Advertisement

பார்க்க பார்க்க காதல் கூடுதே

1
மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாலும் கண்ணீர் மல்க வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதே நேரம் அருகில் இருந்த அவளது தோழியோ “உனக்கு கொஞ்சம் கூட அறிவுங்கிறதே கிடையாதா, எதை எப்ப பண்ணனும்னே தெரியாதா,” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மருத்துவரைப் நோக்க.,
டாக்டரோ “சரி விடுங்க ஏதோ கீழ விழுந்துட்டாங்க, கால் லைட்டா பெசகி இருக்கு, வேற ஒன்னும் இல்ல, கட்டு போட்டு இருக்கேன். ஒரு வாரத்துக்கு நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும், அதுக்கப்புறம் அவங்க நார்மலா எல்லா வேலையும் பார்க்கலாம்.”என்றார்.

“டாக்டர் காலை ஊனமுடியாதா”., என்று வருத்தமான குரலில் கேட்டாள்.

அப்படி இல்ல, அழுத்தமா காலை ஊணிட கூடாது, கால் வீக்கம் இருக்கு., பெயின் வரும்., என்று சொல்லவும்,

“இப்பவே ரொம்ப வலிக்குது டாக்டர்” என்று தன் வீங்கி போன இடது காலை பார்த்து சொன்னாள்.

டாக்டரும் “சரியாகிரும், இப்ப பெயின் கில்லர் கொடுப்பாங்க, இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, பெயின் சரியாயிடும்” என்று சொன்னார்.

அருகில் இருந்த அவள் தோழியோ, “அம்மா தாயே உன்ன வச்சுட்டு என்னால சமாளிக்கவே முடியல, உன்ன எல்லாம் உங்க அம்மா அப்பா எப்படித்தான் வளர்த்தாங்கன்னு எனக்கு தெரியல, ஆபீஸ்ல என்னோட தானே இருந்த, நான் கேன்டின் போயிட்டு வர்றதுக்குள்ள உனக்கு அப்படி என்னடி வேலை டென்ஷன் ன்னு ரிலாக்சிங் ரூமுக்கு போன, அந்த அளவுக்கு இன்னைக்கு என்ன ஒர்க் பார்த்த” என்று கேட்டாள்.

அவளோ “டாக்டர் இந்த புள்ள என்ன திட்டிக்கிட்டே இருக்கா, இவள போ சொல்லிட்டு எனக்கு ஒரு நர்ஸ பக்கத்தில் உட்கார வைங்க” என்று சொன்னாள்.

“அப்ப சரி நர்ஸ் கூட்டிக்கொண்டு உன்னை வீட்டில விடுவாங்க, நான் கிளம்புறேன் சரியா” என்று சொன்னாள்.

“போறீயோ” என்று பதட்டத்தோடு கேட்டவளை பார்த்து,
“போகல தாயே உனக்கு தான் எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணை எல்லாம் இருக்காதே, கொஞ்ச நேரத்துல வருவியே ஈன்னு சிரிச்சுக்கிட்டு, அதனால வேற வழியே இல்ல, உன் கூடவே இருக்கேன். ட்ரீட்மென்ட் முடிஞ்ச உடனே கூட்டிக் கொண்டு போய் உன்னை வீட்டில் விட்டுட்டு அதுக்கப்புறம் நான் என் வீட்டுக்கு போறேன்” என்று கோபமாக சொன்னாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த பெண் அவளோ “நீ நெஜமாவே கோவமா இருக்கியா” என்று மீண்டும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அம்மா தாயே, நான் கோபமே படலம்மா, எனக்கு மானம் சூடு சொரணை எதுவுமே உன் கூட சேர்ந்ததுக்கப்புறம் இருக்கக்கூடாது ன்றது தெரியும், தெரிஞ்சும் திரும்பத் திரும்ப உன்கிட்ட வந்து கோவப்பட்டா, என்னைவிட லூசு வேற யாரும் கிடையாது” என்று சொன்னாள்.

மருத்துவரோ அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அடிபட்ட காலில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் நர்ஸ் வரவும் பெயின் கில்லர் போட்டு விட சொல்லி விட்டு., “நீங்க இன்ஜெக்ஷன் போட்டுட்டு அந்த ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதுக்கு அப்புறமா கிளம்புங்க, இந்த இன்ஜெக்ஷனுக்கு கொஞ்சம் தலை சுற்று ஆக இருக்கிற மாதிரி இருக்கும்., அதுக்கப்புறம் கிளம்புங்க சரியா இருக்கும், காலுக்கு ரொம்ப ஸ்ட்ரெயின் கொடுக்காதீங்க, ஸ்டிக் இருக்கும் வாங்கிக்கோங்க, நீங்க உங்க பிரண்டு தோளை பிடிச்சிட்டு நடந்துருவீங்கன்னா நடந்து போகலாம்,” என்று சொன்னார்.

“அதெல்லாம் நான் அவளை புடிச்சிட்டே நடந்துருவேன்” என்று சொன்னாள்.

” எவ்வளவோ செலவு பண்ணுவா, ஒரு ஸ்டிக் வாங்க பஞ்சப்பாட்டு பாடுவா, நான் என்ன உன் வீட்டில் வந்து உன் கூடவா இருக்க போறேன், ஒழுங்கா ஸ்டிக்க வாங்கிட்டு வா” என்று சொன்னாள்.

” சரி சரி அப்ப நீயே போய் வாங்கிட்டு வா” என்று பதிலுக்கு வாயடித்துக் கொண்டிருந்தாள்.

“அதையும் நான் தான் பண்ணனுமா உனக்கு, வாங்கிட்டு வந்து தொலைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போகவும்.

“எப்படி ரெண்டு பேரும் வந்ததுல இருந்து வாய் வலிக்காமல் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க” என்று டாக்டர் கேட்டார்.

அவளோ “தப்பு என் மேல தான் ஒர்க் டென்ஷன் அதிகரிக்கும் போது எங்களுக்கு ரிலாக்ஸ் பண்றதுக்கு ஆபீஸ்ல ரிலாக்சிங் ரூம்னு ஒன்னு இருக்கும், அந்த ரூம்ல போய் நம்ம கேம்ஸ் விளையாடலாம், டான்ஸ் பண்ணலாம், எல்லாம் பண்ணலாம் அது லேடிஸ் கான ரூம், நான் என்ன பண்ணுனேன் போயிட்டு பாட்ட போட்டுட்டு டான்ஸ் பண்ணுனேன், அங்க யாரோ ஜூஸ் குடிச்சிட்டு கீழே சிந்தி இருக்காங்க, கால் ஸ்லிப் ஆயிருச்சு. அதுலதான் இந்த அடி, அதுதான் அவளுக்கு கோபம், அவ டீ குடிச்சிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு போயிருந்தா, அதுக்குள்ள நான் கீழே விழுந்து எந்திரிச்சிட்டேன் அப்படின்னு அவ டென்ஷன் ஆயிட்டா, வேற ஒன்னும் இல்ல, என்ன கோவத்துல திட்டுவா அப்பறம் சாதாரணமா ஆயிடுவா” என்று சொன்னாள்.

“ஆமா இவ்வளவு நேரம் நீங்க வலியோடு ஸ்ஆ., ன்னு சவுண்டு கொடுத்துட்டு இருந்தீங்களே, இப்ப நார்மலா இருக்கீங்களே”, என்ன நர்ஸ் கேட்கவும்,

டாக்டரோ அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவங்களுக்கு முதலில் அதிகமான பெயின் இருந்தாலும் தாங்கிக்கிட்டாங்க, அவங்க பிரண்டு முன்னாடி மட்டும் சவுண்டு விட்டுட்டே இருந்தாங்க, நான் கூட எதுக்கு ன்னு யோசிச்சேன்”என்று சொன்னார்.

“ப்ளீஸ் டாக்டர் போட்டு குடுத்துறாதீங்க, அவளிடம் வலின்னு சொன்னாதான் என்னைய கொஞ்ச நேரம் திட்டிட்டு சமாதானமா கூட்டிட்டு போவா., இல்லாட்டி இன்னைக்கு என்ன ஊருக்கு பேக் பண்ணி அனுப்பிடுவா” என்று சொன்னாள்.

“சரி தான் எப்படியோ, உங்க பிரெண்ட்ஸ் இடையே ஏதோ ஓடுது அப்படியே இருங்க” என்று சொல்லிவிட்டு “டேப்லெட் ஹெவி டோஸ் தான் கொடுத்து இருக்கு., ரொம்ப பெயின் இருந்தா மட்டும் போடுங்க” என்று சொன்னார்.

டாக்டரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள் தோழி வரவும் பாவம் போல முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“அடியே நடிக்கிறாயாடி, இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு” என்று அவள் கேட்கவும் ,

“ராது என்னைய பார்த்து இப்படி சந்தேகப்படறியே ராது, நான் இவ்வளவு நேரம் எப்படி விழுந்தேன்னு கதை சொல்லிட்டு இருந்தேன், விழுந்த அப்போ எப்படி வலிச்சதுன்னு சொல்லிட்டு இருந்தேன் டாக்டர்கிட்ட”. என்று கேட்டாள்.

“அதையே எத்தனை தடவை சொல்லுவ, பாவம் டாக்டர் விடு” என்று சொன்னாள்.

“டாக்டர் கிட்ட சொன்னதை விட்டுட்டேன், நர்ஸ் அக்கா ட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்று இவள்சொல்லவும்,

நர்ஸ் ஒஒ “என்ன போற போக்குல என்னைய அக்கான்னு சொல்றீங்க, நானும் உங்க வயசு தான் இருப்பேன், இல்ல னா உங்கள விட ரெண்டு வயசு கூட இருப்பேன், அதுக்காக அக்கான்னு எல்லாம் கூப்பிடாதீங்க”., என்று சொன்னார்.

அவளோ சிரித்துக் கொண்டே “ராது அப்போ உன்னையும் அக்கா ன்னு சொல்லிக் கூப்பிடனுமா ராது, நீ என்னை விட ஒரு வயசு மூத்தவ தானே” என்று கேட்டாள்.

“அடியே அடி பிச்சிடுவேன் ஒழுங்கு மரியாதையா எந்திரி., கிளம்பி வீட்டுக்கு போவோம்” என்று சத்தமாக சொன்னாள்.

டாக்டரோ “இப்பதான் இன்ஜெக்ஷன் போட்டு இருக்கு., கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறமா போங்க” என்று சொல்லி அனுப்பினார்.

அதன்படியே இருவரும் சற்று நேரம் இருந்துவிட்டு அவளுக்கு மருந்து அதிகமாக தொந்தரவு கொடுக்கவில்லை என்று தெரிந்த பிறகு அவளை கை தாங்கலாக கூட்டிச் சென்று காரில் ஏற்றினாள்.

கையில் ஸ்டிக்கை கொடுத்திருந்தாலும் எதுவும் சறுக்கி விடக்கூடாது என்றே அவளை பிடித்துக் கொண்டு வந்தாள் அவளது தோழி ராதா. அவளால் ராது என்று அழைக்கப்படுபவள்.

“நீ ரொம்ப சேட்டை பண்ற தெரியுமா”., என்று காரை ஸ்டார்ட் பண்ணி கொண்டே ராதா பேச,

அவளோ அவளை திரும்பிப் பார்த்து என்னடி சேட்டை பண்ணினேன்., “உன்கிட்ட இருந்து பண்டத்தை புடுங்கி சாப்பிட்டேனா, இல்ல நான் தப்பு பண்ணிட்டு உன்னை மாட்டி விட்டேனா” என்று கேட்டாள்.

“ஆமா மா அது ஒன்னு தான் குறைச்சல் அதையும் செய், நாளைக்கு நீ ஊருக்கு கிளம்பி போக வேண்டியது, இப்போ இப்படி அடிபட்டு இருக்கு, இப்போ உங்க அம்மா அப்பாக்கு சொல்லியாச்சி”., என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே,

“எல்லாரும் முன்னாடி உன் வீட்டுக்காரர் கிட்ட ஒப்பிச்சி இருப்பியே” என்று கேட்டாள்.

“யாழி” என்று அதட்டி கூப்பிட,

“யாழி கூப்பிடாதடி, யாழினா ஒரு அனிமல், என் பேரு யாழினி, அப்படி கூப்பிடு” என்றாள்.

“யாழி தான் கூப்பிடுவேன்” என்று இவளும் சொன்னாள்.

“போடி ராகு,” என்றாள்.

“அடியே நான் ராதா” என்றாள்.

“அடியேன்னு கூப்பிட மாட்டேன், ராது தான், வம்பு பண்ணின ராகு சொல்லுவேன்”, என்றாள்.

“இப்ப மட்டும் என்ன மாத்தியா சொல்லிட்டு இருக்க, எப்பவும் அப்படி தானே சொல்லுற, யாழி ன்னா அனிமல் இல்ல., யாளி ன்னு ளி ய மாத்தி போட்டா தான் அனிமல்”., என்றாள்.

“ஆத்தி உங்க அப்பா தமிழ் ஆர்வலர் ன்னு மறந்துட்டேன், மன்னிச்சிக்கோ தாயே,” என்றவள். “என்ன உன் புருஷன் அதிசயமா உன்னை தேடி போன் பண்ணல” என்றாள்.

“பின்ன உன் கூட இங்க சுத்திகிட்டு இருக்கேன் ன்னு தெரியுமே, என் புருஷன் தேட மாட்டார்., அவருக்கு இன்பார்ம் பண்ணிட்டேன், உன் வேலையும் சேர்த்து பார்த்துட்டு தானே வரனும்” என்றாள்.

வாயை ஒரு பக்கமாக கோணி கொண்டு, “என்ன உன் புருஷன் உடனே அட்வைஸ் பண்ணி இருப்பாரே, உனக்கு ஒரு பக்கத்திற்கு அட்வைஸ் பண்ணி, எனக்கு சேர்த்து இரண்டு பக்கத்திற்கு அட்வைஸ் பண்ணி இருப்பாரே”. என்று கேட்டாள்.

“பின்னே பண்ணாம, உன் கூட சேர்ந்து நானும் வாலா போறேனாம், அம்மா தாயே உன் சேட்டை குணத்தை கொஞ்ச நேரம் சுருக்கி வை” என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தவள்.

“ஏண்டி உன்னைய என்ன சொல்ல, இந்த நேரத்தில் சர்வீஸ் விட்டுருக்க” என்று கேட்டாள்.

“சர்வீஸ் விட வேண்டிய நாள் விட்டேன், நான் என்ன கனவா கண்டேன் கீழே விழுவேன் ன்னு”, என்று சொன்னாள்.

“இதில் மட்டும் குறைச்சல் கிடையாது, இதெல்லாம் ப்ராப்பரா செய்யுற நீ , செய்ய வேண்டிய எதையும் செஞ்சுறாத, மெஷினுக்கு செய்றதெல்லாம் கரெக்டா செஞ்சுடு” என்று நக்கலாக சொன்னாள்.

“அது முக்கியம் தானே பணம் எவ்வளவு கட்டிட்டு இருக்கேன், வீட்டுக்கு டியூ காருக்கு டியூ” என்று சொன்னவளுக்கு,

“சரி இப்ப உங்க அப்பா அம்மாக்கு என்ன சொல்ல போற”, என்று கேட்டாள் ராதா.

யாழினியோ “நீதான் இன்ஃபார்ம் பண்ணிட்டியே, கீழே விழுந்துட்டேன் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்கேன் ன்னு” என்றாள்.

“ஏண்டி இப்போ இத்தனை ஜாலியா பேசிட்டு வர்ற, இப்போ வலிக்கலையா” என்று கேட்ட உடனே,

“அய்யோ அப்படி எல்லாம் இல்ல, நல்ல வலிக்குது டாக்டர் ஊசி போட்டதனால, கொஞ்சம் மரத்து போன மாதிரி இருக்கு” என்று சொன்னாள்.

“இல்லையே எனக்கு சந்தேகமா இருக்கே”., என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, வலிக்குது தெரியுமா அதுக்காக நான் அழுதுகிட்டே வர முடியுமா, சின்ன பிள்ளை மாதிரி நான் அழுதா நீ சாக்லேட் வாங்கி தருவியா, இல்ல ஐஸ்கிரீம் வாங்கி தருவியா,” என்று கேட்டாள்.

” உனக்கு ஒன்னும் வாங்கி தர முடியாது, அப்படியே வாய மூடிட்டு உட்காரு, இப்போ அமைதியா இரு, என்னை ட்ரைவ் பண்ண விடு, எதையாவது பேசிட்டு இருக்காத” என்று சொல்லிவிட்டு காரை லாவகமாக ஓட்டிக்கொண்டு சென்றாள்.

இவளோ வாய்க்குள் முணுமுணுத்த படியே வந்தாள்., ‘நீ பேச ஆரம்பித்து பாரு வாய்ல சூடு வைக்கேன், இவ பேசினா தப்பு இல்ல நான் பேசினா மட்டும் தப்பு’

“தனியா பேசாத, லூசு ன்னு சொல்ல போறாங்க ” என்றாள்.

முகத்தை சன்னல் புறமாக திரும்பி கொண்டு ராதாவின் பேச்சை புறம் தள்ளினாள்.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினாலும் , அங்கு ஒரு அரசியல் மீட்டிங் இருப்பதன் காரணமாக பெரும் தலைவர்கள் வருவதற்காக ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஒவ்வொரு காராக சோதனை செய்து அனுப்பும் போது இவர்கள் கார் வரவும் அதுவும் நிறுத்தப்பட்டது.

அங்கு போக்குவரத்து போலீஸ்ம் இருந்தனர், மாவட்ட காவல்துறையின் பெரிய அதிகாரிகளும் அந்த பக்கம் நின்றிருந்தனர்.

கண்ணாடியை இறக்கிய ராதா என்னவென்று கேட்க, “ஆர்சி புக் லைசென்ஸ்” என்று கேட்டனர்.

ஆர்சி புக்கை கொடுத்தவள், “என்னோட லைசென்ஸ் நான் எடுத்துட்டு வரல சார், இது இவளோட கார், அவளுக்கு காலில் அடிபட்டு இருக்கு, அதனால நான் ட்ரைவ் பண்ணிட்டு போறேன்” என்று சொன்னாள்.

அதே நேரம் லேடி போலீஸ் வரவும், விஷயத்தை சொல்லி “அவங்களுக்கு உண்மையிலேயே காலில் அடிபட்டு இருக்கான்னு பாருங்க” என்று சொல்லவும்

அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவள் இருட்டாக இருந்ததால் தன் முகத்தை மாற்றிக் கொண்டது யாருக்கும் புரியவில்லை,

பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை அந்த பக்கமாக வந்த பெண் போலீசார் கதவை திறந்து பார்த்தனர். அவள் காலில் கட்டு போட்டு இருப்பதும் அருகில் ஸ்டிக் வைத்திருப்பதையும் பார்த்தவர்கள் “என்ன எப்படி அடிப்பட்டது” என்று கேட்டனர்.

“அலுவலகத்தில் வலிக்கி விழுந்து விட்டாள்” என்று மட்டுமே ராதா சொன்னாள். “இப்பவும் டாக்டர்கிட்ட போய்ட்டு தான் வர்றோம்” என்று சொல்லி பிரிஸ்கிரிப்ஷன் எல்லாம் காட்டினர்.

Advertisement