Advertisement

பெண்ணியம் பேசாதடி – 5
நரை  கூடிய பின் காதலாம்,காவியமாம்
ஊர் தூற்றுமே? நீ அஞ்ச!
யாரறிவார் நரை கூடிய பின் தான்
உடலும்,கூடலும் உச்சம் தொடும் என்பதை!
போதுமடி பெண்ணே பெண்ணியம் பேசாதே.
ஐயோ! ஐயோ! என்று  தனது வாயில் கை வைத்து அடித்து கொண்ட ரமேஷ் வளவனை பார்த்து “என்னடா சொல்லுற”.
“எதுக்கு இப்போ ஜெர்க் ஆகுற”
“டேய்! நீ சொன்னதுக்கு நான் நெஞ்ச புடிக்கலனு சந்தோச படு என்ன வேலை பார்த்து வைக்கிற…. நல்ல மகன் டா நீ”.
“ப்ச்….. உனக்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்குறதுனு தெரியல ரமேஷ்.அம்மாவும் அப்பாவும் நல்ல தான் வாழ்ந்தாங்க,ஆனா அவங்க வாழ்க்கையில ஏதோ ஒன்னு குறையிதுடா”என்ற நண்பனை முறைத்து பார்த்தவன் பேச்சில் சிறு கடுமை பூசி.
“வளவன் நீ யோசிக்கிற மாதிரி வாழ்க்கை இருக்காது. கணவன் மனைவினா கொஞ்சி கிட்டே இருப்பாங்களா என்ன?அதெல்லாம் சினிமாகளுக்கும் கதைகளுக்கும் தாண்டாப்பா சாத்தியம்.
நிதர்சனத்துல மூணு மாசம் தான் சந்தோசம்.அதாவது ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள். அப்பறம் ஓட்டம் தான் அந்த மூணு மாசமும் நம்ப காலத்துல இல்ல” சரியாக சொன்னான் ரமேஷ்.
“அது எனக்கு தெரியாதா,ஆனா ஆழமான அன்பு கட்டி பிடிக்கிறதுலையும், கொஞ்சுறதுலையும் காட்ட வேண்டாம். கணவனது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செஞ்சு காட்டலாம் தானே.
அப்பா அம்மாக்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குவாரு தெரியும,ஆனா வேலையே இல்லாத எங்க அம்மா ஒரு நாள் கூட அவருக்கு நேரம் ஒதுக்கி நான் பார்த்ததில்லை விவரம் தெரிஞ்சு”.
நண்பனின் பேச்சு ரமேஷை சற்று யோசிக்க வைத்தது.தவறு அவனது தாய் மேல் இருக்குமோ. அப்படி என்றால்? யோசிக்கக் கூட ரமேஷ் விரும்பவில்லை.அவனது எல்லை நண்பனுடன் மட்டும் தான் அவனைத் தாண்டி குடும்பத்திடம் செல்வது எல்லை தாண்டும் நிலை என்பதால்  யோசனையைக் கை விட்டவன் நண்பன் பேசுவதில் கவனம் கொண்டான்.
“ஏய்! என்னடா நான் பேசிகிட்டு இருக்கேன் நீ கனவு காணுற நான் சொன்ன திட்டம் எப்படி?” சிறு கர்வம் பொங்க வளவன்.
“நல்ல திட்டமப்பா அமோகம் திரிஷா இல்லனா திவ்வியா.மலர் கொடி இல்லனா காஞ்சனை கொடுத்து வச்ச மகரசண்டா உங்கப்பா அவருக்கு ஏத்த மகன் நீ” போலியாக வியந்த நண்பனை.
“பொறாமை படாதடா எங்க குடும்பத்தை பார்த்து”.
“ஆமா!.. ஆமா!.. பட்டுட்டாலும்… தெரியாம தான் கேக்குறேன் எந்த தைரியத்துல உங்க அப்பாக்கு அந்த ரவுடி பொண்ண பார்த்த”.
மலர் கொடி விலகினால் காஞ்சனையைத் தனது தந்தைக்கு  கட்டி வைக்க எண்ணி. அதனை ரமேஷிடம் சொல்லி வைக்க காஞ்சனையை பற்றி நன்கு அறிந்தவன் இது சரிவருமா? என்பதை கேலி போல் கேட்டு வைத்தான்.
“என்னால சித்திய விட முடியாது.அதைவிட அந்த தொப்பைய சித்தி கல்யாணம் பண்ண கூடாது.எங்க சித்தியும் அவனும் நடந்து போன சித்திக்கு அப்பன் மாதிரி இருப்பாண்ட அந்த ஆளு”.
காஞ்சனைக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைத் தான் தற்போது வளவன்  தாளித்துக் கொண்டு இருந்தான்
“சரி சரி பொங்காத உங்க அப்பாவும் சரி, உங்க சித்தியும் சரி ஒத்துக்க மாட்டாங்க வளவன்.உங்க தாத்தா கேட்ட போதே உங்க அப்பா முடியாதுனு சொல்லி தான் அவர் நண்பன் மாப்பிள்ளையா வந்தார் மறந்துடாத”.
“எனக்கும் தெரியும் ரமேஷ் நான் பேசுற விதமா பேசி ஒத்துக்க வைப்பேன்”.
“நல்லது  நடந்தா சந்தோசம் தான்” என்றவர்கள் மீண்டும் சில மணி நேரம் பேசி இருந்து விட்டு விடை பெற்றான் வளவன்.
என்னதான் நண்பனிடம் பகிர்ந்து கொண்டாலும் வளவனுக்கு பல விடயங்கள் குழப்பமாகவே இருந்தது அதாவது தண்ணீரின் மேல் இருக்கும் தூசியாக மனதில் பல நெருடல்கள் மேலாக தளும்பி நின்றது.அதனை அறிந்து கொள்ளும் மார்கம் அறியாமல் தடு மாறினான் வாமனனின் தவ புதல்வன்.
************
மகனின் தவிப்பை அறியாத வாமனன் தனது காதலியுடன் உல்லாசம் கொண்டு இருந்தார்.அவர் தழுவ இவள் வெக்கம் கொண்டு திரும்ப என்று சலிக்க சலிக்க  ஓர் காதல் நாடகம்.
காதலியா?………….
ஆம் அவர் காதலி தான் இந்த புத்தக பெண். தனது புத்தக அறையில் அவர் எழுதிய கவிதை தொகுப்பை படித்து கொண்டு இருந்தார்.
மேலும் அவரை சுற்றி பார்த்தால் பல எழுத்தாளரின் பிள்ளைகள் கண்ணுக்கு குளுர்ச்சியாக கண் சிமிட்டி நின்றனர்.
எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிள்ளையாம்.அப்படியென்றால் ஒவ்வொரு எழுத்தாளனின் படைப்பும் முதல் பிரசவம் தானே.
துடித்து,பயந்து, வலியெடுத்து இன்பம் கொண்டு பிள்ளை பெற்று மறுபிறவி எடுப்பது போல.கற்பனை கொண்டு,ரசனை எடுத்து,கவி படைத்து இலக்கணம் கொண்டு பிறக்கும் கதைகளை படித்து மறுபிறவி எடுக்கிறோம் உண்மை தானே.
ப்பா!.. ப்பா!… மனநிலையை நொடியில் மாற்றம் செய்யும் இந்த எழுத்துக்குத் தான் எத்தனை சக்தி.புத்தகம் என்பது புத்திக்கு அப்பாற்பட்ட நிலையைக் கண்ணில் கண்டு கருத்தில் சேமித்து மனதில் உறைய செய்வது.
நல் புத்தகம் என்பது நாற்பது ஆன்றோருக்குச் சமம்.
இன்று பேரிளம் பெண்ணுக்கு விடுமுறை தான் அவள் பேசும் வாய்ப்புமுண்டு. இருந்தும் இரு பெண்களையும் சமாளிக்கும் திறமை வாமனனிடம் இல்லை போலும்.புத்தக காதலியை கையில் எடுத்து பேரிளம் பெண்ணை விட்டுவிட்டார்.
காதலியை கொஞ்சியது போதுமென்று அடுத்த நிலை எண்ணினார் போலும்.
இனி என்றவருக்கு மோகம் கூடி போக எழுது கோலை எடுத்து விட்டார்.இனி நமக்கு என்ன வேலை அவர் அந்த வழி வன் காதல் செய்யட்டும் நாம் வந்த வழி செல்வோம்.
இனி அவர்கள் உலகம் நம் கண்ணை மூட வைத்துவிடும்
****************
அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் வந்த வளவன் மீண்டும் தன்னை சுத்த படுத்திக் கொண்டு தனது தாத்தா வீட்டுக்கு சென்றான்.
வீட்டுக்குள் நுழைந்தவனைக் கூடக் கவனியாமல் காஞ்சனை படு தீவிரமாகப் போனில் பேசி கொண்டு இருந்தார்.
“சரிங்க நான் அப்பாகிட்ட பேசுறேன்….எனக்கும் ஒன்னுமில்லை….. எப்பனாலும் சரிதான்.சரிங்க உடம்பப் பார்த்துக்கோங்க” என்றவளை போனை அணைக்கக் கூட விடாமல் கை பற்றினான் வளவன்.
அவனது தீடீர் செயலால் ‘யாருடா இது’ பயந்தவள் வளவன் தான் என்றவுடன் கடுப்பாகி “படிச்சவன் தானே நீ, இப்படி நடந்துக்குற எரும மாடு!..எரும மாடு!… அறிவு வேண்டாம்  இதுல தொழில் பண்ணுறானாம்”.
 “நான் அப்படித்தான் என்னங்குற? யாரு கூடப் பேசிகிட்டு இருந்த? அந்தத் தொப்பையா” கஞ்சனைக்குத் தோழிகள் இல்லை.
அவள் ஒரு தனிப் பிறவி அவளை எதில் சேர்ப்பது என்பது யாருக்குமே தெரியவில்லை.அவளிடம் பேசும் ஒரே ஜீவன் அதுவும் சமீபகாலமாக அந்தத் தொப்பை தான் அதுவும் திருமண முடிவு எடுத்த பின்.
வளவன் மேல் கொண்ட எரிச்சலில் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற தனது கால் பெரு விரலை மடக்கி தலை கவிழ்ந்து.
வாயில் தனது ஒரு விரல் வைத்து கடித்து போலி வெட்கம் கொள்ள நொந்து விட்டான் நம் வளவன் மேலும் அவனை வதைக்க எண்ணிய காஞ்சனை “அவர் தாண்ட” மெல்லிய குழைந்த குரலில் சொல்ல.
“என்ன கொடுமைடா இது சித்தி!… என்ன வெளில போடா நாயேன்னு சொல்லு போயிடுறேன்.என் முன்னாடி வெட்கம் மட்டும் படாத சத்தியமா பார்க்க முடியல”.
அவனை முறைத்தவள் “போடா தடி மாடு உனக்குப் புடிக்குமேனு ரசகுல்லா செஞ்சேன்.நீ என்ன கேலி பண்ணீல உனக்கு ஒன்னும் கிடையாது ஓடிடு”என்றவள் அடுத்து வீட்டுக்கு சென்று தனது தோழியை அழைத்து வந்தாள்.
வாண்டு அப்போதுதான் தூங்கி முழித்திருக்கும் போல வளவனை பார்த்ததும் ஒரு புருவ சலிப்புடன் சோபாவில் அமர்ந்தது.வளவன் வழமை போல் வாண்டை வம்பு செய்ய “ஆள பாருடா ஆள குட்டி பிசாசு”.
அதற்கும் அந்த வாண்டு புருவத்தைச் சுளித்துக் கொண்டு பார்த்து வைத்தது. காஞ்சனை உள் சென்று இரு பௌலில் ரசகுல்லா எடுத்து வர லேசாக அதனை எட்டி பார்த்தான் வளவன்.
வாண்டு அதனை பெற்று கொண்டு எதுவோ காஞ்சனை காதில் சொல்ல. இருவரும் அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து கொண்டு உண்டனர் அதில் கடுப்பாகி போனவன் எழுந்து வந்து ,
“ஏய் திரும்புடி” என்று அழகாக தூக்கி வாண்டின் முகம் பார்க்க எங்கே தனது ரசகுல்லா போய்விடுமோ என்று பயந்து அது வாய்க்குள் போட பார்க்க,
வாண்டின் கையோட சேர்த்து ரசகுல்லாவை தனது வாய்க்குள் போட்டு கொண்டான் வளவன் வேண்டுமென்றே கண் மூடி அவன் ரசித்து உண்ண.
உதட்டை பிதுக்கி அழகாக அழுதது அந்த வாண்டு அதில் மயங்கியவன்.
“என்னடி அழகுற நீ மட்டும் மாமா கூட பிரென்ட் ஆகிடு மாமா உனக்கு பெரிய ரசகுல்லா டின் வாங்கி தரேன்”அவன் ஆசை காட்ட வேறு ஒரு பிள்ளை என்றால் மயங்கி சரியென்று தலையாட்டி வைக்கும்.
ஆனால் இதுவோ காஞ்சனையின் வார்ப்பு  அல்லவா அதனிடம் இந்த பேச்சுக்கள் எடுபடுமா என்ன?
கால்களை வேகமாக உதைத்து “ஒன்னும் வேதம் போ ஏதிக்கி உது” என்று அழுது வைத்தது.
வாண்டின் பேச்சில் அவனை தோரணையாக பார்த்த காஞ்சனை “நீ வாடா அம்மு” அந்த வாண்டை கையில் அள்ளி தான் வைத்திருக்கும் ஸ்வீட்டை ஊட்டிவிட உடனே அழுகை நின்று அவனுக்கு பழிப்பு காட்டியவரே உண்டது.
அதில் எரிச்சல் அடைந்த வளவன் “ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாமா!… ப்ளீஸ் மாமா!… உங்க சொன்ன பேச்சு கேட்பேன் என்ன பிரெண்டா ஏத்துக்கோங்கன்னு கதற வைக்கல நான் வளவன் இல்லடி”.
வளவனை பார்த்து காஞ்சனை வாண்டின் விரலையும் பிடித்து கொண்டு விரல் நீட்டிய இருவரும் “சிங்கம் சிக்கும் ஆனா சில்வண்டு சிக்காது” என்று சொல்லிவிட்டு கல கலவென ராட்சசிகள் தேவதைகளாக புன்னகை பூத்தது.
அவர்கள் புன்னகையில் தன்னை மறந்து காஞ்சனை போல ஓர் தங்கையும் அந்த வாண்டை போல் ஒரு பெண் பிள்ளையும் வேண்டும் என்று எண்ணி கொண்டான் வளவன்.
எண்ணம் பலிக்குமா என்ன?…. அதன் பின் வளவன் அமைதியாகி விட.
அவனது அமைதி கண்டு காஞ்சனையும் அமைதியாகி போனாள்.என்ன தான் சிரித்துப் பேசினாலும் தனது திருமணமும்,வளவனின் பிரிவும் அவளை அச்சத்தில் ஆழ்த்தியது என்னமோ உண்மை.
அது போக சில நாட்களாக அவளுக்கு பயமாக இருந்தது.ஏதோ நடக்க போகிறது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய.
யோசனையுடன் வேலைகளை தொடர்ந்தாள்.வளவன் விடை பெற்றது கூட அவள் கருத்தில் பதியவில்லை.கடவுள் யாருக்கு யார் என்பதை இக்கணம் முடிவு செய்துவிட்டான் போலும் விதி வலியது தான்.
***********
அங்கே புத்தக அறையில் இருந்து வெளி வந்த வாமனனுக்கு வேர்த்து கொட்டியது உடலெல்லாம் தளர சோபாவில் விழ போக அதற்குள் வந்து தாங்கி பிடித்தான் வளவன்.
நல்ல வேலை இன்று காஞ்சனையிடம் வம்பு செய்யாமல் வந்ததால் நேரத்துடன் வந்தது சரியாய் போச்சு.
“அப்பா என்னப்பா ஆச்சு” என்றவனை பார்த்தவர் கலங்கிய கண்களுடன் தனது சட்டையில் இருந்த அந்த கடிதத்தை எடுத்து கொடுத்தார். அதில் சில இடங்களில் அவர் கொடு கிழித்து வைத்திருக்க அதை படித்த அவனுக்கும் பேச்சே எழவில்லை.
“என்னப்பா இது?”.
“எனக்கும் ஒன்னும் புரியலடா வழக்கம் போல் பழைய புத்தகம் படிக்க எடுத்தேன் அப்போ எதிர்ச்சியா பார்த்தேன்” என்றவர் தனது நெஞ்சை நீவி கொண்டார். தந்தையின் நிலை புரிய கலக்கமாக அழைத்தான் வளவன்
“அப்பா!………..”
“என்கிட்ட எதுவும் கேட்காத வளவா” என்றவர் சிறு யோசனையாக
“அந்த பொண்ணு பெயர் என்ன சொன்ன”
“மலர் கொடி ப்பா……………” தந்தையின் கேள்வியை சரியாய் கணித்து பதில் சொன்னான் வளவன்
“நாளைக்கி பார்க்க ஏற்பாடு பண்ணு அவங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”.
“சரிங்கப்பா என்றவன் கலங்கி ப்பா!.. சப்போஸ் அப்படி இருந்தா?” பயந்து கொண்டே கேட்ட வளவனைத் தீர்க்கமாகப் பார்த்தவர்.
“என்னால மன்னிக்க முடியாது கண்ணா!…. வாழ்க்கை முழுமைக்கும் அவளை படுத்தி வைப்பேன் அனுபவிச்சு தான் ஆகணும்”
கோபமாக சொன்னவர் பின்பு ‘முட்டாள்!… முட்டாள்!…’ என்று தன்னையே திட்டி கொண்டார் மனிதர்.
வாமனனுக்கு அத்தனை கோபம் போலும்.அவருக்கு ஒரு பழக்கமுண்டு அடிக்கடி தான் எழுதிய கவிதையைப் படிப்பது.
கவிதைகளுக்கு அவர் விசிறிகள் எழுதும் விமர்சனத்தையும் படிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.அப்படி படிக்கும் பொதுப் பேரிளம் பெண் எழுதிய ஓர்  கடிதம் கையில் சிக்க அதனை ஆவலுடன் எடுத்து படித்தார் மனிதன்.
இதில் என்ன கொடுமை என்றால் அந்தக் கடிதத்தின் வயது சுமார் 25 இருக்கும் .இன்று தான் அதனை முழுமையாகக் கவனித்துப் படித்துள்ளார்.அதில் அவருக்குச் சில நெருடலான விடயங்கள் பட அதிர்ந்து விட்டார்.
கண்ணிலும் கருத்திலும் படாத சில உண்மைகள் அதில் கண் சிமிட்டி நின்று கேலி பேசியது போலும். அதனை கண்ட எழுத்தாளருக்கு பதறி கொண்டு வந்தது.
தந்தையின் பேச்சு பயத்தை கொடுக்க இது எங்கு போய் முடியுமோ? என்று பயந்து நின்றான் வளவன்.அந்த கடிதத்தை தந்தையிடம் இருந்து வாங்கி.தன்னுடன் வைத்து கொண்டான்.
விசித்திரமான மனிதர்களுக்கு விசித்திரமான நிகழ்வுகள் என்று சிரித்தது விதி.
பெண்ணியம் பேசி தள்ளி நிற்கும் பூங்கொடி. தாகம் கொண்டு தனித்திருக்கும் நான் உன்னைக் கண்டு கொண்டால் சிறுதும் தயக்கமின்றி என் தாகத்தை தீர்த்து கொள்வேன்.அதன் பின் நீ பெண்ணியம் பேசி பயனில்லை.

Advertisement