Advertisement

மூன்று வருடங்கள் கழித்து,

சென்னையில் விபீஷணனின் வீடு கோலாகலமாக இருந்தது. இன்று நந்தனாவிற்கு வளைகாப்பு. அதுவும் இது முதல் முறை அல்ல, அவள் இரண்டாவது முறை கருப்பம் தரித்ததற்குத் தான் இந்த வளைகாப்பு. அதுவும் முதல் முறை வளைகாப்பை யார் செய்வது என்று பெரிய பஞ்சாயத்தே நடந்தது. நடராஜனும் மேனகாவும் தாங்கள் தான் செய்வோம் என்று கூற, வேணுகோபாலும் கௌரியும் தாங்கள் தான் செய்வோம் என்று கூற, நடுவில் நந்தனாவும் விபீஷணனும் தான் திண்டாட வேண்டியது ஆகிவிட்டது. கடைசியில் முதல் குழந்தைக்கு வேணுகோபால் மற்றும் கௌரி வளைகாப்பு செய்யட்டும். இரண்டாவது குழந்தைக்கு மேனகாவும் நடராஜனும் செய்யட்டும் என்று முடிவெடுக்கப் பட்டது. அதன்படி இன்று நந்தனாவிற்கு இரண்டு முறை வளைகாப்பு நடக்கும் ஏற்பாடு ஜோராக நடந்து கொண்டிருந்தது.

விபீஷணன் மற்றும் நந்தனாவின் அறையில் நந்தனா பட்டுப் புடவை எல்லாம் கட்டி அழகாக உட்கார்ந்திருக்க, விபீஷணன் அவளின் பக்கத்தில் அவர்களது இரண்டு வயது இளவரசி அனஹித்தாவுடன் அமர்ந்திருந்தான்.

“என்ன டா லட்டுக்குட்டி கால் வலிக்குதா?”

“இல்லை அத்து இந்தப் பட்டுப் புடவை அன் ஈசியா இருக்கா. எப்போ டா கழட்டுவோம்னு இருக்கு.”

“நீ ரெடினா சொல்லு இப்போவே கழட்டிடுவோம்.” என்று கூறிவிட்டு விபீஷணன் அவளைப் பார்த்து கண் அடிக்க, நந்தனா அவனை முறைத்துப் பார்த்து அவனது புஜத்தில் செல்லமாக ஒரு அடி வைக்க, அவர்களது இளவரசி தன் அம்மா அப்பாவை அடித்ததும் வேகமாக அம்மாவை ஒரு அடி அடித்தது.

“சூப்பர் டா பட்டுக்குட்டி.” என்று கூறி விபீஷணன் அனஹித்தா கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க, அந்தக் குட்டிப் பட்டு அழகாகச் சிரித்தது.

அப்போது கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த ராகவி அவர்களிடம்,”உங்க ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சதுனா கீழே வாங்க. எல்லாரும் வந்தாச்சு. உங்களுக்காகத் தான் வெயிட்டிங்.” என்று அவள் கூறவும் இருவரும் சிரித்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தார்கள்.

விபீஷணன் நந்தனாவை கைத் தாங்களாக அழைத்துக் கொண்டு கீழே வந்தான். ஏனென்றாள் அவள் கருவில் இரு குழந்தைகள் வளர்கிறது. அதனால் பார்த்து மெதுவாக அழைத்துக் கொண்டு வந்தான்.

நந்தனாவை நடுவில் போட்ட நாற்காலியில் அமர வைத்தான் விபீஷணன். பின்னர் அனைவரும் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி, குங்குமம் வைத்து விட்டு வளையல் போட்டு விட்டுச் சென்றனர். விபீஷணனும் அவளிற்குச் சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்து விட்டு மெதுவாக அவளது கையை எடுத்து அவன் வாங்கி வந்து தங்க வளையலை அணிவிக்க, சிறியவர்கள் அனைவரும் ஓ என்று சத்தம் போட்டனர்.

விழா அனைத்தும் சிறப்பாக முடிந்து, நந்தனா சாப்பிட்டு கை கழுவி விட்டு வர, திடீரென அவளிற்குப் பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. வேகமாக விபீஷணன் அவளைத் தூக்கிக் கொண்டு அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.

முதலிலே கூறியிருந்ததால், அவனும் அறுவைச்சிகிச்சை நடக்கும் அறைக்கு நந்தனாவுடன் செல்ல, அவளிற்கும் சற்று ஆசுவாசமாக இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு ஆண் ஒன்று பெண் ஒன்று இரு குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்தாள் நந்தனா.

விபீஷணனிற்கு நந்தனா மற்றும் குழந்தைகள் சுகமாக இருப்பதைப் பார்த்து நிம்மதியாக இருந்தது. அவர்களது கஷ்டம் எல்லாம் பறந்தோடி மனைவி, பிள்ளைகளுடன் அவனது குடும்பம் நிறைவு பெற்றதைப் போல் உணர்ந்தான் விபீஷணன். நந்தனாவின் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு,”லவ் யூ டா லட்டுக் குட்டி.” என்றான்.

அவளும் மயக்கத்திலே,”லவ் யூ டூ அத்து.” என்றாள்.

விபீஷணன், நந்தனா மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்ந்தான்.

———————-

ஒரு வழியாக கதை முடிந்து விட்டது. Silent readers please break your silence and comment your views about the story. தாமதமாகப் பதிவுச் செய்ததை விடுத்து வேற ஏதாவது குற்றம் குறை இந்தக் கதையில் இருந்தால் அதையும் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.

இந்தக் கதையை முதல் யூடில இருந்து கடைசி யூடி வரை வாசித்து கமென்ட் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ????

மொத்தத்தில் கதை எப்படி இருந்தது என்று இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு போங்கள் நண்பர்களே. எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

Advertisement