Advertisement

அவளது இதழில் முத்தமிட்டு அவளது பேச்சை நிறுத்தியவன் பின் தன்னுள் புதையும் அளவிற்கு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டபடி கோபத்துடன், “இது மட்டும் தெரிந்திருந்தால் நான் அவ கிட்ட பேசியே இருக்க மாட்டேன்” என்றான்.
“அவ வேணும்னு செய்யலை”
 
“என்ன வேணும்னு செய்யலை? இந்த விஷயம் உன்னை எந்தளவிற்கு பாதிக்கும்னு புரியாத அளவுக்கு அவ ஒன்னும் சின்ன பாப்பா இல்லை… நீ என்ன சொன்னாலும் என்னால் அவளை மன்னிக்கவே முடியாது… நீ வேணா பெரிய மகாத்மாவா இருந்துக்கோ… என்னால் முடியாது… கொஞ்ச நாளுக்கு அவ என்னோட கண் முன்னாடி வராம பார்த்துக்கோ…” என்றான் கடும் கோபத்துடன்.
சில நொடிகளுக்கு பிறகு அபிசாரா, “நீ என்னை வெறுக்கணும்னு தான் நான் அப்படி பேசினேன்… அண்ட் தகுதினு பேசினது உன்னோட தன்மானத்தை சீண்டி உன் கோபத்தை உன்னோட வளர்ச்சியில் திசைத் திருப்ப தான்” என்றாள்.
அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தவன், “லவ் யூ ஸோ மச் சாரா” என்று கூறியபடி அவளது இதழ்களைத் தீண்டினான்.
அந்த இதழ் தீண்டல் இருவரின் உயிர் வரை சென்று தீண்டியது. முதலில் வேகமாக அழுத்தமாக முத்தமிட்டவன் பின் நிதானமாக மென்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.
 
முத்தமிட்டபடியே அவனது கரம் அவளது வெற்றிடையில் பதிந்து அழுத்தம் கொடுக்க, அவளது கை விரல்களோ அவனது சிகைகுள் நுழைந்து சிகையை இறுக்கி பிடித்தது.
இருவரும் தங்களுக்குள் கரைந்துவிடவே விரும்பினர்.
அவனது கரம் மெல்ல அவளது உடலில் வலம் வர ஆரம்பிக்க, அவன் இதழ் மற்றும் கரங்களின் மாயாஜாலத்தில் அவளது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தது.
“மதி” என்று அவள் திணறலுடன் அழைக்க,
“சாரா” என்று தாபத்துடன் அழைத்து இதழை தீண்டியபடி தடைகளை நீக்கி தனது தேடலை தொடங்கினான்.
அவளது தயக்கங்களும், சின்ன சின்ன மறுப்புகளும் அவனது வேட்கையில் மறைந்து போனது. அவளது வெட்கத்தை ரசித்தபடி நிதானமாக மென்மையாக அவளை கையாண்டான்.
ஆண்னவனின் தேடல் நீண்டுக் கொண்டே போக, பெண்ணவள், “மதி” என்று சிணுங்கினாள். அந்த சிணுங்கல் அவனிற்கு போதை ஏற்ற, தனது தேடலைத் தொடர்ந்தான்.
கூடலின் முடிவில் அவள் அவனது நெஞ்சில் தலை சாய்க்க, அவளது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “லவ் யூ டா” என்றான்.
அவள் சிறு வெட்கத்துடன், “லவ் யூ மதி” என்று கூறியபடி அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.
சில நொடிகள் கழித்து அவள், “கோபம் போயிருச்சா?” என்று கேட்டாள்.
“தேவை இல்லாத கோபம்… சாரி டா” என்றவன், “மாமாக்கும் அத்தைக்கும் தெரியுமா?” என்று கேட்டான்.
“அப்பா இல்லைனா நான் இல்லாம போயிருப்பேன்…” என்று கலங்கிய கண்களுடன் நெகிழ்ந்த குரலில் கூறியவள், “நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் டெய்லி காலையிலும் நைட்டும் பேசுவாங்க… டெய்லி எப்படியும் ‘லவ் யூ அம்மு’, ‘அப்பா அம்முவை ரொம்ப மிஸ் பண்றேன்’, ‘அப்பாக்கு அம்மு தான் முக்கியம்’ னு இப்படி நிறைய சொல்லுவாங்க… அதெல்லாம் தான் என்னை உடைஞ்சுப் போகாம உயிர்ப்புடன் வச்சுது”
 
“மாமாக்கு எப்போ தெரியும்?”
 
“நான் ஊருக்கு போறேன்னு சொன்ன அன்னைக்கே தெரியும்னு சொன்னாங்க… அம்மாக்கு நம்ம மரேஜ் பிக்ஸ் ஆன அன்னைக்கு தான் தெரியும்… அம்மாக்கு அனு மேல செம கோபம்” என்று கூறி அன்று நடந்ததையும், தன்னை குறித்து பெற்றோரின் மனநிலையையும் கூறினாள்.
பின், “அப்பாக்கு முன்னாடியே தெரியும்னு கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும்… அப்பா செம தெரியுமா! ஹீ இஸ் மை ஹீரோ” என்று அவள் உணர்ச்சிப் பூர்வமாக கூறியதை பொறாமையின்றி மென்னகையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள், “ஒரே நேரத்தில் என்னையும் தேற்றி அனு மனசில் இருந்த குற்ற உணர்ச்சியையும் போக்கி… அப்பா சான்சே இல்லை” என்றாள்.
அவன் இறுகிய குரலில், “அவளைப் பத்தி இனி என் கிட்ட பேசாத” என்றான்.
அவனது கோபம் தனக்கானது என்பதில் மனம் நெகிழ்ந்தவள் அவன் இதழில் இதழ் பதித்து, “அம் ஸோ பிலெஸ்டு டு கெட் யூ… லவ் யூ ஸோ மச் மதி” என்றாள்.
“மீ டூ லவ் யூ ஸோ மச் டா… நீ கிடைக்க நானும் பிலெஸ்டு… அதை புரிஞ்சுக்காம  நானும் சேர்ந்து உன்னை கஷ்ட படுத்திட்டேன்… சா…” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“இன்னொரு தடவ சாரி சொன்ன, கடிச்சு வச்சிருவேன்” என்று சிறு கோபத்துடன் கூற,
அவனோ உல்லாசமாக சிரித்தபடி, “உதட்டில் தானே!” என்று கேட்டு கண் சிமிட்டினான்.
“கேடி சில்கி” என்றபடி அவனது புஜத்தில் லேசாக அடித்தாள்.
அவளது உதட்டை ஒற்றை விரலால் வருடியபடி, “அக்சுவலி… இந்த சில்கி உதட்டால் நீ சில்கினு கூப்பிடுறது எனக்கு எப்போதுமே பிடிக்கும்” என்றான்.
“சில்கி பையா” என்று அவள் கிறக்கத்துடன் அழைக்க,
அவள் இதழில் நீண்ட முத்தமிட்டவன், “இப்படி கூப்பிட்ட, நான் முதலில் இருந்து கோட்டைப் போட்டு காதல் செய்ய ஆரம்பிப்பேன்” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் வெட்கத்தை மறைத்தபடி, “ஆரம்பிப்ப… ஆரம்பிப்ப… கொஞ்ச நேரமாச்சு தூங்குவோம்… அப்போ தான் ஆபீஸ் அண்ட் காலேஜ் போய் தூங்காம இருப்போம்” என்றாள்.
 
அவன் அமைதியாக இருக்க, அவள், “என்ன?” என்றாள் புருவம் ஏற்றி.
அவன் அணைப்பை இறுக்கியபடி, “இப்படியே எங்கேயாவது உன்னைக் கடத்திட்டு போய்டலாமானு யோசிக்கிறேன்” என்றான்.
அவள் குறும்படம், “இப்படியேவா!!!” என்று தாங்கள் இருந்த கோலத்தைச் சுட்டிக் காட்ட,
வாய்விட்டு சிரித்தவன், “நாட்டி கேர்ள்” என்றபடி தேடலை ஆரம்பிக்க பார்க்க,
அவள், “பிச்சு… பிச்சு” என்று ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
அவன் சிரித்தபடி, “நானும் அதை தான் சொல்றேன்… பிச்சு… பிச்சு” என்றபடி அந்தரங்க ரகசியங்களை அவள் காதில் பேச,
“ஏய்!! சீ… நீ தான் டா நாட்டி பேட் பாய்” என்றாள்.
உல்லாசமாக சிரித்து, “இனி என்னை நல்லவன்னு சொல்லுவ?” என்று கேட்டபடி அவள் நெற்றியில் முட்டியவன், “உன் கிட்ட மட்டும் ரொம்ப ரொம்ப கெட்டவனா தான் இருப்பேன்” என்றான்.
அதன் பின் அவளது கெஞ்சல்கள் அவனது கொஞ்சல்களில் கரைய, மீண்டும் அழகிய காவியத்தைப் படைத்தான்.
விடியற்காலையில் களைப்பில் அவள் உறங்கியதும் மதிவர்மன் சஞ்சயை கைபேசியில் அழைத்தான்.
சஞ்சய் தூக்க கலக்கத்துடன் அழைப்பு எடுத்து, “சொல்லு டா” என்றான்.
“இன்னைக்கு லேட்டா தான் வருவேன்… பார்த்துக்கோ”
 
“ஹ்ம்ம்… சரி டா… எங்க போற?”
 
“எங்கேயும் போகலை… தூங்க போறேன்”
 
“டேய் இதெல்லாம் அநியாயம்”
 
“XXX மீட்டிங் இருந்த அன்னைக்கு நீ ஆபீஸ் வரவே இல்லை… நான் ஏதாவது சொன்னேனா?”
 
அந்த நாளை யோசித்துப் பார்த்த சஞ்சய் மூளையில் சட்டென்று பல்ப் எரியவும் உற்சாகத்துடன், “மச்சி!!! வாழ்த்துக்கள் டா” என்று கத்தினான்.
மதிவர்மன் சிறு வெட்கத்துடன், “தேங்க்ஸ் டா” என்றான்.
சஞ்சய் கத்தியதில் விழித்த ஆதிரா, “என்ன டா?” என்றாள்.
சந்தோஷத்துடன் அவளை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டவன், “கூடிய சீக்கிரம் நாம அத்தை மாமா ஆக போறோம்” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க, மதிவர்மன் சிரிப்புடன், “டேய் போனைக் கட் பண்ணிட்டு கொஞ்சு டா” என்றான்.
சஞ்சய், “மச்சி முதல்ல பையனை பெத்துக்கோ டா… அப்போ தான் என் பொண்ணைக் கட்டிக் கொடுக்க முடியும்” என்றான்.
 
“டேய்!!! போதும் டா… நான் வைக்கிறேன்” என்று மதிவர்மன் சிரிப்புடன் கூறி அழைப்பைத் துண்டிக்க போக,
சஞ்சய், “மச்சி உண்மையைச் சொல்லு… தூங்கவா போற?” என்று கேட்டான்.
“போ டா” என்று கூறி மதிவர்மன் அழைப்பைத் துண்டித்தான்.
அதன் பிறகு அபிசாராவின் கைபேசியை எடுத்து இன்று அவள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக அவளது தோழிக்கு குறுச்செய்தி அனுப்பினான்.
பிறகு தன்னவளை அணைத்தபடி உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கினான்.
சஞ்சய் அழைப்பைத் துண்டித்ததும் ஆதிரா மகிழ்ச்சியுடன், “இப்போ தான் டா நிம்மதியா இருக்குது” என்றாள்.
“மகிழ்ச்சியைக் கொண்டாடிடுவோமா?” என்று கேட்டு கண்சிமிட்ட,
அவள், “நான் எந்திருச்சுட்டேன்” என்றபடி எழ, அவளது கையை பிடித்து இழுத்து தான் மீது போட்டுக் கொண்டவன் தனது தேடலைத் தொடங்கினான்.
வெகு நேரம் கழித்து எழுந்த அபிசாரா தனது அருகில் விழித்தபடி படுத்திருந்த மதிவர்மனைப் பார்த்து புன்னகையுடன், “குட் மார்னிங்” என்றாள்.
அவள் இதழில் முத்தமிட்டு, “குட் மார்னிங் இல்லை… குட் ஆப்டர் நூன்” என்றான்.
அவள் பதறியபடி எழ, “ரிலாக்ஸ்… நீ இன்னைக்கு லீவ்னு கிரிஜாக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்” என்றான்.
“ஸ்வீட் சில்கி பையா” என்று கூறி அவனது கன்னத்தில் அவள் முத்தமிடவும், அவனது பார்வை கள் உண்ட வண்டாக மாற, அவள் அவசரமாக அவனைத் தள்ளிவிட்டுவிட்டு குளியலறை நோக்கி ஓடினாள்.
அதன் பிறகு, “டைம் சேவ் பண்ணலாம்” என்று கூறி அவளது மறுப்பை பொருட்படுத்தாமல் ஒன்றாகவே குளித்தவன் செல்ல சீண்டல்களுடன் கிளம்பி முடித்த போது மதிய உணவு வேளையே நெருங்கி இருந்தது.
அபிசாரா சங்கோஜத்துடன் கீழே செல்ல, மித்ராணி மகிழ்ச்சியுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “ரெண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா இருங்க” என்றார்.
“அத்தமா!” என்று கொஞ்சியபடி அவர் தோளில் சாய்ந்தாள்.
மதிவர்மன் மனைவி மற்றும் அன்னையின் பிணைப்பை மென்னகையுடன் ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, புகழ்வேந்தன் புன்னகையுடன் அவன் தோளை தட்டினார்.
மித்ராணி புன்னகையுடன் அவளது கன்னத்தைத் தட்டி, “சாப்பிடலாம்” என்றார்.
அப்பொழுது, “ஒரு நிமிஷம்” என்ற கலைவாணி, “ராஜா அபி பக்கத்துல வந்து நில்லு” என்றார்.
மதிவர்மன் அபிசாரா அருகில் நின்றதும் அவர் இருவருக்கும் திருஷ்டி கழித்தார்.

Advertisement