Advertisement

வீட்டிற்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றவன் புன்னகையுடன், “வெல்கம் மை டியர் ரௌடி பேபி” என்று கூறி சிரம் தாழ்த்தினான்.

அவள் புன்னகையுடன் வலது காலை உள்ளே வைத்து நுழைந்தாள்.

உள்ளே வந்ததும் ஜன்னலை கண்டவள் அன்றைய நினைவில் அவனை பார்த்தாள். அவனும் அதே நினைவுடன் அவளைப் பார்த்தான்.

சில நொடிகள் இருவர் விழிகள் மட்டும் காதல் பேசியது.

பின், “போட்டோவை அனுப்பி ஐ லவ் யூ னு சொல்லியிருக்க.. இன்னைக்கு தான் உன் வாட்ஸ்-அப் மெசேஜ் எல்லாம் பார்த்தேன்.. அந்த போட்டோ ரொம்ப அழகா இருக்குதுல!!!” என்றாள்.

(அன்று நந்தகுமார் ஜன்னல் அருகே இருவரையும் எடுத்த புகைப்படத்தை புலனத்தில் அனுப்பி தன் காதலை சொல்லி இருந்தான்)

அவனோ காதல் கலந்த சிறு தாபத்துடன் நெருங்கி அவளது இடையை வளைத்தபடி, “கொஞ்ச நேரம் ரிஷிகேஷா இல்லாமல் உன்னோட ரிஷியா இருக்கவா?” என்று கிசுகிசுப்பான குரலில் வினவினான்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க அவனை விழிவிரித்து நோக்கினாள்.

“ஐ லவ் யூ தியா” என்றவன் அவளது இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்திருந்தான்.

அவள் மூச்சு காற்றுக்கு திணறியபோது இதழை பிரித்தவன், “சாரிடி.. உன்னை கஷ்டபடுத்திட்டேன்” என்று வருந்திய குரலில் கூறினான். 

“இல்லையே என் உதட்டை நீ கடிக்கவே இல்லையே!” 

அவளை முறைக்க முயற்சித்து தோற்றவன் மென்னகையுடன் அவள் நெற்றியை முட்டி, “நான் எதை சொன்னால் நீ எதை சொல்ற!” என்றான்.

“நீ லூசுத்தனம் செய்தால், நானும் அப்படி செய்ய முடியுமா?” 

இப்பொழுது அவன் செல்லமாக முறைக்க,

“பின்ன! காதலை சொல்லிட்டு சாரி சொன்ன ஒரே ஆள், நீயா தான் இருப்ப!” என்றாள். 

“காதலை சொன்னதுக்கும் சாரி சொன்னதுக்கும் நடுவே வேறு எதையும் செய்யலையா!” என்று விஷமத்துடன் கேட்டவனின் கை அவளது இடையை லேசாக அழுத்தியது.

அவன் கையை பிரிக்க முயற்சித்தபடி, “கேடி.. பேச தானே கூட்டிட்டு வந்த” என்றாள். 

“ஏன் பேச மட்டும் தான் செய்யனுமா?” என்றவனின் பிடி இன்னும் இறுகியது.

பலம் கொண்டு அவன் கையை பிரித்தவள், “கல்யாணம் வரை நீ ரிஷிகேஷ்ஷாவே இரு” என்று கூறி சோபாவில் அமர்ந்தாள்.

கதவை மூடிவிட்டு அவள் அருகே அமர்ந்தவன் அவள் கையை பற்றியபடி பேச வாய் திறக்க,

அவள், “பழசை விடுடா.. நீ ஏன் உன் மனதை மறைத்தனு தான் சொல்லிட்டியே! அதையே ஏன் பேசணும்?” என்றாள். 

“ஹ்ம்ம்.. ஆனா என் மனதை அடக்க எவ்ளோ பாடுபட்டேன் தெரியுமா! நீ என்கிட்ட பேசும் போது சிரிக்கும் உன் கண்களை பார்க்கும் போது, கிளாஸ்ஸில் என்னை சைட் அடிக்கும் போது, கண் சிமிட்டிய போதுனு பல இருக்குது.. அதுவும் அன்னைக்கு லேப்பில் உன் மனதை அழகா சொல்லி நீ ப்ரபோஸ் பண்ணப்ப எனக்கு வார்த்தையே வரலை.. உன் காதலை வேணாம்னு சொல்ற என் அனாதரவான நிலைமையை அன்னைக்கு நான் அறவே வெறுத்தேன்..” என்றவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான்.

அவள் தாய்மையுடன் அவன் தலையை கோதிவிட, “எனக்கு ஒரு தாயா, தோழியா, காதலியா, மனைவியா கடைசி வரைக்கும் நீ வேணும்டி” என்றவனது குரல் கரகரத்தது.

அவனது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவள், “நிச்சயமா இருப்பேன்டா.. நான் உன்னுடைய தியா தான்” என்றாள்.

அவளது கையை நெஞ்சில் வைத்து பிடித்துக் கொண்டவன் கண்களை மூடி அமைதியாக இருந்தான்.

சில நொடிகள் கழிந்தும் அவன் கண் விழிக்க வில்லை என்றதும் தலையை கோதியபடி அவள், “என்னடா?” என்று பரிவுடன் கேட்டாள்.

கண்களை திறந்தவன், “என்னால் இன்னும் கூட நம்ப முடியலைடா..” என்றவன் அவள் கன்னத்தை லேசாக பற்றி, “இந்த பொக்கிஷம் எனக்கே எனக்கானு நம்பத் தான் முடியலை” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட்டு, 

“சின்ன வயசில், விவரம் தெரிவதற்கு முன்னாடி அன்பிற்கு ஏங்கி இருக்கிறேன்.. பொருட்கள் மீது கூட ஆசை பட்டு ஏங்கி இருக்கிறேன் ஆனா விவரம் தெரிந்து நான் ஆசைப்பட்டு ஏங்கிய ஒரே விஷயம் உன் அன்பிற்கும் காதலுக்கும் தான்” என்றான். 

“நீ நினைப்பது போல் நான் பொக்கிஷம்லாம் இல்லைடா” 

“நீ விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம்டி.. உறவுகளை விலக்கிய நீ உன் மொத்த அன்பையும் காதலையும் எனக்கு தானே தர நினைக்கிற!” 

“நீ மட்டும் என்னவாம்!” 

“நீயும் நானும் ஒன்னா! எனக்கு தான் அன்பை காட்ட யாரும் இல்லையே” 

அவன் வாயின் மீது ஒரு அடி போட்டவள், “உனக்கு தான் நான் இருக்கிறேனே!” என்றாள். 

“முன்னாடி இருந்த நிலவரத்தை சொன்னேன்டி” 

“ஹ்ம்ம்.. நான் உன் காதலை பொய்னு சொல்லலைடா” என்று வருத்ததுடன் சொன்னவள், “யாரும் வேணாம்னு விலகிய நான், என்னை எனக்காகவே விரும்பி காதலை சொல்லி அன்பு மழை பொழியும் ஒருத்தன் வேணும்னு நினைத்திருந்தேன்.. என்னை போல் நீயும் என்னைப் பற்றி அறியும் முன் காதலை சொல்லணும் நினைத்தேன்..

நீ அவரிடம் பேசியது, அவர் என்னைப் பற்றி சொன்னதுனு எனக்கு பழையதை வேற கிளறி விட்டிருச்சு.. நீயும் எனக்கே எனக்குனு இல்லையோனு தவிச்சேன்..” என்றபோது அவளது குரலும் கண்களும் கலங்கிவிட அவன் சட்டென்று எழுந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவன், “ரொம்ப சாரிடா.. நான்………” என்று ஆரம்பிக்க, 

அவன் வாயை மூடியவள், “அதான் அன்னைக்கே சொல்லிட்டியே.. விடு.. உன் நிலையை நீ சொன்ன மாதிரி என்னோட நிலையை உனக்கு சொன்னேன்.. அவ்ளோ தான்.. விடு..” என்றாள். 

“ஹ்ம்ம்.. ஒரு வாரம் எதுக்கு என்னை தவிக்கவிட்ட!” 

“ஏன் உனக்கு தெரியாதா?” 

“முதலில் என் மனதை மறைத்ததிற்கா!!!” 

“ஹ்ம்ம்.. ஐயோ பாவம்னு அஞ்சு நாள் மட்டும் தவிக்க விட்டேன்” 

லேசாக சிரித்தபடி, “உங்கள் பெரிய மனசுக்கு ரொம்ப நன்றி மேடம்” என்றவன், “பவியும் விஜயும் பாவம்.. பவி வீட்டிற்கு வந்து சண்டை போட்டா தெரியுமா!” என்றான். 

“பார் டா! என் கிட்ட சொல்லவே இல்லை” 

“நீ கொடுத்த தண்டனைக்கு பிறகு என் பெயரை கூட சொல்லும் தைரியம் அவளுக்கு வந்திருக்காது” 

“எனக்காக தான் பண்ணாங்க பட் எனக்குனு இருக்கிற உறவு, நம்பிக்கை எல்லாம் அவங்க மட்டும் தானே.. முறைக்காதடா, நானும் அப்போ இருந்த நிலவரத்தை தான் சொல்றேன்.. அவங்க என் கூட தானே நின்னிருக்கணும்!

விஜய் எப்போதுமே என் நலனை கருதி எனக்கு பிடிக்கலைனாலும் சிலதை செய்வான் ஸோ அவன் மேல் கூட பெருசா கோபமோ வருத்தமோ இல்லை.. ஆனா பவி இப்படி செய்வானு நான் நினைக்கலைடா..

நடுல வீக்-எண்டு வந்ததால் தான் மூணு நாள் அவளுடன் பேசாத மாதிரி ஆகிருச்சு இல்லைனா ஒரே ஒரு நாள் தான் அவ பக்கத்திலேயே இருந்துட்டே விலகி இருக்கணும் நினைத்தேன்.. டுயுஸ்டே போனதும் பேசிட்டேன்.. உன் கிட்டயாவது வாயால் தான் சண்டை போட்டா.. நான் பேசியதும் எனக்கு செம்ம அடி” 

“பவியும் விஜயும் கிடைத்ததில் நீ ரொம்ப லக்கி” 

“உனக்கு ஜந்துவும் சாரி நந்துவும் கருத்து கந்தசாமியும் கிடைத்தது போல்” 

“ஹ்ம்ம்..” என்றவன், “காதலை சொன்னது வேணா நான் இரண்டாவதா இருக்கலாம் ஆனால் முதலில் காதலித்தது நான் தான்” 

அவள் இன்ப அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவன் மென்னகையுடன், “இங்கே நீ கிரிகெட் விளையாடிய போது ஸ்க்ரீன் பின்னாடி இருந்து பார்த்தது நான் தான்..” என்றான். 

“ப்ராடு” 

“தியேட்டரில் நீ அந்த மாமாவை கலாட்டா பண்ணது.. என்னிடம் நேர்கொண்ட பார்வையுடன் திடமா பேசியதுனு, எல்லாத்தையுமே ரசிச்சேன்.. அப்புறம் உன்னை இங்கே பார்த்தேன்.. கோவிலில் நீ விக்கி அக்கா கிட்ட பேசியது எனக்கு ரொம்ப பிடிச்சுது ஆனா அப்போ காதல்லாம் இல்லை.. அப்புறம் என்னையும் அறியாம என் மனசுக்குள் நீ புகுந்துட்ட” 

“அடபாவி.. லவ் பண்ணவளை கொஞ்சம் கூட யோசிக்காம எல்லோர் முன்னாடியும் அடிச்சு இருக்க” 

“அது அப்போ எனக்கு என் மனசு தெரியாதே.. இருந்தாலும் நீ பண்ணது தப்பு தானே” 

“நீ பண்ணது அதை விட பெரிய தப்பு” 

“சாரிடி” என்றவன் அவள் வலது கன்னத்தில் முத்தமிட்டான்.

“நீ அடிச்சது லெப்ட் கன்னம்”

“அங்கேயும் கொடுத்துட்டா போச்சு” என்றபடி முத்தமிட வர, அவனை தள்ளி விட்டவள், “ஒண்ணும் வேணாம், போ” என்றாள்.

“என் செல்ல குட்டிக்கு கோபம் போக இன்னொரு விஷயம் சொல்லவா?” 

அவள் அமைதியாக இருக்க, அவன், “உன்னைப் பற்றி சேர்மன் சார் சொன்னதும், அவரிடம் பொண்ணு கேட்டேன் தெரியுமா?” என்று அவன் பெருமையுடன் கூற,

அவளோ எழுந்து நின்று இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைத்தாள்.

அவன், “என்ன பேபி?” 

“ஸோ உன் காதலை என் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி, ஊரில் இருக்க எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கிற! என்ன பார்க்கிற! அரவிந்த் சாருக்கும் நந்துக்கும் என்னிடம் சொல்றதுக்கு முன்னாடியே தெரியும் தானே!” 

அவன் ஆம் என்று பாவம் போல் தலையை ஆட்ட, அவள் இன்னும் அதிகமாக முறைத்தாள்.

“ஹே குட்டிமா அப்படி இல்லைடி” என்றபடி அவளை அமர வைத்தவன், “என் செல்ல குட்டி.. புஜ்ஜு குட்டி..” என்று பலவாறு கொஞ்சி கெஞ்சி அவளை மலை இறக்கினான். 

அதன் பிறகு இருவரும் பொதுவான விஷயங்களில் தங்களின் ஈடுபாடு, விருப்பு வெறுப்புகளை பற்றி பேசினர். 

ஹரீஷ், “உனக்கு மேலே படிக்கனுமா இல்லை வேலைக்கு போகணும் நினைக்கிறியா?” என்று கேட்டான். 

“வேலைக்கு போறேன்.. நான் பைனல் இயர் முடிச்சதும் கல்யாணம் செய்துக்கலாமா?” 

அவள் நெற்றியை காதலுடன் முட்டியவன், “செய்துக்கலாமே” என்றான்.

அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும், அவள், “இந்த நேரத்தில் யாரு?” 

“பூஜை வேளை கரடியா?” 

“அப்படி சொல்லலை.. நாம இங்கே இருக்கிறது தெரியாதேனு கேட்டேன்” 

“லன்ச் வந்திருக்கும்..” 

“சூப்பர் டா.. வாங்கிட்டு வா.. என்ன பார்க்கிற! உன் கிட்ட பேசிட்டு இருந்தால் பசியே தெரியலைனு வசனமெல்லாம் பேச முடியாது.. உன் கிட்ட பேசி பேசி செம்ம பசி வந்திருச்சு” என்றாள். 

அவன் மென்னகையுடன் எழுந்து சென்று உணவை வாங்கி வந்து மேசையில் வைத்தான்.

இருவரும் உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு கிளம்பி கல்லூரிக்கு சென்றனர்.

Advertisement