Advertisement
“என்னய்யா என்னாச்சு எதுக்கு இவரு இப்டி உக்காந்துட்டு இருக்காரு?” என்று கட்சியின் உறுப்பினர்களில் ஒருவன் திருஞானத்தின் காதை கடிக்க
“பதவி பறிபோனா இப்டி தான் உக்கார முடியும் ஹாயா ஊஞ்சலா ஆட முடியும்?” என்று நக்கலாக பத்திலுறைத்தவர்
“சார்..!” என்று பவ்யமும் பயமும் கலந்த குரலில் தயங்கி அழைக்க
தலையில் துண்டை போட்டு பதவி பறிபோன அதிருப்தியில் சோகத்தில் முழ்கி இருந்தவர் “என்னய்யா..?” என்று எரிச்சலுடன் வினவினார் உத்தமன்
“போலீஸ் அரஸ்ட் வாரண்டோட வந்துட்டு இருக்காங்களாம்“
“இப்போ அதுகென்னய்யா பண்ணனுங்கிற” என்று எரிந்து விழுக மேலும் வாங்கி கட்டிக்கொள்ள விருப்பமில்லாது முன்பிருந்த இடத்திற்கே சென்று அமைதியாக நின்று கொண்டார் திருஞானம்
“சின்ன பையன்னு நினைச்சது தப்பா போச்சு என்னோட கௌரவம் இதுவரை எனக்கிருந்த அரசியல் செல்வாக்கு சொத்துபத்து எல்லாம் போச்சு அவசரப்பட்டு எதுவும் செய்யாம விட்டதுக்கு நல்லா வச்சு செஞ்சுட்டான்” என்று மனம் குமுறியவருக்கு தொலைக்காட்சியில் வந்த அடுத்தடுத்த செய்திகள் தலையில் இடியை இறக்கின
“அமைச்சர் உத்தமனின் சொத்துக்கள் அனைத்தும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டன என்றும், இரண்டு ஆண்டுகளில் அளவிற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத சொத்து பத்திரங்கள் நகைகள் பணம் என அனைத்தும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டு உள்ளது” என்ற தலைப்பு செய்தியை பார்த்தவருக்கு மனஅழுத்தம் அதிகரித்து உடலெல்லாம் வியர்வை வழிந்தது, திக்பிரம்மை பிடித்தவர் போல அமர்ந்திருந்தவர் சில நிமிடங்களில் மூர்ச்சை அடைந்து சரிந்தார்
என்னவோ ஏதோ என்று உடன் இருந்தவர்கள் பதறிபோய் மருத்துவனைக்கு கொண்டு செல்ல அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் “பிபி இன்கிரீஸ் ஆகிருக்கு பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல” என்று சில அறிவுரைகளையும் மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்து அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்
சற்று நிமிடங்களில் கண்விழித்தவர் இல்லம் செல்ல வேண்டி மருத்துவமனையில் இருந்து வெளியே வர “சார் உங்கள அரஸ்ட் பண்றோம்” என்று எதிர்ல வந்து நின்ற காக்கி சட்டையை மேலும் கீழும் பார்வையை ஏற இறங்கவிட்டு இகழ்ச்சியாய் பார்த்தவர்
“யோவ் போலீசு நா யாருன்னு தெரியும்ல அமைச்சரவே கைது பண்ணுவிங்களா?” என்று கட்டமாக கேட்க
“சாரி சார் உங்க பதவி பறிபோய் கிட்டத்தட்ட ஆறுமணி நேரமாச்சு இப்போ நீங்க அமைச்சர் உத்தமன் இல்ல சாதாரண உத்தமன் தான்” என்றவன் வலுக்கட்டாயமாக கையில் விலங்கை பூட்ட மருத்துவமனை வளாகத்தில் இருந்த அத்தனை கண்களும் தன்மேல் தான் என்பதை உணர்ந்தவருக்கு அவமானமாய் இருந்தது, இதற்கெல்லாம் காரணமாணவனை எண்ணி கையறு நிலையில் இருந்தவரால் பல்லை கடித்து கோபத்தை அடக்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை அனைத்தும் ஒரே இரவில் அழிந்து போனதை எண்ணி நொந்தவர் அமைதியாய் சென்று போலீஸ் வாகனத்தில் ஏறி கொள்ள நான்கு சக்கர வாகனம் வேகமெடுகத்தது
உத்தமனை பற்றி அடுத்தடுத்து வெளியான தலைப்பு செய்திகளை அதிர்ச்சியில் கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தவன் எதிரில் இருந்த பூஜாடியை தூக்கி எறிய தொலைக்காட்சியின் திரை அந்தல் சிந்தலாக சிதறி போனது ஆத்திரத்துடன் “ஆ… விஷ்ணு..” என்று கர்ஜித்தவன் “சிப்பாயையும் மந்திரியையும் தூக்கிட்டா எனக்கு செக் வச்சிரலாம்னு நினைச்சுட்டு இருக்கியா இடையில வந்து தப்பு தப்பா கேம் ஆடிட்டு இருக்க ஜெயிக்க போறது நீயா இல்ல நானான்னு பாத்துருவோம் ஆட்டத்தோட இறுதி கட்டத்துக்கு வந்தாச்சுன்னு நினைக்கிறேன்” என்று தனக்கு தானே வன்மாமாய் பேசி கொண்டவன் அடுத்து என்ன செய்ய என்ன செய்ய என்று குறுக்கும் நெடுக்குமாக மூளைக்கு வேலை கொடுத்த வண்ணம் நடையாய் நடக்க தொடங்கியவனுக்கு வழிதான் கிட்டவில்லை
தொலைகாட்சியில் வெளியான செய்தியை கண்டு துவாரகாவிற்கு மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் கட்டுபடுத்த முடியவில்லை விஷ்ணுவின் அறைக்கு வந்தவன் “டேய் என்ன பண்ணி வச்சுருக்க இன்னும் என்னால நம்ப முடியலை அவரு மேல சந்தேகம்னு தானே சொன்ன எப்டிடா? இதை எப்போ பண்ண என்கிட்ட சொல்லவே இல்ல மொத்தமா ஒன்னுமில்லாமா பண்ணிட்டியேடா” என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியவன் திகைப்போடு விஷ்ணுவை பார்க்க
சன்ன சிரிப்புடன் “இதுல நா எதுவும் பண்ணலை தானா அமைஞ்சதுடா” என்றவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது திருமணத்திற்கு முன்பு ஆணையர் வர சொன்னார் என்று சென்னை சென்றவன் சடகோபனை சந்தித்து விசாரணையை பற்றி விவாதித்து தெளிவுபடுத்த
“ஓகே விஷ்ணு நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க சீக்கிரமே இதுல யார் யார் சம்பந்தபட்டுருக்காங்கன்னு கண்டுபிடிங்க பாருங்க விஷ்ணு“என்றவரிடம் ஒருசில விஷயங்களை கலந்து பேசிவிட்டு காவல் நிலையம் சென்றவனுக்கு அருள் ஜோதியின் அவசர செய்தி திகைப்பை உண்டு பண்ணியது அமைச்சர் உத்தமனின் நடவடிக்கைகளை கவனித்த வரையில் குற்றவாளிக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறவும்
“எப்டி சொல்றிங்க ஜோதி அவரு மருத்துவ துறை அமைச்சர் ஆதாரம் எதுவும் இல்லாம அவரை விசாரிக்க முடியாது” என்று கையை விரித்து நம்பிக்கையற்று கூற
“ஆதாரம் இருக்கு சார்” என்றவன் உத்தமனின் எண்ணிற்கு, வந்த அழைப்புகள் அவர் தொடர்பு கொண்டு பேசிய அழைப்புகள் அடங்கிய காகிதத்தை விஷ்ணுவிடம் எடுத்து நீட்டியவன் “சார் அமைச்சருக்கு இந்த ஒரு நம்பர்ல இருந்து அடிக்கடி கால் வந்திருக்கு நீங்க அன்னைக்கு டிரேஸ் பண்ண சொன்னிங்களே அந்த நம்பர் தான் சார் இது! அதுமட்டுமில்ல அவரோட பேங்க் அக்கௌண்ட் செக் பண்ணதுல சம்பந்தமே இல்லாம பணம் டெபாசிட் ஆகிருக்கு இதையெல்லாம் வச்சு பாக்கும் போது அவரும் குற்றவாளிக்கு ஏதோ ஒரு வகையில உதவி பண்ணிட்டு இருந்திருக்காரு சார்” என்று தன் அனுமானங்களை கச்சிதமாய் நிகழ்வுகளோடு பொருத்தி விளக்கினான் அருள்ஜோதி
அவனின் ஆர்வத்தை கண்டு புருவம் உயர்த்தி வியந்த விஷ்ணு “பரவாயில்ல ஜோதி நா சொன்னத விட நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்கிங்க” என்று மெச்சியவன் “ஆனா இது மட்டும் போதாது அவரோட பதவி போனா தான் நாம அவரு மேல ஆக்ஷன் எடுக்க முடியும்?” என்று யோசனையுடன் கூறியவன் “அவரோட பேங்க் டீடெயில்ஸ் உங்களுக்கு எப்டி தெரியும்?” என்று புருவம் சுருக்கி சந்தேகமாய் கேட்க
“சிம்பிள் சார் என்னோட பிரெண்ட் அப்பா தான் அமைச்சரோட பிஏ அவன் மூலமா தான் எனக்கு இந்த டீடெயில்ஸ் கிடைச்சது அவன்கிட்ட இந்த மாதிரின்னு சொல்லி உதவி கேட்டேன் ஏன் எதுக்குன்னு கேக்காம அகௌண்ட் நம்பர் கொண்டு வந்து கொடுத்தான்” என்று கூற
“குட் ஜோதி” என்று பாராட்டியவன் அடுத்தடுத்து கவனிக்க வேண்டிய வேலைகளில் கவனத்தை தெலுத்த தொடங்கினான், இடையில் துவாரகாவிற்கு அழைப்பு விடுத்து அமைச்சரின் மீதுள்ள சந்தேகத்தை அவன் செவிகளுக்கு தகவலாய் கூறிவிட்டு, அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்க தானாக வந்து அமைந்தது வாய்ப்பு! தற்செயலாக உத்தமனின் அலைபேசி அழைப்புகளை கண்காணிதத்தில் அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து கொள்ள போகும் தகவல் கிடைக்க இருவருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் இருந்தவாறு இருவரும் பேசிக்கொள்ளும் விடியோவை படம் பிடித்தவன் கட்சி உறுப்பினர் அனைவருக்கும் வேறு ஒரு அலைபேசியில் இருந்து அனுப்பி கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தினான்
அடுத்ததாக அவர் இதுவரை கணக்கில் காட்டாதிருந்த வங்கி விபரங்களை முகம் தெரியாத நபரை போல வருமான வரி துறைக்கு கடிதத்தின் மூலம் அனுப்பிவிட்டு மேலும் சில வேலைகளை செய்துவிட்டே மதுரை திரும்பியிருந்தான்
விஷ்ணு ஒவொன்றாய் கூற கூற துவரகாவின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவம் ஆடியது “இவ்ளோ வேலை பண்ணிருக்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லை” என்று கோபமாக கேட்க
“சஸ்பென்ஸா இருக்கட்டும்னு தான் சொல்லலை எல்லாருக்கும் தெரியும் போது உனக்கு தெரியட்டும்னு அமைதியா இருந்தேன்” என்று தோளில் கைபோட்டு அணைத்து சமாதானம் பேசினான் விஷ்ணு
ஒருவாரம் தங்கி திருவிழாவை காண வந்தவர்கள் திருமணத்தை சாக்கிட்டு கூடுதலாக ஒருவாரம் தங்க நேர்ந்ததால் கடமையை கவனத்தில் கொண்டு திருமணம் முடிந்த இரண்டாம் நாளே துவாரகாவும் வைஷாலியும் சென்னை பயணத்திற்கு ஆயத்தமாகி துணிகள் அடங்கிய பையுடன் வெளியே வர
அறையில் இருந்து வெளியே வந்த விஷ்ணு இருவரும் கையில் பையுடன் வருவதை கண்டு “டேய் என்னடா கிளம்பிட்டிங்களா? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல இன்னைக்கே கிளம்புறீங்க? என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியவன்
“ஏ வைசு நீயாவது இருந்துட்டு போக வேண்டியது தானே உனக்கு என்ன அவசரம்” என்று கவலை தேய்ந்த குரலில் கேட்க
அவன் வார்த்தைகளில் அதிருப்தியை உணர்ந்தவள் “சாரிடா அம்மாவுக்கு முடியல அப்பா தான் கவனிச்சிட்டு இருக்காரு ரெண்டு நாள் முன்னாடியே கால் பண்ணி சொல்லிட்டாரு கிளம்பி வர சொல்லி, அதனால தான் மேரேஜுக்கு கூட அவரால வர முடியல ப்ளீஸ்டா பக்கத்துல இருந்து பாத்துக்க யாரும் இல்ல சோ நான் தான் இருந்து பாத்துக்கணும் தப்பா எடுத்துகாத விஷ்ணு” என்று கெஞ்சுதலாய் நிலைமையை எடுத்து கூறினாள்
“சரி போய்ட்டு வா அம்மாவ கேட்டேன்னு சொல்லு ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணு” என்று அவளது நிலையை புரிந்து கொண்டவன் பரிவாக கூற
“சரி” என்றவள் “கிளம்பலாமா ட்ரையினுக்கு டைம் ஆச்சு” என்று கைகடிகாரத்தில் மணியை பார்த்து கொண்டே துவாரகாவிடம் கேட்டாள்
“ம் போலாம்” என்று பதில் அளித்தவன் “சரிடா புது மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம்” என்று புன்னகை முகமாய் கூற
“என்கிட்ட பேசாத போடா ஊருக்கு கிளம்புறேன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லல” என்று முகத்தை திருப்பி கொண்டான் விஷ்ணு
அவன் கோபம் போலியானது என்பதை அறிந்தும் தன் நிலையை விளக்க தொடங்கினான் “டேய் புரிஞ்சுக்கோடா அம்மா தனியா இருக்காங்க உனக்கே தெரியும் அவங்களோட ஹெல்த்த பத்தி நேத்தே சொல்லிருந்தா கண்டிப்பா ஏதாவது பிளான் பண்ணி என்ன இங்க தங்க வச்சுருப்ப! அதான் சொல்லல கோவிச்சுக்காத மச்சா வந்து முழுசா ரெண்டு வாரம் ஆகிருச்சுடா சஸ்பெண்ட் பண்ண லீவ் முடிய போகுது வேலையில ஜாயின் பண்ண வேணாமா இங்கயே இருந்தா புவ்வாக்கு எங்க போறது” என்று சமாதானம் செய்யும் விதமாக கேலியாய் பேச
“ராஸ்கல் சரியான சமாளிப்பு கேஸ்டா எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் ரெடியா வச்சிருக்க சரி பாத்து போய்ட்டு வா சென்னை ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு ஓகே வா” என்று புன்னகை முகமாய் துவாரகாவை அணைத்து விடைகொடுக்க
இருவரும் விடைபெறும் தருவாயில்“நானும் வரேன்” என்று தனது ட்ராவல் பேக்கை எடுத்து கொண்டு வந்தாள் சஞ்சளா, அவளின் வேகத்தை கண்டு அனைவருக்குமே ஆச்சர்யம் தான்! எப்போது கிளம்பலாம் என காத்திருந்தாள் போல என்று எண்ணிய துவாரகா அவளின் ஆர்வத்தை கண்டு சன்னமாய் சிரித்து கொள்ள
“சஞ்சும்மா நாம இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம் நாங்களும் நாளைகழிச்சு கிளம்புறோம் அப்புறம் எதுக்கு அவசரப்படுற” என்ற சாவித்ரிக்கு
“இல்ல ஆன்ட்டி அம்மாவ பாக்கணும் போல இருக்கு ரொம்ப நாள் ஆச்சு என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல? போன்ல பேசும் போதுகூட ஒரு மாதிரி பேசுனாங்க அவங்க குரலே சரியில்ல நா இவங்க கூடவே கிளம்புறேன் ப்ளீஸ் ஆன்ட்டி இனி ரெண்டு நாள் இல்ல ரெண்டு மணி நேரம் கூட என்னால இங்க இருக்க முடியாது சாரி ஆன்ட்டி” என்னும் போதே குரல் கமரியது
சஞ்சளாவின் முகம் போன போக்கை கண்டு“சித்தி அவ இத்தனை நாள் இங்க இருந்ததே பெரிய விஷயம் கிளம்பட்டும் விடுங்க! ஆன்ட்டிய பாக்காம ரொம்ப தவிச்சு போய் இருக்கா தடுத்து நிறுத்துனா அழுதாலும் அழுதுருவா“, வைதேகி கேலியாய் பேச சட்டென தலை குனிந்து கொண்டவளுக்கு விழிகள் பனித்தது
“சரி.. பாத்து போய்ட்டு வா, போனதும் எனக்கு கால் பண்ணு மறந்துறதா சரியா!” என்று மனமில்லாமல் கூறியவர் துவாரகாவிடம்
“டேய் பாத்து கூட்டிட்டு போ என்ன?” என்று தீவிரமான பாவனையுடன் கூற
“அழுங்காம குலுங்காம பத்திரமா உங்க தங்கத்தை வீட்டுல கொண்டு போய் சேத்துடுறேன் சரியா” என்று பம்மி பணிவாய் கிண்டல் மொழியில் பேசவும்
“உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிருச்சு” என்ற சாவித்ரி “சரி பாத்து போயிட்டு வாங்க” என்று கூற
“ஓகே ட்ரையினுக்கு நேரம் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என்று பெரியவர்களிடம் ஆசி வாங்கி கொண்டு மூவரும் விடைபெற்று கிளம்பினர்
அவர்கள் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே கோவிலுக்கு செல்ல வேண்டி அன்னம் “தமயந்தி” என்று குரல் கொடுக்க
வேகமாக அறையில் இருந்து வந்தவள் “என்னங்க அத்தை?”
“கோவிலுக்கு போகணும்னு சொல்லிருந்தேன் இல்லையா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்ட தானே பொங்கல் வைக்கணும்! அதுக்கு தேவையான சாமான் எல்லாம் இருக்கு தானே எதுவும் விட்டு போகளையே?”
“பூஜைக்கு தேவையான சாமான் எல்லாமே இருக்கு நேத்து நைட்டே எடுத்து வச்சிட்டேன் அத்தை எல்லாரும் குளிச்சிட்டு கெளம்பனும் அவ்ளோ தான்” என்றதும்
“சரி நீயும் அவனும் சீக்கிரம் கிளம்பி வாங்க அவன சீக்கிரம் கிளம்ப சொல்லு வெயிலுக்கு முன்ன போய்ட்டு வந்தறலாம்” என்று அனுப்பி வைத்தவர் அடுபடிக்குள் நுழைந்து சமையலை கவனிக்க தொடங்கினார்
Advertisement