Advertisement
“ராஸ்கல் கல்யாணம் முடியட்டும் ஒன்ன கவனிக்கிற வெதத்துல கவனிச்சுக்கிடுதேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட
காத்திருந்தவர் போல மாப்பிள்ளை என்று பெருமாள்சாமி வாய் திறக்கும் முன்பே “அய்யோ மாமா நீங்களும் ஆரம்பிச்சிறாதிங்க போதும் இந்த செண்டிமெண்ட் சீன் எல்லாம் வேணாம் போய் வேலைய பாருங்க மாமா” என்று அனுப்பி வைத்துவிட்டு திரும்ப பரமசிவம் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தார்
அருகில் வந்து அமர்ந்தவன் “அப்பா” என்று அழைக்க
“அன்னம் ஓம்புள்ள காரணோ என்னனு இன்னும் சொல்லவே இல்ல என்னனு கேட்டு சொல்லு” என்று வீம்பு கொண்டு அமர்ந்திருக்க
நடந்த விஷயத்தை விவரித்து கூற அதற்கும் அவர் எகிறினாரே தவிர பரிவாக பேசவில்லை
“இதுக்கு தான் தலபாட அடிச்சுகிட்டேன் இந்த உத்தியோக வேணா வேற பொழப்பை பாருன்னு கேட்டா தான எம்பேச்ச எவே கேக்கா போலீஸ் உத்தியோகம் பொல்லாத வேலை..!” என்று நொடித்து கொள்ள
“ஆமா இவன வைய்யாட்டி ஒம்ம கண்ணுல ஒறக்கமே வாராதே எப்ப பாரு புள்ளைய கரிச்சுகொட்டிகிட்டே கெடக்கிறது புள்ளை உக்கி போய் வந்துருக்கானே நாலு வார்த்தை நல்ல வெதமா பேசுவோம்னு இல்ல” என்று முகத்தை சுண்டிவைத்து கொண்டு சிடுசிடுத்தவர் நீ வாய்யா போலா அவுரு கெடக்குறாரு” என்று அழைத்து கொண்டு செல்ல இருவரையும் பார்த்தவர் வேகமாக துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றார்
அறைக்குள் நுழைந்தவன் “தேவிம்மா” என்று அழைக்க அலைபேசியில் பதிந்திருந்த பார்வையை நிமிர்த்தவில்லை
தயங்கியபடி அருகில் வந்து அமர “சஞ்சு நிச்சயம் முடிஞ்சிருச்சு இனி உரிமையா பேசலாம் பக்கத்துல உக்காரலாம்னு நினைச்ச என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கடுகடுத்தவள் வேகமாக எழுந்து வைஷாலியின் அருகில் சென்று அமர்ந்து கொள்ள பாவமாக பார்த்த சஞ்சளாவிடம் சங்கடமான புன்னகை உதிர்த்தவன்
“டேய் நாங்க கிளம்புறோம்” என்ற குரலில் திரும்பி பார்க்க
“அத சொல்லுறதுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்” என்றான் துவராகா, தணிவாக கூறினாலும் கோபத்தின் வெளிப்பாடு நன்றாகவே தெரிந்தது அவன் முகத்தில் நண்பர்கள் இருவரும் ஆளுக்கொருபக்கமாய் முறுக்கி கொண்டு நிற்பதை கண்டு சிரிப்பு வர
“ப்ச் இப்போ என்னாச்சுன்னு இந்த முடிவு?” என்று சிரிப்பை அடக்கி கொண்டே கேட்க
“காரணமெல்லாம் சொல்ல முடியாது நாங்க கிளம்புறோம் அவ்ளோ தான்” என்று துவாரகா அலட்சியமாய் பதிலுறைக்க
“சரி கிளம்புங்க” என்றதும் இருவருக்கும் முசுமுசுவென கோபம் எழ “டேய்…”என்று வேகமாக அவன் மீது பாய்ந்தவர்கள் “என்னடா நினைச்சிட்டு இருக்க விட்டா நீயே பஸ் ஏத்தி விட்டுருவ போல” என்று துவாரகா அவன் சட்டையை பற்றி உலுக்க
“நேத்து நைட் அவ்ளோ கோபமா பேசிட்டு போன இப்போ என்னடான்னா மாப்பிள்ளை விடுக்காரங்களை வரவேணாம்னு சொல்லி உனக்கு நிச்சயம் பண்ணிகிட்ட எங்ககிட்ட ஒரு வார்த்தை இப்டி நடக்க போகுதுன்னு சொல்ல தோணலைல” என்று விஜயன் காரசராமாக பேச
நண்பர்கள் இருவரும் விஷ்ணுவின் மீது உருண்டு புரண்டனர் “டேய் விடுங்கடா சொல்லாம விட்டது தப்பு தான் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் இப்டி பண்ணேன்” என்று இருவரிடமிருந்து திமிரியபடி கூறியவன்
“ஏய் பாத்துட்டு நிக்கிற விலக்கி விடுடி பக்கி” என்று வைஷாலியை உதவிக்கு அழைக்க
“அஸ்க் புஸ்க்கு எனக்கும் சேத்து நாலு அடி வைங்க என்னமா பீல் பண்ணி பேசுன்னான் நா இன்னும் ஆறு மாசம் தான் உயிரோட இருப்பேன் அதுக்குள்ள என்னோட தேவிம்மாவ வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துறனும்ன்னு! ஏப்பா என்னா நடிப்பு நீ போலீஸ் வேலைய விட்டுட்டு ஹீரோவா நடிக்க போயிரு நல்ல கலெக்சன் கட்டும் பாவி நானும் நீ சொன்னதை உண்மைன்னு நம்பி அழுதேனேடா” என்று ஒருபக்கத்திற்கு மூச்சு வாங்க பேசியவள் “மொத்துங்கடா அவன நல்லா வேணும்” என்று பல்லை கடித்து கூற
“கிராதகி நீயெல்லாம் ஒரு பிரெண்டா” என்றவன் “டேய் விடுங்கடா என்ன! இப்போ நா உண்மைய சொல்லவா வேணாமா” என்று கத்தவும் அவனிடமிருந்து விலகியவர்கள் மூச்சு வாங்கியபடி முறைத்தனர்
வைஷாலியும் விஷ்ணுவும் எதை குறித்து பேசி கொள்கின்றனர் என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் தலையை பிய்த்து கொள்ள “அய்யோ.. நீங்க பேசிக்கிறது எதுவுமே எங்க ரெண்டு பேருக்கும் புரியல உண்மை என்னன்னு தெளிவா சொல்லுங்க” என்று விஜயன் கத்த
மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டு ஆசுவாசபடுத்தியவன் “உங்க எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்றேன் அதுக்கு முன்னாடி ரொம்ப டையர்டா இருக்கு அதனால தேவிம்மா மாமாவுக்கு ஒரு மோர் கொண்டுவாயேன்” என்று பணிக்க
“டேய் இது உனக்கே ஓவரா தெரியல இந்த நேரத்துல எந்த கேன கிறுக்கனாவது மோர் குடிப்பானா” என்று துவாரகா கூறியதும் சஞ்சளா கிளுக்கி சிரித்தாள்
“சரவெடி சீரியஸா பேசிட்டு இருக்கும் போது என்ன சிரிப்பு” என்று அவளை அடிகுரலில் உறுமி அடக்கினான் துவாரகேஷ்
“நான் குடிப்பேன் நீ கொண்டு வா தேவிம்மா” என்றவன் அவள் முறைப்பை கண்டு “சரி சரி இவங்க முன்னாடி அப்டி பாக்காத அதுக்கும் சேத்து ஓட்டுவானுங்க” என்று சலித்து கொண்டவன்
“சஞ்சும்மா அண்ணாவுக்கு ஒரு மோர் கொண்டுவாடா” என்று அனுப்பி வைக்க
வேகமாக சென்று இருப்பதிலேயே பெரிய டம்ளராக பார்த்து நிரம்பி வழியும் அளவிற்கு கொண்டு வந்து நீட்ட டம்ளரை பார்த்தவன் “ஏம்மா..?” என்று திகைத்து பார்க்க
” குடிங்ண்ணா தெம்பா பேச வேணாமா” என்றதும் வாங்கி மிடறு மிடராக ரசித்து ருசித்து சப்பு கொட்டி குடித்து முடித்தவன் “சூப்பர்” என்று நீர் மோருக்கு புகழாரம் சுட்ட
அனைவரும் கண்கள் இடுங்க தீவிரமாக முறைத்து பார்த்தனர் “சரி சரி பொசுங்காதிங்க சொல்றேன்” என்று இரவு நடந்ததை கூற தொடங்கினான் விஷ்ணு
இரவு வைதேகியிடம் கோபமாக பேசிவிட்டு தோட்டத்தில் சென்று அமர்ந்து வேதனையில் உழன்றவன் மழையை உணர்ந்து மோட்டார் அறைக்குள் சென்று முடங்க அலைபேசியில் மின்னிய புதிய என்னை கண்டு புருவம் சுருக்கி உயிர்பித்தவன் “ஹலோ” என்றதும்
மறுமுனையில் “விஷ்ணு நா கவிதா பேசுறேன் நீ இப்போ எங்க இருக்க உன்ன உடனே பாக்கணும்” என்று குரலில் அவசரத்தை காட்டி கூறினாள்
“இந்த நேரத்துல.. உடனே பேசனும்னு சொல்ற? அப்டியென்ன தலை போற விஷயம்“
“அத நேரல தான் சொல்ல முடியும் நீ எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு உன்ன பாக்க நானே வறேன் முக்கியமான விஷயம்” என்று மறிமுனையில் கூற
“தோட்டத்துல இருக்கேன் தனியா வந்துருவியா” என்று கரிசனம் காட்ட மெல்லிய புன்னகை அரும்பியது அவளிடத்தில் சிரிப்பின் ஒலி அவன் காதுகளுக்கு எட்டியதோ என்னவோ “சரி வா நா வெய்ட் பன்றேன்” என்றிட
“சரி நீ அங்கயே இரு நா அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட அவளுக்காக காத்திருந்தான் விஷ்ணு
சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்தவள் ஸ்கூட்டியை வரப்பு மேட்டிலயே நிறுத்தி விட்டு வயலில் இறங்கி டர்ச் லைட்டின் வழிகாட்டுதலின்படி நடக்க வெளிச்சம் வரும் திசையை கண்டு ஆள் வருவதை உணர்ந்து எழுந்து சென்று மோட்டார் அறை விளைக்கை எரிய விட்டான் விஷ்ணு
சுற்றிலும் பார்வையை சுழல விட்டு டார்ச் லைட்டை நாலா புறமும் திருப்பி காட்டி வரப்பில் கால் வழுக்கிவிடாதவாறு சூதனமாக அடிகளை எடுத்து வைத்து வந்தவள் விஷ்ணுவின் அருகில் வந்ததும் ஒருவித படபடப்பும் நீண்ட நாள் காணாததின் பரிதவிப்பும் தொற்றி கொள்ள வார்த்தைகள் வலுவின்றி திக்கின “எ எ..ப்டி இருக்க விஷ்ணு பாத்து.. ரொ ரொம்ப நாள் ஆச்சு” என்று ஏக்க பார்வையில் அவன் விழிகளை ஊடுருவியவாறு கேட்டதை கூறியவன் பார்வையை சஞ்சளாவின் அருகில் இருந்தவளிடம் திருப்ப கனல் வீசும் பார்வையை அவன் மீது செலுத்தி கொண்டிருந்தாள் வைதேகி
‘ஒர்க் அவுட் ஆகுது விஷ்ணு கண்டீனியு பண்ணு” என்று மனதோடு பேசி கொள்ள
“சஞ்சு கொஞ்சம் வீடு வரைக்கும் வர்றியா எனக்கு தூக்கமா வருது” என்று விஷ்ணுவை முறைத்து கொண்டே கேட்டவளுக்கு மறுப்பு கூறாமல் உடன் சென்றாள் சஞ்சளா
முகம் சுருங்க அவள் செல்லும் திசையை பார்த்து கொண்டிருந்தான் ஏக்க பார்வையோடு
தொடரும்…
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா
Advertisement