Advertisement
அதியன் நன்கு தூங்கி கண் முழிக்க,
எங்கு இருக்கிறோம் என்ற சந்தேகம் வரும் அளவிற்கு தூங்கி இருந்தான்..
உடல் அசதியினால் வந்த தூக்கம் என்பதால் அவனை மறந்து நித்திரைக்கு சென்றவன் எழுந்து அமர, ஸனா ட்ரஸிங் டேபிள் முன் அமர்ந்து தலையை ட்ரயரில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.
அதியன் சுற்றி பார்த்து விட்டு, ‘ச்சே! என்ன இப்படி தூங்கி இருக்கோம்’ என்று போனை எடுத்து நேரத்தைப் பார்த்தான்.
அது மணி நான்கு என காட்டியது.
அவசரமாக எழுந்தவன், குளித்து வரலாம் என்று பாத் ரூம் செல்ல டவலை எடுத்தான்.
பெட்டில் ஸனா புடவை எடுத்திருந்தது. மனதில்’எங்க போறா…?’ என்ற கேள்வியோடு நகர்ந்தான்.
“இப்ப ஓகேவா ஹெல்த்..?”என்றாள் ஸனா திரும்பாமலே, கண்ணாடி வழியே அவனை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
“ம்ம்ம்! ஓகே, ஆனா நல்லா தூங்கிட்டேன். ஆமா! ஷூட்டிங்கா உனக்கு. கிளம்புற மாதிரி தெரியுது…”
“இல்ல, ஆடியோ லான்ஞ் போகனும்”
“ஓ! கேரி ஆன்” என்று உள்ளே சென்றான்.
ஸனாவும் எதுவும் சொல்லாமல் லேசாக சிரித்து விட்டு, எழுந்து புடவையை கட்ட ஆரம்பித்தாள்.
அதியன் குளித்து வெளியில் வர, ஸனா புடவையை கட்டி முடித்திருந்தாள். பிறகு முகத்திற்கு மேக் அப், புடவைக்கு ஏற்ற நகை என தேர்வு செய்து அணிய ஆரம்பித்தாள்.
தலையை துவட்டியவாறு வந்தவன் போன் அடிக்க எடுத்துப் பார்த்தான்.
“தாத்தா” என்று தெரிந்தது.
அட்டென்ட் செய்தவன்”சொல்லுங்க தாத்தா..” என்றான்.
“உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு அதியா…?”
“குட் தாத்தா, தூங்கிட்டேன் ப்ரீயா இருக்கு..”
“அப்ப சரி, சாயங்காலம் தென் மண்டல டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பு இருக்கு, அதுக்கு எப்படி பாரியை அனுப்புறதுனு யோசிச்சேன், நீயே சரி ஆகிட்ட அதியா எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு, நீ ஐந்து மணிக்கு எல்லாம் லீ மெர்டியன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு போயிடு, பாரியும் வருவான், அவனும் கத்துக்கனுமுல.. ரெண்டுப் பேரும் உடைகளில் கவனமா போங்க, நவநீ குரூப்ஸ் சார்பா போறீங்க, சரியான முறையில் பிரதிபலிக்கனும்” என்றார் நவநீதம்.
“ஓகே தாத்தா! நோ ப்ராப்ளம்..”
“சரி! அங்க பேசப்போறதை நான் அனுப்பி வைக்குறேன் பரணி மூலமா, பாத்து விஷயங்களை உன் ஆங்கில மொழியில் பேசிடு..”
“சரி தாத்தா, நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்..” என்று போனை கட் செய்து நிமிர்ந்தான்.
ஸனா முழுமையாக தயார் ஆகி கண்ணாடி முன் நின்று தன்னை சரிப்பார்த்தாள்.
அதியனின் பார்வை அவளை விட்டு விலகவே இல்லை.
சந்தன நிறத்தில் அடர்த்தியான டிஸ்யூ சில்க் புடவை, மெரூன் நிறத்தில் டிசைனர் பிளவுஸ் முட்டி வரை நீண்டு இருந்தது, கோல்டன் பீட்ஸ் வைத்து டிசைன் செய்த பிளவுஸ்ஸாக.
ஒற்ற தலைப்பாக புடவையை விட்டிருந்தாள், ப்ரீ ஹேர், தலையின் ஒரு சைடில் இருந்து தொங்கியது அடியில் லேசாக ஹர்லியாக காட்சியளித்து.
கண்கள் மை தீட்டி, நெற்றியில் மெல்லிய பொட்டு, மெரூன் வளையல் ஒற்றை கையில், ஒற்றை கையில் கோல்டன் மெரூன் ஸ்நாப் வாட்ச்.
கழுத்தில் மெரூன் ஸ்டோன் வைத்த ஒரே ஒரு நெக் செட் மட்டும் தொங்கியது.
கூடுதலாக தாலியைப் போட்டு இருந்தாள்.
இதுவரை அவளை அளவெடுத்தவன் பார்வை தாலியில் நின்றது.
‘தாலியை கழட்டாம போட்டு இருக்கா..? பொதுவா கழட்டி இருக்கனுமே..’ என்று யோசித்தவன், “ஸனா!” என்றான்.
“என்ன..?” என்று திரும்பினாள்.
“உன்னோட ட்ரெஸிங் நல்லா இருக்கு. ஆனா தாலி போட்டு இருக்க பொதுவா ஷூட்டிங் போகும் போது கழட்டிடுவ தானே..”
“ம்ம்ம்! இது ஷூட்டிங் இல்லையே. ஆல்பம் ரிலீஸ் தானே..”
“ஓ! அத கிப்டா கொடுத்ததுக்கு தான் இவ்வளவு தூரம் நம்ம வாழ்க்கை வந்திருக்கு, ஆனா நீ ஈஸியா கழட்டி மாட்டுற.. நானும் அதுக்கு மதிப்பு கொடுக்கலை, நீயும் கொடுக்கலை ஆக மொத்தம் அது வெறும் கயிறு தானே என்ற ஆயிற்று..” என்று தன் கப்போர்டை திறந்தான் மீட்டிங் ரெடியாக.
ஸனா அவனையே பார்த்தாள், பின் கண்ணாடியில் தன் தாலியைப் பார்த்தாள்.
“இத நீங்க கட்டலையே அதியன்…” என்றாள் திரும்பி இருந்தவனிடம்.
“ம்ம்ம்! ஒத்துக்கிட்டா சரி தான்” என்று சர்ட்டை எடுத்து மாட்டி, பேண்டை போட்டு ரெடியாகினான்.
“ஆனா நீங்க கொடுத்தது தானே..”
என்றாள் மறுபடியும்.
“யாரு இல்லைனா..? நானே தான் கொடுத்தேன், அதுவும் மிட்நைட் பன்னிரெண்டுக்கு” என்று அவள் அருகில் சென்றவன்.
“இதோ இப்படி செஞ்சு தான் கொடுத்தேன்” என்று அவள் நெற்றி, கன்னங்களில் முத்தம் வைத்தவன், அவளை விடுவித்து, “நான் தான் கொடுத்தேன்” என்று திரும்பினான் கப்போர்டில் கோட்டை எடுக்க.
ஸனா சட்டென்று கிடைத்த முத்தத்தின் ஸ்பரிசத்தில் அப்படியே நின்றாள்.
கோட்டை மாட்டியவாறு அவளை பார்த்தவன்.
“ஹலோ மேடம்! அல்ரெடி டால் மாதிரி செமயா இருக்கீங்க புடவையில், அதுக்காக போஸ் கொடுக்க வேணாம். கிளம்புங்க அதான் ஃபங்சனில் நிறைய ஃபோட்டோஸ் எடுப்பாங்க. இன்னைக்கு நீங்க தானே ஹைலைட்டான பெர்சன் ரிப்போர்ட்டர்ஸ். சேனல்ஸ்க்கு..” என்று சிரித்தான்.
ஸனா முறைத்தாள்.
“என்ன நக்கலா…?”
“ச்சே! ச்சே! உண்மையை சொன்னனேன்” என்று கண்ணாடி முன் வந்தவன், தன் தலைமுடிகளை சீவிட்டு சீப்பை தூக்கிப் போட்டான்.
ஸனா அவனையே முறைத்தப்படி நிற்க,
திரும்பியவன் முன் மிக அருகில் நின்றவள் முறைப்பை பார்த்து,
லேசாக சிரித்து வாயினுள் அடக்கினான்.
அவளின் இடையில் கையை விட்டு தன்னோடு அணைத்து, அவளின் முகத்தில் தொங்கிய சில முடிகளை ஒதுக்கி விட்டவாறு, “எதுக்கு முறைக்குற, இவ்வளவு அழகா இருந்தா ப்ரஸ், மீடியா கண் எல்லாம் உன் மேல தானே இருக்கும் அதை தான் சொன்னேன் மஸ்து, அங்க போய் இப்படி முறைக்காத பாக்கவே டெரரா இருக்கும். அப்புறம் தேவதைனு சொல்லாம ஸ்பிட்ஃபயருனு சொல்வாங்க. இவ்வளவு அழகான பொண்ணை அப்படி சொன்னா உன் ஃபேன்ஸ் ஃபயர் ஆகிடுவாங்க அப்புறம்” என்றான்.
ஸனாவிற்கு அவன் சொன்னதில் சிரிப்பு வர, முறைத்தவாறே சிரித்தாள்.
“திஸ் இஸ் குட்! ஏஞ்சல் ஸ்மைல்” என்று அவளை விட்டு விலகினான்.
ஸனா அப்படியே நின்றாள் அவன் பேச்சில் தன்னை இழந்து, ஆனால் நகர்ந்தவனுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று அவளை தன்னோடு மறுபடியும் அணைத்து இறுக்கினான்.
“ஐ வான்ட் திஸ் நவ் மஸ்து” என்ற கெஞ்சலோடு.
ஸனா எதுமே சொல்லவில்லை.
நொடி நிமிடமாகியது, அவனும் அவளும் வெறும் அணைப்பில் தங்களை மறந்து நின்றனர்.
முதலில் நிலை உணர்ந்த ஸனாக்கு கண்களில் ஏனோ ஏக்கங்கள் தோன்றி மறைந்தது. அவன் முகத்தில் முத்தத்தை வைக்கத் துடித்தாள் ஆனால் சுய சிந்தனையில் அது முடியவில்லை.
அதியன் மனம் அமைதியாக, “தேங்க்ஸ் மஸ்து…” என்று விலகினான்.
ஸனாவிற்கு அவன் விலகல் வலியைக் கொடுத்தது.
“அதியா!”
அதியன் என்ன என்பது போல் பார்த்தான்.
“நான் தேவையான போது மஸ்து, தேவை இல்லாத போது ஸனாவ…” என்றாள் நக்கலான சிரிப்போடு.
“எனக்கு நீ எப்பவுமே மஸ்து தான்.. ஆனா சூழ்நிலை என்னைய ஸனாவ காட்ட சொல்லுது.. டைம் ஆகிட்டு நீ கிளம்பு. எனக்கும் மீட்டிங் இருக்கு” என்று தன் லேப் டாப்பை எடுத்துக் கொண்டு கீழிறங்கினான்.
அப்போது தான் கவனித்தாள்.. சந்தன நிற கோட், பேண்ட், மெரூன் நிற சர்ட் என அணிந்து அழகாக இருந்தான்.
***
அதியன் கீழே வர, அவனோட அம்மா மல்லி”அதியா! உடம்பு பரவாயில்லையா.. பாட்டி சொன்னாங்க நீ தூங்கிட்டு இருந்த நான் வரும் போது அதான் தொந்தரவு பண்ணாம வந்துட்டேன்..” என்றார்.
“இப்ப ஓகேம்மா.. நோ ப்ராப்ளம்”
“சரி! இரு சாப்பிட்டு போகலாம்” என்றார்.
“இல்லம்மா மீட்டிங் இருக்கு, வேணுனா ஒரு டீ கொடுங்க…”
“அதியா! மதியமும் டீ தான் குடிச்ச.. இப்பவுமா, மல்லி போ போய் ஏதாவது கொஞ்சமா சாப்பிட கொடு” என்றார் பாட்டி.
அவனுக்கும் பசிக்க, டேபிளில் அமர்ந்து தாய் கொடுத்ததை உண்ண ஆரம்பித்தான்.
சங்கவி, சாரு, சைந்தவி மூன்றுப் பேரும் ஹாலில் அமர்ந்து டிவியில் புரோகிராம் பார்த்து அரட்டை அடித்தனர்.
நவநீதம் இருந்தால் இது எல்லாம் பார்க்க முடியாது.
“என்ஜாய் போல சிஸ்டர்ஸ்..” என்றான் அதியன்.
“ஆமா ப்ரதர்” என்றனர்.
“இருங்க இதை அப்படியே வீடியோ எடுத்து தாத்தாக்கு அனுப்புறேன்” என்றபடி பாரி கிளம்பி வந்தான்.
“அண்ணா! அப்புறம் நாங்களும் வீடியோ எடுப்போம் ஃபேஷன் ஷோ பாக்குற ஆளை.. தெரியுமுல..” என்றாள் சங்கவி.
பாரி”அது என்னோட பிஸ்னஸ்காக..” என்றான்.
“எது நீங்க விக்குற புடவைக்கும், சுடிதாருக்கும் , அந்த ஃபேஷன் பொண்ணுங்க ட்ரஸ் பாக்குறது பிஸ்னஸா சரி தாத்தா கிட்ட சொல்றோம் அவரே அவார்ட் தருவாறு..” என்றாள் சைந்தவி.
“அடிங்க! எல்லாம் சகுனி கூட்டமா இருக்கு” என்றான் நொந்தவாறு.
“உனக்கு இது தேவையா.. கம்முனு கண்டுகாம போக வேண்டியது தானே. அவங்க என்ஜாய் பண்ணட்டும்..” என்றான் அதியன்.
“ஆமா! எல்லாரும் என்ஜாய் பண்றீங்க நான் தான் சோலவா இருக்கேன். எனக்கும் ஒரு ஆளை கூட்டி வரேன். அப்ப இருக்கு உங்க எல்லாருக்கும் முக்கியமா நம்ம நவநீதத்துக்கு..” என்றான் பாரி.
“என்ன அங்க சத்தம்…?” என்றார் பாட்டி.
“பேசிட்டு இருக்கோம் பாட்டி..” என்றான் பாரி.
“என்ன பேசிட்டு இருக்க. அதும் என் புருசன் பேரை சொல்லி”
“வயசானாலும் உங்க செவித்திறன் மாறவே இல்லை பாட்டி…” என்றான் சிரித்தவாறு.
“அப்படியில்லை அண்ணா! தாத்தா பேரு சொன்னா பாட்டி காது அலார்ட் ஆகிடும்..” என்றாள் சாரு.
“ஆனா பேசிக்க மாட்டாங்க..” என்றான் பாரி.
அனைவரும் சிரிக்க…
“வாவ்! சூப்பர்.. பியூட்டிபுல்” என்றாள் சைந்தவி சட்டென்று ஆச்சிரியக் குரலில்.
“என்னடி!” என்ற மற்ற பெண்களும் பார்க்க,
ஸனா இறங்கி வந்தாள்..
சங்கவி யோசிக்கவே இல்லை எழுந்து சென்று”அண்ணி! சூப்பரா இருக்கீங்க.. செம சேரி உங்களுக்கு செமயா இருக்கு” என்றாள் அவள் கையைப் பிடித்து..
சைந்தவி, சாரு இருவரும் அதே மாதிரி சொல்ல..
“தேங்க்ஸ்” என்றாள் ஸனா சிறிது வெட்கத்தோடு.
அதியன் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான்..
பாரி”ப்ரோ! பாருங்க இந்த பொண்ணுங்களை புடவை, நகை, மேக் அப், அழகுனா ஓடிப்போயிடுதுங்க நல்ல வேளை தாத்தா இல்லை.” என்றவன் எழுந்து சென்று.. “அண்ணி! இந்த கெட் அப்பில் சூப்பரா இருக்கீங்க” என்றான்.
அதியன் அவனை பார்த்து லுக் விட, ஹிஹிஹி என்று சிரித்தான் அவனோ..
மல்லி”ஏய்! என்ன பண்றீங்க, தாத்தா சொன்னது நினைவு இல்லையா அவ கூடப் பேசக் கூடாதுனு சொன்னாங்கள..” என்றார் கோபமாக.
“அம்மா!” என்று சங்கவி இழுக்க,
“இப்ப என்ன சின்னப் பிள்ளைங்க தானே அவங்களை எல்லாம் பெரியவங்க பிரச்சனையில் சேக்காத” என்றார் பாட்டி.
“கிளம்பிட்டியா….?” என்றார் பாட்டி.
“ஆ! பாட்டி, போயிட்டு வரேன்..” என்றவளிடம், “இது எதுக்கான காஸ்ட்யூம் அண்ணி” என்றாள் சைந்தவி.