யுகம் சுகம் தானே 18

“வள்ளி.. நான் மருமக வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன், உதய் அப்பா  மதிய சாப்பாட்டுக்கு வரதுக்குள்ள வந்துடுவேன் தான் நினைக்கிறேன், அப்படி லேட் ஆனா பார்த்துக்கோ..”  கண்ணம்மா சொல்லி கொண்டு வெளியே வர, ட்ரைவர் தயாராக நின்றிருந்தார்

இவர் ஏறவும் கார் ஷா வீட்டுக்கு சென்றது. முன்னமே போன் செய்து ராமிடம் பேசிவிட்டிருந்தார் இப்படி நான் வருகிறேன் என்று. வாரத்துக்கு ஓரிரு முறை இப்படி  சென்று ராமை பார்த்து வருவது அவர் வழக்கம் தான் என்பதால்   கண்ணம்மா வருவது அப்பா, மகளுக்கு வித்தியாசமாக தெரியவில்லை.

இவர் அங்கு சென்று சேரும் போது ஷா அவரை வாசலிலே எதிர்கொண்டாள். “வாங்கத்தை..”  உள்ளே அழைத்து செல்ல, ராமும் கண்ணம்மாவை வரவேற்று அமர வைத்தார். ஜோதி அவரை நலம் விசாரித்து உபசரிக்க, மறுக்காமல் எடுத்து கொண்டார். ராமின் உடல் நிலை, உதய் பயணம் என்று சில நிமிடங்கள் பொதுவான பேச்சு ஓடியது

“அனிதா பேமிலி அவங்க வீட்ல இருந்து எப்போ வராங்க..?” ராம் கேட்க

நாளை வந்துடுவாண்ணா, அடுத்த வாரம் திரும்ப லண்டன் கிளம்புவா..? அதுக்குள்ள குல தெய்வ கோவிலுக்கு பொங்கல் வச்சுடலாம்ன்னா உதய் வேலை இருக்கு, பார்த்து சொல்றேன் சொல்லிட்டான்..” என்றார் கண்ணம்மா

ஓஹ்.. பேசி பாருங்க, அனிதா இருக்கும் போதே வச்சா அவங்களும் கோவிலுக்கு வருவாங்க இல்லை..”  ராம் சொல்ல

ம்ம்..  இன்னும் இரண்டு நாள்ல கோவில்ல பூஜை இருக்கு, அதுக்கு போனா நல்லா இருக்கும், உதய்கிட்ட பேசணும், அப்படி அவன் ஓகே சொல்லிட்டா உனக்கு ஓகே தானே பவ்யா.. வேலை எதுவும் இருக்கா..?” மருமகளிடம்   கேட்டார்

ஹான்.. வரேன்த்தை..” பவ்யா கொஞ்சம் திணறி தான் சொன்னாள். அவளுக்கு தெரியும் அவர்களின் கோவில் இருப்பது திருநெல்வேலி பக்கம் என்று. எப்படியும் இரண்டு நாட்களாவது ஆகும். அதுவரை ராம் எப்படி தனியா இருப்பார் என்ற கவலை அவளுக்கு

 

என்ன பவ்யா..? உனக்கு ஓகே தானே..?”  கண்ணம்மா  அவளின் முகம் கண்டு திரும்ப கேட்டார்.  ஒருவேளை அவளின் மாதாந்திர பிரச்சனை பற்றி யோசிக்கிறாளா என்று

ஓகே தான் அத்தை..”  பவ்யா சொல்ல, அவளின் முகம் அப்படியே தான் இருந்தது. கண்ணம்மா மருமகளை யோசனையுடன் பார்த்தார்.

அவன் சொன்னது போல ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா..? நேத்து கூட உதய் பவ்யா போனை எடுக்கல தானே..? ஏதோ போகுது போல் ரெண்டு பேருக்குள்ளும்,

கண்ணம்மாவிற்கு  கோவிலுக்கு செல்லும் எண்ணம் வலுத்தது. இவர்களும் கோவில் சென்று பொங்கல் வைத்தது போல இருக்கும், மகனும், மருமகளும் சேர்ந்து நேரம் செலவிட வழியும் கிடைக்கும்

எப்போ பாரு ஆளுக்கொரு பக்கம் ஆபிஸ், வேலைன்னு ஓடிட்டே  இருக்காங்க, ஹனி மூன் கூட போல, இப்படியாவது வரட்டும்..”  உள்ளுக்குள் முடிவே எடுத்து கொண்டார்

என்ன உதய் குதிப்பான்.. பார்த்துப்போம்..” கொஞ்சம் தெளிந்தது முகம்.   

என்ன ஆச்சும்மா..?”  ராம் கவனித்து கேட்க

ஒன்னுமில்லைண்ணா.. உதய் அப்பா லஞ்சுக்கு வந்துடுவார் அதை யோசிச்சேன்..” என்றவர்,  “அப்போ உனக்கு ஓகே தானே..?  உதய் வந்ததும் கிளம்புற மாதிரி இருக்கும், அவன் எப்போ வரான்னு உன்கிட்ட ஏதும் சொன்னானா..? மருமகளிடம் கேட்டார்

ஹான்.. வேலை பொறுத்து போல வருவார்ன்னு  நினைக்கிறேன் அத்தை..” என்றாள் கொஞ்சம் திணறி. அவளுக்கு தான்  தெரியாதே

கண்ணம்மா முகம் திரும்பவும் வாடி போனதுஅவரிடம் சொல்லியிருந்தான் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்று. அதையே மனைவியிடம் சொல்லியிருக்க மாட்டானா என்ன..? 

சரி.. உதய் எனக்கு எப்போவும் நைட் தான் போன் பண்ணுவான், நீ ஒன்னு செய், லன்ச் டைம்ல அவன்கிட்ட விசாரிச்சு சொல்லு ஏற்பாடு ஆரம்பிக்கணும்அவன் வந்ததும் கிளம்பிறது போல பார்த்துக்கலாம்..” என்றவர் எழுந்துவிட்டார் கிளம்புவதற்காக

இரும்மா.. சாப்பிட்டு போலாம்..”  ராம் சொல்ல

இருக்கட்டும்ண்ணா.. இன்னொரு நாள் வரேன், உதய் அப்பா வந்துடுவார், உடம்பை பார்த்துக்கோங்கண்ணா, பவ்யா நான் கிளம்புறேன், உதய்கிட்ட கேட்டு சீக்கிரம் சொல்லு..”   திரும்பவும் அழுத்தி சொல்லியே கிளம்பினார். 

“அத்தைக்கு எங்க சண்டை தெரிஞ்சிருக்குமா..?” கண்ணம்மாவின் பேச்சில் ஷாக்கு இது தான் தோன்றியது. கண்டிப்பா இவர் சொல்லியிருக்க மாட்டார், அப்பறம் என்ன..? முதல்ல இவர்கிட்ட பேசி அத்தைக்கு சொல்லிடுவோம்  நேரம் பார்த்தவள்,   “பேசணும்..”  என்று முதலில் மெசேஜ் அனுப்பினாள்

உதய்  பார்த்துவிட்டான் ஆனால் பதில் இல்லை. மேலும் சில நிமிடங்கள் பொறுத்தவள், திரும்பவும் ஒரு மெசேஜ் ப்ரீ இருக்கும் போது கூப்பிட சொல்லி. அதற்கும் பார்த்தும் பதில் இல்லை. கண்ணம்மா அவளுக்கு அழைத்துவிட்டார்

இப்போ என்ன சொல்ல..? எடுக்காமல் விட்டுடலாமா..? என்ன நினைப்பாங்க..?”  அழைப்பை ஏற்றுவிட்டவள், “மெசேஜ் போட்டிருக்கேன் அத்தை அவரே ப்ரீ ஆனதுக்கு அப்பறம் கூப்பிடுவார்..” என்றாள்

சரி பவ்யா..”  வைத்துவிட, ஷா அவளே அழைத்துவிட்டாள் கணவனுக்கு. முதல் ரிங் சென்று எடுக்கவில்லை. பத்து நிமிடம் பொறுத்து திரும்பவும் கூப்பிட, கடைசி ரிங்கில் எடுத்தவன்

ஏய்.. பவிகுட்டி  நானே உன்னை  கூப்பிட தான் வெளியே வந்தேன், கெஸ் வாட்.. வந்த விஷயம் சக்ஸஸ்.. எஸ் வீ காட் ப்ராஜெக்ட்..  ப்ராஜெக்ட் நமக்கு கிடைச்சாச்சு..” என்றான் மிகவும் சந்தோஷமாக

முதல் முறையாக அவனின் வெற்றியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி. மனைவி மேல் கொண்டிருந்த கோவமும் அந்த நிமிடம் மறைந்து தான் போனது அவனுக்கு. ஆனால் அவனின் மனைவிக்கோ  கணவனின்  மகிழ்ச்சி  எட்டவில்லை போல

ஓகே.. ஓகே, அத்தை வந்திருந்தாங்க, குலதெய்வ கோவிலுக்கு போகணும்ன்னு கேட்டாங்க..”  அவன் சொன்னதை கண்டு கொள்ளாமல் இதை கேட்க, உதய்க்கு அப்படியே மொத்த சந்தோஷமும் வடிந்து போனது

“அவளுக்கு இது பெரிய விஷயம் இல்லை தான், ஆனால் எனக்கு..? இந்த ப்ராஜெக்டிற்காக எவ்வளவு உழைத்திருக்கேன்..”  மனைவியின் மகிழ்ச்சியை, வாழ்த்தை  எதிர்பார்த்து ஏமாந்து போனான்

எப்போ வரீங்க..? அத்தைகிட்ட என்ன சொல்லட்டும்..?” ஷா திரும்பவும் கேட்க

நாளைக்கு நைட் வந்துடுவேன்..” என்றான்

ஓகேங்க.. அப்போ அத்தைகிட்ட சொல்லிடுறேன்..” ஷா சொல்ல

பை..”  உதய் வைத்துவிட்டான். மேலும் பேசினால் கோவப்பட்டு விடுவோம் என்று புரிந்தது.

அப்போது தான் ரிசல்ட் சொல்லியிருக்க கையெழுத்திட்டு வெளியே வந்திருந்தான். மனைவியிடம் பேசிய பிறகு  மலர்ந்த முகம் இறுகி போனது. உதய்யே கவனித்து கொண்டிருந்த பிரசாத்திற்கு ப்ராஜெக்ட் கிடைக்காத ஏமாற்றம் கூட பின்னுக்கு சென்றது

என்ன உதய்.. ப்ராஜெக்ட் கிடைச்சிருச்சு போல, வாழ்த்துக்கள்..” அவனிடம் வந்து கை கொடுக்கஉதய் டக்கென தெளிந்து வெளியே வந்தான்

தேங்க் யூ பிரசாத், இன்பெக்ட் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும், நீங்க கவினை அனுப்பலன்னா நான் பல சேஞ்சஸ் ப்ராஜெக்ட்க்குள்ள கொண்டு வந்திருக்க மாட்டேன், அவங்களும் இந்தளவு இம்ப்ரெஸ் ஆகியிருக்க மாட்டாங்க, இந்த புல் க்ரெடிட்ஸும் உங்களுக்கு தான் சேரும்..”   தீர்க்கமான சிரிப்புடன் சொல்ல, பிரசாத் இதை எதிர்பார்க்கவில்லை

ச்சே.. இப்படி தான் மிஸ் ஆச்சா..?”  அவனின் திட்டம் பாழான இடம் கண்டு கொண்டான்.

“அப்பறம் என்ன முகம் ரொம்ப தொங்கி போய் இருக்கு..? என்ன ஷா கூட சண்டையா..? நேத்து கூட ஏர்போர்ட்ல பார்த்தேன்உங்களுக்குள்ள ஒத்து வராதுன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர்ப்பார்கல..” பிரசாத் நக்கலாக சொல்ல

இதை தான் எதிர்பார்க்கிறயா..? இவ்வளவு முட்டாளா நீ..?” உதய்  பட்டென முகத்தில் அடித்தது போல கேட்டுவிட்டான்

உதய்..”  பிரசாத் கோபத்துடன் எகிற

அடங்குடா..  எப்படி தான் முகுந்த் சாருக்கு உன்னை மாதிரி மகனோ, நீ உண்மையிலே உங்க அப்பா, அம்மாக்கு ஒரு கலங்கம் தான்.. வேற எதுவும் நான் பேசறதா இல்லை..”  வெறுப்பாக சொல்லி விலகி சென்றுவிட, பிரசாத் இப்படி ஒரு வார்த்தைகளை எதிர்பார்க்காமல் அதிர்ந்து நின்றான்.

அவனின் பெற்றோரை வைத்து பேசியதை எதோ இடத்தில அவனை குத்த தான் செய்தது. அவர்களின்  அந்த நேர்மை, நல்ல பேர், அன்பு எல்லாம் தனக்கு இல்லை என்பது அவனும் உணர்ந்தது தானே..?

இங்கு  ஷா உடனே கண்ணம்மாவிற்கு சொல்லிவிட, அவர் அதற்கு மறுநாள் காலையிலே பயணத்தை ஏற்பாடு செய்துவிட்டார். மாலை போல மகன் போன் செய்யும் போது அவனின் ப்ராஜக்ட் என்ன ஆச்சு என்று கேட்டு வாழ்த்தியவர், கோவில் செல்வது பற்றி சொன்னார்

ம்மா.. நான் தான் பார்த்துட்டு சொல்றேன் சொல்லியிருந்தேன் இல்லை, அதுக்குள்ள ஏன்ம்மா..?”

“உதய்.. நான் முதல்லே கேட்டேன், அப்பறம் என்ன..?”

ம்மா.. ராம் மாமா.. அவரை தனியா விட்டு எப்படி..? உங்க மருமக கண்டிப்பா கவலைப்படுவா..”  

“அவருக்காக தான் இவ்வளவு நாளா நாம போகல உதய், இனியும் தள்ளி போடணும்ன்னு எப்படி..? அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல கோவில்ல விஷேஷ பூஜை இருக்கு, அனிதாவும் வர ஆசைப்படுவா, அவளும் வந்ததுல இருந்து வீட்ல தான் இருக்கா, எங்கேயும் நாம கூட்டிட்டு போல, இப்படியாவது கூட்டிட்டு போலாம் இல்லை..”  

“புரியுதும்மா..”   தங்கையை நினைத்து வருத்தம் கொண்டான். 

“உதய்.. ராம் அண்ணாவையும் நம்மளோட கூட்டிட்டு போலாம்ண்ணா அவர் ஹெல்த் எப்படின்னு யோசனையா இருக்குஇல்லை நான் காலையிலே கூப்பிட்டிருப்பேன்..”

நானும் அதை நினச்சு தான் யோசிச்சேன்ம்மா.. டாக்டர் என்ன சொல்லுவார் தெரியல..”

உதய்.. நாம பேசாம அண்ணாகிட்டயே கேட்கலாம்.. அவர் என்ன சொல்றார் பார்க்கலாம், அவருக்கும் இப்படி வெளியே வரது ஒரு மாற்றமா இருக்கும்..”

இது ஓகேம்மா..   நான் கான்பிரன்ஸ் போடுறேன், பேசலாம்..” என்றவன், கண்ணம்மா  சரி  சொல்ல, உடனே ராம் மொபைலுக்கு அழைத்தான்

சொல்லுங்க உதய்..”  அவர் எடுத்து பேச, நலம் விசாரித்து கொண்டவன்,

அம்மா.. உங்ககிட்ட பேசணும் சொன்னாங்க  மாமா, இருங்க கால் கனெக்ட் பண்றேன்..” என்று கான்பிரன்ஸ் கால் ஆக்டிவேட் செய்தான்

ண்ணா.. நீங்களும் நம்மளோட கோவிலுக்கு வாங்கநான் காலையிலே கேட்கலாம் நினைச்சேன், ஆனா உங்க ஹெல்த் எப்படின்னு தயக்கம்..”   கண்ணம்மா கேட்க, ராமிற்கும் போகலாம் என்றே தோன்றியது

எப்படியும் மகள் தன்னை நினைத்து கவலை படுவாள். இதற்கு அவளுடனே சென்றாள் என்ன என நினைக்க, உடனே டாக்டருக்கு அழைத்து பேசி, அவர் வருவதை உறுதி செய்தார்ஷாவிற்கு தெரிய மனம் நிம்மதியனது.  

உதய் அங்கிருந்து நேரே கோவிலுக்கு வந்துவிடுகிறேன் என, இவர்கள் மட்டும் நாளை  கிளம்பி  மதுரை வரை பிளைட்டில் சென்று அங்கிருந்து அவர்களின் பண்ணை வீட்டிற்கு ராமின் கேரவனில்  செல்வது என்று  முடிவாக, உடனே அதற்கான ஏற்பாட்டில் இறங்கினர்.