“அவளோட அப்பா வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருக்கான்..அவ பர்த்டே அன்னைக்கு சாயந்திரமா தான் திரும்பி வரான்..அதான் மூட் சரியில்லே.” என்றார் நிவேதிதாவின் பாட்டி.
“நாளனைக்கு இவ பர்த் டே..கரெக்டா?” என்று கேட்டாள் பவி.
“ஆமாம்..அதுக்கு அடுத்த நாள் நாங்க எல்லாரும்துர்கா பூஜாக்கு ஊருக்குப் போகப் போறோம்..அதனாலேபர்த்டே பார்ட்டி எதுவும் அரென்ஜ் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டான்..அதான் இவளுக்கு வருத்தம்.” என்றார்.
“வெளியே பார்ட்டி வைச்சாதான் ஸ்கூல் பிரண்ட்ஸைக் கூப்பிட முடியும்..வீட்லே பார்ட்டி வைச்சா பிளாக்லே இருக்கறவங்களை மட்டும் தான் இன்வைட் செய்ய முடியும்..இவளோட அம்மா ஆபிஸ்லேர்ந்து வர்றத்துக்கு ஏழு மணியாயிடுது…அவளாலே ஸ்னாக்ஸ், கேக் எல்லாம் தயார் செய்ய முடியாது.. கடைலேதான் ஆர்டர் கொடுக்கணும்..அதுக்கு முப்பது கெஸ்டாவது கூப்பிடணும்…அவ்வளவு பேர் எங்க பிளாக்கிலே எங்களுக்குப் பழக்கமில்லை…தெரிஞ்சவங்களை மட்டும் இன்வைட் செய்தா சின்ன கேக் போதும்..அந்த மாதிரி கேக் கடைலே கிடைக்காது..தனித் தனி பீஸா தான் கிடைக்கும்…வீட்லே செய்யலாம்னா எனக்கு டிரை ஸ்னாக்ஸ் மட்டும் தான் செய்ய வரும்..கேக் செய்ய வராது.” என்றார் மிஸஸ் ஸென்.
“ஸ்கூல்லே ஒவ்வொரு மாசமும் அந்த மாசத்திலே பிறந்த எல்லா குழந்தைங்களுக்கும் சேர்த்துஒரு நாள் பர்த்டே பார்ட்டி செய்யறோம்…இந்த மாசம் எங்க கிளாஸ்லே இவளுக்கு மட்டும்தான் பர்த்டே..அங்கே கேக் கட் பண்ணுவா.” என்றாள் பவி.
பவி சொன்னதைக் கேட்ட கொண்டிருந்த நிவேதிதா, அவளுடைய பாட்டியின் காதில் கிசுகிசுத்தாள்.
“நேக்கு ஒரு வேலை கிடைக்கறவரைக்கும் வெயிட் பண்ண போறாளா?”
“அப்படி தான்னு நினைக்கறேன்..உங்கப்பாவோட ஸெட்டில்மெண்ட பணத்தை அவ கல்யாணத்துக்குதான் வைச்சிருக்கேன்..இவ்வளவு நாள் அஷ்வினி, நர்மதா இரண்டு பேருக்கும் கல்யாணமாகனும்னு காத்திண்டிருந்தேன்..அவாளுக்கு நல்லபடியா ஆயிடுத்து அதுக்கு என்னாலே முடிஞ்சதையும் பண்ணியாச்சு டா..
இனி பவியைப் பற்றி தான் யோசிக்கணும்..அதனால் தான் பவிக்கு இங்கே வேலை கிடைச்சவுடன சரின்னு சொல்லிட்டேன்..அவளுக்கும் இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கு..நோக்கும் இங்கேயே ஒரு நல்ல வேலை கிடைச்சிடுத்துன்னா என் கவலை தீர்ந்திடும்..அதுக்கு அப்புறம் பவி கல்யாணம் தான்.” என்றார் சுகந்தி.
“கேம்பஸ்லே நல்ல கம்பனி எதுவும் இதுவரைக்கும் வரலை மா..நானும் சென்னை ரெக்ரூடர்ஸ்தான் பார்த்திண்டு இருக்கேன்..சரியா அமையலே..ஒருவேளை இங்கே கிடைக்கலைன்னா நான் பெங்களூர்லேயே முதல்லே வேலை பார்க்கறேன்..கொஞ்ச நாள் கழிச்சு இங்கே வேற வேலை தேடிண்டு வந்திடறேன்.” என்றான் தீபக்.
“இங்கேயே கிடைக்கற மாதிரி பாரு டா..எவ்வளவு நாள் நானும் அவளும் தனியா இருக்கறது? ஏதாவது அவசரம்னா நீ பெங்களூர்லேர்ந்து வரணும்..இல்லைன்னா அண்ணாதான் திருச்சிலேர்ந்து வரணும்..அதுக்குதான் அவன் திருச்சிக்கே திரும்ப வந்துடுன்னு சொல்லிண்டிருக்கான்..இப்ப பார்த்திருக்கற மாப்பிள்ளையும் அங்கே தான்..பக்கத்திலேயே மாப்பிள்ளை இருந்தா நல்லதுன்னு சொல்றான்.” என்றார் சுகந்தி.
“ஏன் மா..இவ்வளவு நாள் அங்கேதானே இருந்த..அப்ப அடுத்த தெருவிலே இருந்த இந்த மாப்பிள்ளை அவர் கண்ணுலே படலேயா..இங்கே வந்த அப்புறம் தான் கண்ணுலே பட்டதா?” என்று தீபக் கேட்க,
“ஏன் டா இவளை விட பெரியவ அஷ்வினி..அவளுக்கே இப்பதான் கல்யாணம் ஆச்சு..அவளுக்குப் பண்ணாம பவிக்கு கல்யாணம் பண்ணியிருந்தா நன்னாயிருந்திருக்காது டா..
சென்னைக்கு வராம அங்கேயே இருந்திருந்தாக் கூட கல்யாணம்ங்கற கண்கட்டு வித்தைலே அடுத்த ஆத்துலே, தெருவிலே, பிளாக்லே இருக்கற பையன் எப்ப நம்மாத்து மாப்பிள்ளையாகணுமோஅப்பதான் நம்ம கண்ணுக்கு அவர் மாப்பிளையாத் தெரிவர்.” என்றார் சுகந்தி.
“அப்ப நம்மாத்து மாப்பிள்ளையை இப்ப இங்கே நம்ம கண்ணு எதிர்லே பார்த்தாக்கூட நமக்கு அவர்தான் மாப்பிள்ளைன்னு தெரியப் போகறதில்லை.” என்றான் தீபக்.
“இங்கே நமக்கு யாரையுமே தெரியாதே டா..நான் சொன்னது அந்த திருச்சி வரனுக்கு.” என்றார் சுகந்தி.
“நீ சொல்றதைதான் நானும் சொல்றேன்..அந்தத் திருச்சி பையன் தான் நம்மாத்து மாப்பிள்ளையோ என்னவோ..அடுத்த தடவை என்னோட லீவுக்கு நாம எல்லாரும் திருச்சிக்குப் போயிட்டு வரலாமா?” என்று தீபக் கேட்க,