வீட்டுக்கு வந்து அதில் இருந்த எல்லா வீடியோக்களையும் பார்க்க கூசிப் போனாள். தன்னை தன்னுடைய உடலை பல பேர் பார்த்துக் கொண்டிருக்க இதை தானே இன்னொரு பெண்ணுக்கு செய்தோம் என்று அவளுக்கு அந்த நிமிடமும் உரைக்கவே இல்லை.

     அடுத்த நாளே சைபர் கிரைம் ஆபீஸ் சென்று அந்த வீடியோக்களை நீக்கும் படி சொல்ல விக்ரமின் கை வரிசை அங்கும் இருந்ததால் “எப்படி எப்படி நீ விருப்பத்தோட கண்ட ஆண்களோட கூத்தடிப்ப? நாங்க உனக்கு பாதுகாப்பும் கொடுத்து வீடியோவையும் நீக்கணுமா? இது எல்லாம் நீ விருப்பத்தோட நடிச்ச நீலப் படம் தானே? இப்ப ஏன் நீக்கச் சொல்ற?”, என்று கேட்டார்கள்.

     “இல்லை இல்லை, நான் எதுலயும் நடிக்கலை?”, என்று அவள் கத்த அவள் கையெழுத்து போட்ட பேப்பரைக் காட்டினார்கள். அதில் தான் போலீஸ்காரர்கள் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள் என்று அப்போது தான் அவளுக்கு புரிந்தது. அதற்கு பின் அங்கே அவள் பேச்சு எடு பட வில்லை. மானமும் போய் வேலையும் இல்லாமல் போய் தளர்ந்து போய் வீட்டுக்கு வந்தாள். அரை உயிராக இருந்தாள்.

     அடுத்த நாள் வேலை தேடி ஒரு அலுவலகம் செல்ல அங்கே “சாரி மேடம் அந்த மாதிரி படம் எடுக்குற வேலை எல்லாம் இங்கே இல்லை”, என்று சொல்லி அவமானப் படுத்தினார்கள்.

     அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அடுத்த நாள் அவளை வேலையில் இருந்து தூக்கி இருந்தனர். அவளைப் பற்றிய உண்மையை யாரோ வந்து சொல்லி வேலை கொடுக்க கூடாது என்று சொன்னார்கள் என்றும் சொன்னார்கள். இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்று கூட தெரிய வில்லை.

     அப்போது ஹவுஸ் ஓனர் வந்து ஒரு மாத வாடகையை அட்வான்சில் இருந்து கழித்துக் கொள்வதாகவும், இந்த மாதிரி பெண்களுக்கு வீடு கொடுக்க மாட்டோம் என்றும் உடனடியாக வீடு காலி பண்ணச் சொல்லி சொல்லவும் அதிர்ந்து போனவள் இரண்டு நாட்கள் டைம் கேட்டாள்.

     தன்னை சுத்தி சுத்தி அடிப்பது யார் என்று தெரியவே இல்லை. அப்போது தான் பழைய விஷயங்களை நினைத்துப் பார்த்தாள். “ஒரு வேளை ரகுவா இருக்குமோ? இல்லை சுனில் வீட்ல உள்ளவங்களா இருக்குமோ? ஆனா அவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை அவங்களா இருக்க முடியாது? ரகு கிட்ட ஹெல்ப் கேப்போம்? அன்னைக்கே பணம் தரதா சொன்னானே? இப்ப அவனுக்கும் அந்த வீடியோ பத்தி தெரிஞ்சிருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டே அவனுக்கு அழைக்க அவன் அவள் அழைப்பை பார்க்க வில்லை என்பதால் அதை எடுக்க வில்லை.

     “இன்னும் என்ன எல்லாம் நடக்கப் போகுதோ?”, என்று பயந்தவளுக்கு இன்னொரு பயமும் வந்தது. இத்தனை நாளில் வயிற்றில் குழந்தை ஏதாவது உருவாகி இருந்தால்?

     உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டாள் அப்படி எதுவும் இருக்க கூடாது என்ற வேண்டுதலோடு. அவர்கள் மேலோட்டமாக பரிசோதனை செய்ய “இல்லை இல்லை கார்ட் வச்சு பாத்தா இவ்வளவு சீக்கிரம் கற்பம் எல்லாம் தெரியாது. எனக்கு ரத்த டெஸ்ட் பாருங்க. ஏதாவது சிம்ப்டம்ஸ் இருந்தாலும் அதை அழிச்சிருங்க”, என்று சொல்ல ரத்த பரிசோதனை செய்யப் பட்டது.

     சிறிது நேரத்தில் அந்த ரத்த ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு அவள் டாக்டரை பார்க்கச் செல்ல அவளை தனி வார்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆட்கொல்லி நோய்க்கான வார்டாக அது இருக்க அதிர்ந்து போனவள் நர்சிடம் “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?”, என்று அழாத குறையாக கேட்டாள்.

     “சாரி மா. உனக்கு பாஸிட்டிவ் காட்டுது. மத்ததை டாக்டர் சொல்லுவாங்க”, என்று சொல்ல அப்படியே தளர்ந்து தரையிலே அமர்ந்து விட்டாள்.

     கடைசியில் இதுக்கு தானா? இதுக்கு தான் என்னை கடத்திச் சென்றார்களா என்று நொந்து போனவளுக்கு யாரால் இந்த நோய் வந்தது என்று கூட தெரிய வில்லை. தளர்ந்து அமர்ந்திருந்தவளை வற்புறுத்தி டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.

     “கிருமி நல்லாவே பரவிருச்சு மா. அழிக்க முடியாது. ஆனா சாவைத் தள்ளிப் போட முடியும். இப்பவே அட்மிட் ஆகிரு”, என்று டாக்டர் சொல்ல “நாளைக்கு வரேன்”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்றாள்.

     அழுது அழுது கண்ணீர் கூட வற்றி விட்டது. செய்த பாவம் எல்லாம் கண் முன் வந்தது. அப்போது யாரோ கதவைத் தட்ட தளர்ந்து போய்த் திறந்தாள் கை கால் எல்லாம் நடுங்கியது.      அங்கே கம்பீரமாக ஒரு புண் சிரிப்புடன் நின்றிருந்தான் விக்ரம் சிங்.

     “அத்தான்”, என்று அவள் அதிர்வாக அழைக்க “சீ து என்னை அப்படிக் கூப்பிட உனக்கு வெக்கமா இல்லை”, என்றான் அருவருப்பாக.

     அவன் சீற்றத்தில் அஞ்சி “சார், அது…”, என்று அவள் திணற “அது. அப்படியே கூப்பிடு. உள்ள போய் சவாகசமா பேசலாமா? என்ன இருந்தாலும் என் தம்பி கூட வாழ்ந்தவளாச்சே? அவன் பிள்ளையை பெத்தவளாச்சே?”, என்றான்.

     அவள் வழி விட்டு நிற்க உள்ளே சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் விக்ரம். அவள் தளர்ந்து போய் அவன் முன்னே வந்து நிற்க “என்ன குழப்பமா இருக்கா இவன் எப்படி இங்க வந்தான்னு?”, என்று கேட்டான்.

     அவள் ஆம் என்று தலையசைக்க “எப்படி இருக்கேன்னு பாக்க தான்”, என்றவன் பேச்சில் அவ்வளவு நக்கல்.

     “சார்”, என்று அவள் அழைக்க “இரு இரு இங்க நடக்குறதை ரகு பாக்கணும்னு சொன்னார்”, என்று சொன்ன விக்ரம் ரகுவுக்கு அழைத்தான்.

     அதை எடுத்த ரகு “சொல்லுங்க விக்ரம்”, என்றான்.

     “கீர்த்தியை என்ன பண்ணுனீங்கன்னு கேட்டுட்டே இருந்தீங்கல்ல? அதான் சொல்லலாம்னு. இதோ அவளும் இங்க தான் இருக்கா”, என்று சொன்ன விக்ரம் அவளையும் வீடியோவில் காட்ட அவள் மாற்றத்தில் ரகுவே கொஞ்சம் அதிர்ந்தான்.

     “ரகு”, என்று அவள் அதிர்வாக அழைக்க “ஏன் கீர்த்தி இப்படி பண்ணின?”, என்று அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்டான்.

     “ரகு.. நான்”, என்று திணறினாள். அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று தெரியாதே.

     “அந்த அளவுக்கு நானும் ஜானுவும் உன் கண்ணுக்கு முட்டாளா தெரிஞ்சிருக்கோம்ல? என் கிட்ட சுனிலை லவ் பண்ணினன்னு சொன்ன? ஜானகி கிட்ட என்னை லவ் பண்ணுறதா சொல்லிருக்க. இன்னும் நிறைய ஆண்கள் கூட பழக்கம் வேற? இப்ப நீலப் படம் நடிக்கிற அளவுக்கு வந்துட்ட போல? எனிவே நல்லா இரு. ஆனா இனி எனக்கு கால் பண்ணாத”

     “ரகு பிளீஸ். நான் சொல்றதைக் கேளு. நான் செஞ்சது எல்லாம் தப்பு தான். இந்த படம் எல்லாம் என்னைக் கடத்தி…”

     “நம்புற மாதிரி இல்லையே? இப்ப எல்லாம் உன் வீடியோ தான் வைரல் ஆகிட்டு இருக்கு. உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு. ஆனா நான் அந்த கேவலத்தைப் பாக்கலைப்பா”

     “ரகு”

     “சீ வாயை மூடு. என் பேரைச் சொல்லக் கூட உனக்கு அருகதை இல்லை. சுனில் கூட சேந்து என்ன வேலையெல்லாம் பாத்துருக்க? இப்ப நீ உலகத்துக்கே காட்சிப் பொருள் டகன் டி. எவன் எல்லாம் பாக்குறானோ? நீயெல்லாம் பொம்பளையா? இப்ப என்ன டிராமா போடப் போற? உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சோமே? நீ பாம்பை விட மோசம். ஆமா நீ என்ன இப்படி இருக்குற? ஆனா உன்னை இப்படி பாத்தா அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ஜானுவும் மோகன் மாமாவும் பாத்தா அவ்வளவு சந்தோஷப் படுவாங்க”, என்று சொன்ன ரகு “என்ன பண்ணுனீங்க விக்ரம் இவளை? ஆளே மாறிப் போயிருக்கா? கண்டிப்பா செஞ்ச தப்புக்கு திருந்தி இப்படி இளைச்சிருக்க மாட்டா”, என்று கேட்டான்.

     “அதைச் சொல்ல தானே கூப்பிட்டேன்”, என்று சொன்ன விக்ரம் கீர்த்தியை கடத்தியதில் இருந்து வேளை போனது, கடைசியாக நோய் வந்தது வரை சொல்ல ரகு அதிர்ந்து போனான். அவனால் இதை எல்லாம் நம்ப கூட முடிய வில்லை. அதுவும் கடைசியில் நோய் விஷயம் ரகுவுக்கே படபடப்பைக் கொடுத்தது. விக்ரம் இந்த அளவுக்கு போவான் என்று எதிர் பார்க்க வில்லையே. இவனுக்கு எதிரியாக தான் இல்லை என்று சந்தோஷப் பட்டான் ரகு.