அவன்காரணத்தைக்கேட்டுவெண்மதிமனதிற்குள்கணவனைமெச்சினாலும், வெளியேமுறைத்துவைத்தாள். மனைவிபொய்யாகமுறைக்கிறாள்எனஇளமாறனுக்குமட்டும்புரியாதாஎன்ன? அவன் சிரிக்க…
வெண்மதி அவனைப் பார்த்து “போடா…” என்றாள்.
“போடவா… இருடி உன்னை வச்சுக்கிறேன்.” என்றான்.
“நீங்க இந்த வச்சிக்கிருதை மட்டும் விடவே மாட்டீங்களா?” என வெண்மதி துடுக்காக கேட்க,
“ரொம்ப பேசுற.” என்றான். கணவன் எப்படி சொன்னான் என வெண்மதிக்கு புரியவில்லை.
கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என நினைத்தவள், போவோம் போய் தான் பார்ப்போம். என்ன செஞ்சிட போறான் என அலட்சியமாகவே இருந்தாள்.
வீட்டிற்கு வந்து கைகால் கழுவியதும், மனைவியை அவள் எதிர்பார்க்காத நேரம், இளமாறன் அப்படியே இரண்டு கைகளால் தூக்கியவன், அவளை பால்கனிக்கு கொண்டு சென்று….
“அப்போ என்னவோ சொன்னியே இப்ப சொல்லு.” என அவளை வெளியே தூக்கிப் போடுவது போல நிற்க… அவன் போட மாட்டான் என்று தெரியும், இருந்தாலும் வெண்மதி பயந்து போனாள். மகள்கள் இருவரும் கைதட்டி ரசிக்க….