆட்டி வைத்தான்
நான் மதுவோட புருஷனையும் வளவனோட அப்பாவையும் விரும்பலை. நான் விரும்புவது என்னோட எழுத்தாளரை.
அவரோடு எழுத்தை இன்னும் சொல்ல போனா என் காதல் கவியோட மட்டுமே கவிஞரோட இல்ல” தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசினாள் காஞ்சனை மேலும் அனைவருக்கும் விளக்கும் பொருட்டு.
இங்க பாரு வளவன் எனக்குச் சின்ன வயசில் இருந்தே தமிழ் கவிதைகள் கதைகள் படிக்கப் புடிக்கும்.
அப்போதான் வாமனன் எழுத்தாளர் கவிதை அறிமுகம்.கொஞ்ச நாளாகி தான் தெரியும் வாமனன் மாமா தான் அதை எழுதுறாருனு.
அவர் கவிதை மேல கிறுக்கு கூடி போன தருணம் தான் அவருக்கும் அக்காக்கும் கல்யாணம் பேசுனாங்க.அப்போ நான் இன்னும் சின்னப் பொண்ணு,
வாமனன் மாமா சொந்த அத்தை மகன் தான். சின்ன வயசுல இருந்து மாமாவை தெரியும் சகஜமா  பேசுவேன்.
அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் பேசுறதை குறைச்சு கிட்டேன். அது போக நான் அவருடைய தீவிர ரசிகைனு அக்காக்கு தெரியும் என்னை வம்பு பண்ணிகிட்டே இருப்பா.எனக்கு கோபமா வரும் அதான் சுத்தமா ஒதுங்கிட்டேன்”.
ஏன்னா அவ கணவன் வேற என்னுடைய எழுத்தாளர் வேற. மனசுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடு மாதிரி தான் இந்த உறவு.
உங்க அப்பா இடத்துல யாரா இருந்தாலும் என் நிலைப்பாடு இது தான்.அவருக்கே தெரியும் அது அதுவும் போக அவரைச் சீண்டுற மாதிரியான எந்தப் பேச்சுகளும் என்கிட்ட இருக்காது,
போதுமாடா நீ நெனைக்குற மாதிரி ஒண்ணுமில்லை இப்பவும் சொல்லுறேன். என் அக்கா புருஷன் மேல எந்த காதலும் இல்ல,ஆனா எழுத்தாளர் மேல பைத்தியமா காதல் வச்சிருக்கேன் ஒரு ரசிகையா”.
கஞ்சனையின் தெளிவான பேச்சில் அயர்ந்து தான் போனார்கள்.வளவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை பாவமாக வாமனனை பார்க்க அவரோ கண்களை மூடி திறந்தார்.
தந்தை மகன் இருவருக்குமே அவள் வேண்டும் என்ற நிலை. அதனால் எப்படி அவளைத் தக்க வைப்பது என்ற பதட்டத்தில் இருந்தனர்.
வளவன் அதனை வெளியில் காட்டி கொள்ள வாமனன் வெளி படுத்தாமல் காரியம் சாதிக்க எண்ணினார்.
“என்னடா நான் இங்க பேசிகிட்டு இருக்கேன்  கண்ணு அங்க போகுது” மகனும் தந்தையும் கண்களால் பேசிக் கொண்டதை பார்த்து விட்டாள் போலும் ராட்சசி.
“சரி நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன் இப்போ நான் கேட்குறேன் நீ பதில் சொல்லு.நானா இருக்கப் போய் உங்க அப்பா என்னை ஈசியா தூக்கிட்டார்.
இதே என் இடத்தில் வேற யாராவது இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?அது மட்டுமில்லாம உங்க அப்பாக்குப் பெண் ரசிகைகள் ஜாஸ்தி எல்லாரையும் உங்க அப்பாக்கு பிடிச்சா?”
அவள் கேட்பதும் சரிதானே தலையைக் குனிந்து கொண்டான் வளவன்.ரமேஷுக்கும் காஞ்சனையின் கேள்வி நியாயமாகத் தான் பட்டது.
இன்னும் தெரிந்து கொள்ள நிறைய ரகசியம் இருந்தாலும் வளவனுக்குக் காஞ்சனையை வருந்த செய்து விட்டமோ என்ற கவலை.
அதனால் அவளிடம் சென்று அமர்ந்து அவளது கை பிடித்துக் கண்கள் கலங்கி நிகழ்வாகச் “சாரி சித்தி” என்று கேட்க.
கன்னி தாய்க்கும் அமுதம் சுரந்தது தாய்மை பெண்ணுக்கே உரிய கர்வம் அல்லவா.பெற்றால்  தான் பிள்ளையா என்ன?
அவனது நெற்றியில் முத்தம் வைத்து நெற்றி முட்டி அழகாகச் சிரித்துக் கண் மூடி கொண்டாள் பேரிளம் பெண். சில நொடி மௌனம் கொண்டு உணர்வை கடந்தனர் இருவரும்.
தனது காதல் புத்தகத்தில் முன்னுரையாக அக்காட்சியைப் பதிவு செய்து கொண்டார் வாமனன் சொல்ல முடியாத சுகம் மனிதருக்கு.
கண்கள் மூடிய வாக்கிலே குறும்பு குரலில் “இப்படி எல்லாம் எமோஷனலா பேசி என்ன கார்னர் பண்ண பக்குறியா” பழைய கஞ்சனையாக மாறி வளவனிடம் வம்பு செய்யப் பார்க்க
அவனும் “இனி என்கிட்ட வம்பு இழுத்த எங்க அப்பாகிட்ட சொல்லுவேன் தைரியமிருந்தா எங்க அப்பாகிட்ட பேசிக்கோ”.
“பார்ரா உங்க அப்பாக்கு நான் பயப்புடுவேன்னு யாருடா உனக்குத் தவறான தகவல் கொடுத்தா” என்றவள் வாமனன் புறம் திரும்பி
“என்ன வாமனன் சொல்லுறான் இவன் …. உங்க பையன்கிட்ட என்ன பத்தி கொஞ்சம் சொல்லி வைங்க” என்றவள் எழுந்து கொண்டாள் தனது வீட்டுக்கு செல்ல.
எங்க என்பது போலப் பார்த்தவர்களுக்கு “அப்பாவை பார்க்க வேணாமா என்னை கொண்டு போய் வீட்டுக்கு விடு” என்றதும் மீண்டும் ஓர் நொடி மௌனம்.
கண்களால் மகனையும் ரமேஷியும் அப்புற படுத்தியவர்.அவர்கள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு காஞ்சனையை நெருங்கினார்.
அவர் கிட்ட செல்ல பெண் எட்ட செல்ல வென அழகான காதல் நாடகம் அங்கு..
“எழுத்தாளரே! கொஞ்சம் நாகரிகம் கடை பிடிங்க பசங்க முன்னாடி இதெல்லாம் சரியில்லை நான் வீட்டுக்கு போகணும்”.
“இது தான் உன் வீடு”
“அதெல்லாம் சரி வராது வாமனன் நடப்பு புரியாம என்ன வேலை இது”
“எல்லாம் சரி வரும் நேத்து அதுக்குத் தானே படிவம் பூர்த்திச் செய்தோம்” அவரது நக்கலில் கோபம் கொண்டவள்
“இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்”
“என்னடி சரியில்ல என் மகன் கிட்ட கேட்ட கேள்விக்கு அவன் அப்பன் பதில் சொல்லுறேன் கேட்டுட்டு போ” அவரது பேச்சில் அரண்டவள் தப்பித்துச் செல்ல பார்க்க.
அவள் நோக்கம் புரிய ஒரே நொடியில் இழுத்து தோளில் தூக்கி கொண்டார் பேரிளம் பெண்ணை.
“டேய்!.. வாம….னா…….” மரியாதை காற்றில் பறந்தது.
எழுத்தாளர் வாசகர் உறவு எப்படியாம்?
அது மண்ணும் மழையும் போல் இருக்க வேண்டுமாம்.
எழுத்தாளர் மழையாக மாரி பொழிந்து வாசகர் என்னும் மண்ணின் அதாவது மனதில் நுழைந்து இருவரும் ஆழ கலந்து மண் மணம் பரப்பி நிற்க வேண்டுமாம்.
அதனால் நீ மண்! நான் மழை!.அதன் பின் என்ன தர்க்கம் எழுத்தாளரும் பேரிளம் பெண்ணும் ஐயோ!…. அங்கே…………உஷ்!…….

Advertisement