Advertisement

சில நொடிகள் அணைத்தபடி அமைதியாக இருந்தவள் பின், யது கண்ணா, அம்மா சொன்னா கேட்பீங்க தானே!” என்றாள்.
குழந்தை அவளை அணைத்தபடியே, ஹ்ம்ம்” என்றான்.
முகத்தை மட்டும் நிமிர்த்தி, அம்மாவைப் பாருங்க” என்றாள்.
குழந்தை அவ்வாறே செய்யவும் அவன் நெற்றியில் முத்தமிட்டவள், நல்லா கவனீங்க.. அம்மாவையும் யது கண்ணாவையும் யாருமே பிரிக்க முடியாது.. அம்மா அதுக்கு விடவே மாட்டேன்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
குழந்தை சற்றே தெளியவும், அவள், இப்போ சொன்னது எல்லாமே உண்மை இல்லைனு சொல்லி தானே சொன்னேன்.. அப்படி எல்லாம் சொல்லிஅம்மா பேட் கேர்ள்னு உங்களை நம்ப வைக்கப் பார்ப்பாங்க.. ஆனா…” எனறவளின் பேச்சை இடையிட்ட குழந்தை,
யது நம்ப மாட்டான்..” என்றான்.
அவள் விரிந்த புன்னகையுடன், தட்ஸ் மை பாய்.. லவ் யூ ஸோ மச் யது கண்ணா” என்று கூறி குழந்தையின் கன்னங்களில் மாற்றி மாற்றி முத்தமிட்டாள்.
குழந்தையும் புன்னகையுடன், லவ் யூ ஸோ மச் அம்மா” என்று கூறி, அவளது கன்னங்களில் முத்தமிட்டான்.
இப்போ யது கண்ணா ஓகேயா?”
ஹம்”
சரி அப்போ, நாம வெளியே போகலாமா?”
சட்டென்று குழந்தையின் முகம் வாடிவிட,
அவள், அம்மா நாளைக்கு வருவேன்.. கொஞ்ச நாளில் டாடா அம்மா கழுத்தில் தாலி கட்டியதும்” என்று நிறுத்தி தலையை சரித்து குழந்தையின் முகம் பார்க்க,
குழந்தை புன்னகையுடன், அம்மா, யது கூடவே இருப்பா” என்றான்.
அவளும் சிரிப்புடன், எஸ்.. இப்போ வெளியே போகலாமா?” என்று கேட்டு வெளியே அழைத்துச் சென்றிருந்தாள்.
மாலையில் கிளம்புவதாக அத்வைத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுக் கிளம்பியவள், முதலில் சென்றது அத்வைத் வீட்டிற்குத் தான்.
செந்தமிழினி அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த சரோஜினி இன்று பதற்றமின்றி புன்னகையுடனேயே, வாடா ராஜாத்தி” என்றார்.
மஷ்ரூம் பிரியாணி செம.. தேங்க் யூ தேனுமா” என்றபடி அவரது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவர் வெட்கத்துடன் புன்னகைத்தபடி நெளிய, அவள் வாய்விட்டுச் சிரித்தாள். இதை ஆறுமுகம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கூடத்தில் அமர்ந்து தொலைகாட்சியில் தொடர் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த மங்களம் வேகமாக எழுந்து வந்து, வெளியே போடி, சிறுக்கி” என்றார்.
அவளோ, ஏன் நான் வீட்டுக்குள்ள வந்தா, நீ வீட்டை விட்டு போய்டப் போறியா?” என்று கேட்டாள்.
அவர் முறைப்புடன், நான் ஏன்டி போகணும்! உன்னைத் தான் வெளியே அனுப்புவேன்.” என்றார்.
அப்படியா! அதையும் பார்க்கலாம்.” என்றவள், நீங்க வாங்க தேனுமா” என்றபடி சரோஜினி கைபிடித்து அழைத்து உள்ளே நுழைந்தாள்.
சரோஜினி சிறு கலவரத்துடன் மாமியாரை பார்க்கத் திரும்புகையில், அவரை திரும்ப விடாமல், யது கண்ணா எங்க தேனுமா?” என்று கேட்டாள்.
மங்களம், ஏய்! நான் சொல்லிட்டே இருக்கிறேன்! நீ பாட்டுக்கு திறந்த வீட்டில் நுழைந்த நாய் மாதிரி போய்கிட்டே இருக்கிற!” என்று கத்தினார்.
காதை ஒற்றை விரலால் குடைந்தபடி, இப்போ நீ தான் அப்படி கத்திட்டு இருக்கிற.” என்றவள் சரோஜினியைப் பார்த்து, நீங்க சொல்லுங்க, தேனுமா.” என்றாள்.
சரோஜினி, அத்வைத் ரூமில் விளையாடிட்டு இருக்கிறான்.” என்று கூற,
மங்களம், எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே நாய்னு சொல்லுவ!” என்று மீண்டும் கத்தினார்.
நான் அப்படி சொல்லவே இல்லையே.. உனக்கே அப்படி தோணுச்சுனா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது” என்றவள், “யது கண்ணா இன்னைக்கு தூங்கினானா?” என்று சரோஜினியிடம் கேட்டாள்.
ஹ்ம்ம்.. ஒரு மணி நேரம் தூங்கினான்டா” என்று சரோஜினி கூற,
மங்களம், ஏய்..” என்று கத்த ஆரம்பிக்க,
அவள், இங்க இருந்த கத்தி எங்க தேனுமா?” என்று கேட்டாள்.
மங்களம், கத்தியைக் காட்டி மிரட்டினா பயந்திருவேனா!” என்று எகிற,
அவள் நக்கலாக புன்னகைத்த படி, அதான் நேத்து உன்னோட தைரியத்தைப் பார்த்தேனே!” என்றாள்.
சற்று தடுமாறிய மங்களம், அங்.. நீ கத்தியை காட்டி மிரட்டுறனு போலீஸ்ஸில் புகார் கொடுப்பேன்” என்றார்.
அவளோ அல்லட்டிக் கொள்ளாமல், இனி நோ மிரட்டல்.. ஒரேடியா சங்கை அருத்துருவேன்.. போலீஸ்ஸில் ஓடிப் போன பேத்தியை நினைச்சு மனநிலை சரி இல்லாம, நீயே தற்கொலை செய்துக்கிட்டதா சொல்லிடுவோம்” என்று கூறினாள்.
ஒரு நொடி ஆடிப்போன மங்களம் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் பார்வையை பதித்துக் கொண்டார்.
ஓரப்பார்வையில் அவரைப் பார்த்து சிரித்தபடி, யது கண்ணா ஸ்னாக்ஸ் சாப்டுட்டானா?” என்று சரோஜினியிடம் கேட்டாள்.
அதிர்வுடன் நின்றிருந்த சரோஜினியைப் பார்த்து அவள், தேனுமா” என்று அழைக்கவும்,
அவர், சாப்டுட்டான்டா” என்றார். பின், உனக்கு காபி கொண்டு வரட்டா?” என்று கேட்டார்.
ஹ்ம்ம்.. அத்தான் ரூமுக்குக் கொண்டு வாங்க.. நான் போய் யது கண்ணாவை பார்க்கிறேன்.” என்றவள் அவர் சமையல் அறைக்குச் சென்ற பிறகே நகர,
அடங்காத மங்களம், என் பேரன் ரூமுக்குள்ள போன காலை உடைச்சிடுவேன்.” என்றார்.
அதுக்கு உன்னோட கை ஒழுங்கா இருக்கணுமே!” என்றவள், என்னோட அத்தான் ரூமுக்குள்ள போக தான் போறேன்.. முடிஞ்சா தடுத்துப்பார்” என்று விட்டுச் செல்ல, மங்களம் ஏதும் செய்ய முடியாமல் கோப மூச்சை வெளியிட்டார்.
காபியுடன் சமையல் அறையை விட்டு வெளியே வந்த சரோஜினியைப் பார்த்து, என்னடி துளிர் விட்டுப் போச்சா? அந்தச் சிறுக்கி இருக்கிற தைரியத்தில் ஆடாத.. உன்னையும்..” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆறுமுகம்,
சரோ, நீ காபி எடுத்துட்டுப் போ” என்றிருந்தார்.
சரோஜினி கண்களை விரித்து கணவரைப் பார்க்க, மங்களம் அதிர்ச்சியுடன், ஆறுமுகா!” என்று கத்தி இருந்தார்.
ஆறுமுகமோ அன்னையைக் கண்டு கொள்ளாமல் மனைவியைப் பார்த்து சற்று கனிவான குரலில், காபி கொடுத்துட்டு, நம்ம ரூமுக்கு வா” என்றார்.
சரோஜினி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் சாவி கொடுத்த பொம்மையைப் போல், அத்வைத் அறையினுள் சென்றார்.
மங்களம், காலம் போன கடைசியில் பொண்டாட்டி முந்தானை கேட்குதோ! ரூமுக்கு வானு என் முன்னாடியே சொல்ற!” என்று கூற,
முதலில் மறுத்துப் பேச நினைத்த ஆறுமுகம் பின் என்ன நினைத்தாரோ!
அன்னையை வெறுப்புடன் பார்த்தபடி, இங்கிதம் தெரிந்து, நீங்க விலகலைனா நான் என்ன செய்ய?” என்றவர் மங்களம் அடுத்து பேசும் முன் தங்கள் அறையினுள் சென்றிருந்தார்.
இத்தனை ஆண்டுகள் மனதினுள் மண்டிக் கிடந்த ஆற்றாமை, சிறு பொறியாக வெளியே வந்ததோ!
மங்களம் பெரும் அதிர்ச்சியுடன் பொத்தென்று சோபாவில் அமர்ந்தார்.
சரோஜினி அத்வைத் அறையினுள் சென்ற பொழுது யாதவ், அம்மா, நீ சொன்ன மாதிரி தான், பேய் ஆச்சி சொன்னாங்க.” என்றவன் செந்தமிழினியின் பார்வையில், நோ, பெரிய ஆச்சி.. பேய் ஆச்சி தான்.. வெரி பேட் கேர்ள்” என்றான்.
செந்தமிழினி, பெரிய ஆச்சி என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
பதில் சொல்ல வாய் திறந்தவன், சரோஜினியைப் பார்த்ததும் வாயை மூடிக் கொண்டான். அவனது செய்கையில் செந்தமிழினி புன்னகையுடன் அவனது தலை முடியைக் கலைத்து விட்டாள்.
சரோஜினி, பெரிய ஆச்சி என்ன சொன்னாங்க குட்டிமா?” என்று கேட்க,
அவனோ முகத்தை கறாராக வைத்தபடி, அம்மாட்ட தான் சொல்வேன்.” என்றான்.
சரோஜினி சிரிப்புடன், பாரேன் இந்தப் பொடுசை” என்றபடி காபியை செந்தமிழினியிடம் கொடுத்தார்.
யாதவ், யது பிக் பாய்” என்றான்.
சரோஜினி அதே சிரிப்புடன், ஆமா.. யது பிக் பாய் தான்” என்றார்.
பின் செந்தமிழினியைப் பார்த்து, உனக்கு பிடிச்ச காளிபிளவர் குருமாவும் சப்பாத்தியும் செஞ்சு வச்சிருக்கிறேன்.. சாப்டுட்டு தான் கிளம்புற” என்று அன்புக் கட்டளையிட்டார்.
செந்தமிழினி, உங்கள் கட்டளையே எனது சாசனம்” என்றதும்,
அவர், ஆமா அன்னைக்கும் இப்படி தான் சொன்ன!” என்றார் செல்ல முறைப்புடன்.
அவரது கன்னத்தை பிடித்து கொஞ்சிய செந்தமிழினி, செல்ல தேனுமா.. இன்னைக்கு கண்டிப்பா சாப்டுட்டு தான் கிளம்புவேன்.” என்றாள்.
இருவருக்கும் நடுவே நுழைந்த யாதவ், அம்மா, என்னைக் கொஞ்சு” என்றான்.
சரோஜினி சிறு ஆச்சரியத்துடன், பொறாமையைப் பாரேன்” என்று கூற,
செந்தமிழினி விரிந்த சிரிப்புடன், என் பட்டு தங்க கண்ணா” என்றபடி அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவனைத் தூக்கிச் சுற்றினாள்.
மகிழ்ச்சியுடன் சிரித்த குழந்தை அவள் சுற்றுவதை நிறுத்தியதும், இன்னொரு சுத்து” என்றான்.
அவள் மீண்டும் சுற்ற, இம்முறை குழந்தை மகிழ்ச்சியுடன் சத்தமாகச் சிரித்தான்.
மறுமுறை அவன் கேட்கும் முன் அவள், போதும்.. அப்புறம் தலை சுத்தும்” என்றபடி மெத்தையில் அமர, குழந்தை அவள் மடியில் அமர்ந்துக் கொண்டான்.
அவனை அணைத்து ஆடியபடி, நீங்க ரெஸ்ட் எடுங்க தேனுமா.. கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க சாப்பிட வரோம்.” என்றாள்.
புன்னகையுடன் வெளியேறிய சரோஜினி மங்களத்தின் பார்வை தன் பக்கம் திரும்பவும், அவசரமாகத் தங்கள் அறையினுள் ஓடிவிட்டார்.
எல்லோரையும் கவனிச்சுக்கிறேன்.’ என்று மங்களம் கோபத்துடன் முணுமுணுத்தார்.
சரோஜினி சென்றதும் மங்களம் பேசியது அனைத்தையும் யாதவ் ஒப்பித்தான்.
செந்தமிழினி, அவங்க அப்படித் தான்.. அதை பத்தி யோசிக்காதீங்க.. ஆனா, டாடா வந்ததும் சொல்லிடுங்க.. அப்புறம் இனி அவங்க என்ன சொன்னாலும், அம்மா கிட்டயும் டாடாகிட்டயும் சொல்லிடனும்.”
ஓகேம்மா”
அதன் பிறகு இருவரும் விளையாட ஆரம்பித்தனர்.
அப்பொழுது அத்வைத் மற்றும் துருவின் வண்டிகள் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தது.
என்னடா அதிசயமா சீக்கிரம் வந்திருக்க?” என்று கேட்டபடி வண்டியில் இருந்து இறங்கிய துருவ், செந்தமிழினியின் வண்டியைப் பார்த்ததும் கிண்டலாகச் சிரித்தபடி, நீ நடத்து ராஜா” என்றான்.
அத்வைத் சிறு வெட்கத்துடன் உள்ளே செல்ல, துருவ், டேய் அண்ணா! நீயாடா இது!” என்றான்.
மங்களம் மட்டும் கூடத்தில் அமர்ந்து இருக்க, இருவரும் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.
தனது அறையில் இருந்து மகன் மற்றும் செந்தமிழினியின் சிரிப்பு சத்தம் கேட்கவும், அத்வைத் தம்பியிடம், டேய் உன்னோட ரூமுக்குப் போய் யதுவை கூப்பிட்டு ஒரு பத்து நிமிஷம் விளையாட்டு காட்டு.” என்றான்.
துருவ் அத்வைத்தின் முகத்தை இருபுறமும் மாற்றி மாற்றி திருப்பி பார்க்க,
அத்வைத், என்னடா?” என்றான்.
நேத்து வரை இந்த மூஞ்சியில் ஒரு ரிஷியோட தவக்கோலம் தெரிஞ்சுது.. அதை தான் தேடிட்டு இருக்கிறேன்.”
அதான் நீயே நேத்து வரைனு சொல்லிட்டே! சொன்னதை செய்டா”
இதெல்லாம் சரியே இல்லைடா.. ஒரு கன்னிப் பையன் முன்னாடி இப்படி ரொமான்ஸ் செய்றது சரியே இல்லைடா” 
அத்வைத் அவனை முறைக்கவும், கூடப் பிறந்த பாவத்துக்கு செஞ்சு தொலைக்கிறேன்.” என்ற படி நகர்ந்த துருவ், தனது அறைக்குச் சென்று, யது குட்டி” என்று அழைத்தான்.
யாதவ், சித்தா கூப்பிடுறா.. என்ன கேட்டுட்டு வரேன்.” என்று விட்டு துருவ் அறையினுள் ஓடினான்.
மகன் தம்பியின் அறையினுள் சென்றதும் முற்றத்தின் மறைவில் இருந்து வெளியே வந்த அத்வைத், மெதுவாக தனது அறைக்குச் சென்று கதவை மூடினான்.

Advertisement