Advertisement

மதுர ப்ரியம்

7

ஷிவா, லியோனாவை மாற்றிடலாம் என நினைத்தான். காதல் எனும் அன்பு தொல்லையால்.. அவளை அணுக தொடங்கினான். அவளோடு, நெருங்கி பேசினான்.. தன் குடும்பம் பற்றி பேசினான். திருமணம் குழந்தை எனவும் ஷிவா பேச தொடங்கினான்.

ஆனால், லியோனா.. அவனின் பேச்சுகளை ரசிக்கவில்லை “ப்ளீஸ் ஷிவ்..” என தள்ளி போகத் தொடங்கினாள். ஷிவா கொஞ்சம் வேறு மாதிரி யோசித்தான்.. ஏதும் பேசாமல், அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுத்தான். அவளை வெளியே கூட்டி போனான்.. அவளுக்கு வெளியே.. இயற்கையை ரசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.. வார இறுதியில் வெளியே சென்றனர். அது அவளை மாற்றியது. லியோனா.. ஷிவாவிடம் சகஜமாக நடக்கத்  தொடங்கினாள்.. தன்னை கொஞ்சம் தளர்த்திக் கொண்டாள்.

ஷிவா, தன் வீட்டிலும் பேச தொடங்கினான். ‘தான் காதலிப்பதாகவும்.. அவளையே திருமணம் செய்ய சம்மதம் வேண்டும்’ என்றான்.

பெற்றோர் கோவமாகினர். வீட்டில் சண்டைகள் தொடங்கியது. ஷிவா, லியோனாவைதான் திருமணம் செய்வேன் என போராட தொடங்கினான். பெற்றரோடு சண்டை.. அவர்கள் போன் செய்தால் எடுப்பதில்லை.. பிடிவாதம் பிடித்தான்.

நாட்கள் சென்றது.. கோதை ஒத்துக் கொள்ளவில்லை. ஷிவா இன்னும் தீவிரமாக அவர்களிடமிருந்து ஒதுங்க தொடங்கினான். ஹரிணி அழைத்தாலும் எடுப்பதில்லை.. அவளுக்கு குழந்தை பிறந்தது.. அதற்கும் வரவில்லை. அந்த குழந்தைக்கு  ஒரு வயது ஆகும் போது முடியிறக்க.. மாமாவான ஷிவாவை அழைத்தனர்.. ’வரமுடியாது’ என மறுத்துவிட்டான்.

இப்படி இந்தியா செல்லாமல் தான் அவளோடு இருப்பதை, லியோனாவிடமும் பகிர்ந்தான். அவளோ ‘உங்களுக்கு போகணும்ன்னா.. போயிட்டு வாங்க, நான் என்ன நினைப்பேன்.. நீங்க வீட்டில் சொல்றபடி கேளுங்க..’ என்றுவிட்டாள்.

ஷிவா “அப்படி எல்லாம் போக முடியாது லியோனா.. நான் நம்ம மேரேஜ் பத்தி சொல்றேனில்ல.. அதான் அவங்க என்னை கூப்பிடுறாங்க..” என அவன் விளக்கம் கொடுக்க.. 

லியோனா கோவமானாள் “நான் எந்த கமிட்மெண்ட்டும் உங்களுக்கு கொடுக்கலை ஷிவ்.. நீங்க என்னை போர்ஸ் பண்ண கூடாது” என்றாள்.

ஷிவா, கோவமாக இருந்தவளின் கைகளை பற்றிக் கொண்டான் “ப்ளீஸ்.. லியோ. என்னை புரிஞ்சிக்கோ.. என்னால் உன்னை விட்டு இருக்க முடியாது.. என் லைப் புல்லா நீ வேண்டும்” என்றான் யாசகமான குரலில்.

லியோனாவிற்கு அவனின் நிலை புரிய.. காதல் பொங்கி வருவதற்கு பதில்.. அவள் கண்ணில் அதிர்ச்சி பொங்கி வந்தது.. “நீ என்னை போர்ஸ் பண்ற.. நா… நான் எப்படி ஷிவ்.. உங்க ரூல்ஸ், எனக்கு வேண்டாம்.. நான் உன்னை விரும்பறேன்.. அதுக்காக உடனே உன்னை கல்யாணம் எல்லாம் செய்துக்க முடியாது.. சாரி ஷிவ்.. எனக்கு டைம் வேணும்..” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

தன்னவளின் இந்த கோவம்.. ஒதுக்கம் ஷிவாவை பாதித்தது. அந்த பாதிப்பு.. பெற்றோரின் பக்கம் திரும்பியது. அன்னை தந்தை பேசும் போதெல்லாம் சண்டையிட்டான் ஷிவா. சிலநாட்கள் போனை எடுக்ககூட மாட்டான்.

கோதை புலம்பினார் ‘டேய்.. சொந்தமெல்லாம் என்ன சொல்லும்.. வேண்டாம் ஷிவா.. நல்ல படிச்ச பெண்ணாக பார்க்கிறேன் இங்கே வந்திடுடா.. நீ என்ன சொன்னாலும் அந்த பெண்ணெல்லாம் வேண்டாம் டா.. இங்க வந்திடுடா.. எனக்கு சாப்பாடே இறங்கலை டா.. அப்பா வேலையே ஓடாமல் இருக்கார் டா.. உன் நினைப்புதான் எல்லோருக்கும் வந்திடுடா..’ என அவனிடம் போன் செய்து பேச தொடங்கினார்.

ஆனால், ஷிவா ஒரு கட்டத்தில் பெற்றோரிடம் பேசுவதை தவிர்த்துவிட்டான். அவர்கள் சாப்பிட முடியலை என சொன்னதை கூட பெரிதாக எடுக்காமல்.. பேசுவதை நிறுத்திவிட்டான்.. அன்னை அழைத்தால் எடுப்பதில்லை அவன். 

இங்கே, லியோனாவும் ஒரு குழப்பத்திற்கு ஆளானாள்.. அவளால்.. அவனை சமாளிக்க முடியவில்லை. நிறைய கட்டுப்பாடுகள் அவளிடம்.. எங்கே சென்றாலும் சொல்லி செல்ல வேண்டும் என்றான். தினமும் ஒரு வேலை அவள் சமைக்க வேண்டும் என்றான்.. எல்லாம் அன்பாகத்தான் சொன்னான்.. ஆனால், அவளால் இயலவில்லை. திணறினாள்.

லியோனா அடிக்கடி பண்ணை வீட்டிலேயே தங்கிக் கொண்டாள்.. அதிகமாக லிக்கர் எடுக்க தொடங்கினாள். ஷிவாவிடமிருந்து தள்ளி இருக்க தொடங்கினாள். இவனின் வீட்டிற்கு வருவதில்லை அவள்.

ஷிவா, அவளை தேட தொடங்கினான்..  என்னமோ அவளை காணாமல் அவனால் இருக்க முடிவதில்லை. அவள் அவனின் வாழ்வோடு கலந்து விட்டவளானாள். 

வார இறுதியில் ஷிவா அங்கே, அவளை தேடி பண்ணை வீடு செல்லும் படி ஆனது, இதற்கெல்லாம் அவன் ஒன்றும் சுணங்கவில்லை, தன்னவளை தேடி சென்றான்.

அப்படி அவளை அவன் தேட தொடங்க.. இவள் விலக தொடங்கினாள். அதை அவனும் உணர தொடங்கினான். அது முதல் ஷிவாவினுள்.. காதல் வெறி வந்தது எனலாம்.. அன்று சண்டை ‘ஏன் என்கிட்டயிருந்து தள்ளிப் போகிறாய்‘ என சண்டையிட்டான். 

லியோனாவும் சண்டையிட்டாள் ’நீ என்னை வேலையாள் ஆக்குகிறாய்.. என்னை எமோஷனலாக லாக் செய்கிறாய்..  நிறைய கேள்வி கேட்க்கிறாய்.. என்னுடை சுதந்திரம் போகிற்று உன்னால்..’ என் சண்டையிட்டாள் பெண். 

ஷிவாவிற்கு, தன்னுடைய தவறுகள் புரிந்தது.. அவள் வளர்ந்த விதம் வேறு என புரிந்தது.. மன்னிப்பு கோரினான்.. “சரி கல்யாணம் பற்றி பேசலை.. ஆனால், நீ என்னைத்தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்தான்.

லியோனா காதலாகவும் அச்சமாகவும் அவனை பார்த்தாள். அவனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவள்.

ஷிவா, அவளின் அருகில் நெருங்கி அவளை இடையோடு.. தன் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டான்.. லியோனா அவனின் தலை கோதி.. அவனையே பார்த்தாள் “உன்மேல் கோவமாக வருகிறது.. ஆனாலும் ஐ லவ் யூ” என்றாள்.

ஷிவா “எனக்கு தெரியும்.. என்னை, உன்னால் வெறுக்கவோ.. கோவப்பட்டு ஒதுக்கவோ முடியாதுன்னு” என்றான் காதலின் திமிராக.

லியோனா.. அவனின் நல்ல மனநிலையை தனக்கு சாதகமாக்கினாள்.. அவனிடம்  சத்தியம் வாங்கிக் கொண்டாள்.. ‘திருமணம் பற்றி பேசினால்.. என்னை சந்தேகப் படுவது போல தோன்றுகிறது.. உன்னை எந்த நிர்பந்தமும் இல்லாமல் நான் காதலித்தேன்.. என் காதல் உண்மையானது. ப்ளீஸ், அதை ஃக்கொஸ்டியின் பண்ணி என்னை.. தர்மசங்கடம் ஆக்காதே.. இந்த வாழ்க்கையில்.. உன்னோடான என் வாழ்க்கையில், எனக்கு நிம்மதி இருக்கு.. இது பிடிச்சிருக்கு.. அதை அப்படியே விட்டுடு..” என மனம் திறந்து பேசி, அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள் பெண்.

ஷிவாவும் அரை மனதாக சத்தியம் செய்து வைத்தான் அவளிடம். ஆனால், மனதுள்.. ’எப்படியேனும் இவளை திருமணம் செய்தால்தான் என் மனதுக்கு நிம்மதி. இது என்ன நிம்மதி இல்லாத வாழ்க்கை என.. அவனின் மனம் அவனை சாடிக் கொண்டே இருந்தது.

அவனுக்கு எந்த வகையிலும் அவள் தொந்திரவு கொடுக்கவில்லை. அவனுக்கு, அவன்தான் தொல்லை. அவன் வளர்ந்த விதம்தான் தொல்லை.. அவனின் நியதிகள்தான் தொல்லை. அதை அவன் தூக்கி சுமப்பதுதான் தொல்லை. மேலும் அவன் தன் கொள்கைகள் என பிடித்துக் கொள்ளுவதால் தொல்லை. அவன் தெரிந்தே தவறு செய்ததால், அந்த தவறை சகித்துக் கொண்டு அவனால் வாழ முடியவில்லை. எப்படியேனும்.. அந்த தவறை சரி செய்திட வேண்டும்.. நான் நல்லவன் என தனக்கு தானே நிரூபித்துக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.

ஆனால், அந்த போராட்டத்தில் அவன் ஒரு தவறு செய்தான். அதன் விளைவு.. சிலமாதங்களில் தெரிந்தது.

நத்தை வேகத்தில் நாட்கள் கடந்தது.

ஷிவா, லியோனவை அன்பாக பேசி மீண்டும் அழைத்து வந்தான் தன் வீட்டிற்கு. லியோனா, மீண்டும் தன்னுடைய பண்ணை வேலையை தொடங்கினாள்.. என்ன செய்தாலும் இரவு இவன் வீடு வர தொடங்கினாள். இருவரும் சேர்ந்தே சமைத்தனர்.. உண்டனர்.. ஊடலுக்கு பின் காதல் பலமானது. அவளை தங்கமாக பார்த்துக் கொண்டான். அவளின் வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக் கொண்டான். 

அன்று, லியோனா.. எங்கோ வெளியே சென்று விட்டு வந்து அமர்ந்தாள்.. ஷிவா அப்போதுதான் வேலை முடித்து வந்தான். அவளின் கோவமான முகபாவம் பார்த்து.. ஷிவா அவளிடம் பேச்சு கொடுத்தான்.

லியோனா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினாள்..  ஷிவா சந்தோஷத்தில் அவளை அள்ளிக் கொண்டான். அவள் அவனை விட்டு விலகி சென்றாள்.

அதிலிருந்து, அவனை கண்டாள்.. அவள் விலகினால்.. பிடிக்காமல் போனது அவனை. அவன் தன் பேச்சை கேட்க்காமல் தன்னை கர்ப்பமாக்கி விட்டதாக எண்ணினாள். அது ஒரு வகையில் உண்மையும் கூட.. ஷிவா, அவளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம், மாற்றி வைத்துவிட்டான். அதனால் வந்த விளைவு இந்த கர்ப்பம்.

ஷிவாவிற்கு, எப்படியும் லியோனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணம். அதனால், அவளிற்கு தெரியாமல்.. இப்படி சிலபல வேலைகள் செய்தான். அதன் விளைவு நான்கு மாதம் அவள் கர்ப்பம்.

லியோனா, எப்படியும் தன்னை திருமணம் செய்துக்கொள்வாள் என தவறாக கணித்துவிட்டான். ஆனால், லியோனா.. கருவை கலைக்க போராடினாள். மருத்துவர்கள்.. முடியாது என மறுத்துவிட்டனர். அவளின் கர்ப்பை மிகவும் வலுவிழந்து இருப்பதால், மருத்துவர்கள்.. அவளின் கருகளைப்பில் பாதிப்பு ஏற்படும் என மறுத்துவிட்டனர்.

Advertisement