Advertisement

தே நேரத்தில் வகுப்பில் திவ்யா மேல் காகித தூள்களை தூவி “ஹே” என்று கத்தி கொண்டாடிக் கொண்டிருந்தனர் அவளது நண்பர்கள்.

திவ்யா, “போதுமடா.. விடுங்க” 

புன்னகையுடன் தன் அருகில் நின்றிருந்த பவித்ராவை பார்த்து திவ்யா புருவம் உயர்த்த, அவள், “இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது” என்றாள். 

அதை கேட்டு திவ்யா முகத்தில் அமைதியான புன்னகை.

நண்பர்களில் ஒருவன், “திவி ட்ரீட்” என்று கேட்டான். 

“இதெல்லாம் பெரிய சாதனையாடா?” 

நண்பர்கள் அவளை முறைக்க, அவள் புன்னகையுடன், “ஓகே.. ஓகே.. தரேன்” என்றதும் மீண்டும் “ஹே” என்று கத்தினர்.

வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்து ஆசிரியர் மணிமேகலை வகுப்பினுள் வரவும் அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

 

பவித்ரா, “உன் மனசில் என்ன ஓடுது?” என்று வினவினாள். 

“என்னடி?” 

“நீ சந்தோஷமா இருந்தாலும் ஏதோ ஒண்ணு உன் மனசை அரித்துக் கொண்டு இருக்குது” 

“லூசு.. அப்படிலாம் இல்லை” 

ஒரு நொடி அவளை ஆழ்ந்து நோக்கிய பவித்ரா, “சரி.. உனக்கு எப்போ சொல்லணும் தோணுதோ அப்போ சொல்லு” என்றாள். 

“பவி………..” 

“விடு.. இப்போ சந்தோஷமானதைப் பற்றி பேசலாம்” 

“என்ன பேசணும்?” 

“எப்படி இப்படி? ஹரி சார் சொன்னாருனா!” 

“அவன் மேல் லவ் வந்தது அவனை இங்கே பார்த்த பிறகு தானே!” 

“ஆமா” 

“எக்ஸாம் எழுதி முடிச்சது எப்போ? அவனை இங்கே பார்த்தது எப்போ?” 

“ஹி..ஹி..ஹி” என்று அசடு வழிந்த பவித்ரா, “ஆமால, அவர் இங்கே வரதுக்கு முன்னாடியே எக்ஸாம் எழுதி முடிச்சுட்டோமே!” என்றாள்.

“போதும்.. ரொம்ப இளிக்காதே!” என்ற திவ்யா, “இவ்ளோ நாள் பண்ணது அந்த ஆளை டென்ஷன் பண்ண(அவளது கட்டுப்பாட்டையும் மீறி குரல் இறுகியது).. இது எனக்காக..” என்றாள். 

அவளது இறுக்கத்தை எப்பொழுதும் போல் உள்ளதாக எடுத்துக் கொண்ட பவித்ரா அதை கண்டுக் கொள்ளாமல், “இத்தனை நாள் உனக்காக தானே நான் சொன்னேன்” என்றாள். 

“ஹ்ம்ம்.. என்ன சொன்ன?” 

“என்னாச்சுடி?” 

சட்டென்று முழுவதுமாக சுதாரித்த திவ்யா, “சொல்லுடி என்ன கேட்ட?” என்று வினவினாள்.

தோழியை பற்றி அறிந்த பவித்ரா வேறு கேட்காமல் மீண்டும் அதையே கூறினாள்.

திவ்யா, “இனி தானே கேம்பஸ் இண்டர்வியு வரும்” 

“இதை முன்னாடியே சொல்லி இருந்தா, நான் கவலை இல்லாம இருந்து இருப்பேனே!” 

திவ்யா மெல்லிய புன்னகையுடன், “உனக்கு டென்ஷன் ஆகுறதுக்கு காரணமா இல்லை..” என்றாள். 

“போடி” 

“எங்கே! என் ரிஷி கிட்டயா?” 

“எங்கே சுத்தினாலும் சார் கிட்டேயே வந்து நில்லு” 

“பின்ன!” 

“சரி.. சார் என்ன சொன்னார்?” 

“அவன் வாயில் இருந்து முத்து உதிர்ந்திட்டாலும்!” 

அப்பொழுது மணிமேகலை, “திவ்யா” என்று அழைக்கவும் அவள் எழுந்து நின்றாள்.

அவர், “கங்ரட்ஸ்” என்றார்.

“தன்க்யூ மேம்” என்று கூறி அமர்ந்தாள்.

அதன் பிறகு அவர் பாடத்தை ஆரம்பித்தார். அடுத்து வந்த தங்ககுமாரும் அவளை வாழ்த்திவிட்டே பாடத்தை ஆரம்பித்தார்.

தேநீர் இடைவேளையில் ராஜாராம் அவளை அழைத்ததாக பியூன் வந்து கூறவும் அவரை பார்க்கச் சென்றாள்.

 

அவள் உள்ளே சென்றதும் ரோஜா இதழ்களை தூவி வரவேற்ற ஜனனி மகிழ்ச்சியுடன் அவளை அணைத்து, “சூப்பர் கா.. கலக்கிட்ட.. கங்ராட்ஸ்” என்று கூறி அவளை விடுவித்து கையை நீட்டினாள்.

செய்வதறியாது திகைத்த திவ்யா வெளியே அதை காட்டிக் கொள்ளாது அமைதியாக நின்றாள். ஏற்கனவே ஜனனியின் அன்பில் இளக தொடங்கியிருந்த திவ்யாவின் மனமோ நேற்று புதிதாக அறிந்துக் கொண்ட விஷயத்திற்கு பிறகு அவர்கள் பக்கம் யோசிக்க விழைந்தது இருந்தாலும் பிடிவாதத்துடன் மனதை இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஜனனியோ புன்னகையுடன் திவ்யாவின் கையைப் பற்றி மீண்டும், கங்ராட்ஸ்” என்றாள்.

திவ்யா மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.

ஜனனி துள்ளி குதித்து ராஜாராம் அருகே சென்று சிரிப்புடன், “அப்பா அக்கா என்னிடம் சிரிச்சு சாதாரணமா பேசிட்டா” என்றபோது அவளது இமையோரம் ஆனந்த கண்ணீர் வடிந்தது.

ஜனனியின் தூய அன்பில் திவ்யாவின் மனம் நெகிழ்ந்து கரையத் தொடங்கியது. ஜனனியின் அன்பு அவளது காயத்தை மயிலிறகால் வருடியது போல் இருந்தது. சில நொடிகள் தங்கையை பாசத்துடன் பார்த்தவள் பின் சுதாரித்து, “கூப்டீங்களா சார்?” என்றாள்.

ராஜாராம், கங்ராட்ஸ் திவிமா.. ரொம்ப சந்தோஷம்” 

“தேங்க்ஸ் சார்” 

“ஏதாவது கிப்ட் கேளுடா” 

“ஒரு சேர்மன்னா உங்க ஸ்டுடென்ட்க்கு நீங்க கொடுத்தால் நான் வாங்கிப்பேன் சார்” 

“திவிமா…………….” 

“முன்பே கேட்டிருக்கிறேன்.. எல்லா ஸ்டுடென்ட்ஸ்-சையும் நீங்க இப்படி தான் பாசமா கூப்பிடுவீங்களா?” என்றபோது முன்பிருந்த கோபம் அவள் குரலில் இல்லை. 

“மற்றவர்களும் நீயும் ஒன்றல்ல” 

“என்னை பொறுத்தவரை ஒன்று தான்” 

ஜனனி, “சரி.. நான் கொடுத்தால் வாங்கிப்பியா?” 

“நீ எப்போதிருந்து சம்பாதிக்கிற?” 

“அப்போ நான் சம்பாதித்து வாங்கி தந்தால் வாங்கிப்பியா?” 

அரை நொடி மௌனித்தவள், “நான் அப்படி சொல்லலை” என்றாள். 

ஜனனி புன்னகையுடன், “நல்லா சமாளிக்கிற பட் நான் கொடுக்க நினைத்ததிற்கு பணம் தேவை இல்லை” என்றாள். 

“..” 

“என்ன பார்க்கிற? நான் கொடுக்க நினைக்கிறது அன்பு..” 

முதல் முறையாக பதில் சொல்வதறியாது திவ்யா மௌனமானாள். அது கூட தங்கையின் மனதை காயபடுத்த விரும்பாததால்.

ஜனனி விரிந்த புன்னகையுடன், “அப்போ உனக்கு ஓகே” என்றபடி திவ்யா அருகே வந்து, “இப்போ அஸ் அ டோக்கன் ஆஃப் லவ்” என்று கூறி திவ்யாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு தலை சரித்து கண்ணடித்தாள்.

தன் மனம் முழுவதும் தங்கையிடம் சரிவதை உணர்ந்தவள், “நான் கிளாஸ்க்கு போறேன் சார்” என்று கூறி வேகமாக வெளியேறினாள்.

ஜனனி ராஜாராமை மகிழ்ச்சியுடன் அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “அம் ஸோ ஹப்பி டாடி” என்றாள்.

ராஜாராமும் மகிழ்ச்சியுடன், “திவிமா சீக்கிரம் நம்மளை ஏற்றுக் கொள்வாள்” என்றார். 

“ஆனா அம்மாவை பார்த்தா மட்டும் பத்திரகாளியா மாறிடுறா… அம்மா எவ்ளோ மென்மையானவங்க.. ஹ்ம்ம்.. பார்க்கலாம்” 

“விடுடா.. இந்த நிமிஷ மகிழ்ச்சியை கொண்டாடு” 

“ஹ்ம்ம்.. கண்டிப்பா பா” என்றவள், “நான் அக்காக்கு முத்தம் கொடுத்ததை போட்டோ எடுத்தீங்களா?” 

“இல்லையே டா!” 

ஜனனி முறைக்கவும், அவர், “ஜனா குட்டி.. நானே ஷாக்கில் இருந்தேன்” என்று பயந்தவர் போல் கூறினார்.

“போங்க பா… இப்படி மிஸ் பண்ணிடீன்களே!” என்றவள் பின் கண்கள் ஒளிர, “அப்பா CCTV-யில் ரெகார்ட் ஆகியிருக்குமே!” என்றாள். 

“கரெக்ட் டா” என்று இருவரும் வேகமாக கணினியில் பார்த்தனர். அதில் பதிவாகியிருந்ததை உடனே கைபேசியில் இருவரும் ஏற்றிக் கொண்டனர்.

ராஜாராம், “சரி கிளம்பு.. உன்னை காலேஜ்ஜில் விட்டுட்டு இங்கே திரும்ப வரணும்” 

“இன்னைக்கு கண்டிப்பா போகனுமா பா!” 

ராஜாராம் பார்த்த பார்வையில், “ஓகே.. ஓகே கிளம்பிட்டேன்” என்று கூறி கிளம்பினாள்.

 

 

அன்று மதியம் ஹரீஷ் எடுக்கும் பாடத்தின் ஆய்வு செய்வதற்கான வகுப்பு இருந்தது. எப்பொழுதும் போல் அவன் கூடத்தின் நடுவில் அமர்ந்திருந்தான். திவ்யா ஆய்வின் வெளியீடை(அவுட்-புட்) குறிப்பெடுத்து ஹரீஷிடம் கையெழுத்து வாங்க சென்றாள்.

அவன் திருத்திக் கொண்டிருந்த போது பார்வையை சுழற்றியவள் சட்டென்று அவன் சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்தாள்.

அவன், “ஏய்!” என்று குரலை சற்று குறைத்து கத்தினான்.

முறைப்புடன், “ஒரு வாழ்த்து சொன்னியா?” என்றவள் பின் மெல்லிய புன்னகையுடன், “இது நான் பஸ்ட் வந்ததிற்கு கிப்ட்” என்றாள். 

அவளிடம் குறிப்பெடை நீட்டியவன், “அது அரவிந்த் பென்” என்றான். 

அவள் சந்தேகத்துடன் பார்க்கவும், அவன் புருவம் உயர்த்தினான்.

அவள் எரிச்சலுடன் அந்த பேனாவை மேஜை மீது வைக்கவும் அவன் மென்னகையுடன் அதை எடுத்துக் கொண்டு, “நான் என்ன சொன்னாலும் நம்பிடுவியா?” என்றான். 

முதலில் அவனை முறைத்தவள் பின் அவன் கண்களை பார்த்து தீவிர குரலில், “நிச்சயமா நம்புவேன்” என்றாள்.

இப்பொழுது அவன் அமைதியாக இருக்கவும், அவள் புருவம் உயர்த்தினாள்.

அவன், “பிளேஸ்க்கு போ” 

“ஒரு ஸ்டுடென்ட்டா நினைச்சு கிப்ட் தரக் கூடாதா?” 

“ஸ்டுடென்ட்டா மட்டும் நீ நினைத்தால் தரேன்” 

உதட்டை சுழித்து, “போடா.. நீ ஒன்னும் தர வேணாம்” என்று கூறி குறிப்பெடை பிடுங்கிக் கொண்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்தவள் இவன் பக்கம் திரும்பவில்லை.

ஒருவேளை திரும்பி இருந்தால் ஹரீஷ் முகத்தில் இருந்த ரசனையுடன் கூடிய புன்னகையைப் பார்த்து இருப்பாள்.

 

வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்த போது ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்தான்.

அவனது மேஜை அருகே வந்து நின்றாலும் அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை.

அவளது கோபத்தை ரசித்தவன் மென்னகையுடன் அதே பேனாவை நீட்டினான்.

சட்டென்று கண்கள் ஒளிர நிமிர்ந்தவள் அடுத்த நொடியே பிகு செய்யும் குரலில், “என்னை பொறுத்தவரை நான் உனக்கு ஸ்டுடென்ட் மட்டுமில்லை” என்றாள். 

அவன் மென்னகையுடன், “என்னை பொறுத்தவரை நீ என் ஸ்டுடென்ட் மட்டும் தான்” என்றான். 

அவனது புன்னகையை ரசித்தவள் அவனுக்கு அழகு காட்டிவிட்டு பேனாவை வாங்கிக் கொண்டு சென்றாள்.

இணைய காத்திருப்போம்…

குறிப்பு: அடுத்த பதிவு இன்று மாலை 6.30 மணிக்கு.

Advertisement