Advertisement

வீட்டில் நடக்கப் போகின்ற பிரளயம் தெரியாமல், அவரவர் வேலைகளில் இருந்தனர்.

பாரி போன் அடிக்க அதில் ஒளிர்ந்த பெயர் ஷர்தாவே தான்.

யோசனையுடன் எடுத்தான்.

“ஹாய் பாரி! ஹவ் ஆர் யூ..?”

“யா ஃபைன், ஹவ் அபௌவுட் யூ..?”

“குட், பாரி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்..”

“சொல்லுங்க ஷர்தா.”

“அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு வரனுமுனு ஆசைப்படுறாங்க”

பாரிக்கு புரியாமல்”எதுக்கு…?” என்று கேட்டான்.

“ஹலோ! வராங்கனு சொன்னா வெல்கம்னு சொல்லனும், அத விட்டுட்டு எதுக்குனு கேட்பீங்களா…? இதான் உங்க ஃபேமிலி மேனெரிசமா…?” என்றாள் சற்று கோபமாக, அவளிற்கு தெரியும் அவன் பயந்து தான் கேட்கிறான் என்று.

“சாரி ஷர்தா, எப்ப வராங்கனு சொல்லுங்க, நீங்க வரீங்களா…?” என்றான் அவள் கேட்டது சரி என்று பட.

“நானா…? நீங்க தான் கூப்பிடவே இல்லையே..”

“ஆல்வேஸ் வெல்கம் மேடம்..” என்று சிரித்தான்.

“வந்ததுக்கு அப்புறம் எதுக்கு வந்தனு கேக்க மாட்டீங்களே…?”

“ஒய் லைக் திஸ், ஐ ஆம் நாட் லைக் தட்.. பிடிக்கலைனா கூப்பிடவே மாட்டேன்..” என்று எதையோ உளரிவிட்டான்.

“வாரேவா! அப்ப புடிக்கும்..?”

பாரி மண்டையில் தட்டி, ‘ச்சே!’ என்றவன்.

பிறகு”புடிக்குமானு தெரியலை, ஆனா புடிக்கலைனு சொல்லலையே…”

“என் அம்மா, அப்பா வராங்க அங்க, உங்களுக்கு என்னைய புடிக்குமுனு சொல்லுங்க நானும் வரேன்..” என்றாள் விடாமல்.

பாரி அமைதியாக..

“ஹலோ சார்! இருக்கீங்களா..?”

“ம்ம்ம்! யு வில் கம் ஷர்தா வித் யுவர் பேரன்ட்ஸ்..” என்றான் மறைமுகமாக.

“நோ! நோ! இப்படி எல்லாம் சொன்னா ஐ கான்ட் அசெப்ட்.. டெல் திஸ் யு லைக் மி ஆர் நாட்…?”

“ஓகே! அப்பா, அம்மா எப்ப வராங்க…?”

“டுடே ஈவ்னிங்…”

“ஓ! தேர் ஆர் இன் மும்பை..?”

“எஸ்! பட் இப்ப சென்னை வந்தாச்சு.. என் கூட தான் இருக்காங்க.. இட்ஸ் டிப்பென்ட் அப்பான் வொர்க்..”

“ம்ம்ம்! ஓகே வில் ஸி…”

“பட் ஐ ஆம் நாட் கம் பாரி, டில் யு வில் டெல்லிங் தட் வாட் ஐ எக்ஸ்பெட்டிங்..”

“ஷர்தா!”

“வாட் ஷர்தா..? யு நோ வெரி வெல் தட் வாட் ஐ ஆம் எக்ஸ்பெட்டிங் ப்ரம் யு.. பட் ஸ்டில் யு ஆர் வெரி ஸ்டபர்ன் பாரி. நான் பொண்ணு நானே இந்தளவு இறங்கி பேசும் போது, நீங்க ஓவரா போறதா தெரியலையா…?” என்றாள் கோபமாக.

“நாட் லைக் தட் ஷர்தா, எங்க வீட்டு சூழ்நிலை அப்படி, உனக்கு புரியாது சொன்னா..”

“ஓகே! அப்ப என்னைய புடிக்கலைனு சொல்லுங்க, நானும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு, என் பேரண்ட்ஸையும் வர வேண்டாமுனு சொல்றேன்..”

“உன் பேரன்ட்ஸ் எதுக்காக வராங்க…? ஜஸ்ட் டெல் ஷர்தா..”

“அப்கோர்ஸ் வேற எதுக்கு…? மாப்பிள்ளை கேக்க தான்..”

“வாட்!”

“பின்ன பொண்ணுக்கு புடிச்சு இருக்குனு தெரிஞ்சதும், நம்ம பொண்ணு மனசை கெடுத்த அவன் யாருனு கேட்டாங்க உங்களை அட்ரஸோடு சொல்லிட்டேன். நேரில் போய் பேசிக்கொள்வதாக சொல்லிட்டாங்க..”

“ஓ! அப்புறம் மாப்பிள்ளை கேக்கனு சொல்ற..?”

“என் பேரன்ட்ஸ் என்னோட ஆசைக்கு மாறா எதுவும் செய்ய மாட்டாங்க..”

“ம்ம்ம்!”

“கடைசி வரை சொல்லவே மாட்டேனு இருக்கீங்க பாரி, யு வில் பே ஃபார் திஸ் ஆல்..”

பாரிக்கு சிரிப்பு வந்தது.

“ஷர்தா!” என்றான் மறுபடியும்.

“டோன்ட் கால் ஷர்தா!”

“ஷமி!” என்றான் மெதுவாக.

ஷர்தாக்கு ஆச்சரியமாக இருந்தது.

“பாரி! ஷமி எல்லாம் ரிமெம்மரா…?”

“எப்படி மறக்கும்..?”

காலேஜ் டேஸ்ல இருவருக்கும் ஒரு தடவை கல்சர்ஸ் புரோகிராம் டான்ஸ் சேர்ந்து ஆடும் சான்ஸ் வந்தது.

அப்ப பாரி சும்மா ஷமினு கூப்புட்டு கிண்டல் செய்வான்.

அப்ப பெரிதாக இருவருக்குமே ஈர்ப்பு இல்லை. ஆனால் பாரிக்கு ஒரு க்ரஷ் இருந்தது ஷர்தா மேல்.. அவன் நிறைய பெண்களோடு பேசும் சுபாவம் அதனால் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை..

ஆனா ஷர்தாவை மறுபடியும் பார்த்தப்போது அது க்ரஷ் இல்லைனு தோன்றியது, அந்த நேரத்தில் அதியன் பிரச்சனை ஆரம்பிக்க பாரி அப்படியே ஆஃப் ஆகிட்டான்..

இப்ப ஷர்தா விடாமல் துரத்த, பாரிக்கு விடவும் முடியவில்லை, ஏற்கவும் யோசனை.

“அப்ப யு..?”

“எஸ் ஷமி! ஐ லைக் யு… போதுமா..?”

“இல்ல, இல்லை, இன்னும் வேணும், இப்படி நாட் ஜஸ்ட் லைக்னு சொல்ல கூடாது.”

“ஹலோ மேடம்! அல்ரெடி என் அண்ணன் காதல் பண்ணி தாத்தா கிட்ட மாட்டிட்டு முழிக்குறான். அடுத்து நானும் அதில் சேர்ந்தா இந்த குடும்பம் தாங்காது”

“அதை எல்லாம் என் அப்பா, அம்மா பாத்துப்பாங்க, நம்ம லவ் மட்டும் செய்யலாம்..” என்று சிரித்தாள்.

“ஏன் உன் பேரன்ட்ஸ், பெரிய ஆளுங்களா..? ஐ மீன் என் தாத்தாவை கன்வீன்ஸ் பண்ணிடுவாங்களா..?”

“ம்ம்ம்! பாக்க தானே போறீங்க அத்தான்..” என்றாள் நக்கலாக.

“வாட்! அத்தானா..?”

“ஆமா! கல்யாணம் பண்ணப் போறோம்.. அத்தான் தானே..”

“நீ ஒரு கம்பேனி எம் டி இப்படி அத்தான் பொத்தானு சொல்ற, இந்த பொண்ணுங்க பொண்ணுங்க தான் எங்க இருந்தாலும்..”

“சோ வாட்! அத்தானு சொன்னா தப்பா..? அப்ப டேய் பாரினு கூப்புடுறேன் உங்க வீட்டுக்கு வரும் போது..”

“அய்யோ வேணாம் தாயே.. பாரி மட்டும் போதும்.. எப்படியோ இன்னைக்கு இருக்கு என் வீட்டில் எனக்கு கச்சேரி.. சரி வாங்க.. பை” என்று போனை வைத்து விட்டான்.

ஷர்தாவிடம் தைரியமாக வர சொல்லி விட்டாலும், உள்ளுக்குள் ஜர்க் ஆனது.

‘அய்யோ! இப்ப என்ன செய்வது, இதை யாரு கிட்ட சொல்வது..?’ என யோசித்தவன் நேராக சென்றது அதியனிடம்.

***

அதியனிடம் அனைத்தையும் சொல்லி முடிக்க, ஸனா”ம்ம்ம்! பாரி எனக்கு சிஸ்டர் ரெடியா…?”

“அடப்போங்கண்ணி! உங்களுக்கு சிஸ்டர் அப்புறம் தான், இப்போதைக்கு எனக்கு ஆப்பு தான் ரெடி ஆகி இருக்கு…”

“டேய் என்னடா! என் கிட்ட சொல்லி நான் என்ன செய்ய..? நீ போய் பெரியப்பா கிட்ட சொல்லு. அதான் சேஃப்.. தாத்தா கிட்ட பேச..”

“அய்யோ! நீ வா அப்பா கிட்ட பேச.. தாத்தா இன்னும் வரலை அதுக்குள்ள அப்பா கிட்ட பேசிடலாம். அப்புறம் ஷர்தா வீட்டில் இருந்து வந்துடுவாங்க..”

“அதியா! போங்க போய் பெரிய மாமா கிட்ட பேசுங்க, நீங்க தானே ஹெல்ப் பண்ணனும்..”

“மஸ்து! இப்ப தான் இவன் ஒரு பிரச்சனை ஆரம்பிச்சு வச்சான் அதை எப்படியோ உன்னோட ஹெல்ப் மூலமா சால்வ் பண்ணோம். இப்ப அடுத்தா..?”

“அண்ணா! அண்ணிக்கு இருக்க பாசம் கூட உனக்கு என் மீது இல்லை.. இல்லைனா என் லவ்வை இப்படி அனாதையா விடுவீயா…?” என்று நடித்தான்.

“டேய் போதும் நீ நடிக்காத, உனக்கு எப்ப லவ் வந்துச்சு அதையே சொல்லல.. அதுக்குள்ள சீன் போடுற..”

“அது எல்லாம் வந்து பல வருசமாச்சு. உனக்கு எல்லாம் நான் சீனியர், ஆனா நீ முந்திகிட்ட நான் மூடிட்டு கம்முனு ஆஃப் ஆகிட்டேன், அப்புறம் நவநீதம் வெர்சன் ஃபைவ் உருவாகி நம்மளை எல்லாம் ஸ்பேஸ்ல கொண்டுப் போய் போட்டுட்டா.. அதான்…”

“ம்ம்ம்! இப்ப மட்டும் தாத்தா ஓகே சொல்லிடுவார..?”

“இப்ப ஷர்தா அப்பா, அம்மா தானே பேசப் போறாங்க..?”

“அதியா! முதலில் போய் பேசுங்க மாமா கிட்ட.. அப்புறம் என்ன தான் நடக்குதுனு பாப்போம்..”

இவர்கள் பேச, வேலை செய்யும் பெண் வந்தாள்..

“ஷனாம்மா! உங்க அம்மா வந்து இருக்காங்க…”

“அம்மாவ, இப்ப எப்படி.. நீங்க போங்க வரேன்..” என்றவள், “அதியா! வாங்க” என்று கீழே சென்றாள்.

அதியா கூடவே போக, “அண்ணா! அங்க போய் மாமியார் கூட மொக்கை போடாம வா அப்பா கூட பேச..” என்று கூறியப் படி பின்னால் சென்றான் பாரி.

****

“அம்மா! வாங்க, என்ன சொல்லாம வந்து இருக்கீங்க..?”

“ஷமா! இங்க பக்கத்தில் ஒரு கடைக்கு வந்தேன். அப்படியே உன்னையும், மாமியார் எப்படி இருக்காங்கனு பாத்துட்டு போகலாமுனு வந்தேன்..” என்றார்.

“மாப்பிள்ளை நல்லா இருக்கீங்களா..?”

“நல்லா இருக்கேன் அத்தை, நீங்க..?” என்று சிறிது நேரம் பேச, பாட்டி அரவரம் கேட்டு வெளியில் வந்தார்.

அன்று பாட்டி இல்லை, பீவி வந்த போது.

“பாட்டி! இவங்க தான் என் அம்மா” என்று ஸனா அறிமுகம் செய்தாள்.

இருவரும் பார்க்க, நொடிகள் புருவம் சுளிந்தது.

“வணக்கம்மா!” என்றார் பீவி.

“வணக்கம்! வாங்க, ஸனா சொன்னுச்சு அன்னைக்கு வந்துட்டுப் போனீங்கனு..” என்று எதிரில் அமர்ந்தார்.

பாரி கண்ணைக் காட்ட, ஸனா”அதியா! நானும் பாட்டியும் பேசிட்டு இருக்கோம், நீங்க போங்க பாரியோடு”

“ம்ம்ம்!” என்றவன், எழுந்து”அத்தை! நீங்க பேசிட்டு இருங்க வரேன்..” என்றான்.

அவரும் தலையை ஆட்ட, இருவரும் சேராவை தேடி சென்றனர்.

சேராவும், தேவியும் ஒன்றாக இருக்க  அதுவே வசதி என்று, அதியன் அனைத்தையும் கூறினான்.

“என்ன பாரி இது எல்லாம், ஏற்கனவே அப்பா அதியன் விஷயத்தில் கோபமாக இருக்கார்.. இப்ப நீயுமா.?” என்று திட்டினார்.

“பெரியப்பா! என் விஷயம் மாதிரியில்லை பாரிக்கு, ஷர்தா ஸ்டேடஸ் தாத்தாக்கு கண்டிப்பா புடிக்கும். வி எல் குரூப்ஸ் எம் டி, திறமையான பொண்ணு, நான் நிறைய மீட்டிங்கில் பாத்து இருக்கேன். ஆனா அவங்க பேஸ் மும்பை. இப்ப தான் இங்க ப்ராஞ்சஸ் ஃபவுண்ட் பண்ணி இருக்காங்க பட் பெரிய லெவெல்..” என்று கூற, அதை கேட்டு தேவி தான் வாயைப் பிளந்தது.

“ஓகே அதியா! தாத்தா என்ன சொல்வாருனு தெரியலை. அவர் கிட்ட சொல்லாம அவங்களை வர சொல்லிட்டான்.”

“ஏங்க அதான் அதியனே சொல்றானே, அதியன் ரெக்மடேசன் சும்மா இருக்குமா..? நீங்க தானே சொல்வீங்க அதியன் எதையும் திறமையா செய்வானு. பாருங்க புடிச்சப் பொண்ணை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டிலே வச்சு குடும்பம் நடத்தலை. அதே மாதிரி பாரிக்கும் சரியா தான் யோசிப்பான்” என்றார் இரு அர்த்தத்தோடு.

“நீ சும்மா இரு” என்ற சேரர்.. “அதியா! தாத்தா வரட்டும் பேசலாம். அவரு என்ன சொல்றாரோ அதான் முடிவு..”

“ம்ம்ம்!” என்றனர் அவர்கள்.

“ஆமா! பாரி அந்த பொண்ணு அப்பா, அம்மா பேரு என்ன…?”

“தெரியலையே அதை நான் கேக்கவே இல்லை, ஷர்தா மட்டும் தான் இங்க இருக்காப்பா… அவங்க அப்பா, அம்மா மும்பை ஷெட்டில்டு.”

“அதான் வரப்போறாங்களே பாத்துக்கலாம். நான் போய் வரவங்களுக்கு ஏதாவது ரெடி செய்றேன்..” என்று தேவி ஓடினார்.

****

பாட்டியும், பீவியும் பேச ஆரம்பித்தனர்.

பாட்டி”ஸனா! நீ போய் மல்லிகா முழிச்சு இருக்காளனு பாத்துட்டு வா, அம்மாவை அழைச்சுட்டுப் போகலாம்..”

“சரி பாட்டி!” என்று எழுந்து சென்றாள்.

பாட்டி உடனே”நீங்க..?” என்று இழுத்தார்.

“எனக்குமே உங்களை பாத்த நினைவு வருது, நீங்க தானே சிட்டி ஹாஸ்பெட்டல்…” என்று பீவி நினைவில் கொண்டு வந்தார்.

“ஆமா! ஆமா! நல்லா இருக்கீங்களா..?”

“நல்லா இருக்கேன்மா, உங்க வீடுனு தெரியாது எனக்கு..”

“எனக்குமே நீங்க தான் ஸனா அம்மானு தெரியலை. என் பொண்ணு அவளுக்கு புள்ளைங்க..?” என்று கண்கள் கலங்கினார்.

“ம்ம்ம்! வரு கொஞ்ச வருசத்திலே தூரமா போயிட்டாம்மா. எங்க இருக்கானு தெரியலை.. அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கா, நாங்க அதுக்கு அப்புறம் சந்திச்சுக்கல..”

“ம்ம்ம்! என் பொண்ணு என்னைய தேடி வருவா.. அந்த  நம்பிக்கை எனக்கு இருக்கு, ஸனாக்கு…?”

“எதுவும் தெரியாதும்மா, எனக்கே உங்களை பார்த்ததும் தான் இந்த வீடு வரு குடும்பமுனு தெரியுது…”

“அம்மா! அத்தை முழிச்சுட்டு தான் இருக்காங்க வாங்க..” என்றாள் ஸனா.

“போங்க, பாத்துட்டு வாங்க” என்றார் பாட்டி.

***

நவநீதம் கார் வேகமாக வீட்டை அடைந்தது..

வந்ததும் வேகமாக”அதியா!” என்று கத்தினார்.

அது அனைவருக்குமே கேட்டது..

பீவி முதற்கொண்டு…

வேகமாக வந்தனர் வெளியில் பதறியவாறு…

அதியனவள் அடுத்து…

Advertisement