Advertisement

நினைவினில் நிறைந்தவளே 
அத்தியாயம் 26
ஆதி செல்வா அர்ஜுன் என்று மூவரும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர்…
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலே மீனுவும் திவ்யாவும் சக்தியின் வீட்டிற்கு வருகை புரிந்தனர்…
” என்னடா இது புதுசா இந்த சைடு காத்து பலமா வீசுதே ” என்று சக்தி அவர்களது வரவை பார்த்து நக்கலடிக்க…
“என்ன அக்கா நீங்க இப்படி பேசுறீங்க..??? ” என்று மீனுவும் திவ்யாவும் ஒரே போல் கேட்க…
” வேற எப்படி கேக்க சொல்றீங்க மேடம் ..நீங்க ஊருக்கு வந்து ஒருவாரம் ஆச்சி..ஆனா இந்த சைடு வரதுக்கு இப்ப தான் உங்களுக்கு டைம் கிடச்சிதா ” என்று கோபித்து கொள்ள…
” அக்கா..!!!உங்க வீட்டுக்கு வேற கெஸ்ட் வந்திருந்தாங்க அதுனால தான். நீங்க வேற பிசியா இருப்பீங்கன்னு தான் நாங்க வரல ” என்று மீனு பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள…
” உன் நடிப்பெல்லாம் இங்க செட்டாகாது.. அட்லீஸ்ட் ஒரு கால் பண்ணியாவது பேசுனியா டி… ஆனா திவ்யா மறக்காம எனக்கு நைட்டு கால் பண்ணி பேசுவா.. நீயும் தான் இருக்கியே ” என்று சைடு கேப்பில் திவ்யாவை மாட்டி விட…
மீனு திவ்யாவை கொலை வெறியுடன் பார்க்க…
” அச்சோ பேபி மா…!!!மீ பாவம் அப்படியெல்லாம் பாக்காத டி..இப்போ எதுக்கு டி என்ன பார்த்து நடந்து வர..எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கட்டும் பாத்துக்க…” என்று திவ்யா கூறிக்கொண்டு இருக்கும் போதே திவ்யா ஓடத் தொடங்கினாள்…
” ஏன்டி இப்படி பண்ண..?? நீ மட்டும் அக்காக்கு ஃபோன் பண்ணி பேசி இருக்க..ஏன் என்கிட்ட கொடுத்தா நான் பேசமாட்டேன்னா என்ன..” என்று கூறி அவளை துரத்திய படியே ஓடிக் கொண்டு இருந்தாள்…
” ஏய் வேணாம் டி..என்னால ஓட முடியல மூச்சு வாங்குது… நைட்டு போர் அடிச்சது அதுனால தான் அக்காக்கு ஃபோன் பண்ணி பேசுனேன்…” என்றாள் ஓடிய படியே…
திவ்யா சக்தியின் முதுகு புறத்தின் பின் ஒழிந்து கொள்ள.. “அக்கா அக்கா அவ கிட்ட இருந்து காப்பாத்துங்க கா.. அவளுக்கு வேற காராத்தே தெரியும் என்னைய செண்ட் கட்டிட்டு வா.. ப்ளிஸ் அக்கா காப்பாத்துங்க ” என்று கைகளால் முகத்தை மூடிய படியே சக்தியிடம் கெஞ்சினாள்…
“ஆமாம் டி..எனக்கு கராத்தே நல்லாவே தெரியும்..இப்போ தான் அதுக்கு வேல வந்துருக்கு ” என்று மீனு கூற..
திடுக்கிட்டு கைகளை விளக்கி முன்னே நின்ற இருவரையும் பார்க்க..,, இருவரும் கைகளை மடக்கிய படி நின்று முறைத்து கொண்டு நின்றனர்…
“என்ன இது இப்போ சக்தி அக்காவும் மீனு கூட சேர்ந்துட்டாங்களா ..அப்போ நாளைக்கு எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தானா ” என்று மனதில் நினைத்து கொண்டு இருக்க..,, தீடிரென்று ‘ஆஆஆஆஆஆ’ என்று கத்த தொடங்கினாள்..
” ஏன்டி..!! உனக்கு போர் அடிச்சதுனால தான் எனக்கு ஃபோன் பண்ணியா ” என்று மீண்டும் திவ்யாவின் தலையில் குட்ட..
” போங்க எல்லாரும் என்ன அடிக்கிறீங்க . நான் வீட்டுக்கு போய் சாப்பிட போறேன் ” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றாள்…
” போ போய் நல்லா கொட்டிக்கோ டி ” என்று சக்தியும் அவளை தொறத்தி விட்டாள்….
அவள் சென்றதை பார்த்த இரு பெண்களும் சிரித்துக்கொண்டு இருந்தனர்…..
” அக்கா..!!!என்ன இந்த வாரம் ஓரே கெஸ்ட் போல ” என்று மீனு ஆர்வமாக கேட்க..
அவளது ஆர்வத்தை காணாத சக்தி அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஆரம்பித்தாள்..
” ஆமாம் பெரிய கெஸ்ட் பாரு .வந்தது  என்னோட தம்பி என்னோட அத்த பையன் அப்பறம் அவனுங்களோட ஃபிரண்ட் எல்லாம் இங்க தான் காலேஜ் படிக்குறானுங்க . லீவ் முடிய ஒருவாரம் இருக்கும்போது எப்போதும் இங்க வந்து தங்கிட்டு தான் போவாங்க.. அவுங்க இங்க இருக்கிற வரைக்கும் வீடே கலகலப்பா இருக்கும் டா..” என்றாள்..
” ஓஓஓ உங்களுக்கு ஒரு தம்பி இருக்குன்னு நீங்க சொல்லவே இல்லையே அக்கா ” என்று மீனு சக்தியிடம் கேட்க…
” நீயும் கேட்ருக்க மாட்ட . அதுனால நானும் சொல்லிருக்க மாட்டேன்… எனக்கு ஒரு தம்பி மட்டும் இல்ல ஒரு தங்கச்சியும் இருக்கா…” என்றாள்..
“சூப்பர் அக்கா..செம்ம போங்க வீட்ல இருக்கும் போதுலாம் ஜாலியா இருக்கும்ல..சண்ட போட்டு  அடிச்சுகிட்டு புடிச்சிட்டுனு நல்லா என்ஜாய் பண்ணுவீங்கள எல்லாரும்.. ஆனா அந்த மூனு பேருல யாரு உங்க தம்பி அக்கா ” என்று ஒரு ஆர்வத்துடனே கேட்டாள்…
” என்ன மீனு மா.?என் தம்பிய பத்தி ஆர்வத்துடன் கேக்குற..??” என்று கிண்டலாக கேட்க..
“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. என்ன டிரெயின்ல ஒரு தடி தாண்டவராயன் என் கைய புடிச்சி இழுத்து வண்டிக்குள்ள ஏத்தி விட்டுச்சி .. அதான் அந்த குரங்குக்கு ஒரு நன்றி கூட சொல்லல ..அந்த பையனை இங்க பார்த்த மாதிரி ஒரு ஞாபகம் .. அதுனால கேட்டேன் வேற ஒன்னும் இல்ல கா ” என்று வாய்க்கு வந்ததை சக்தியிடம் சொன்னாள்…
” என்னடி சொல்ற உன்ன ஒரு பையன் கைய பிடிச்சு இழுத்தானா .. அது யாருன்னு சொல்லு ..அவன கண்டு புடிச்சி ஒரு வழி பண்ணிடலாம் ” 
“ஆமா அக்கா “என்று கூறி ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த அனைத்தையும் சக்தியிடம் கூறினாள்…
” ஏன்டி..!!!உன்ன அந்த பையன் டிரெயின்ல கஷ்ட பட்டு ஏத்தி விட்டதுக்கு அவன நல்லா லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிருக்க போல .. அவன் தான் உன்ன திட்டனும் ஆனா நீ அந்த பையன திட்டிட்டு வந்துருக்க ” என்று கூற…
மீனு வலிந்து கொண்டு ஈஈஈஈயென இழித்து வைத்தாள்…
” சரி கா நான் கிளம்புறேன்..அவ வேற அங்க தனியா இருக்கா ” என்று கூறிவிட்டு கிளம்பினாள்…
அடுத்த நாள் அழகாக விடிந்தது அனைவருக்கும்….
மீனு திவ்யாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருக்க… திவ்யாவோ உறக்கத்தில் அவளது காதலனுடன் டூயட் பாடிக் கொண்டு இருந்தாள்… 
“அடியே..!!!இப்போ நீ எந்திரிக்க போறியா..?? இல்லையா..?? ” என்று கோபத்துடன் கேட்க..
” போ நான் மாட்டேன்…. வருண் பேபி என்ன உன் கூடயே கூட்டிட்டு போறேன்னு சொன்னியே இன்னும் ஏன் நீ என்ன கூட்டிட்டு போக வருல ” என்று மீனுவின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு கனவில் பேசுகிறோம் என்ற நினைப்பில் தூக்கத்தில் உளறி கொண்டு இருந்தாள் திவ்யா….
” ஏய்…!!!உன்னோட உளறல நிப்பாட்டு டி கொஞ்சம்..டெய்லியும் இத கேட்டு கேட்டு காது வலி வந்தது தான் மிச்சம் ” என்று கூறி அவள் தலையில் நருக்கென்று கொட்டு வைக்க…
அம்மா என்ற கதறலுடன் எழுந்தவள் மீனுவை பார்க்க அவள் கோரமாக லுக் விடுவதை கண்டு ” அச்சச்சோ இன்னைக்கும் நம்ம கனவுல பேசுறோம்ன்னு நினைச்சி உளறி கொட்டிடேன்னா..இவ வேற இப்படி பாக்குறாளே ” மனதில் நினைத்து விட்டு சிட்டாக பறந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்….
” என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறியாக்கும்., எப்படியும் சாப்பிட வந்து தான ஆகனும் .அங்க வா பாத்துக்குறேன் ” என்று கூறிவிட்டு கிளம்ப ஆரம்பித்தாள்..
திவ்யாவும் குளித்து முடித்து வெளியே வர..,,மீனு கல்லூரிக்கு கிளம்பி தயாராக நின்றிருந்தாள்…
பின்னர்..,, திவ்யாவும் கிளம்பி வர.,, இருவரும் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சென்றனர்…
இங்கே ஆதி அர்ஜுன் செல்வா மூன்று பேரும் அரக்க பறக்க கிளம்பி கல்லூரிக்கு சென்றனர்…
செல்வா மற்றும் ஆதி இருவரும் கணிப்பொறியிலும் அர்ஜுன் அரோநாட்டிகலும் எடுத்து மூன்றாவது வருடம் படித்து கொண்டு இருந்தனர்…
கல்லூரியில் இருந்தே ஆதிக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே கனவாக இருந்தது… செல்வா தான் அந்த கல்லூரியில் ப்ரசிடண்டாக இருந்து வந்தான்…அவனை தெரியாத நபர் யாரும் இல்லை அந்த கல்லூரியில்…
கல்லூரி வந்து சேர்ந்த இரு கேங்கும்  நேராக சென்றது கேண்டினுக்கு தான்..
கேண்டினுக்கு வந்து சேர்ந்த மீனு மற்றும் திவ்யா பவிக்காக காத்திருந்தனர்…
” இந்த பவி ஏன் இன்னும் காலேஜ்க்கு வரல..அவளுக்காக எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது.. க்ளாஸ்கு வேற டைம் ஆச்சு”என்று மீனு கூற..
” இரு டி அவ வருவா..அவ என்னைக்கு காலேஜ்க்கு சீக்கிரமா வந்துருக்கா சொல்லு இன்னைக்கு வரதுக்கு ” என்று பவியை புகழ்ந்து தள்ள
” ரொம்ப நன்றி மேடம் என்ன புகழ்ந்து தள்ளுனதுக்கு ” என்று கூறிய படியே மீனு திவ்யா இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் பவித்ரா…
“இதுக்கு எதுக்குடி நன்றிலாம் சொல்ற…இது என்னோட கடமை ” என்று கெத்தாக கூற 
திவ்யாவின் தலையில் நறுக்கென்று கொட்டு வைத்தவள்..,,”நீ என்னை புகழ்ந்து தள்ளுனதுக்கு பரிசு” என்றாள்..
இந்தமுறை பவியின் தலையில் கொட்டிய திவ்யா “நீ கொடுத்த கிஃப்ட்க்கு ரிட்டர்ன் கிஃப்ட் தரனும்ல அதுக்கு தான் இது ” என்றாள்.
“போதும் நிறுத்துங்க டி உங்க சண்டைய..” என்று மீனு பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு சொல்ல
” நாங்க எங்க சண்ட போட்டோம் .. நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம் ” என்று இருவரும் கோரசாக கூறினர்..
மீனு அவள் தலையில் அடித்துக் கொண்டாள்..
“ஹேய்..!!எனக்கு ரொம்ப பசிக்குது டி..அப்பா வேற இன்னைக்கு உப்புமா செஞ்சி வச்சிருந்தாரா, அதுனால நான் சாப்பிடாம வந்துட்டேன் ” என்று பவி கூற ..
“எனக்கும் தான் பசிக்குது டி.. நான் சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சி ” என்று திவ்யாவும் கூற…
இருவரும் சேர்ந்து சாப்பிட சாப்பாடு வாங்க போறதாக கூற..
” போய் தொலைங்க டி எருமைங்களா ” என்று அவர்கள் இருவரையும் துரத்தி விட்டாள் மீனு.
அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவளது வகுப்பு தோழி ஒருவள் வந்து ” ஹே அஞ்சனா, உன்ன நம்ம ஹேச்சோடி மேம் சிஎஸ்சி டிபார்ட்மெண்ட்க்கு வர சொல்லி சொன்னாங்க டி .. சீக்கிரம் பொய்யிடு ” என்று கூறிவிட்டு சென்றாள்..
அவர்களை சாப்பிட அனுப்பி விட்டு மீனு மேமை காண சென்றாள்…
செல்வா கேண்டினில் உட்கார்ந்து நேற்று இரவு நடந்ததை பற்றி சிந்திக்க தொடங்கினான்…
செல்வா அவனது அறையில் கட்டிலில் சாய்ந்து அமர்ந்த படியே கைகளையே பார்த்து கொண்டு இருந்தான்…
இதை கவனித்த ஆதி அர்ஜுனிடம் ” டேய் அவன் ரொம்ப நேரமா அந்த கையையே பாத்துட்டு நிக்கிறான் டா..அதுல அவனுக்கு என்ன தெரியுதுன்னு தான் எனக்கு தெரியல ” என்று அவன் காதில் கிசுகிசுக்க 
” இருடா என்னென்னு கேட்டு பாப்போம் அவன் கிட்ட ” என்ற அர்ஜுன் செல்வாவை நோக்கி சென்றான்.. அவன் பின்னாடியே ஆதியும் சென்றான்…
திடிரென்று தன் மேல் சாரல் அடிப்பதை உணர்ந்த செல்வா என்னவென்று பார்க்க..
அங்கே ஆதியும் அர்ஜுனும் அவன் மீது தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தனர்…
” என்னங்கடா பண்றீங்க ரெண்டு பேரும்.. எதுக்கு இப்போ என்மேல தண்ணி ஊத்துறீங்க ..” என்று கோபமாக கேட்க..
” அடேய் மடையா..!!!நீ காதல் உலகத்துல உன்னோட காதலிக்கூட டூயட் பாடிட்டு இருப்ப…அந்த டூயட் ல மழ பேஞ்சா நல்லா இருக்கும்னு ஆதி தான் ஐடியா கொடுத்தான் .. அந்த ஐடியாவும் நல்லா இருந்துச்சா..,,,சரி அதான் ட்ரை பண்ணோம் ..அதுல கொஞ்சம் காத்து வந்தா நல்லா இருக்கும்னு எனக்கு தொனுச்சி அதுனால ஆதிய விசிறி வச்சி வீச சொன்னேன் ” என்றான் அர்ஜுன்…
செல்வா திருத்துருவேன இருவரையும் பார்த்து முழிக்க…
“போதும் டா.. இப்படி முழிக்காத எங்களால பாக்க முடியல ” என்று ஆதி சொல்ல
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா ..இவ்வளோ நேரம் நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லிட்டு இருந்தீங்க ” என்று செல்வா அவர்களை பார்த்து கேட்க…
இருவரும் அவனை கொலை வெறியுடன் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர்..
“டேய்..!!! நாங்களும் எவ்ளோ நேரமா உன்ன கூப்பிட்டுட்டு இருக்கோம் .நீ கண்டுக்கவே இல்ல ” என்று கோபமாக கூற..
“அதுக்கு தான் இப்படி மூஞ்சில தண்ணீ ஊத்துனீயா ” என்று செல்வா கேட்க..
” டேய்..!!!யாரு டா அந்த பொண்ணு..??உன்ன இந்த அளவுக்கு மாத்தினது” என்று கேட்ட ஆதியை 
” யாருன்னா என்ன சொல்றது டா..???” என்று செல்வா எதுவும் தெரியாது போல் கேட்க..
” போதும் டா நீ நடிச்சது ” என்று அர்ஜுன் கோபமாக கேட்க…
அதன்பின் செல்வா அவர்களிடம் அனைத்தையும் கூறினான்…
“டேய் செல்வா…!!!”
“செல்வா ” என்று மீண்டும் ஆதி கத்த…
“ஆனா வூனா கனவு லோகத்துக்கு போயிடுறான் ” என்று புலம்பினான் அர்ஜுன்..
ஆதி அவனை உலுக்கவும் நினைவு உலகத்துக்கு வந்தவன்..,, என்னடா என்று கேட்க…
“நீங்க ப்ரசிடண்ட்ல அதான் உங்கள அந்த கிழவி கூப்புடுதாம் பொயிட்டு வாங்க சார் ” என்று ஆதி கூற 
” சரி டா நான் போய் மேம்ம பாத்துட்டு வரேன் ” என்று கிளம்பினான்..
” மே ஐ கம் இன் மேம் ” என்று செல்வா கதவை தட்ட..
“எஸ் கம் இன் செல்வா ” என்றார்..
” எஸ் மேம்.நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க மேம் ” என்க
“ஆமா செல்வா… இன்னும் ஒன் வீக்ல நம்ம டிபார்ட்மெண்ட் அண்ட் ஐடி டிபார்ட்மெண்டும் சேர்ந்து சிம்போசியம் வைக்க சொல்லி இருக்காங்க. சோ அதை இந்த டைம்ல உங்க பொறுப்புல விடுறேன்.. உங்களுக்கு சப்போட்டா ஐடி டிபார்ட்மெண்ட்ல இருக்கிற செக்கண்ட் இயர் கேர்ல் அஞ்சனா வருவா. அவுங்க டிப்பார்ட்மெண்ட்க்கு ஆர்க்கனைஸ் பண்ண போராங்க .. அதுனால நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இத ஆர்கனைஸ் பண்ணும்னு நானும் ஐடி டிபார்ட்மெண்ட் ஹேச்சோடியும் நினைக்கிறோம் ” என்றார் மேம்..
“ஓகே மேம்.. நானும் அந்த பொண்ணும் இதை பாத்துக்கிறோம் ” என்க 
” ஓகே இப்போ நீ போய் வேலைய ஸ்டார்ட் பண்ணு..நான் அந்த பொண்ணு கிட்ட சொல்லி உன்ன பார்க்க வர சொல்றேன் ” என்று கூறி அனுப்பி வைத்தார்..
செல்வா வெளியே வரதுக்காக கதவை திறக்க..,,அதே நேரத்தில் அந்த பக்கத்தில் இருந்து ஒரு பெண் வந்து கதவை திறக்க…
தீடிரென்று கதவை திறந்ததால்..அந்த பக்கத்தில் இருந்த பெண் செல்வாவின் மீதே வந்து விழப் போக செல்வா அவளை தாங்கி பிடித்திருந்தான்….

Advertisement