Advertisement
சசிதரனுடன் வெளியே வந்த அபய்தேவ் இவனைப் பார்த்து நக்கலுடன், “வாங்கினது பத்தலையா! ஒரு முறை தான் உயிர் பிச்சை கொடுக்க முடியும்” என்றான்.
‘டேய்’ என்று கத்த முயற்சித்தபடி வெகுண்ட குற்றாசு அபய்தேவ் மீது பாய,
அவன் பாயும் முன் அவனை தடுத்து நிறுத்திய சசிதரன், “யாருணா?” என்று கேட்டான்.
சசிதரனின் பிடியில் திமிறியபடி தன்னை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்த குற்றாசை பார்த்தபடி, “அபியோட நிலைக்கு காரணமானவன்” என்றவனின் குரலில் இன்னமும் கோபம் இருந்தது.
அடுத்த நொடி சசிதரன் சிறிதும் யோசிக்காமல் கோபத்துடன் குற்றாசின் மூக்கில் குத்து விட,
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத குற்றாசு ‘ஆ’ என்று அலறியபடி இரத்தம் வடிந்த மூக்கை பிடித்தான்.
மீண்டும் அவனைத் தாக்க முயற்சித்த சசிதரனை தடுத்த அபய்தேவ் குற்றாசிடம், “உசுரை காப்பாத்திக்கணும்னா இடத்தை காலி செய்” என்று உறுமினான்.
மூக்குடன் தலையும் ‘வின்’ என்று தெரிக்கவும் குற்றாசு வைத்தியர் வீட்டை நோக்கி சென்றான்.
“எப்படி அண்ணா இவனை சும்மா விட்டீங்க?” என்று சசிதரன் கொந்தளித்தான்.
ஒற்றை கையால் அவனை அடக்கிய ஆபய்தேவ், “அதெல்லாம் செஞ்சுவிட்டாச்சு.. நீ இப்ப ஊருக்கு கிளம்பு” என்றான்.
அதையும் மீறி சீறிய சசிதரனை அடக்க அபய்தேவின், “சசி” என்ற ஒற்றை அழைப்பு போதுமானதாக இருந்தது.
சசிதரனின் முகத்தில் கோபம் எஞ்சி இருப்பதைக் கண்ட அபய்தேவ் சுற்றுபுறத்தை கருத்தில் கொண்டு மெல்லிய குரலில், “இனி அவனால் பேசவே முடியாது டா..” என்றான். பின் இயல்பு குரலில், “நாம அப்புறம் பேசலாம்.. நீ கிளம்பு” என்று கூறி அவனை கிளம்பிவிட்டான்.