Advertisement

ஓம் நமச்சிவாய..

 மலரே மன்னிப்பாயா பதின்மூன்று 

ராகவிற்கு குடிப்பழக்கம் என்பது காலேஜில் இருந்து ஆரம்பமாகியது..

 நண்பர்கள் உடன் சேர்ந்து பர்த்டே பார்ட்டி. சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் தான் பெரிய அளவில் பீர் குடிக்க ஆரம்பித்தான்..

 படிக்கும் காலத்தில் உயரமாக இருந்தாலும் உயரத்திற்கு ஏற்ற கட்டுடல் இல்லை.. அவனது தோற்றம் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும்படியாக இருக்காது..

 அதனாலேயே பெண்கள் அவனைக் கண்டும் காணாமலும் அவனைக் கடந்து செல்வார்களே தவிர அவன் மேல் விழுந்து பழகும் ரகமோ அவனை காதல் வளையில் வீழ்த்தவோ இதுவரை யாரும் முயன்றதில்லை..

 அதனால் அவனது உடலை சிக்ஸ் பேக் 8 பேக் என்ன வரவைத்து கட்டுடல் மேனியாக ஆக்குவதற்கு நண்பர்களின் தூண்டுதலின் பேரில் அப்பொழுது பீர் குடிக்க ஆரம்பித்தான்..

 காலப்போக்கில் காலேஜ் முடித்ததும் அது அவனது தினசரி பழக்கத்தில் ஒன்றாக மாறிவிட்டது..

 மாலையில் காலேஜ் முடிந்து வந்ததும் தினமும் இரவில் உணவின் பின் ரெண்டு பைக் பீர் குடித்துவிட்டு உறங்கி விடுவான்..

 காலையில் எப்பொழுதுமே புத்துணர்வோடு தான் எழுவான்..

 அவனைப் பார்த்தால் இரவில் யாரும் குடித்துவிட்டு வந்தவன் என்றே கூற மாட்டார்கள்..

  அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இதுவரை அவனுக்கு வந்ததில்லை..

 அது அவனுக்கு தவறாகவும் தெரியவில்லை..

 உடலுக்கு கேடு என்றும் அவன் நினைக்கவில்லை.. அவன் குடிப்பதால் அவனுக்கோ மற்றவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லாததால் அதை அவன் பெரிதாக எண்ணவில்லை…

 அதே போல் தான் இன்றும் அவன் குடிக்க சென்றான் ஆனால் அது அளவுக்கு அதிகமாக சென்று விட்டது..

 வார இறுதி நாட்கள் வேறு அதனால் அது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை..

 தள்ளாடியபடி அவன் அறைக்குள் வருவதை நடேசன் பார்த்துக் கொண்டிருந்தார்..

 ராகவ் திருமணம் முடித்தபின்.

 குமரனும் நடேசனும் அந்த சிறிய ஹாலில் உறங்குவார்கள்..

 மற்ற அறையில் சகுந்தலாவும் சுவாதியும் உறங்குவார்கள்..

 ராகவின் இந்நிலையையும் குடும்பத்தின் சூழ்நிலையையும் யோசித்த நடேசன் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார்..

 சாதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் கோணம் வேறாக இருக்கும்..

 ஆனால் போதை ஏறியதும் அவர்களுக்கு பார்ப்பது அனைத்தும் வித்தியாசமாக தெரியும்..

 அதேபோல் 30 வருடம் அவன் காத்து வந்த கன்னி பையன் என்ற கெத்து இன்றோடு முடிந்தது..

 மோதலில் தான் காதல் ஆரம்பிக்கும் என்பது ஓர் எழுதப்படாத விதியாகும்..

 இதுவரை அவனும் எந்த பெண்ணையும் திரும்பியும் பார்த்ததில்லை. அவனையும் எந்த பெண்களும் திரும்பி பார்த்ததும் இல்லை..

 பேச்சுவார்த்தை சண்டை மோதல் என ஒரு பெண்ணோடு அவனுக்கு ஏற்பட்டது என்றால் அது நிலாவிடம் மட்டுமே..

 மாணவிகளை மாணவியாகவே மட்டும் பார்த்து வந்தான்..

 இன்று ஒரு மாணவி அவனது மனைவி ஆகி உரிமை பெற்றவள் ஆனதும். அவளது கட்டழகை கள்ளத்தனமாக ரசிக்க ஆரம்பித்தான்..

 அந்த ரசனை உள்ளே போன போதையில் காதலாக மாறியது..

 காதலை காதல் என்று உணராமல் தற்பொழுது உடலுக்கு ஏற்பட்ட பசி என்று உணர்ந்து அவளை முழுவதுமாக அவனுக்கு உடலளவில் மட்டுமே மனைவியாக்கிக் கொள்ள தீர்மானித்தான்..

 நிலாவிற்கும் அவனைப் பிடித்து தான் இருந்தது..

 அவனை வகுப்பறையிலும் சரி திருமணத்தின் பின்னும் சரி சைட் அடிக்க ஆரம்பித்திருந்தாள்..

 ஆனால் தற்பொழுது அவள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருக்கவில்லை..

 அவள் உடுத்தியிருந்த நைட்டி சற்று மேலே உயர்ந்து அவளது கால்கள் வெள்ளி நீரோடை போன்று பளபளப்பாக தெரிந்தது அவன் கண்ணுக்கு..

 அவனுக்கு உள்ளே சென்ற ராட்சசன் எதையும் அவனை நின்று நிதானமாக முடிவு எடுக்கும் நிலையில் விடவில்லை என்றே கூறலாம்..

 எதைப் பற்றியும் யோசிக்காமல் நின்ற மாதிரியே அவளது அருகே சென்று சரிந்து படுத்தான்..

” அப்படியே காந்தம் மாதிரி ஜிவ்னு சுண்டி இழுக்குறியேடி.. ” என்று முணங்கி கொண்டே கண் காலில் இருந்தாலும்..

கை அதன் வேலையை திறம்பட செய்ய ஆரம்பித்தது..

 அவன் கை அவள் மேல் ஊர்வலம் போகும் பொழுதே அவள் திடுக்கிட்டு எழும்பி இருக்க முயற்சித்தாள்..

ஆனால் அவனது வலுவான கைகள் இரண்டும் அவளை எழ விடாமல் தடுத்து அவன் அருகே இழுத்தது..

 அப்பொழுதுதான் என்ன நடக்க இருக்கிறது என்பதை சற்று உணர்ந்தவளாக அவனை மிரண்டு பார்த்தாள் நிலா..

முகத்திற்கு அருகே அவனது மது வாடை அடிக்கவும் அனைத்தையும் ஒரு நொடியில் புரிந்து கொண்டாள்..

 எவ்வளவு தைரியமான பெண்ணுக்கும் இந்த ஓர் நேரத்தில் அவளது தைரியத்தையும் மன உறுதியையும் பயம் என்னும் உணர்வு வென்று விடும்..

 அவளது இதழில் அவனது இதழை இணைக்க நெருங்கும் நேரம் அவனது மது வாடை தாங்காமல் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

” ஏய் என்னடி பிடிக்கலையா? ரொம்ப பண்ணுற?. இனி இதெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும்.. என்னைப் பற்றி என்ன ஏதுன்னு எதுவுமே தெரியாமல் உங்கப்பன் சொன்ன உடனே கழுத்தை நீட்டினதானே..

 கல்யாணம் என்றால் குழந்தை பிள்ளைகள் மணலில் வீடு கட்டி விளையாடுவது என்று நினைப்பா என்ன?.. உனக்கு நான் எனக்கு நீ. என்று முடிவாகி முடிச்சும் போட்டாச்சு. இதை யாராலும் மாற்ற முடியாது.. உன்னை எப்ப நான் புரிஞ்சு என்னை எப்ப நீ புரிஞ்சு.. அதெல்லாம் போற போக்குல புரிஞ்சுக்கலாம்.. இனி காத்திருக்கிறதுல பயனில்லை.. வேணும்னா நீ படிக்கிற பொண்ணு அதனால இப்போதைக்கு பாப்பா மட்டும் வராமல் பாத்துக்கலாம்..

புரிஞ்சுதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு சொல்லி நீ ஒரு கோணத்தில் நான் ஒரு கோணத்தில் இருந்தால் அது ஒரு முடிவுக்கு வராது.. வாழ்க்கை ஆரம்பிச்சு அது போற போக்குல நாமளும் போய் ஒருவரை ஒருவர் புரித்து கொள்ளலாம்.. வாடி இப்போ எனக்கு நீ வேணும்.. காதல் வந்ததுக்கு பிறகு தான் கூடல் வரணும் என்று இருந்தால். இந்த தமிழ் நாட்டில் பாதி குடும்பம் இருந்த தடம் தெரியாமல் அழிஞ்சு போயிருக்கும்..” என்று கூறி அவளை இழுத்து அவன் மேல் போட்டு அவள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இதழோடு இதழ் இணைத்து பூவில் வண்டு தேன் குடித்தது..

 அவளுக்கு அவனை பிடிக்கும்.. ஆனால் தற்பொழுது வாழ்வைப் பற்றிய எந்த ஒரு சரியான முடிவும் எடுக்க முடியாததால் அவனை ஆரம்பத்தில் எதிர்த்தாள் நிலா..

பிடிக்காத இருவர் இணைந்தாலே உணர்வு பொக்கிஷம் தூண்டப்பட்டு உடல் ஒத்துழைப்பு வழங்கும்..

 இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் படித்தம் என்னும் இணைப்பில் உடல்கள் ரெண்டும் சதிராட உணர்வுகள் கிளர்ந்து எழ இருவரும் பூரணமான ஒத்துழைப்போடு ஓர் அழகிய தாம்பத்தியம் அங்கு அரங்கேறியது..

 அவளும் விருந்து படைத்தாள்.அவனும் பசியாற விருந்து உண்டான்..

 இருவரின் ஆடைகளும் விடுதலை பெற்று அறையில் ஒரு மூலையில் அதற்கான இடத்தை சென்றடைந்ததும்..

இங்கு ஜோடி புறாக்கள் அதன் இணையோடு இணை சேர்ந்தது..

 பிரம்மச்சாரி சம்சாரி ஆனான்..

 நிலா திருமதியானாள்..

 அவனது முப்பது வருட தேடல்களும் உடனே முடிவு பெறாமல் தவிக்க. பெண்ணின் சோர்வை பார்த்து தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தான் ராகவ்..

 அதிகாலை மூன்று மணிக்கு இருவரும் கண்ணுறங்கினார்கள்..

 அவள் முதல் நாள் எவ்வாறு அவனை உறக்கத்தில் அணைத்துக் கொண்டு உறங்கினாளோ அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இம்முறை தெரிந்தே அவனை அணைத்துக்கொண்டு அவனது மார்பில் தலை சாய்த்து இடுப்போடு காலை போட்டு உடல் அசதியில் அயர்ந்து உறங்கினாள்..

 நன்கு விடிந்து காலை 8 மணி ஆகியது.

 வெளியே அனைவரும் எழுந்து அவர்களது வேலையை முடித்து ராகவ் நிலாவின் வருகைக்காக அனைவரும் ஹாலில் காத்திருந்தார்கள்..

 நடேசன் ஒரு முடிவெடுத்தபடியால் இன்று சகுந்தலாவையும் வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து அவர்களும் கடலுக்குச் செல்லாமல் இருந்தார்கள்..

 பொறுத்து பொறுத்து பார்த்த சகுந்தலா காலையில் எழுந்து இதோடு மூன்றாவது பிளாக் டீ நடேசன் குடித்து முடித்தும் ராகவ் நிலா அறையில் இருந்து வராமல் இருந்தபடியால்.

 அறை கதவே உடையும்படி தட்டினார்..

 வெளியே ஆட்கள் சத்தம் பறவைகள் சத்தம் கதவு தட்டும் சத்தம் என பல ஒலிகள் ராகவின் காதில் விழ அவன் தான் துயில் கலைந்து முதலில் கண்விழித்தான்..

 போதை தெளிந்ததும் அவன் படுக்கையில் இருந்து உடல் வலியால் உடனே எழ முடியவில்லை..

 அப்பொழுதுதான் அனைத்தையும் சற்று நேரம் யோசித்து சுற்றிப் பார்த்தான்..

 குளிரின் காரணமாக அவனது போர்வை மற்றும் லுங்கியை அவள் நன்கு போர்த்திக் கொண்டு உறங்கினாள்..

 அவன் ஆதிவாசியாக இருந்தான்..

” எல்லாம் இவளால வந்தது. மூடி மறைக்க வேண்டியதை மூடாமல் தழுக்கி குலுக்கி மினுக்கி நல்லா இருந்த என்னையும் மயக்கி கெட்ட பையனா மாத்திட்டா சண்டாளி எருமை.. பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு எப்படி குறட்டை விட்டு தூங்குகிறாள்.. ஏய் எழுடி எருமை நேரம் என்ன தெரியுமா?.. நேரம் காலம் கூட உன்னோடதும் உங்க அப்பனோட பேச்சைக் கேட்டு சாவகாசமா வருமா என்ன?.. நேரம் 8 மணி ஆயிடுச்சு டி. எழுந்து போட வேண்டியதை போட்டு மூடு எருமை.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பாரு கூச்சமே இல்லாமலுக்கு எப்படி கிடக்கிறா குட்டி கழுதை ” என்று அவளை திட்டிக்கொண்டு தட்டி அசைத்து உருட்டி கோன் அடித்து என்ன பல முயற்சிகள் செய்த பின் தான் அவள் அசைந்து கொடுத்தாள்..

 அரைக்கண் திறந்து ” இப்ப என்ன வாத்தி திரும்ப என்னால முடியாது.. போட எருமை. காஞ்ச மாடு வெள்ளாமை காட்டுக்குள்ள பாஞ்ச மாதிரி பண்ணிட்டு உடம்பெல்லாம் பச்சை வலி வலிக்கிது. கை கால் அசைக்கவே முடியல.. என் செல்ல வாத்தி தானே இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன். ப்ளீஸ் ” என்றாள் முகம் சுருக்கி அழகு காட்டி..

 அவள் அழகில் அவன் மயங்கலாம் ஆனால் வீட்டில் இருப்பவர்கள் மயங்குவார்களா என்ன?.. சகுந்தலா தொடர்ந்து ராகவியின் பெயரையும் கூறி கதவையும் தட்டி அழைத்து பார்த்தார்..

 உள்ளே இருந்து எந்த பதிலும் வராமல் போனதால் அவர் சமையல் அறைக்கு சென்று இன்று அவரது கையால் சமையலை ஆரம்பித்தார்..

 சகுந்தலாவின் அதிகாரப் குரலில் சற்று தெளிந்து நடப்பதை உணர்ந்து தூக்கம் தொலைத்து எழுந்து அமர்ந்தாள்..

 ராகவ் அவளது உடைகளை எடுத்து அருகே கொடுக்கவும் நேற்று இரவு பக்கேட் ஒன்றில் தண்ணீர் எடுத்து அறைக்குள் வைத்திருந்தபடியால் முகம் கை கால் கழுவி தலை சீவி பொட்டு வைத்து வேறு உடை மாற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி வர முயன்றாள்..

Advertisement