ஆதனால் அவன் கைக்கு வாகாக வந்தவள் “என் புருஷன் எப்ப வெளிய வருவான், அவனை எப்படி கொஞ்சன்னு யோசிக்கென் போதுமா?”, என்று சிணுங்களாக சொன்னாள்.
“எப்படி வேணும்னாலும் கொஞ்சலாம். என்னைக் கொஞ்ச உனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு”, என்று ரகு காதலுடன் சொல்ல அதை அவள் புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவளால் அவனை விட்டு விலக முடிய வில்லை. அவனை இறுக்கி அணைக்க “ஏய் டிரஸ் மாத்திட்டு வரேன் டி”, என்றான்.
“இப்ப அது அவசியமா?”, என்று கேட்டுவிட்டு அவளாகவே அவன் கன்னத்தில் முத்த மிட “ஏய் என்னைக் கிளப்பி விடாதே டி. உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும். அதுக்கப்புறம் தான் எல்லாம்”, என்றான்.
“மூச், இன்னைக்கு பேச்சே கிடையாது. எல்லாம் லவ் மட்டும் தான்”, என்றவள் தன்னுடைய உதடுகளால் அவன் மீசை முடியை இழுக்க “ஒரு முக்கியமான விஷயம் டி”, என்றான் அரை மயக்கமாக.
“அதான் காலைல பேசலாம்னு சொல்றேன்ல? எனக்கு நீ வேணும் ரகு”, என்றவள் அவன் உதடுகளை சிறை செய்ய அதற்கு பிறகு அவன் பேசுவானா என்ன? அது மட்டும் அல்லாமல் அன்று அவள் காதலில் அதிக ஆர்வம் காட்ட எல்லாவற்றையும் மறந்தான் ரகு. அன்று அவர்களுக்கு விடியாத இரவாக இருந்தது. ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் காதல் பல்கி பெருகி அவர்கள் மனதை நிறைத்தது.
அடுத்த நாள் காலை எழுந்த ரகு மனைவியைப் பார்க்க அவளோ அவன் அருகே படுத்து அவனையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் என்ன டி, எப்பவும் எனக்கு முன்னாடி எந்திச்சிருவ. இன்னைக்கு எழும்பாம என்னையே பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டான்.
“என் புருஷன் நான் பாப்பேன். உனக்கு என்னவாம்? இது எல்லாம் நிஜமா கனவான்னு இருக்கு ரகு”
“அப்படி சொல்லாத டி. உன் காதலை நினைச்சா எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கு. என் காதல் எல்லாம் வேஸ்ட் டி. உன் மேல உண்மையான காதல் இருந்திருந்தா நான் கீர்த்தியை கல்யாணம் பண்ணிருந்துருக்கவே மாட்டேன்ல?”, என்று குற்ற உணர்வுடன் சொல்ல அவள் குனிந்து அந்த உதடுகளை சிறை செய்தாள்.
“ஏய் பேசணும் டி”, என்று சொன்னவனை அவள் பேச விட வில்லை. அவன் மீண்டும் தூங்கிப் போக அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் குளித்து விட்டு கீழே வந்தாள்.
நிர்மலா டீ போட்டுக் கொண்டிருக்க “அத்தை நான் போடவா?”, என்று கேட்டாள் ஜானகி.
“போட்டுட்டேன் மா. இந்தா குடி. சரி அவனை எங்க?”
“தூங்குறாங்க. ஆதி எழும்பலையா அத்தை? இன்னைக்கு ஸ்கூல்க்கு அவனை அனுப்பவா?”
“ஒரெடியா திங்கள் கிழமைல இருந்து அனுப்பலாம் மா. அவன் உடம்பு வெதுவெதுன்னு இருந்துச்சு. உங்க கல்யாணத்துல விஷ்ணு தம்பி கூட சேந்து ஓவரா ஆட்டம் போட்டான். இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டாள்.
“விஷ்ணு தம்பிக்கு எப்ப மா கல்யாணம்?”
“நானே அதை பத்தி அப்பா கிட்ட பேசணும்னு நினைச்சேன் அத்தை. அண்ணனுக்கு இன்னும் மூணு மாசத்துல முப்பது வயசு ஆகிரும். சீக்கிரம் முடிக்கணும். நவீன் அவன் ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்னு சொன்னான். அதைப் பத்தி கேட்டு சீக்கிரம் முடிக்கணும்”, என்றாள்.
“சீக்கிரம் பேசிரு. அது அது காலாகாலத்துல நடக்கணும்”, என்று நிர்மலா சொல்லும் போதே அழைப்பு மணி அடிக்க “இந்நேரம் யாருன்னு தெரியலையே?”, என்றாள்.
“நான் போய் பாக்குறேன் அத்தை”, என்று சொல்லிக் கொண்டே போன ஜானகிக்கு ஒரு வேளை வந்திருப்பது கீர்த்தியோ என்று பயமாக இருந்தது. எப்படி இருந்தாலும் அவள் வருவாள் என்று தெரியும். அவள் இங்கே வந்தால் எப்படி நடந்து கொள்வாள்? இது அவளுக்கும் வீடு தானே? நான் இன்னைக்கே இங்கே இருந்து போய் விட வேண்டுமா என்று பல கேள்விகள் படை எடுக்க குழப்பத்துடன் கதவைத் திறக்க அங்கே இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் என ஆறு பேர் நின்றிருந்தனர்.
அதுவும் அவர்களைப் பார்த்த உடனே தெரிந்தது அவர்கள் தமிழ்நாட்டினர் இல்லை என்று. ஏனென்றால் பெண்கள் மார்வாடி போன்ற உடையில் இருந்தார்கள் என்றால் ஆண்கள் தலையில் தலைப்பாகை கட்டி சிங் போன்ற தோற்றத்தில் இருந்தார்கள்.
“நீங்க யாரு?”, என்று தமிழில் கேட்ட பிறகு இவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று ஜானகி யோசிக்க அங்கே இருந்த இளைஞன் ஒருவன் “நாங்க மிஸ்டர் ரகுராமை பாக்கணும்”, என்றான்.
“உள்ள வாங்க, பிளீஸ் கமின்”, என்ற படி அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தவள் நிர்மலா புறம் திரும்பி “அத்தை இவங்க ரகுவை பாக்க வந்திருக்காங்க”, என்று சொல்லி விட்டு “இருங்க நான் ரகுவைக் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள்.
அப்போது “ஆச்சி”, என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு ஆதி எழுந்து வர வந்திருந்தவர்களின் கவனம் அவன் பக்கம் திரும்பியது.
“ஆதிக் கண்ணா, எழுந்திட்டியா டா?”, என்று கேட்ட படி நிர்மலா அவனைத் தூக்கிக் கொள்ள அவனும் நிர்மலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு புதியவர்களைப் பார்த்தான்.
அங்கே அனைவரும் ஒருவர் முகத்தைப் பார்த்த படி இருந்தார்கள். அனைவரின் பார்வையும் ஆதியை நெகிழ்வுடன் பார்த்தது. வந்திருந்த பெரிய பெண்மணியோ வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஆதியைப் பார்த்தாள்.
“இன்னும் உனக்கு தூக்கம் விடலையா கண்ணா? சரி இங்க உக்காரு. ஆச்சி உனக்கு பால் எடுத்துட்டு வரேன்”, என்று சொன்ன நிர்மலா ஆதியை அவர்கள் அருகே அமர வைத்து விட்டு அடுப்படிக்குச் சென்றாள்.
நிர்மலா போனது தான் தாமதம் அந்த பெண்மணி ஆதி புறம் திரும்பி கையை நீட்ட அவன் தயக்கத்துடன் அவள் அருகே வந்தான். அடுத்த நொடி அனைவரும் மாறி மாறி அவனைத் தூக்கி முத்தமிட்டார்கள். சிறு கூச்சத்துடன் அவர்கள் கைக்குள் இருந்த ஆதியோ அழவும் இல்லை. அவர்களை விட்டு வரவும் இல்லை.
நிர்மலா அனைவருக்கும் டீ கொடுக்க அனைவரும் குடித்தார்கள். ஆதி ஒரு பெண்ணின் மடியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்க “ஆதி இங்க வாடா, அந்த பாட்டி டீ குடிக்கட்டும்”, என்றாள் நிர்மலா.
“இல்லை பரவால்ல இருக்கட்டும்”, என்று அந்த பெண்மணி தமிழில் சொல்ல நிர்மலாவும் அதை பெரிதாக எடுக்க வில்லை. அறைக்குள் சென்ற ஜானகியோ ரகுவை எழுப்ப போராட அவனோ அவளையும் இழுத்து படுக்கையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான்.
“டேய் உன்னை எழுப்ப வந்தா நீ என்ன வேலை செய்ற?”, என்று அலறினாள்.
“காலைலே இவ்வளவு வாசனையா இருந்தா மூட் ஏறாதா டி?”, என்று கேட்டவன் அவள் நெஞ்சத்தில் முகத்தை புரட்டினான். அவன் செய்கையில் நெகிழ்ந்தவள் “ஏய் உன்னைப் பாக்க ஆள் வந்திருக்காங்க டா”, என்றாள்.
“யாருன்னு கேட்டியா?”
“இல்லை, ஒரு பேமிலியா வந்திருக்காங்க. ஒரு தாத்தா பாட்டி, ஒரு அம்மா அப்பா, ரெண்டு பேர் உன் வயசு உள்ளவங்க. அதுவும் நார்த் இந்தியா மாதிரி இருக்காங்க”
“என்ன டி சொல்ற? அப்படி யாரையும் எனக்கு தெரியாதே”, என்றவன் பதறி எழுந்து அமர்ந்தான்.
“அவங்க உன்னை தான் பாக்கணும்னு சொன்னாங்க. சீக்கிரம் முகத்தை கழுவிட்டு வா”, என்று சொல்லி விட்டு வெளியே செல்ல ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவன் அவர்களைக் கண்டால் டீன்ஸண்ட்டாக இருப்பது போல தோன்ற பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
அவசர குளியல் போட்டு விட்டு ஒரு லுங்கி டீ ஷார்ட் அணிந்து அவன் வெளியே வரும் போது அங்கிருந்த அனைவரும் சாதாரணமாக ஆதியைக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதுமே அவர்கள் வட மாநிலத்தவர் என்று தெளிவாக தெரிந்தது. நிர்மலாவும் ஜானகியும் குழப்பத்தில் நின்றார்கள்.
“இவங்க யாரா இருக்கும்?”, என்று எண்ணி அவன் அன்னையைப் பார்க்க “உன்னைப் பாக்க தான் வந்திருக்காங்க ரகு. நாங்க யாருன்னு கேட்டோம். இவங்க சொல்லலை. நீயே கேளு”, என்றாள் நிர்மலா.
அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் ரகு அமர “அப்பா”, என்ற படி ஆதி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனும் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டு “நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே? என்னை ஏன் தேடி வந்தீங்க?”, என்று கேட்டான்.
அங்கே இருப்பதிலே வயதான ஒரு ஆள் ஜானகி புறம் திரும்பி “இந்தா பொண்ணு. ஆதியை தூக்கிட்டு கொஞ்சம் தோட்டத்துல இருக்கியா?”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் ஜானகியும் அவனைத் தூக்கிக் கொண்டு தோட்டத்துக்கு சென்றாள். அவளுக்கும் வந்திருப்பது யாராக இருக்கும் என்று குழப்பமாக இருந்தது. ஆதியைக் கொஞ்சுவதும் ஹிந்தியில் பேசுவதுமாக அவர்கள் இருக்க கடைசி வரை அவர்கள் யார் என்று அவளுக்கு தெரிய வில்லை.
ரகு மற்றும் நிர்மலா இருவரும் குழப்பத்துடன் இருக்க “நான் சுனிலோட அப்பா, இது அவனோட தாத்தா பாட்டி, இவ சுனிலோட அம்மா. இவங்க ரெண்டு பேரும் சுனிலோட அண்ணனும் தம்பியும்”, என்று சொல்ல ரகு தலையில் இடிந்து விழுந்தது போல அதிர்ந்து போனான்.