Advertisement
அழைப்பை எடுத்த ப்ரனேஷ், “சொல்லு புகழ்”
“பங்ஷன் ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டு இருக்குது?”
“பைன்… பெருசா வேலை எதுவும் இல்லை…”
“கெஸ்ட் எல்லோரும் வந்தாச்சா?”
“சர்வா பாமிலி அண்ட் இனியா சிஸ்டர் அவந்தியும் அவந்தியோட பொண்ணும் வந்திருக்காங்க… நீ போன் பண்ண விஷயத்தை சொல்லு… கமலாமாவும் கலை அத்தையும் பேத்தியை பார்க்கணும்னு சொல்றாங்களா? இப்போ வரலாமானு கேட்க தான் இந்த விசாரணையா?”
புகழ்வேந்தன் சிரிக்கவும், ப்ரனேஷ், “ஸோ, அதான் விஷயம்!”
“எஸ்”
“எப்போ வரீங்க?”
“இன்னும் ஒரு மணி நேரத்தில் வரோம்… ஜஸ்ட் அ பிரெண்ட்லி விசிட் மாதிரி தான்… நாங்க வரதுக்குள்ள மலர் கிட்ட விஷயத்தை சொல்லிடு…”
“சரி வாங்க…” என்றவர், “வர்மா கிட்ட எப்போ பேசப் போற?”
“இன்னைக்கு நைட் பேசுறேன்”
“சரி வீட்டில் பார்க்கலாம்… பை”
“ஓகே… பை” என்று கூறி இருவரும் அழைப்பைத் துண்டித்தனர்.
ப்ரனேஷ், “இனியா குடிக்க பால் கொண்டு வா” என்றுவிட்டு அறைக்குச் செல்ல,
அன்பரசி இனியமலரிடம், “கூட்டத்தில் தனியா ரோமன்ஸ் பண்றதுக்கு மாம்ஸ் கிட்ட ட்ரைனிங் எடுக்கணும்” என்றார்.
தோழியின் கையில் அடி போட்ட இனியமலர், “கல்யாண வயசில் பொண்ணை வச்சுகிட்டு என்ன பேச்சுடி இது?”
“பொண்ணுக்கு கல்யாண வயசுனா என்ன! நமக்குன்னு தனி ஸ்பேஸ் வேணும்… ஏன் நீ மாம்ஸ் கூட ரோமன்ஸ் பண்ணாமயா இருக்கிற?” என்று கண்ணடித்து வினவ,
இனியமலர் வெக்கத்தை மறைத்தபடி, “போடி” என்றபடி சூடு பண்ண பாலை குவளையில் ஊற்றினார்.
அன்பரசி புன்னகையுடன், “இப்படியே போய் மாம்ஸ் முன்னாடி நில்லு, மாம்ஸ் அவ்ளோ தான்” என்று மேலும் கிண்டல் செய்ய,
இனியமலர் வரவழைத்த முறைப்புடன், “இந்த பங்ஷன் அலைச்சலில் தலை வலி வந்திருக்கும்… நீ எதையாவது சொல்லாத” என்றுவிட்டு செல்ல,
“நம்பிட்டேன்” என்ற அன்பரசியின் கிண்டல் அவரைத் தொடர்ந்தது.
தங்கள் அறையினுள் சென்ற இனியமலர் கணவரின் முகத்தைப் பார்த்தே, “என்ன விஷயம்ங்க?” என்று கேட்டபடி பாலைக் கொடுத்தார்.
பாலை வாங்கிய ப்ரனேஷ், “அம்மு பத்தி பேசணும் டா”
“என்னங்க?”
“அம்முக்கு நல்ல வரன் வந்திருக்குது… இரு நான் சொல்லி முடிச்சுக்கிறேன்… அனு பிரெண்ட் ஆதியோட அண்ணன் மதிவர்மனுக்கு நம்ம அம்முவை கேட்கிறாங்க… இந்த வரனை அம்மு வேணாம்னு சொல்ல மாட்டா… ஏன்னா… அம்முவும் வர்மாவும் விரும்புறாங்க”
“அன்னைக்கே நான் கேட்டேன் தானே!” என்று சிறு கோபத்துடன் கூறினார். ‘நான் கேட்டும் மறைச்சுடீங்களே!’ என்ற கோபம் அது.
பால் குவளையை அருகில் இருந்த சிறு மேசையில் வைத்த ப்ரனேஷ் மனைவியின் கையை பற்றியபடி, “அப்போ எனக்கும் உறுதியா எதுவும் தெரியாது டா… ஒரு யூகம் தான் இருந்துது… அம்மு சென்னை வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்னு நினைச்சேன்… ஆனா இப்போ புகழ் பேசினான்… பெரியவங்க அம்முவை பார்க்கணும்னு விரும்புறாங்க போல, அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னான்”
இனியமலர் முறைக்கவும், அவர், “என்ன டா?”
“அப்போ நீங்க சம்பந்தி கிட்ட கொஞ்ச நாளாவே பேசிட்டு தான் இருக்கிறீங்க! என்ன பார்க்கிறீங்க! நீங்க ஒருமையில் பேசுறதில் இருந்தே தெரியுதே” என்றார் காரமாக,
ப்ரனேஷ் மென்னகையுடன், “நீ இவ்ளோ புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்” என்றார்.
இனியமலர் இன்னும் முறைக்கவும், ப்ரனேஷ், “புகழ் தான் என்னை நம்ம ஹாஸ்பிடல் வந்து பார்த்தான்… அம்மு சென்னை வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்னு நினைச்சதுக்கு முக்கிய காரணம்…” என்று அரை நொடி இடைவெளி விட்டவர், “அம்முவும் வர்மாவும் காதலிக்கிறாங்க தான் ஆனா இப்போ பிரிஞ்சு இருக்கிறாங்க… அவங்களுக்குள்ள ஏதோ சின்ன சண்டை” என்றார்.
கோபம் மறந்தவராக, “என்னங்க சொல்றீங்க?” என்று இனியமலர் பதறினார்.
ப்ரனேஷ், “இதுக்காகத் தான் உன் கிட்ட முன்னாடியே சொல்லலை… கவலைப்படாத, கல்யாணத்துக்கு அப்பறம் சரி ஆகிடும்… இப்போ இதை விடு… புகழ் வீட்டில் வரதைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லலாம் வா”
“யாருலாம் வராங்க?”
“புகழ், புகழோட வைஃப் மித்ராணி, புகழோட அம்மா அண்ட் புகழோட மாமியார்” என்றவர் புகழ்வேந்தன் குடும்பத்தை பற்றி சுருக்கமாகக் கூறினார்.
பின் ப்ரனேஷ், “இப்பவே அம்மு கிட்ட சொல்ல வேணாம்”
“ஏன்?”
“சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்”
“சரி”
இருவரும் வெளியே சென்று அபிசாராவை பெண் பார்க்க வரதாக மட்டும் கூறினார்கள்.