Advertisement

அத்வைத், சொல்லுடா” என்றதும், அமைதியான குரலில் அனைத்தையும் சொல்லி முடித்தவன், ஒழுங்கு மரியாதையா என்னோட தங்கச்சியை சரி செய்ற!” என்றான்.
என்னோட மனைவியை சரி செய்ய நீ சொல்லணும்னு இல்லை, மச்சான்.” என்றவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தான்.
செந்தமிழினியை கைபேசியில் அழைத்த அத்வைத்,  அவள் அழைப்பை எடுத்தும், என்னாச்சுடா?” என்றான்.
அருள் பேசினானா?”
ஹ்ம்ம்.. ஏன்டா..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
மென்னகையுடன், இந்தத் தமிழை புரிந்துக்கொள்ள இன்னும் பயிற்சி வேண்டும் மன்னா” என்றாள்.
என்ன?”
எங்க அம்மா கிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது! நேத்து கிழவினு சொன்னதுக்கே, அவ்ளோ லெக்சர்.. இன்னைக்கு தொடப்பக்கட்டை பிஞ்சு போறதுக்கான வாய்ப்பு தெரிந்தது.. அதான் சோக பிட்டை போட்டு எஸ் ஆகிட்டேன்..” என்றாள்.
அவன் அமைதியாக இருந்து ‘உன்னை நான் அறிவேன்.’ என்று உணர்த்த,
அச்சோ நிஜம் அத்தான்.. பிலீவ் மீ பேபிமா” என்றாள்.
அவள் கூறிய விதத்தில் மென்னகைத்தான்.
இவ்ளோ பயப்படுறவ..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
பயமா! இதுக்குப் பேரு பிளானிங்.” என்றாள்.
சரி.. சரி..” என்றவன், அருள் கிட்ட ஏன் பேசலை?” என்றான்.
இனி எதையும் மறைக்கக் கூடாதுல.. அனுபவிக்கட்டும்.”
உனக்கு அண்ணானாப் பிறந்து அவன் படுற பாடு!”
போதும் போதும்.. மச்சானுக்கு ரொம்ப உருக வேண்டாம்.”
சரி, என் மனைவிக்காக உருகுறேன்.. சொல்லு”
அவனது மனைவி என்ற அழைப்பு அவளை என்னவோ செய்ய, மெல்லிய குரலில், என்ன சொல்ல?” என்று கேட்டாள்.
தமிழ்” என்று ஆழ்ந்த குரலில் அழைத்தவன், உண்மையைச் சொல்லு.. ரொம்ப பீல் செய்றியா?” என்று கேட்டான்.
ஒரு நொடி மௌனித்தவள், உண்மை தான்.. கொஞ்சம் வருத்தம் தான்.  பட், அது அப்படி பேசினதோட போச்சு..”
நிஜமா?”
நிஜமா தான் அத்தான், சொல்றேன்” என்றவள், கோபமோ வருத்தமோ மனசுக்குள்ள அடக்கி வைக்கிறதே எனக்குப் பிடிக்காது.. உடனே கொட்டிடனும்.. வெளிய கொட்டிட்டாமனசு லேசாகிடும்.. மனசுங்கிறது பொக்கிஷம் இருக்கும் பெட்டகம் மாதிரி அத்தான். அதுல இனிமையான நினைவுகளைத் தான் வைக்கணும், தேவை இல்லாத குப்பைகளை இல்லை.” என்றாள்.
அவன் அமைதியாக இருக்கவும், எந்தப் படத்தில் வர வசனம்னு யோசிக்கிறீங்களா? சொந்த வசனம், அத்து” என்றாள்.
அவன்   சட்டென்று   சிரித்து  விட்டான். உருக்கமாகப் பேசியவளும் அவள் தான், தான் பேசியதை வசனம் என்று கிண்டல் செய்வதும் அவள் தான் என்று நினைத்தவன் சிரித்து விட்டான்.
பின், அந்தக் குறிப்பு எதுக்கு அனுப்பின?” என்று கேட்டான்.
அது ஒரு கவசம் மாதிரி.. அதான் மாமா கிட்ட மன்னிப்பு கேட்டதைச் சொன்னேன்.”
அவன் மென்னகையுடன், நீ கேட்ட விதத்தையும் சொல்லி இருக்க வேண்டியது தானே!” என்றான்.
எதுக்கு? கவசம் கத்தியா மாறி என் கிட்டயே திரும்பி வரதுக்கா?”
சிரிப்புடன், கத்தி வச்சு மிரட்டியதை ஏன் சொன்ன?” என்றான்.
ஹான்.. தமிழ் கெத்து குறைஞ்சிடக் கூடாதுல!”
நீ இருக்கிறியே!”
எஸ் இருக்கிறேன்”
ஹ்ம்ம்.. என்னோட மனசில்” என்று பேச்சை மாற்றினான்.
என்ன தான் தன்னிடம் வருத்தம் இப்போது இல்லை என்று கூறினாலும், அதன் சுவடு இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பேச்சை மாற்றினான்.
மென்னையுடன், தெரியும்” என்றாள்.
வேற என்ன தெரியும்?”
என்ன தெரியனும்?”
இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட்”
நெஞ்சின் படபடப்பை மறைத்த படி, அப்படியா?” என்றாள் புருவம் உயர்த்தி.
என் கிட்ட தனியாக் கூட பேசாம கிளம்பிட்ட! யதுவை துருவ் ரூமில் இருக்கச் சொன்னதும், அன்னைக்கு மாதிரி நம்ம ரூமுக்கு தனியா பேச வருவனு நினைச்சேன்.” என்று வரவழைத்துக் கொண்ட ஏக்கமான குரலில் அவன் கூற, அவள் சிரித்தாள்.
அவன், என்ன சிரிப்பு?” என்று கேட்க,
இனி கல்யாணம் முடியுற வரை, நம்ம ரூமுக்குள்ள வர மாட்டேன்.” என்றாள்.
அதான் முடிஞ்சுருச்சே! அதுவும் இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட் வேற.” என்று அவன் சரசமாகக் கூற,
அத்தான்!” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள்.
இப்படி எல்லாம் சிணுங்கின, அப்புறம் சுவர் ஏறிக் குதிச்சிடுவேன்.” என்று அவன் கூற,
அவள், பார்டா!” என்றாள்.
நிஜமா தான் சொல்றேன்” என்றவன்,
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க..
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க..
கள்ளத்தனம் இல்லா புன்னகையோ மோகம் தர..
ஏக்கங்களை தூவிச் சென்றாய்..
காதல் எனை கேட்கவில்லை..
கேட்டால் அது காதல் இல்லை..
என் ஜீவன் ஜீவன் நீதானே” என்று ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படப் பாடலின் சில வரிகளை மட்டும் அவனுக்கு வேண்டிய படி பாடினான்.
அவனது குரலில் வடிந்த நேசத்தை ரசித்தபடி அவள் அமைதியாக இருக்க, அவன், ஓய்! தூங்கிட்டியா?” என்றான் மென்னகையுடன்.
யாரோ சில விஷயங்களை தித்திப்பா சொல்றதாச் சொன்னாங்க!” என்றாள்.
ஏன் இப்போ தித்திப்பா இல்லையா?” என்று அவன் மென்மையாக வினவ, அந்தக் குரலே அவள் மனதை வருடியபடி, காதல் உலகிற்குள் இழுத்துச் சென்றது.
ஹ்ம்ம்” என்று அவள் கண்களை மூடியபடி மெல்லிய குரலில் கூற,
பிடிச்சிருக்கா?” என்று சற்று கிறக்கத்துடன் கேட்டான்.
அவள் காதலுடன் மீண்டும், ஹ்ம்ம்” என்று கூற,
வெறும் ‘ஹ்ம்ம்’ என்றதில் காதலை வெளிப் படுத்த முடியுமா!’ என்று மனதினுள் நினைத்தவன், அதை ரசித்தாலும், எனக்கு பதில் வேணும்.” என்றான்.
பிடிச்சிருக்கு” என்றவள், மெல்லிய குரலில், உங்களை மட்டும் தான் பிடிக்கும்.” என்றாள் தன்னை மறந்து.
அவன், என்ன சொன்ன?” என்று கேட்கவும் சட்டென்று சுதாரித்தவள், காலையில் இந்த பாட்டைத் தான் பாடினீங்களா?” என்று பேச்சை மாற்றினாள்.
அவன், இதையா கேட்ட?” என்று வினவ,
அவள் குறும்புடன், சில விஷயங்கள் தனிமையில் சொல்ற விதத்தில் சொல்றப்ப, இன்னும் தித்திப்பா இருக்கும்.” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்தவன், அது வேற பாட்டு” என்றான்.
அது என்ன பாட்டு?” என்று அவள் கேட்க,
அவன், கண்டுபிடி” என்றான்.
க்ளு குடுங்க”
இப்போ பாடின பாட்டோட ஹீரோ தான்”
இதெல்லாம் க்ளு-வா?”
பின்ன இல்லையா?”
சூர்யா பாட்டு எவ்…ளோ இருக்குது!”
ஹ்ம்ம்.. என்னோட மனநிலையை சொல்ற மாதிரியான பாட்டு”
அத்து!”
என்ன?”
ஒழுங்கா க்ளு கொடுங்க”
இதான் க்ளு.. ஒரே நாளில் உன் மேல இவ்ளோ காதல் வந்ததையும், அப்போதைய என்னோட மனநிலையையும் சொல்ற பாட்டு.”
சரி கண்டு பிடிக்கிறேன்.”
கண்டு பிடிச்சதும், அதில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லனும்.. செயல் முறை பதிலா இருக்கனும்”
உங்க குரலே சரி இல்லையே!” என்று அவள் சந்தேகமாகக் கூற,
வாய்விட்டுச் சிரித்தவன், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் இதழி” என்றான்.
அவள் சிறு வெட்கத்துடன், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் அத்து” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
ஒன்றை சொல்லாமல் சொல்லும் பொழுது தனி சுகம் தரும் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளை வேறு உலகத்திற்குள் தன்னுடன் இழுத்துச் சென்றிருந்தான், இதழியின் அத்து.
                                                மண(ன)ம் வீசும்…

Advertisement