Advertisement

விலகல் 21

திவ்யா தன்னை ஹரீஷின் மனைவி என்று சொன்னதில் இருந்து ஹரீஷ் அவளை முற்றிலும் தவிர்த்தான். வகுப்பில் கூட அவள் என்ன செய்தாலும் கண்டுக்கொள்வதில்லை. அவளிடம் கேள்வி கேட்பதையும் நிறுத்தி இருந்தான்.

அவனது விலகலை உணர்ந்தவள் வகுப்பில் சந்தேகம் கேட்டு அவனை பேச வைக்க முயற்சித்தாள்.

முதல் இரண்டு முறை பதில் சொன்னவன் அடுத்த முறை, “நீ வேணும்னே என் நேரத்தை வேஸ்ட் பண்ற.. உண்மையிலேயே சந்தேகம் இருந்தால் ஸ்டாஃப் ரூம் வந்து கேளு” என்று கூறிவிட்டு பாடத்தை தொடர்ந்தான்.

ஆனால் அவள் ஆசிரியர் அறைக்கு சென்றால், அவன் அங்கு இருக்க மாட்டான். அவள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்டு அவள் வரும் முன் எழுந்து வெளியே சென்று விடுவான்.

 

 

ஒரு நாள் மாலை வகுப்புகள் முடிந்த பிறகு அவனை பார்க்க அவள் கணினி ஆய்வகத்திற்கு சென்றபோது அவனுடன் ஆசிரியை ரமாலக்ஷ்மி பேசிக் கொண்டிருந்தார்.

திவ்யா கோபத்துடன் அவனை முறைக்க, அவன், “என்ன?” என்று வினவினான். 

“ப்ரோக்ராம் கம்ப்ளீட் பண்ண வந்தேன்” 

“போய் சிஸ்டம்மில் போடு” 

“அதில் எரர் வந்துட்டே இருக்குது.. நீங்க வந்து பாருங்க” 

ரமாலக்ஷ்மி, “நாங்க கொஞ்சம் முக்கியமானது பேசிட்டு இருக்கிறோம்.. நாளைக்கு வந்து போடு” என்றார். 

அவள் ஹரீஷை முறைத்தாள்.

மணியை பார்த்த ஹரீஷ், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது.. நாளைக்கு மார்னிங் வந்து போடு” என்றான்.

அவள் அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றாள்.

ரமாலக்ஷ்மி, “சேர்மன் சார் ரிலேடிவ்னு ரொம்ப திமிர் சார்.. எப்படி முறைக்கிறா பாருங்க” என்றார். 

“மேடம் நீங்க அபிசியல் விஷயம் மட்டும் பேசினால் நல்லது” 

“சார்.. நான்………..” 

“எனக்கு வேலை இருக்குது.. முக்கியமா எதுவும் இல்லைனா கிளம்புங்க” 

“என்னை இன்சல்ட் பண்றீங்க சார்.. அன்னைக்கும்……………….” 

“நான் டிசென்ட்டா பேசிட்டு இருக்கிறேன்.. ஓபன்னா பேசினா தாங்க மாட்டீங்க” 

“ஏன் சார் இப்படி இருக்கிறீங்க?” 

“நான் இப்படி தான்” 

“உங்களுக்கு புரியலையா?” 

“உங்களுக்கு தான் புரியலை” 

“என்ன புரியலை?” 

“எனக்கு வெட்டியா கடலை போடுறது பிடிக்காது.. என் நேரத்தை வீணடிக்காம கடலை போடும் மாரீஸ்வரன் சாரிடம் போய் பேசுங்க” 

“சார்.. நீங்க அதிகமா பேசுறீங்க” 

“நீங்க பேச வைக்கிறீங்க.. சரி நான் ஓபன்னா சொல்றேன்.. உங்களிடம் எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.. இனி இது போல் வந்து பேசினால் நான் கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியதா இருக்கும்” 

அவர் கோபத்துடன் வெளியேற, இவன் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருக்கையில் அமர்ந்தான். அந்த நிலையிலும் திவ்யாவை நினைத்து, ‘இவ வேற என்ன செய்ய போறாளோ!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.

 

 

 

அதே நேரத்தில் திவ்யா விஜயுடன் ஹரீஷ் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ஹரீஷ் வீட்டிற்கு சென்ற போது, நந்தகுமார் வீட்டில் இருந்தான்.

அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த நந்தகுமார் இவளை பார்த்து மனதினுள் அலறினாலும் வெளியே, “என்ன?” என்று கெத்தாக வினவினான்.

அவன் கையை தட்டி விட்டுவிட்டு உள்ளே சென்று அமர்ந்தவள், “விஜி உள்ளே வா” என்றாள்.

நந்தகுமார், “ஹே! என்ன நீ பாட்டுக்கு வந்து உட்காருற! முதல்ல வெளியே போ” என்றான். 

“ஏற்கனவே ரிஷி மேல் செம்ம கோபத்தில் இருக்கிறேன்.. தேவை இல்லாமல் அந்த கோபத்தை உன் மேல் டைவர்ட் பண்ணிடாத” 

“ரிஷி யாரு?” 

“உன்னுடன் இருக்கானே ஒரு சாமியார் அவன் தான்” 

“ஓ! ஹரியை சொல்றியா?” 

“அந்த நரியே தான்” 

“என்னது நரியா?” 

“அதை விடு.. எனக்கு அவனைப் பற்றி முழு விவரமும் வேணும் சொல்லு” 

“எதுக்கு?” 

“இப்போ சொல்ல முடியுமா முடியாதா?” 

அவன் சந்தேகத்துடன் பார்க்க, அவளோ, “என்ன!” என்று மிரட்டினாள்.

அவன் மனதினுள், ‘சொன்னால் அவன் என்னை கொன்னுடுவானே!’ என்று நினைக்க, 

அவளோ, “சொல்லலைனா நான் உன்னை கொன்னுடுவேன்” என்றாள்.

அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம்.. சொல்லு” என்றாள். 

“உனக்கு ஏன் இந்த கொலைவெறி?” 

“அவனைப் பற்றி சொன்னால் உனக்கு எந்த பாதிப்பும் இருக்காது” 

“நீ எதுக்கு அவனைப் பற்றி கேட்கிற?” 

“நான் அவனை லவ் பண்றேன்” 

“என்னது!!!!!!!!!!!!!” 

“எதுக்கு இவ்ளோ ஷாக்?” 

“அவனை… நீ எப்படி?” 

“ஏன் நான் லவ் பண்ண கூடாதா?” என்று அவள் எழுந்தபடி வினவ,

நந்தகுமார் சிறு பயத்துடன், “இல்லை.. பண்ணலாம்.. பண்ணலாம்” என்றான். 

“ஹ்ம்ம்” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்.

விஜய் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தகுமார், “இது அவனுக்கு தெரியுமா?” என்று கேட்டான். 

“தெரியும்” 

“என்ன.. சொன்னான்?” 

“இப்போ ரிஷி பற்றி சொல்ல முடியுமா முடியாதா?” 

“உனக்கே இது ஓவரா தெரியலையா?” 

“தெரியலை” 

நந்தகுமார் பல்லை கடித்துக் கொண்டு, “அவன் உனக்கு சரி சொன்னது போல் தெரியலை.. இப்போ நான் அவனைப் பற்றி சொன்னால், அவன் என்னை நிஜமாவே கொன்னுடுவான்” என்றான். 

“ஓ! சரி நீ சொல்ல வேண்டாம்.. நான் ஸ்வேதா(கிரிகெட் விளையாடிய விக்னேஷின் அக்கா) கிட்ட பேசிக்கிறேன்” என்றபடி எழுந்தாள். 

“ஹே! ஸ்வேதா கிட்ட என்ன பேசப் போற?” 

“அதை எதுக்கு உன்னிடம் சொல்லணும்?” 

“ஹரி பற்றி சொல்றேன்” 

திவ்யா புன்னகையுடன் அமர்ந்தாள்.

“உனக்கு……….” என்று ஆரம்பித்து நந்தகுமார் தயங்கி நிறுத்தினான்.

திவ்யா புன்னகையுடன், “நீயும் அவளும் லவ் பண்றது தெரியும்.. அவ தான் என் கிட்ட சொன்னா.. உன் மேல் இருந்த பயத்தை போக்கியதே நான் தானே” என்றாள். 

“அதான் தெரியுமே! அன்னைக்கு நீ கோவிலில் பேசிய போது, நான் அங்கே தான் இருந்தேன்” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

வாய்விட்டு சிரித்த திவ்யா, “உன்னை டம்மி பீஸ் ஆக்கலை.. அப்படி சொன்னதால் தான் உன் மேல் இருந்த பயம் அவளுக்கு போனது.. அதனால் தான் அடுத்த நாள் நீ சாரி கேட்டப்ப நின்னு பேசினா.. இல்லை நீ சாரி சொல்ல வந்ததைக் கூட புரிஞ்சுக்காம பயத்தில் நிக்காமல் ஓடி இருப்பா” என்றாள். 

இரண்டு நொடிகள் யோசித்த நந்தகுமார், “ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. தேங்க்ஸ்” என்றான். 

“நீ தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் உனக்கு எதுவும் செய்திடலை.. அவ பயத்தை போக்கினேன், அவ்ளோ தான்.. சரி ரிஷி பற்றி, அவனோட பாமிலி பற்றி சொல்லு” 

“அவன் சின்ன வயசில் இருந்து ஆனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.. செம படிப்ஸ் அவன்.. டுவெல்த் டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்.. நானும் அவனும் ஸ்கூலில் இருந்தே பிரெண்ட்ஸ.. உன் காலேஜ் சேர்மன் நடத்தும் டிரஸ்ட் மூலம் தான் IITயில் பி.இ படித்தான்.. நானும் அவனுடன் அங்கே தான் படித்தேன்.. அவன் காலேஜ் பஸ்ட் ரங்க் ஹோல்டர்..

அப்புறம் வேலை பார்த்துட்டே எம்.இ படித்தான்.. ரெண்டு வருஷம் XXX காலேஜில் வேலை பார்த்துட்டு இப்போ உன் காலேஜில் வேலை பார்க்கிறான்..

அவன் திறமைக்கு IT கம்பெனி பல லட்சத்தில் சம்பளம் கொடுக்க ரெடியா இருந்தும், அவன் லெக்சரர் வேலையை தேர்ந்தெடுத்தான்.. அதுக்கு காரணம் உங்க சேர்மன் என்பது என் கருத்து..

அவனுக்கு உங்க சேர்மன் சாரை ரொம்ப பிடிக்கும்.. அவர் மீது ரொம்ப மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறான்.. பி.இ முடித்ததும் முதல் மாத சம்பளத்தில் அவருக்கு ஒரு செட் டிரஸ் வாங்கி கொடுத்தான்..

அவனுக்கு பிரெண்ட்னா நானும், உங்க அரவிந்த் சாரும் மட்டும் தான்.. எங்களிடம் ஜாலியா பேசுவான் தான் ஆனா பொதுவா யாருடனும் அதிகமா பேச மாட்டான்.. கோபம் வந்தால் லேசில் அவனை சமாதனம் செய்ய முடியாது.. அவன் மனதில் என்ன இருக்குதுனு அவனா சொன்னால் தான் உண்டு, ஆனா அவன் வாயில் இருந்து லேசில் வார்த்தையை வாங்க முடியாது..

இப்போ சொல்லு இவனை எப்படி நீ லவ் பண்ண?” 

“ஏன் அவனுக்கு என்ன குறை?” 

“குறைன்னு நான் எங்கே சொன்னேன்! வந்ததும் நீ சொன்னது போல் அவன் ஒரு சாமியார் தான்” 

“ஹே! உனக்கு இங்கே என்ன வேலை?” என்றபடி ஹரீஷ் உள்ளே வந்தான்.

விஜய் எழுந்துக்கொள்ள இவளோ, “நான் நந்துவை பார்க்க வந்தேன்” என்றாள். 

ஹரீஷ் பல்லை கடித்துக் கொண்டு, “கிளம்பு” என்றான். 

“அதை நந்து சொல்லட்டும்” 

அவன் பார்த்த பார்வையில், நந்தகுமார், “நீ கிளம்பு” என்றான்.

அவள் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி, “நீ ஏன் நந்து இவனுக்கு பயப்படுற?” என்றாள். 

ஹரீஷ் கோபத்துடன், “அடி வாங்காம கிளம்பு” என்று கூற, 

விஜய் திவ்யா அருகே வந்து அவள் கையை பற்றி, “திவி வா.. கிளம்பலாம்” என்றான்.

அவளும் கோபத்துடன் கையை உதறி, “நீ சும்மா இரு விஜி.. எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிந்தாகனும்” என்றாள்.

ஹரீஷ், “என்ன! வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்றியா?” 

“ஓ! என்னை பார்த்தால் உனக்கு பிரச்சனையா தெரியுதா?” 

“…” 

“ஆனா அவளைப் பார்த்தா எப்படி தெரியுது? குளுகுளுனு இருக்குதோ?” 

அவன் கோபத்துடன் அவள் கன்னத்தில் அறைய, அவன் அறைந்த வேகத்தில் அவள் இருக்கையில் விழுந்தாள்.

விஜய், “திவி” என்றபடி அவளை பிடிக்க,

“என்ன பண்ற ஹரி!” என்றபடி நந்தகுமார் ஹரீஷை பிடித்தான்.

நிதானமாக எழுந்த திவ்யா ஹரீஷ் அருகே சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

நந்தகுமார் பெரும் அதிர்ச்சியுடன் நிற்க, விஜய் சிறு அதிர்ச்சியுடன் நிற்க, ஹரீஷ் அமைதியாக நின்றிருந்தான்.

அவள் கோபத்துடன் பேசினாள். “என்ன நினைச்சிட்டு இருக்க? சும்மா சும்மா அடிச்சிட்டு இருக்க? என்னை அடிக்க உனக்கு யார் உரிமை கொடுத்தது?” என்று வினவினாள். 

“யாரு கொடுக்கணும்?” 

“யாரு கொடுக்கணுமா? அப்போ நீ என்ன என் கணவனா?” 

“இப்படி பேசி பேசி தான் அடி வாங்குற” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான். 

“என்னை பொறுத்தவரை நீ என் கணவன் தான் ஆனா கணவனாவே இருந்தாலும் சட்டு சட்டுன்னு கையை நீட்டுறது தப்பு தான்” 

“நீ நினைப்பதற்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை.. என்னை பொறுத்தவரை நீ என் ஸ்டுடென்ட் மட்டும் தான்” 

“ஓ!” என்று அவனை ஆழ்ந்து நோக்கியவள், பின் நிதானமான குரலில், “அடுத்த வீட்டு பெண்ணை இப்படி தான் அடிப்பியா? இத்தோட மூணாவது முறை” என்றாள். 

“நீ அப்படி நடந்துக்கிற” 

“அப்படி என்ன நடந்துக் கிட்டேன்? பேச்சு பேச்சா இருக்கணும்.. சும்மா கை நீட்டுற வேலையை வச்சிக்காத.. மீறி கை நீட்டின, நானும் இப்படி தான் நீட்டுவேன்” 

“..” 

“என்ன பதிலை காணும்” 

ஹரீஷ் எங்கோ பார்த்தபடி, “இனி அடிக்க மாட்டேன்” என்றான். 

“அதை என் முகத்தை பார்த்தும் சொல்லலாம்” 

“எங்க பார்த்து சொன்னா என்ன? உனக்கு வேண்டிய பதிலை சொல்லிட்டேன்.. கிளம்பு” என்றவனது பார்வை இப்பொழுதும் அவளிடம் இல்லை. 

“சரி காபி போட்டு கொடு.. குடிச்சிட்டு கிளம்புறேன்” என்று சிறு புன்னகையுடன் கூறினாள்.

அவன் பதில் கூறாமல் சமையலறைக்கு சென்றான்.

விஜய் நந்தகுமாரிடம், “இங்கே என்ன பாஸ் நடக்குது?” என்று முணுமுணுத்தான்.

நந்தகுமாரும், “ஒரு நிமிஷம் முன்னாடி வரை எலியும் பூனையுமா சண்டை போட்ட ஆட்களா இதுங்க!!!” என்றான். 

“இதில் யாரு எலி, யாரு பூனை பாஸ்?” 

“ரொம்ப முக்கியம்!” என்று நந்தகுமார் முறைக்க, விஜய் பல்லை காட்டி சிரித்தான்.

Advertisement