Advertisement

வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த அத்வைத்திடம் துருவ், அன்னைக்கு ரெஸ்டாரென்ட்டில் சொன்னதை தமிழ் நிஜமாவே செஞ்சி விடுவாளோடா!” என்று சிறு கலவரத்துடன் கேட்டான்.
அத்வைத் புரியாமல் பார்க்க,
துருவ், இல்லை.. முதல் இரவில் உனக்கே இந்த நிலைமைனா.. அதான்..” என்று இழுத்து நிறுத்த,
அத்வைத் கொலை வெறியுடன் அவனை முறைக்கவும், ஆல் தி பெஸ்ட்டா.” என்ற படி, ஓடி விட்டான்.
துருவ் அவ்வாறு கூறியதிற்கு காரணம் இல்லாமல்  இல்லை. மரகதம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், செந்தமிழினி அடம் பிடித்து யாதவை அழைத்துக் கொண்டு, தங்கள் அறையினுள் சென்றிருந்தாள்.
மரகதத்தின் சமாதானத்தால் யாதவ் கூட, ஓகே ம்மா.. இன்னைக்கு ஒரு நாள் யது எம்மு கூட படுத்துகிறேன்.” என்று கூற,
அவளோ அன்னையை முறைத்து விட்டு, யது கண்ணா அம்மா கூட தான் தூங்குவான்.” என்று கூறி அவனை தூக்கிச் சென்றிருந்தாள்.
அத்வைத் தான், “தமிழ் சொல்றது தான் சரி அத்தை.. இனி தமிழ் தன்னோட தான் இருப்பானு ஆசையில் இருக்கிற குழந்தையோட மனசை உடைக்க வேணாம்.” என்று கூறி மரகதத்தை சமாதானம் செய்தான்.
என்னவோப்பா.. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாச் சரி” என்றபடி அவர் சென்றுவிட்டார்.
முதல் நாளே குழந்தையின் எதிர்பார்ப்பை பொய் ஆக்கவோ, குழந்தை மனதை கலைக்க மங்களத்திற்கு வாய்ப்பு கொடுக்கவோ அவள் துளியும் விரும்பவில்லை. அத்வைத் மீது கோபம் குறைந்து இருந்தாலும், மனதின் வலி குறையாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். அதனால் தான் குழந்தையுடன் முதல் இரவு அறைக்குச் சென்றாள்.
அவளது எண்ணம் சரியே என்பது போல் மங்களம் இதைக் கூறி, யாதவின் மனதை கலைக்கத் தான் திட்டம் தீட்டி இருந்தார்.
செந்தமிழினி யாதவை அழைத்துச் சென்றதும் மங்களம், “சண்டாளச் சிறுக்கி.. எப்படி தான் என் திட்டத்தை எல்லாம் தெரிந்தது போல் முன்னாடியே முறியடிக்கிறாளோ!” என்று வாய்விட்டே புலம்பினார் தனது அறையில்.
துருவ் சென்றதும் அங்கே வந்த அருள்மொழி, நிஜமாவே  என் தங்கச்சி மாத்தி யோசி சங்கத்  தலைவி தான் மச்சான்.. அதான் நீ பால் சொம்பை எடுத்துட்டு போகப் போற!” என்று கிண்டல் செய்ய,
அத்வைத்,ஓடிப் போய்டு” என்றான் பல்லை கடித்தபடி.
அவனும் சிரித்தபடி, ஆல் தி பெஸ்ட் மச்சான்” என்று கூறிச் சென்றான்.
மனதை தேற்றிக் கொண்டு அத்வைத் தனது அறையினுள் சென்றான்.
அவனைக் கண்டதும் மெத்தையில் குதித்துக் கொண்டிருந்த யாதவ், ஹாய் டாடா.. இன்னைக்கு யது ஸோ ஹாப்பி.. அம்மா யது கூட” என்றபடி செந்தமிழினியை அணைத்தான்.
மகனின் மகிழ்ச்சியில் சூரியனைக் கண்ட பனித்துளியை போல், அவனது ஏக்கம் மறைந்து போனது.
அத்வைத்தும் புன்னகையுடன், டாடாவும் ஸோ ஹாப்பி கண்ணா” என்றபடி மனைவியையும் மகனையும் அணைத்துக் கொண்டான்.
செந்தமிழினி, ஓகே.. ஓகே.. கொஞ்சினது போதும்.. தூங்கலாம்.” என்றதும்,
யாதவ், ஓகே ம்மா” என்றபடி நடுவில் இருந்த தலையணையில் படுத்துக் கொண்டான்.
அத்வைத், இன்னும் கொஞ்ச நேரம் அணைச்சா தான் என்ன!’ என்று பார்வையால் அவளிடம் கேட்க,
அவளோ செல்ல முறைப்புடன், போய் படுங்க’ என்று மிரட்டினாள்.
அவளை அணைத்ததில் மீண்டும் அவனது ஏக்கங்கள் மெல்ல எழ, வேறு வழி இல்லாமல் போய் குழந்தையின் இடது புறம் படுத்துக் கொண்டான்.
அறையின் விடிவிளக்கை மட்டும் போட்ட செந்தமிழினி, குழந்தையின் வலது புறம் படுத்துக் கொண்டாள்.
குழந்தை, டாடா ஸ்டோரி” என்று கேட்க,
இன்னைக்கு அம்மா சொல்லுவா” என்றான்.
குழந்தை உடனே, அம்மா” என்று அழைக்க,
அவள், ஓகே.. அம்மா டைனோ ஸ்டோரி சொல்றேன்.. அப்புறம் நீங்க சமத்தா தூங்கனும்” என்றாள்.
ஹ்ம்ம்.. ஓகே ம்மா” என்றதும் அவள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
அப்புறம் அந்த குட்டி டைனோ தூங்கின மாதிரி யது கண்ணாவும்,   இப்போ சமத்தா    தூங்கப் போறாங்க” என்ற படி கதையை முடித்தவள் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு,
குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ் கண்ணா” என்றாள்.
அவளுக்கு முத்தமிட்டு, குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்மா” என்ற குழந்தை அடுத்து அத்வைத்திற்கும் அவ்வாறே செய்தான்.
அவனும் முத்தமிட்டு, குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் கண்ணா” என்றான்.
அடுத்து குழந்தை, டாடா அம்மாக்கு குட் நைட் சொல்லலை?” என்றான்.
இதோ கண்ணா” என்று புன்னகையுடன் கூறிய அத்வைத் படுத்த நிலையிலேயே சற்று எழுந்தபடி குழந்தையை தாண்டி கையை கொண்டு சென்று மனைவியின் இடையை பற்றி கன்னத்தில் முத்தமிட்டு, குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் இதழி” என்று கூறி படுத்துக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத செந்தமிழினி உறைந்த நிலையில் இருக்க, குழந்தை, டாடா அம்மா ஏன் இதழி சொன்ன?” என்று கேட்டான்.
அந்த கேள்வியில் சுயஉணர்வு பெற்றாலும் செந்தமிழினி அமைதியாகத் தான் இருந்தாள்.
அத்வைத், அம்மா டாடாவை அத்து சொல்ற மாதிரி, டாடா அம்மாவை இதழி சொல்றேன்.” என்றான்.
ஓ” என்ற குழந்தை, அம்மா தட்டிக் கொடு” என்றான்.
செந்தமிழினி அமைதியாக தட்டிக் கொடுக்க, மகன் முன்னிலையில் எதுவும் பேச முடியாமல் அத்வைத்தும் அமைதியாக இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அத்வைத், தூங்கிட்டியா இதழி?” என்று கேட்டான்.
அவள், சொல்லுங்க” என்றதும்,
அவன், இன்னைக்கு நமக்கு மூணாவது பஸ்ட் நைட்” என்று கூற,
பஸ்ட் நைட்னா என்ன டாடா?” என்ற யாதவின் கேள்வியில் அத்வைத் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான்.
செந்தமிழினி சிரிப்பை அடக்கியபடி அமைதியாக இருக்க, குழந்தை, சொல்லுங்க டாடா” என்றான்.
பதில் சொல்வதறியாது அத்வைத் திணற,
செந்தமிழினி சின்ன சிரிப்புடன், இன்னைக்கு தானே பஸ்ட் டைம் அம்மா உங்க கூட படுக்கிறேன்.. அதை தான் டாடா அப்படி சொன்னாங்க.” என்று சமாளித்தாள்.
ஓ” என்ற குழந்தை, மூனாவதுனு ஏன் சொன்னாங்க?” என்று கேட்க, அத்வைத் சற்று ஆடித் தான் போனான்.
அவளோ சிறிதும் தடுமாறாமல், டாடா அப்படி சொல்லலை கண்ணா.. நம்ம மூனு பேருக்கும் இன்னைக்கு தான் பஸ்ட் நைட்னு சொன்னாங்க.” என்றவள்,
இதை பத்தி நாளைக்கு வேற யார் கிட்டயும் பேசக் கூடாது.. ஓகே” என்றும் சேர்த்துக் கூறினாள்.
ஓகே.. ஆனா ஏன்?” என்று குழந்தை கேட்க,
எப்போதுமே நாம மூனு பேரும் பேசிக்கிறதை நமக்குள்ளேயே வச்சுப்போம் ஓகே.. இதெல்லாம் நமக்கான சீக்ரெட்ஸ்” என்றாள்.
குழந்தை மகிழ்ச்சியுடன், ஓகேம்மா” என்றான்.
ஓகே.. இப்போ நிஜமாவே தூங்கலாம்.” என்றவள், “அத்தான் உங்களுக்கும் தான்” என்றாள்.
அவள் சொன்னதும் படுத்தவன்,  அடுத்து  வாயை திறக்கவே இல்லை. செந்தமிழினி இதழில் உறைந்த புன்னகையுடன் உறங்கினாள்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு எழுந்தவள் மகனின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்து, மறுபக்கம் சென்று அத்வைத்தின் நெற்றியிலும் முத்தமிட்டாள்.
சட்டென்று அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்து, ஹாப்பி மார்னிங் இதழி” என்றான் புன்னகையுடன்.
அவளும் புன்னகையுடன், நீங்க தூங்கவே இல்லையா?” என்று கேட்க,
நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு தூக்கத்திற்கு பஞ்சமே இல்லை.. வழக்கம் போல் அஞ்சரைக்கு முழிப்பு வந்திருச்சு.. எழுந்தரிக்க மனம் இல்லாம சும்மா படுத்து இருந்தேன்.. நீ யதுக்கு முத்தம் கொடுத்து எந்திரிச்சதும் கண்ணை மூடிக்கிட்டேன்” என்றான்.
விரிந்த புன்னகையுடன், கேடி அத்து” என்றாள்.
இந்த அத்து மேல் கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா?”
கருணை காட்டியதால் தானே இப்படியே பேசிட்டு இருக்கிறேன்”
எனக்கு இது போதாதே!” என்று அவன் தாபத்துடன் கூற, அவள் தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.
சட்டென்று சுதாரித்தவன் அவளது முகத்தை தனது நெஞ்சில் பதித்து, எந்த வித உறுத்தலும் வருத்தமும் இல்லாமநம்ம வாழ்க்கையை  இனிமையா தொடங்கலாம்.. நான் காத்திருக்கிறேன்டா..” என்றான்.
தேங்க்ஸ் அத்து” என்றவள், அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.
சில நிமிடங்கள் இருவரும் காமம் இல்லாக் காதலான அணைப்பில் கட்டுண்டு இருந்தனர். யாதவ் தூக்கத்தில் அசையவும்,
நான் குளிச்சுட்டு வரேன் அத்தான்” என்றாள்.
லவ் யூ டா இதழி” என்ற படி அவளது நெற்றியில் இதழ் பதித்து கைகளை விலக்கிக் கொள்ள,
அவளும் அவனது நெற்றில் இதழ் பதித்து எழுந்தாள்.
அவன், நீ சொல்ல மாட்டியா?” என்று கேட்க, அவள் அவனுக்கு அழகு காட்டிவிட்டு குளியல் அறையினுள் சென்றாள்.
அவன் மென்னகையுடன் கண்களை மூடியபடி மகனின் காலை பற்றியபடி படுத்து இருந்தான்.
அதன் பிறகு வந்த நாட்களில் இருவருக்குள் சிறு சிறு அணைப்புகளும், கன்னத்து முத்தங்களும் இருந்தாலும், அதை தாண்டிச் செல்ல எந்த வித அறிகுறியையும் அவள் காட்ட வில்லை.
அதனாலேயே, தற்போது, அவளை கடத்திக் கொண்டு      கொடைக்கானல் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான் இதழியின் அத்து.

                                                மண(ன)ம் வீசும்…

Advertisement