Advertisement

அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஏழு வருஷம்! உங்க நினைப்பிலேயே, நான் இங்கே உருகிட்டு இருக்க.. நீங்க ஈசியா என்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டீங்க இல்ல! உங்களை எங்கே தேட, எப்படி தேடனு தெரியாம எவ்ளோ தவிச்சேன் தெரியுமா! உங்களுக்கு கல்யாணம்னு தெரிந்ததும் எவ்ளோ துடி துடிச்சேன் தெரியுமா!
அப்போ கூட ‘நான் உங்களை காதலிச்சா நீங்களும் என்னை காதலிக்கனும்னோ, உங்களுக்கு என்னை பிடிக்கனும்னோ இல்லையே!’னு மனசை தேத்திக்கிட்டு உங்க சந்தோஷத்துக்காக கடவுள் கிட்ட வேண்டினேன்.. இப்போ வந்து அப்போவே எனக்கு உன்னைப் பிடிக்கும்னு சொல்றீங்க..” என்றவள் கோபத்துடன் சற்றே ஆவேசக் குரலில் முறைத்தபடி, அப்போ இது வெறும் ஈர்ப்பு தான்.. நான் உங்களை மறந்துடுவேன்னு நினைச்சு இருக்கிறீங்க! அப்படித் தானே!” என்றாள்.
அவன் தவிப்புடன், தமிழ்மா.. நான் சொல்றதை கேளுடா..” என்று ஆரம்பிக்க,
கேட்ட கேள்விக்கு பதில்.. ஆமாவா? இல்லையா?” என்றாள் கறார் குரலில்.
அவன் நெஞ்சம் நிறைத்த வலியுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
அப்போவே என்னைப் பிடிக்கும்னா.. அது வெறும் பிடித்தமா இல்லை காதலா?” என்று அடுத்த கேள்வியால் அவனைத் தாக்க,
வாய்விட்டு அழுத படி, அய்யோ, என்னால முடியலையே!” என்றபடி அவளது கால் அருகில் அமர்ந்தவன் அவளது கால்களை கட்டிய படி, என்னை மன்னிச்சிடு தமிழ்.. அப்போ புத்தி கெட்டுப் போய் தப்பா முடிவு எடுத்துட்டேன்.. சத்தியமாச் சொல்றேன்டா.. அப்போவே என் மனம் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிருச்சுனு எனக்கே இப்போ தான் புரிஞ்சுது.. என்னை மன்னிச்சிடுடா.. ப்ளீஸ்” என்று கதறினான்.
அத்வைத்தை அழைக்க வந்த அருள்மொழி காதில் அத்வைத்தின் ‘என்னை மன்னிச்சிடுடா.. ப்ளீஸ்’ என்றது மட்டும் விழ, லேசாக திறந்து இருந்த கதவை மூடி விட்டுச் சென்றவன், எதிரே வந்த யாதவிடம், மாமாவும் யது குட்டியும் ஐஸ்-கிரீம் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்டான்.
மரகதம் அவனை கேள்வியாய் பார்க்க, யாதவ், அம்மாட கேட்கனும்.” என்ற படி செந்தமிழினி அறை நோக்கி போகப் பார்கக,
அவனை தடுத்துத் தூக்கியபடி, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டா.. நாம போகலாம்.” என்றவன் அன்னையைப் பார்த்து, பழைய கதையெல்லாம் பேசிட்டு இருக்கிறாங்க.. அவனே வெளிய வருவான்.. நான் யதுவை வெளிய கூட்டிப் போயிட்டு வரேன்.” என்று கூறி கிளம்பினான்.
அவன் மனம் முழுவதும், அத்வைத் குரலே சரி இல்லையே! எதுவும் பிரச்சனை வந்திரக் கூடாது!’ என்ற நினைப்பே இருக்க, தங்கை மேல் இருக்கும் நம்பிக்கையில் யாதவுடன் ஒன்றினான்.
அத்வைத்தின் கதறலை பார்க்க முடியாமல், சரி எந்திறீங்க” என்றாள்.
அவன் எழுந்தபடி கலக்கத்துடன் அவள் முகம் நோக்க, அதைப் பார்த்து அவளது மனம் வலித்தது.
தனது கோபத்தையும் வலியையும் தன்னுள் புதைத்தவள், எழுந்து நின்று வரவழைத்த புன்னகையுடன், கடைசி வரை தமிழுடன் தான் குப்பை கொட்டனும்னு கடவுள் உங்க தலையில் எழுதிட்டான்.. இனி நீங்க ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.” என்று கூறி கண்சிமிட்டினாள்.
சட்டென்று அவளை இறுக்கமாக அணைத்த அவன், தேங்க்ஸ்டா.. தேங்க் யூ.. சாரிடா.. அம் ரியலி வெரி வெரி சாரிடா” என்றான்.
அவனது அணைப்பில் இருந்தே அவன் எவ்வளவு பயந்தும் தவித்தும் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவள், அவனது முதுகை தடவிக் கொடுத்தபடி, இத்தனை நாள் நீங்க 90’ஸ் கிட்னு நினைச்சேன்.. இப்போ தான் நீங்க 80’ஸ் கிட்னு புரியுது.” என்றாள் குறும்புடன்.
அவன் இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து வெளிப்படாமல் அவளை புரியாமல் பார்க்க,
அவனை விலக்கியவள், பின்ன! பூட்டிய அறை! கை வளைவில் காதலி இருக்கிறா.. சும்மா நச்சுனு ஒரு இச்சு தராம, சோக கீதம் வாசிச்சுட்டு இருக்கிறீங்க!” என்றாள்.
அவளது முயற்சியை புரிந்துக் கொண்டவன் சட்டென்று புன்னகைத்து, வாலு” என்றபடி அவளது நெற்றில் இதழ் பதித்து, நான் முகம் கழுவிட்டு வரேன்.” என்று கூறி குளியல் அறையினுள் சென்றான்.
முகம் கழுவி தெளிவாக வந்தவன், அவள் நீட்டிய துண்டில் முகத்தைத் துடைத்த பின், உன்னோட வலியும் வேதனையும் எனக்குப் புரியுதுடா.. நான் எத்தனை முறை சாரி கேட்டாலும் போதாது தான்.. என்னோட காதலால் உன்னோட மனதின் காயத்தை போக்குவேன்.. அதுக்கு அப்புறம் தான் மெயின் மேட்டர்.. ஆனா” என்று கூறி நிறுத்தியவன் துண்டை மெத்தை மீது போட்டுவிட்டு அவளது இடையை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தான்.
நான் சொல்றவரை, நீங்க என்னை தொடக் கூடாதுனு சொன்னேன்.” என்று அவள் கூற,
மென்னகையுடன் அவளது உதட்டை லேசாக பிடித்து இழுத்தவன், இதே வாய் தான் நான் இறுக்கி அணைச்சு உம்மா தரலைனும் சொல்லுச்சு” என்றான்.
பின் உதட்டை விடுத்து, இடையை இன்னும் இறுக்கியபடி அவளது நெற்றியை முட்டியவன், என்னோட இதழிக்கு சோக பிஜியம் பிடிக்காது.. அதனால் போனதைப் பத்தி, நானும் யோசிக்கப் போறது இல்லை, அவளும் யோசிக்கப் போறது இல்லை..” என்றான்.
அவள், அப்புறம்” என்று கூற,
புதுசா காதலிக்க ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.
லாமே! ஆனா, தள்ளி இருந்து” என்றாள் புன்னகையுடன்.
ஏன்?”
ஏழு வருஷம் நான் தள்ளி இருந்து தானே காதலிச்சேன்! அட்லீஸ்ட் ஏழு மாசமாவது தள்ளி இருந்து காதலிங்க.”
ஏழு நாளே கஷ்டம்னு தோனுதே!”
தோனும் தோனும்! முதல்ல தள்ளிப் போங்க” என்றபடி அவனை தள்ள,
லவ் யூ ஸோ மச் இதழி” என்றபடி அவளது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டே விலகினான்.
அவள் அப்படியே நிற்கவும், மென்னகையுடன் மறு கன்னத்திலும் முத்தமிட்டான்.
சட்டென்று சுயம் பெற்றவள், உள்ளுக்குள் இனித்தாலும் வெளியே அவனைப் பார்த்து முறைத்தாள்.
நீ ஃப்ரீஸ் ஆகி நின்னுட்ட, அதான் திரும்ப முத்தம் கொடுத்தேன்” என்றான்.
அதே முறைப்புடன், அப்போபஸ்ட் கொடுத்தது?” என்று கேட்க,
காதலை இப்படித் தான் சொல்லனும்” என்று கூறி கண் சிமிட்டினான்.
யார் சொன்னது?”
உன்னோட அத்து தான்”
எல்லாத்துலையும் லேட் பிக்கப்.. சரியான தத்தி அத்து” என்றவள் அவனது கையில் சிக்காமல் வெளியே ஓடியிருந்தாள்.
வெளியே சென்றதும், யது கண்ணா எங்கமா?” என்று தான் கேட்டாள்.
அருள் வெளியே கூட்டிட்டு போயிருக்கான்.. உனக்கும் அத்வைத்துக்கும் டீ போட்டு வச்சி இருக்கிறேன்.. சூடு செய்து எடுத்துட்டு வா.” என்றார்.
நீங்க குடிச்சுட்டீங்களா அத்தை?” என்று கேட்டபடி, அவர் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.
வேணுகோபால், இப்போ தான் குடிச்சோம்.” என்றார்.
தேநீரை அருந்தி முடித்ததும் அத்வைத், அப்பாவை என்னைக்கு வந்து பேசச் சொல்லட்டும் மாமா?” என்று கேட்டான்.
வேணுகோபால், அத்தை இப்போ தான் பார்க்க சொன்னா.. நாளைக்கே நல்ல நாளா தான் இருக்குது.” என்றார்.
அப்போ நாளைக்கே வரச் சொல்றேன் மாமா” என்றவன் மரகதத்தைப் பார்த்து, கல்யாணத்தை ஒரு மாசத்துக்குள் வச்சிக்கலாமா, அத்தை? யதுவை ஸ்கூல் சேர்க்கிறதுக்கு முன்னாடி எங்க கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறேன்.” என்றான்.
மரகதம் கணவரைப் பார்க்க, அவர் தலை அசைக்கவும், முகூர்த்த நாள் சரியா அமைஞ்சா உன் விருப்பம் போலவே செய்திடலாம்.” என்றார்.
அவன் புன்னகையுடன், தேங்க் யூ அத்தை” என்றான்.
மரகதம் ஏதோ கேட்க சற்று தயங்குவது போல் தெரியவும் அவன், எதுவும் கேட்கணுமா அத்தை?” என்று கேட்டான்.
அவர் சிறு தயக்கத்துடன், அது.. டைவர்ஸ் வாங்கிட்டியா?” என்று கேட்டார்.
சட்டென்று செந்தமிழினி ஆதரவாக அவனது கரத்தைப் பற்ற,   அவளைப் பார்த்து மென்னகை செய்தவன், வாங்கிட்டேன் அத்தை.. ஆனா வீட்டில் யாருக்கும் தெரியாது.. யதுவையும் உரிமை கேட்க மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டா.. எந்தப் பிரச்சனையும் வராது அத்தை.. கவலைப்படாதீங்க.” என்றான்.

Advertisement