“இன்னொரு தடவை அப்படி சொல்லாத, வாயிலையே போடுவேன்” என்று ரம்யா சொல்லிக் கொண்டிருக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் விஜய்.
அவனைப் பார்த்த வேதா முழித்து வைக்க,
“ரைட்டு, சைத்தான் சைக்கிள்ள போகுது” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“கிளாஸ்ல இருக்க விருப்பமில்லைன்னா, ரெண்டு பேரும் வெளிய போகலாம்” என்றான் பட்டென்று.
“சாரி சார்..!” என்றாள் வேதா பாவமாய்.
“ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் டெய்லி இதே வேலை தானா? கிளாஸ்க்கு படிக்க வர்றீங்களா? எதுக்கு வரீங்க? பிரின்ஸ்பால் கிட்ட அனுப்பனுமா?” என்றான்.
“சாரி சார்..” என்றாள் ரம்யா.
“என்ன சாரி சார்? இந்த சாரியை எத்தனை தடவை கேட்பிங்க?” என்றான்.
“சாருக்கு சாரி இப்படி சொன்னா பிடிக்காது” என்று முனுமுனுத்தாள் வேதா.
“அப்ப ரெண்டு பேரும் சேர்ந்து ட்ரீட் வைங்க” என்றனர்.
“வச்சுட்டா போச்சு” என்றாள் வேதாவும்.
அதே மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள் வேதா. அன்று ஸ்டாப் அனைவருக்கும் மீட்டிங் இருந்ததால் விஜயும், சரணும் வர லேட் ஆகும் என்று சொல்லியிருந்தனர்.
“அண்ணி என்ன இந்த டைம்ல வீட்ல இருக்கீங்க?” என்றாள் கீர்த்தனாவைப் பார்த்து.
“இனி டென் டேஸ் வொர்க் ப்ரம் ஹோம் தான் வேதா” என்றாள் கீர்த்தனா.
“சூப்பர் அண்ணி” என்றவள் ப்ரஷாகி வர,
“வேதா இந்தடா டீ” என்று விஜயின் சித்தி டீயை நீட்ட,
“ஐ லவ் யு ஆன்ட்டி” என்று அவருக்கு பட்டென்று ஒரு முத்தத்தை வைத்தபடி டீயை வாங்கிக் குடிக்க, அவளை முறைத்தாள் கீர்த்தனா.
“இப்போ தானே வீட்டுக்கு வந்தேன். உங்க கிட்ட சொல்லாமையா?” என்றாள் வேதா.
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம். உன் பாசமலர் ஏற்கனவே எனக்கு மெச்செஜ் அனுப்பியாச்சு” என்ற கீர்த்தனா,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு வேதா. இருந்த சூழ்நிலையில நீ காலேஜ் போக முடியுமான்னு நாங்க எல்லாம் கவலைப் பட்டோம். அதெல்லாம் ஒன்னுமில்லைங்கிற மாதிரி எழுந்து வந்த. எவ்வளவு பிரச்சனை, எத்தனை ஹெல்த் இஷ்யூஸ்,எவ்வளவு மனப்போராட்டம் இதையெல்லாம் தாண்டி படிச்சு, நல்ல பர்சண்டேஜ் வாங்குறதெல்லாம் வேற லெவல். உன்ன நினச்சா எனக்கு பெருமையா இருக்கு.” என்றாள்.
“இதுல என்ன அண்ணி பெருமை இருக்கு. என்னைய விட கஷ்ட்டப்பட்டு படிக்கிற எத்தனையோ பேர் இருக்காங்க. பார்ட்டைமா வேலை பார்த்துட்டே படிக்கிற எத்தனை ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க. அவங்களோட கம்பேர் பண்ணும் போது, நம்மெல்லாம் ஒண்ணுமே இல்லை” என்றாள்.
“அது உண்மை தான். இருந்தாலும் எங்க வேதாவோட வெற்றி எங்களுக்கு பெருசு தான” என்றாள்.
“யாரு இல்லைன்னு சொன்னா?” என்றவள்,
“நான் போய் அமுதா அத்தையை பார்த்துட்டு வர்றேன்” என்று அவரின் அறைக்குள் சென்று விட்டாள்.