Advertisement

ஸனாவும், அதியனும் பேசிக்கவே முயற்சிக்கவில்லை.

அச்சு, மற்ற நண்பர்களும் அதியனிடம் பேசிப் பார்த்தனர்.

அஜியும் பேசிப் பார்த்தாள் ஸனாவிடம்.

எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

ஸனா விறலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள். படம் ஐம்பது பெர்சென்ட் முடிந்திருந்தது.

அன்று ஸனா”சார்! படத்தின் கிளைமேக்ஸ் இதான…?”

டேரக்டர்”ஆமா! ஸனா, நானுமே ரொம்ப யோசிச்சு தான் எழுதி இருக்கேன்..”

“ம்ம்ம்! ஆனா நெகட்டிவ் கிளைமேக்ஸ் ஏத்துக்கிறாங்க தான் இப்ப எல்லாம் பிரச்சனையில்லை.. எனக்கு ஓகே..”

“அப்புறம் ஸனா, இனிமே தான் மேக்ஸிமம் கொஞ்சம் ஹார்டான சீன்ஸ் இருக்கு, நீங்க தயார் ஆகிக்கோங்க.. நல்ல ரிகர்சல் எடுங்க நேரத்தை வீணாக்காம.. அப்ப தான் டேக்ஸ் அதிகம் போகாது..”

“ஷ்யர் சார்..”

“ஸனா! பத்திரிக்கை, யூடியூப் சேனலில் எல்லாம் உனக்கும், அதியனுக்கும் டைவர்ஸ் ஆகப்போது பிரிஞ்சுட்டீங்கனு சொல்றாங்க உண்மையா…?” என்று கேட்டார் அவளின் நலம் விரும்பியாக.

“சார்! நானும், அதியனும் ரொம்ப லவ் பண்றோம். அது இன்னும் மாறலை. மத்தது எல்லாம் கட்டாயத்தில் நடக்குது.. அது பலவிதமா ரூமர்ஸா இப்ப பிரேக்கிங் நியூஸா போகுது.. அவங்களுக்கு என்டர்டைன்மென்ட் அவ்ளோதான்.. நாங்க ஹேப்பி..” என்றாள் சாதரணமாக.

“ம்ம்ம்! உனக்கு கல்யாணம் ஆகியதும் நானும், புரோடிஸரும் பயந்துட்டோம். எங்க கால்சீட் கேன்சல் பண்ணப் போறீயோனு.. பட் அது நடக்கலை. எனக்கு முழுக்கதையும் தெரியாது ஆனா லைஃபில் எதையும் யோசிச்சுப் பண்ணு..”

“அல்மோஸ்ட் உங்க படத்தின் கதையும், என் கதையும் ஒன்று தான் சார். நீங்க சரியா நெகட்டிவ் கிளைமேட்ஸ் கொடுக்கப் போறீங்க.. தட்ஸ் ஆல்…”

“ம்ம்ம்! பட் ரியலில் ஆப்சன் இருக்கு. இந்த படத்தை மட்டும் எந்த இடைஞ்சலும் இல்லாம நடிச்சுக் கொடுத்திடும்மா, இனி போய் ஹீரோயின் மாத்த முடியாது, அதுவும் உன் பிளேஸ்க்கு ரிபிளேஸ் கஷ்டம்.. எனக்கு இந்த படம் ஒரு பிரேக் ஹிட் மாதிரி..”

“டோன்ட் வொரி சார், நான் அக்ரீ பண்ண ப்ராஜெட்டை இதுவரை முடிக்காம போனதில்லை. இனி எனக்கு நடிப்பு மட்டும் தான் எல்லாமே.. சோ சூப்பரா பண்ணிடலாம்.”

***

ஸனாவின் அண்ணனும், அண்ணியும் அவளை தேடி வந்தனர்.

பீவி கடுப்பில் தான் இருந்தார் ஆனால் ஸனாக்காக அமைதியானார்.

‘இத்தனை நாள் கண்டுக்கொள்ளாமல் இப்போது வந்து இருக்காங்கனு..’

அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். தன் பேரப்பிள்ளையோடு விளையாடினார் பீவி.

“ஸனா! நீ தனியா வந்துட்டனு ஃபீல் பண்ணாத. நாங்க இருக்கோம்..” என்றான் ஸமர்.

“தேங்க்ஸ்ண்ணா..” என்றாள் ஸனா.

மனைவி கண் காட்ட, ஸமர்”ஸனா! ஹிந்தியில் உனக்கு ஒரு நல்ல சான்ஸ் வந்திருக்கு. நீ தான் பண்ணனுமாம் ஒரு பயோகிராப்பி.. ஒரே பயோகிராப்பி ஃபைவ் லாங்க்வேஜ்.. நீ என்ன சொல்ற..?”

“இதுக்கு தான் வந்தீங்களா…? நான் அவ வாழ்க்கையை எப்படி சரிசெய்றது யோசிச்சுட்டு இருக்கேன் நீங்க அவளை வச்சு எப்படி சம்பாரிக்குறதுனு பாக்குறீங்க.. வெளியில் போங்க.” என்று கத்தினார் பீவி.

“அம்மா! இது நல்ல சான்ஸ் உங்களுக்கு புரியாது..” என்றான் ஸமர்.

“என்னடா சான்ஸ்.. அவ வாழ்க்கை…?”

“அதுக்கு என்னம்மா, வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. கவலைப்படாதீங்க..”

“யாரு நீ.? உன்னை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.. ஸமா நீ ஒன்னும் நடிக்க வேண்டாம்..” என்றார் பீவி.

“அம்மா! இனி எனக்கு நடிப்பு தான் எல்லாம்.. ” என்ற ஸனா, “அண்ணா! இப்ப ஒரு படத்தில் கால்ஷீட் புல்.. அது முடியட்டும்.. கதை அனுப்ப சொல்லு.. புடிச்சா ஓகே சொல்றேன்.. அப்புறம் அக்ரீமென்ட் பாத்துக்கலாம்..”

ஸமர் சந்தோஷமாக கிளம்பினான் மனைவியோடு, வந்த வேலை முடிந்ததால்.

***

நாட்கள் நகர்ந்தது…

நவநீதம் ஆபிஸில் இருந்தார்.. அதியனும் அங்கு தான் இருந்தான்.. பரணி எதையோ பற்றி விளக்கிட்டு நின்றார்.

எதிர்ப்பாராத விதமாக ஸனா நவநீதத்தைத் தேடி வந்தாள்.

அவளை கண்ட ரிசெப்சன் பெண் கேட்காமலே அனுமதி வழங்கினாள். ஸனா கதவைத் தட்டி பர்மிசன் கேட்க, அதியன் அந்த குரலில் அதிர்ச்சியாய் ஆனந்தமாய் நிமிர்ந்தான்.

நவநீதம் புருவத்தை நெழித்து காண, பரணி மட்டுமே”வாம்மா ஸனா!” என்றார்.

பாரியும்  ஸனா வருகையை வெளியில் கண்டதால் ஓடி வந்தான்.

“உள்ள வரலாம மிஸ்டர் நவநீதம்..?” என்றாள் அழுத்தமாக.

சுடிதாரில் நின்றாள் அமைதியான முகத்தோடு..

அதியன் நீண்ட நாட்கள் கழித்துப் பார்ப்பதால் அவளையே பார்த்தான். அவளிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

“அதான் வந்தாச்சே, என்ன விஷயம்..?” என்றார் நவநீதம்..

“நான் அதியன் கிட்ட பத்து நிமிஷம் பேசனும், அதுக்கு உங்க பர்மிசன் வேணும்..”

நவநீதம் அதியனைப் பார்த்தார்.

“நான் வரப்போறது அதியனுக்கு தெரியாது, ஒரு வேளை நான் பேசனுமுனு கேட்டு இருந்தா அதியன் வந்து இருப்பார். ஆனா அதில் எனக்கு விருப்பம் இல்லை. உங்களுக்கு தெரியாம நாங்க பேசிக்கிட்டா அப்புறம் எங்க பிரிவுக்கு அர்த்தம் இல்லாம போயிடும்..  ஆனா ஒரு அவசியம் வந்திருக்கு அதியன் கிட்ட பேச, நான் பேசலாம..?”

நவநீததிற்கு, ஸனாவின் அனுமதிக் கேட்டு பேச நின்ற விதம், பேசிட்டு தான் போகட்டுமே என விட்டுக் கொடுக்க வைத்தது..

“சரி!”

“தனியா பேசனும்…”

நவநீதம் அவளை ஒரு பார்வைப் பார்த்தவர், “அதியா! உன் கேபினுக்கு போ..” என்றார்.

அதியன் எழுந்து, ஸனாவை யோசனையோடு பார்த்தவாறே அவளை தாண்டி முன் சென்றான் தன் அறைக்குள்.

பின்னால் சென்ற ஸனா உள்ளே நுழைந்ததும், கதவை சாத்தினாள். பிறகு அதே இடத்தில் நின்றாள், அதியன் யோசனையோடு திரும்பி நின்று அவளை பார்த்தான். இருவருக்கும் இடைவெளி நன்கு இருந்தது.

இருவருமே பேசவில்லை, யார் முதலிலே பேசுவது என நொடி யோசித்தனர்.

“மஸ்து! ஆர் யு ஓகே…? ஏன் டல்லா இருக்க…?” என்று கேட்டான் அவளின் முகம் எதையோ சொல்ற ஃபீல் வர,

ஸனா காத்திருக்கவில்லை.

“அதியா! நீங்க அப்பா ஆகப்போறீங்க…?” என்றாள் அவனிடம் இருந்து தூரமாகவே நின்றவாறு.

அதியனுக்கு அது மூளைக்குப் போய் உணர்வுக்கு வர, “மஸ்து!” என்று ஓடி வந்துக் கட்டிப்பிடித்தான்.

ஸனா அப்படியே நின்றாள்.

“ஹேய்! இட்ஸ் ட்ரூ.. நீ இப்ப சொன்னது நான் அப்பா ஆகப்போறேனா..?” என்றான் அவளை விலக்கி.

“ம்ம்ம்!” என்று தலையை ஆட்டினாள் கண்களில் நீர் வழிய.

அதியன் அவளை இறுக்கி அணைத்தான். முகம் முழுவதும் முத்தத்தை வைத்தான்.

“சோ மச் ஹேப்பிடி…” என்று அவளை தூக்கிச் சுற்றினான்.

ஸனா அவன் முகத்தை கையில் ஏந்தி கண்களில் முத்தம் வைத்தாள்.

“எனக்கும் ஹேப்பி தான் அதியா.” என்று கட்டிப்பிடித்தாள்.

இருவரும் இறுக்கி அணைத்த நிலையிலே நின்றனர்.

முதலில் சுயநினைவுக்கு வந்தது ஸனா தான்..

“அதியா!”

“சொல்லு மஸ்து”

“நான் புது படத்தில் கமிட் ஆகப்போறேன் இன்னும் அக்ரீமென்ட் சைன் பண்ணலை பட் அல்ரெடி நடிச்சுட்டு இருக்க படத்தில் இன்னும் ஷுட்டிங் இருக்கு.. இதற்கிடையில் நான் கன்சீவ் ஆகிட்டேன்.. நான் என்ன செய்ய…?”

அதியன் ஸனாவை விலக்கினான்.

அவனுக்கு புரிந்தது, இது எதிர்ப்பார்க்காத ஒன்று.

“மஸ்து! இது உன் விருப்பம் மட்டும் தான். எனக்காக நீ நிறைய விட்டுக் கொடுத்திருக்க.. உன்னோட வேலை உனக்கு பேஷன்.. இந்த முடிவு உனக்கானது, நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் ஓகே தான்.” என்றான் மனதில் தன் குழந்தை என்ற கனவு மறைய.

“எனக்கு இது பொக்கிஷம் அதியன், முடிஞ்ச வாழ்க்கையில் இது என்னோட உயிர்.. எனக்கு ஓன்னுமே புரியலை.. நான் என்ன செய்ய….? நீங்க சொல்லி தான் என் முடிவு இருக்கு நம்ம விஷயத்தில்..” என்றாள் கண்கள் கலங்க.

அதியனும் கலங்கினான். வேணாம் சொல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கு, கூட வச்சுக்காமல் வெளியில் அனுப்பியவன்.

இப்ப எப்படி வேணுமுனு உரிமைக் கொண்டாட முடியும்.

“மஸ்து! உனக்கு எது முக்கியமுனு நான் கேக்க மாட்டேன். குழந்தையா…? நடிப்பா..? னு.. நீ எதை தேர்ந்தெடுத்தாலும், என் மனசில் மாறாம இருப்படி, உன்னை கஷ்டத்தில் விட விருப்பம் இல்லை, தெளிவா, தைரியமா போ.. எதுவா இருந்தாலும் நீ சூஸ் பண்ணிக்கோ… ஐ ஆம் யுவர் அதியன்..” என்று ஸனாவை இறுக்கி அணைத்தவன், அவளின் இதழை தன் இதழால் வருடி ஆறுதல் செய்தான்.

ஸனா அவன் கண்களையே பார்த்தாள்..
‘தனக்கு இப்படி ஒரு சூழல் வரக்கூடாது’ என கடவுளை திட்டினாள்.

அவளை விலக்கியவன், “சரி கிளம்பு, எந்த முடிவிலும் ஹேப்பி தான் நான்.. சரியா..?” என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“ம்ம்ம்!” என்று தலை அசைத்தாள். அதியன் அறையின் கதவுக்கு செல்ல,
பின்னால் இருந்து கட்டிப்பிடித்தவள்,
“அதியா! ஐ ஆம் சாரி, வெரி சாரி, எனக்கு வேற வழியே இல்லை. நம்ம குழந்தைக்கும் வாய்ப்பு இல்லை போல நம்மளை மாதிரியே.. நான் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன் டைரக்டரிடம். அக்ரீமென்ட் போட்டிருப்பதால் முடியாதுனு சொல்றார். இப்ப ஹீரோயின் மாத்த முடியாதாம்.. உன் கிட்ட சொல்லாம இதில் நான் முடிவு எடுக்க முடியாதில்லையா.. ஏனா இது எனக்கு மட்டும் இல்லையே நீ தானே முழு உறவு இந்த உயிருக்கு.. எனக்கு புரியாமல் தான் வந்தேன்…” என்று கண்ணீரால் அவன் சட்டையை நனைத்தாள்.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன், கண்களில் நீர் வழிய.. அதை துடைத்தான்.

அவளை முன் இழுத்து, “டோன்ட் வொரி மஸ்து, டு இட்..” என்று அவளின் வயிற்றில் கை வைத்து தடவினான்.

கண்களை மூடியவன், சட்டென்று குனிந்து அவளை இடுப்போடு கட்டிப் பிடித்து, வயிற்றில் முத்தத்தை பதித்தான்.

“ஐ ஆம் சாரி! அம்மாவும், அப்பாவும் பெரிய பாவம் செய்ய போறோம்.. இந்த பாவத்துக்கு தான் ஆண்டவன் முன்னாடியே தண்டனைக் கொடுத்துட்டான் போல..” என வயிற்றில் தலை சாய்த்தான்.

அவன் தலையை பிடித்து தன்னோடு இறுக்கிய ஸனா”அதியா! நான் இது எல்லாத்தையும் விட்டுட்டு இந்த பிள்ளையோட எங்கயாவது போயிடவா..?” என்றாள் முடியாமல்.

“தப்பு என்னோடது மஸ்து, நீ ஏன் ஓடி ஒழியனும்.. நீ தைரியமா உன் வாழ்க்கையை வாழு, எனக்காக எதையும் பாக்காத.. உனக்காக நான் என்ன பண்ணேன்…? நீ ஏன் எனக்காக என்னையே விட்டுக்கொடுத்துட்டுப் போன.. உன்னோட வேலை, உன் எதிர்க்காலம் வேணும். நீ போ.. உன் முடிவு சரிதான். நீ கிளம்பு” என்று எழுந்தவன் வெளியில் சென்றான்.

அதற்கு மேல் ஸனாவும் நிற்கவில்லை.. கிளம்பி வெளியேறினாள்.

அதியனவள் அடுத்து…

Advertisement