Advertisement

அத்தியாயம் -4(2)

கேசவன் வாய்க்கு வாய் மாப்ள மாப்ள என நிறைவோடு அழைத்தார். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு புது மணமக்கள் இருவரையும் கொண்டே புத்தாடைகள் வழங்க செய்தார்.

நிர்மலா ஒரு நொடி நிற்காமல் சுழன்று கொண்டிருந்தார்.

“ஒண்ணுமே இல்லாம அங்கேயும் இங்கேயும் எதுக்கும்மா நடக்கிற?” என கேட்டே விட்டாள் பிருந்தா.

“நீ வேற சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி எழுந்து என்னையும் எழுப்பி விட்டு உன் அம்மா ஒரே அமக்களம்!” என சௌந்தரியும் சிரித்து கொண்டே சொன்னார். அம்மாவின் இந்த அதீத உற்சாகம் பார்த்து பிருந்தாவுக்கே பிரமிப்புதான்.

 தனிமையில் மகளிடம், அவள் கையை பிடித்துக்கொண்டு, “அண்ணன் மகன் இருக்கும் போது ஏன் அவன் எனக்கு மருமகனா வரலைனு எத்தனை நாள் யோசிச்சிருப்பேன் தெரியுமா? வைஷு இந்த வீட்டு பொண்ணாகிட்டா, இனிமே காலத்துக்கும் இந்த உறவு தொடரும். எனக்கு கவலையே இல்ல பிருந்தா” என சிலாகித்து பேசினார்.

“பரவாயில்லை, எனக்கு அவன்னா அலர்ஜின்னாலும் என் அம்மா சந்தோஷத்துக்காக அந்த முரட்டு பீஸ் கூட குடும்பம் பண்றேன்னு நான் என் மனசை தேத்திக்கிறேன்” என பிருந்தா கிண்டலாக சொல்ல அசடு வழிய சிரித்தார் நிர்மலா.

“ம்மா டோண்ட் டெல் மீ… உன் அண்ணன் மகன் பின்னால நிற்கிறாரா?” சின்ன குரலில் பதட்டத்தோடு பிருந்தா கேட்க, அவள் கையை அழுத்தி அவளுக்கும் பின்னால் பார்த்து சிரித்தவர், “ஹா ஹா… என்ன பிரசன்னா? நாங்க சும்மா… இவ ஏதோ விளையாட்டுக்கு…” என பின்னால் நின்றிருந்த பிரசன்னாவிடம் கோர்வையாக பேச முடியாமல் திணறினார்.

பட்டென திரும்பிய பிருந்தா அவனது கூர்மையான கண்களை நேருக்கு நேர் சந்தித்து, “என்ன காலையிலேர்ந்து என்னை ஸ்பை பண்ணிட்டே இருக்கீங்க? நீங்க முரட்டு பீஸ்தான், பாருங்க என் அம்மாவே ஜெர்க் ஆகுறாங்க” என்றாள்.

“அடியே!” என நிர்மலா கண்டிப்போடு அழைக்க,

“பாருங்க அத்தை, இவ என்னை முரட்டு பீஸ்னு சொல்றா. அஞ்சடி அனகோண்டா இவ, விஷம் விஷம்!” என சொல்லி அகன்றான் பிரசன்னா.

பிரசன்னாவை மரியாதை குறைவாக யாரிடமும் பேசக்கூடாது, யாரிடமும் விட்டு தரக் கூடாது என மகளை கண்டித்த நிர்மலா அறிவுரை சொல்ல, “உன் அண்ணன் பையனுக்கும் சொல்லு” என எரிச்சலாக சொல்லி அறைக்கு சென்று விட்டாள்.

தனது அறையில் பிரசன்னா கைபேசி பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருக்க இவள் படுக்கையில் விழுந்தாள்.

தன் வீட்டில் தன்னை விட அவனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது என்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

‘கல்யாணம் ரெண்டு பேருக்கும்தான், அவன் வீட்லேயும் அவனுக்குத்தான் இம்பார்ட்டன்ஸ், இங்கேயும் அப்படித்தான். போங்கடா இந்த கல்யாணமே பசங்களுக்குத்தான் ஃபேவர் பண்ணுது, நம்ம யாருக்கும் முக்கியம் இல்ல. ப்ச் நாளையிலேர்ந்து நான் ஃபேக்டரி போறேன், என் வேலைய பார்க்கிறேன் நான்’ என மனதிற்குள் புலம்பி தீர்த்து விட்டாள்.

“என்னடி ஏன் புரண்டு புரண்டு படுக்கிற? அதிகமா சாப்பிட்டதுல வயிறு வலிக்குதா?” எனக் கேட்டான் பிரசன்னா.

அவனை பார்க்க ஒருக்கலித்து படுத்தவள், “யார் நான் அதிகம் தின்னேனா? ஆமாமாம்… நீ தட்டை வெறிச்சு பார்த்ததோட சரி, ஆள பாரு! ரெண்டு தட்டையும் ஒரு லோட்டாவையும் காணோமாம். அதுவும் டிஷ்னு நினைச்சு முழுங்கியிருக்க போற, எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பாரு. அப்புறம் அவஸ்தை பட போற” படு நக்கலாக பேசினாள்.

கைபேசியை ஓரமாக வைத்து விட்டு ஒரு கையை மடித்து ஒரு கையை மோவாயில் வைத்து இன்னும் தளர சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் தூக்கிப் போட்டுக் கொண்டவன், “எங்கம்மாகிட்ட என் ரூம்ல தூங்காம வைஷு ரூம்ல தூங்குவேன்னு சொன்னதுக்கு பனிஷ்மென்ட்டா உன் புடவை விலகினா மட்டும் தெரியுற அந்த மச்சத்த கடிச்சி தின்னுடுறேன்” என்றான்.

சட்டென குனிந்து தன் புடவையை சரி பார்க்க அது விலகாமல்தான் இருந்தது.

“ப்ச் ப்ச்… இப்போ இல்ல நேத்து நைட்டே பார்த்தாச்சு” என நமுட்டு சிரிப்போடு அவன் சொல்ல முகத்தை சுளித்தாள் பிருந்தா.

“காலையில காபி தராம போனதுக்கு பனிஷ்மெண்ட் மூணு நிமிஷம் மூச்சு முட்ட முட்ட உன் லிப்ஸ்ல…” என்றவன் அவளது உதடுகளை வெறிக்க பார்த்தான்.

வேக மூச்சுகளோடு பிருந்தா பார்த்திருக்க, “டேமேஜ் செய்வேன்னு சொன்னதுக்கு கூச கூச உன் ஹிப்ல…” என்றவன் புடவை விலகியிருந்த அவள் இடுப்பை ரசனையாக பார்க்க, வேகமாக புடவையால் இழுத்து மூடியவள் எழுந்தமர்ந்து கொண்டாள்.

“லாஸ்ட்டா என்ன சொன்ன… ஹான் முரட்டு பீஸ்… அதுக்கு நீ வேணாம் வேணாம்னு கதற கதற…” என்றவனின் பார்வை சென்ற இடத்தில் விக்கித்து போனவள் அடுத்த நொடி எழுந்து வந்து அவன் தலை முடியை பிடித்து இழுத்து தோளில் அடித்து அப்போதும் ஆத்திரம் தீராமல் அவன் வாயில் அடித்து வைத்தாள்.

எதையும் தடை செய்யாமல் வாங்கிக் கொண்டவன், “இதுக்கு என்ன பனிஷ்மெண்ட் தெரியுமா? சொல்லவா?” எனக் கேட்க,

“அடங்க மாட்டீல நீ? இரு உன்னை உன்னை…” என்றவள் குனிந்து அவனது காதை கடிக்க அவளை அனாயாசமாக வளைத்து தன் மடியில் போட்டுக் கொண்டான்.

பிருந்தா எழ நினைக்க அவளால் முடியவில்லை. இடது கை கொண்டே அவளது உடலை இறுக பிடித்திருந்தவன் தன்னிரு கால்கள் கொண்டு அவளது கால்களை பிணைத்து வைத்திருந்தான்.

“இவ்ளோ அடி அடிச்சு கடிச்சு வேற வச்சிருக்க. நான் என்ன செய்றேன் பாரு” என்றவன் வலது கை கொண்டு கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பித்தான்.

என்ன முயன்றும் பிருந்தாவால் அவனிடமிருந்து விலகவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் முடியாமல் தளர்ந்து அவன் போக்கில் விட்டு விட்டாள்.அவளது உடையெல்லாம் நெகிழ்த்தவில்லை அவன். ஆடை மேலேயேதான் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தான்.

இரண்டு நிமிடங்கள் பிருந்தாவை தவிக்க விட்டவன் பின் கிச்சு கிச்சு செய்வதை நிறுத்தி விட்டு, “மத்த பனிஷ்மெண்ட்டும் கொடுத்திடலாமா?” எனக் கேட்டுக் கொண்டே அவளது முகம் நோக்கி குனிய கண்களை இறுக மூடிக் கொண்டாள் பிருந்தா.

முழுதாக ஒரு நிமிடம் கடந்தும் அவன் எதுவும் செய்யாமல் போக அவள் கண்கள் திறக்க, “இன்னும் ஒண்ணுமே செய்யலையே நான், கண்ண மூடி சொக்குற… என்ன அதுக்குள்ள மாமன்கிட்ட மயக்கமா?” முகத்துக்கு அருகில் முகம் வைத்திருந்தவன் மெல்லிய குரலில் கேட்டான்.

“என்னால தடுக்க முடியலைன்னு ஆகிடுச்சு, அதான் பூச்சி ஊருற மாதிரி நினைச்சு பல்ல கடிச்சு சகிச்சுக்கலாம் நினைச்சேன்” என மிதப்பாக கூறினாள்.

“அதானே பார்த்தேன், நீயாவது அவ்ளோ சீக்கிரம் உன் வாய அடக்கிறதாவது. இப்படி வெறுப்பேத்தினா கோவம் வந்து உன்னை விட்டிடுவேன்னு தப்புக்கணக்கு போட்டுட்ட… ஹ்ம்ம்… நான்தான் நீ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு மோசமானவன்னு சொன்னேன்ல… நீ சகிச்சுக்க” என்றவன் அவள் கண்கள் மூடக் கூட அவகாசம் தராமல் உதடுகளை நெருங்கி இருந்தான். ஆனால் முத்தமிடவில்லை.

பிருந்தா தன் விழிகள் தெறிக்க கோவமாக பார்த்திருக்க, “ஒரே ஒரு சாரி சொல்லிடு, விட்டிடுறேன்” என்றான். அவன் பேசும் போதே அவனது உதடுகள் அவளது உதடுகளை தொட்டு தொட்டு மீண்டது.

தலையை பின் இழுக்க முடியவில்லை, முகத்தை திருப்ப முடியவில்லை. அவனது உடல் பாரத்தில் பாதியை அவள் உடல் மீது வைத்து அழுத்தி தலையையும் இடையையும் வாகாக அழுந்த பிடித்திருந்தான்.

முடியாது என வாய் திறந்தாலும் அவள் உதடுகளும் அவன் உதடுகளோடு உரசும் அபாயம் உள்ளதால் வாய் திறவாமல் இருந்தாள்.

“எப்படி எடுத்துக்க நான்? உனக்கு கோவம்னா இல்ல என்கிட்டேர்ந்து அந்த பனிஷ்மென்ட்டை ஆவலா… ஆசையா எதிர்பார்க்கிறேன்னா… ம்ம்?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான்.

அவளது சூடான மூச்சுக் காற்றை உணர்ந்தவன், “ரொம்ப சூடா இருக்க போல…” என சொல்லி விஷமமாக பார்த்து கண்கள் சிமிட்ட, அவ்வளவுதான் பிருந்தாவின் பொறுமை காற்றில் பறந்தது.

உடலை அசைக்க முடியாவிட்டால் என்ன உன்னை என்ன செய்கிறேன் பார் என மனதிற்குள் சிலிர்த்தவள் எழுந்த ஆத்திரத்தோடு வாகாக இருந்த அவன் வாயை கடித்து விட்டாள்.

“ஷ் ஷா ஆஹ்ஹ்…” வலியில் பதறிய பிரசன்னா அவளை விட அவனிடமிருந்து விலகி தள்ளி போய் நின்று கொண்டாள்.

பிரசன்னா வலித்த தன்னிரு உதடுகளையும் கையால் தடவ அவன் விரலில் இரத்தம். ஆமாம் லேசாக அவனது கீழுதட்டில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. திகைத்து போய் விரலில் இருந்த இரத்தக் கறையை அவளை நோக்கி காட்டி, “என்னடி இது?” எனக் கேட்டான்.

“ம்ம்… பூச்சி கடிச்சிடுச்சு. உன் கீழ்த்தரமான வம்பெல்லாம் இனிமே என்கிட்ட வேண்டாம். நான் வேற விஷம், ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிட போகுது” என அவள் சொல்லி முடிக்க வில்லை, எழுந்து அவளை நெருங்கியிருந்தான் பிரசன்னா.

“தெரியலைன்னா எப்படினு கத்துக்கணும், அதை விட்டுட்டு பூச்சி பொட்டுனு கதை விடக்கூடாது” என்றவன் அவளை அணைத்து முத்தமிட முதலில் திமிறியவள் அவனோடு ஒன்றி விட்டாள்.

பிரசன்னாவின் இரத்தத்தின் சுவை உணர்ந்து திடுக்கிட்ட பிருந்தா விழிகள் திறக்க லேசாக மூச்சுக்காக இதழ் பிரித்தவன், “என்ஜாய் த மொமெண்ட் பேப்!” என கிறக்கமாக சொல்லி மீண்டும் அவள் இதழ் மூடினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement