Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை , என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 30 (நிறைவு)

அங்கு இருந்த நீதிமன்ற உதவியாளர்ரிடம் ஒரு கவரை கொடுத்து அதை நீதிபதியிடம் கொடுக்க சொன்னார், அவர் உடன் வந்தவர், அதை வாங்கி கொண்ட நீதிபதி அதை பிரித்து படித்து பார்த்தவர்பின் அதன்னுடன் இனைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோகளையும் பார்த்தார்.

இவை அனைத்தும் அவர் தனியறையில் பார்க்கும் படி ஏற்பாடு செய்யபட்டு இருந்து. எல்லாவற்றையும் பார்த்து முடித்தவர் அதன் உண்மை நிலை அறிய அதற்கான நீபுனர் குழுவுடன் கலந்து உறையாடியவர் பின் நீதிமன்றத்திற்குள் வந்து, எல்லோரையும் பார்த்து, இப்போது இந்த வழக்கு சம்பந்தமாக இந்த நபர் தானாக முன் வந்து இந்த நீதி மன்றத்திற்க்கு அளித்த சாட்சியம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

அதை அந்த நீதிமன்றம் ஏற்க்கொள்கிறது, மேலும் இந்த சாட்சியத்தை இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக ஏற்க்கொள்கிறது

என்று கூறினார், இதை கேட்ட ஆர் கே அது என்ன மாதிரி யான சாட்சியம் என்று தெரியாது எப்படி நாங்கள் வழக்கை எடுத்து செல்லமுடியும் யுவர் ஆனர்,

மிஸ்டர் ஆர் கே வன்கொடுமை, பெண்களின் சம்பந்தமான வழக்குகளில் பாதுகாப்பு கருதி சாட்சியம் அளிப்பவர் மற்றும் பாதிக்கபட்டோர் பற்றிய விவரங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் உங்களுக்கு அது சம்பந்தமான விவரங்கள் வழங்கப்படும்.

இந்த சாட்சிகள் குற்றவாளிக்கு எதிராக சமர்பிக்கபட்டு உள்ளது. மேலும் அதன் உண்மை தன்மையும் ஆராயப்பட்டு, சரிபாக்கப்பட்டது, அவை சரியான ஆவானங்கள் தான்.

மேலும் இந்த வழகில் உங்களின் வாதங்கள் முடிந்து விட்டது என்றால் தீர்ப்பை அடுத்து அமர்வில் வெளியிடுவேன், என்றவர் அடுத்த வழக்கு விசாரனைக்கு போய்விட்டார்.

யார் வந்தா என்ன சொன்னா ஏதும் தெரியாமல் இருதரப்பினரும், தகவல் பெற சென்றனர். அதில் அவர்கள் பெற்ற தகவல் ஒருவருக்கு புன்னகையும் மற்றோர்வருக்கு அதிர்ச்சியும் கொடுத்து.

மாலையில் அது பற்றி விவாதத்தில் குற்றவாளிகளின் தரப்பினர் கூடி இருந்தனர்.

என்ன ஆர் கே அதில் என்ன இருந்து?

அதுல என்ன தேவாரமும் திருவாசாகமும்மா இருக்கும், அதான் நீதிபதி சென்னார்ரே உங்க பிள்ளைக்கு ஏதிரான ஆதாரம் தான். பாதிக்கபட்ட பெண் யாரே இல்லை அவள் சம்பந்தபட்டவர்களே உங்க பிள்ளைகள் அந்த பெண்ணை மீரட்டிய வீடியோ மற்றும் போட்டோ, இவங்க பேசி கால் ரேக்காட்டிங்க எல்லாத்தையும், நீதிமன்றத்துல கொடுத்து இருக்காங்க.

அது மட்டும் இல்லை அந்த பெண் இவர்கள் பிடியில் இருந்த பொது எப்படி எல்லாம் அவளை பயன்படுத்திக்கொண்டார்கள், இதில் யார் எல்லாம் சம்பந்தம் பட்டு இருக்காங்க, அவங்களோட மீட்டிங்க ஸ்பாட் எங்க, எப்படி எல்லாம் இவர்களிடம் சீக்கினார்கள், என எல்லா தகவல்களையும் கொடுத்து இருக்காங்க.

அதனால என்ன முன்னாடி சொன்ன மாதிரி இதுவும் பொய், போலியானது சொல்ல வேண்டியதானே. 

அதான் முடியாது ஏன் என்றால் முன்னாடி இதுல நேரடியா பாதிக்கபட்டவங்க யாரும் புகார் கொடுக்கல, அதுவும் இல்லாம ஆதிரை தரப்பில் இருந்து கொடுக்கபட்ட ஆதாரங்கள் எல்லாம், வளவன் மடிகணினியில் இருந்து எடுக்கப்பட்டது.

அதுவும் இல்லாம அன்னிக்கு ஆதிரை எடுத்த வீடியோவில் வளவனும் இருந்தால் , எல்லாவற்றிலும் வளவனை சம்பந்த படுத்தி அவன் தான் இதுக்கு காரணம் சுலபமா சொல்லிட்டோம். வளவன்னோட தற்கொலையும் அதுக்கு உதவியா இருந்து, 

ஆனால் இன்னிக்கு சீனே வேற பாதிக்கபட்ட ஒர்த்தர் நேரா நீதிமன்றத்திலே வந்து அவங்களோட வாக்குமூலத்தை கொடுத்து. இருக்காங்க,     பாதிக்கபட்ட பெண்ணே அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து இருக்கு.  இதுக்கு முன்னால கொடுத்த ஆதாரம் எல்லாம் வளவன் இப்படி நடந்து சொன்னது தான், ஆனா அதுக்கு எந்த நேரடி ஆதாரமும் இல்லை, ஆதிரை சொன்னதும் அப்படிதான், தான் கேட்டதை வைச்சி புகார் கொடுத்தா அதனால அத சுலபமாக ஒடைக்க முடிஞ்சுது.

ஆனா இங்க அப்படி இல்ல பாதிக்கபட்ட பெண் நேரடியான ஆதாரம் கொடுக்கபட்டு இருக்கு அது மட்டும் இல்லாம இதனால் தன் உயிருக்கு இதில் சம்பந்த பட்டவர்களால் ஆபத்து வரும் அப்படி ஒர் பெட்டிஷன் கொடுக்கபட்டு இருக்கு, அதனால இது ஸ்டாங் எவிடன்ஸ். இதுல என்னார ஒன்னும் பன்ன முடியாது.

என்றான் ஆர்கே.

அதை கேட்ட ரவியின் தந்தை இப்படி தான் முதல் தரவ கைது செய்தப்பவும் இருந்தது, இந்த நாடே எங்களுக்கு எதிரா இருந்துச்சு. பேபர்லயும், டிவிலயும் எங்க நீயூஸ் தான், ஆனா எல்லாத்தை மாத்திகாட்டல, இந்த முறையும் அது நடக்கும்.

போன முறைமாதிரி வளவன் தற்கொலை பன்னமாதிரி இந்த முறை ஏதாவது நடந்தான் உண்டு என்றான் ஆர் கே………

பலமாக சிரித்த அருணாச்சலம், என்னது வளவன் தற்கொலை பண்ணிகிட்டானா…… ஹா ஹா நீ எல்லாம் எப்படியா கீரிமினல் வக்கீலா இருக்க….

அவனாவது தற்கொலை பன்னிக்கறதாவது…………….  

அவன் எல்லாத்தையும் அந்த இளாகிட்ட சொல்லிடான எங்களுக்கு தெரியவந்து. அந்த டிஜிபி இந்த கேஸ்ல ரெம்ப மும்மரமா இருந்தான், ஆனாலும் நேரடியா எங்களா இந்த கேஸ்ல ஏதும் பன்ன முடியல, ஆனா எங்களுக்கு உதவி செய்யவும் ஆட்கள் இருந்தாங்க.

முதல்ல அவன் கிட்ட பேசிபார்த்தோம், அவன் ஒத்துவரல அதுமட்டும் இல்லாம அவன் தம்பி வந்து எல்லாத்தையும் சரிசெய்வான் சொன்னான். இவன் சரிவரமாட்டான் தெரிஞ்சிது, இளா இல்லாத நேரமா பார்த்து வளவனை துக்கிட்டோம். அவன் வீட்டில் ஏதோ ஆதாரத்தை மறச்சி வெச்சி இருப்பான் எங்களுக்கு தோனுச்சி அதுனால தான் அவன் வீட்டுக்கு போய் தேடினோம்.

அதுல அவன் அப்பனை பிடிச்சி தள்ளி அவனுக்கு மண்டையில் அடிபட்டு போய்டான் நினச்சோம். அப்புறம் அந்த வீடு முழுசும் தேடியும் எங்களுக்கு ஏதும் கிடைக்கல.

ஆனா இதுல ஹைலைட் என்ன தெரியுமா இது எல்லாத்துக்கும் ஆனந்தியும் எங்களுக்கு உடந்தை, மகன் கொன்னுடாங்க, புருஷனயும் கொன்னுடாங்க, இருந்தாலும் அந்த பொம்பள அந்த நேரத்திலும் எங்க கிட்ட டில் பேசுச்சு, இரண்டு பேரையும் கொன்னத வெளியில் சொல்லாமல் இருக்க 5 கோடி கேட்டுச்சு, மேலும் வீட்டில் எந்த ஆதாரம் கடைத்தாலும் அதை கொண்டு வந்து கொடுக்குறேன் சொல்லுச்சி.

என் சின்ன மகன்னால எந்த பிரச்சனையும் வராது பனத்தை கொடுத்தா மேல எந்த பிரச்சனையும் வரமா இந்த ஊரவிட்டு போய்விடுகிறேன் சொல்லிச்சு.

அந்த நேரத்தில் அந்த பனத்தை கொடுக்காம அந்த அதை கொன்னு இருக்க முடியும் ஆனால் அந்த நேரம் தேர்தல் வேற, இந்த பிரச்சனை இன்னும் சீக்கல் ஆகிட்டா மொத்தாம எல்லாம் முடிஞ்சு போய்டும்.

சம்பந்தபட்ட அந்த பொம்பளையே எல்லாத்தும் காரணம் வளவன்தான் சொல்லிட்டா, விஷயம் ஈசியா முடிந்துவிடும், அந்த பணம் எனக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. தேர்தல்ல ஜெய்சா        1 மணி நேரத்தில் சம்பாதிச்சிவிடுவேன்.

அதனால அந்த பனத்தை கொடுக்க ஒத்துக்கொண்டேன். ஆனா நாங்க எதிர்பாக்காத விஷயம், அந்த சிவநேசன் பிழைச்சிட்டான். ஆனா இந்தவாட்டி நாங்க ஏதும் செய்வில்லை, அவன் பொண்டாட்டியே அவனை கொன்னுடா, எல்லாத்துக்கும் காரணம் பணம் ஆர் கே பணம், அது இருந்தா எந்த சந்து பொந்துகளிலும் போய்வரலாம்.

அதுக்கு அப்புறம் நடந்த எல்லாமே எங்களுக்கு சாதகமான விஷசம் தான், ஆதிரை பாண்டிசேரில வச்சு அரஸட் ஆனது, அதுக்கு அப்புறம் கேஸ் நிலமை அப்படியே தலகீழா மாறிடுச்சு. 

இதுல நாங்க அதிகமாக கஷ்டப்பட்டது இளாவ போடறப்பதான்?

என்ன இளாவை நீங்க தான் போட்டிங்களா?

ம்மம்ம் அப்படியும் சொல்லாம். பயபுள்ள ரொம்ப நேர்மையா இருந்து போற இடத்துல எல்லாம் வம்ப விலைக்கு வாங்கி வைத்து இருந்தான் போல, அவன் அப்பன் பெரிய ஆள் கோவைல அதுனால அவன் மேல கைவைக்க எல்லாருக்கும் பயம்.

ஆனா இந்த பிரச்சனையில நடந்துகிட்டு இருந்த அப்பதான் அவன் அப்பன் போய் சேர்ந்துடான். அதுக்கு அப்புறம் அவன போட புல் சப்போட் நாங்க தான். ஆனாலும் அதுக்கு முன்னால அந்த பெண்ன எங்கேயே பாதுகாப்பா வைச்சுடான் எங்களா அவள கண்டுபிடிக்க முடியில, இல்லனா இன்னிக்கு இந்த பிரச்சனையே வந்து இருக்காது.

அன்னிக்கே அவளையும் போட்டு இருப்போம். என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தவர், தன் கையில் இருந்த சோம பானத்தை வாயில் சரித்துக்கொண்டார்.

ஆர் கே இத்தன வருஷமா இந்த கேஸ்ல இவ்வளவு பன்ன முடிந்த எங்களா, அன்னிக்கு கோர்ட்டுக்கு வந்து யார் கண்டுபிடிக்க முடியாதா? என்ன? என்றார். கேஷவ்.

இவர்களின் இந்த உரையாடல்கள் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்து என்னவே நீதிமன்றத்தில் தான்.

அதை எல்லாம் நீதிபதி பார்த்துக்கொண்டு இருந்தார். இது எல்லாவற்றையும் செய்வது அறியாது கையை பிசைந்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர் ரவி, ராகவ் குடும்பத்தினர்.

அன்று நீதிமன்றம் முடிந்த பிறகு, அன்று இரவு இவர்கள் பேசியது தான் இன்று நீதி மன்றத்தில் படமாக ஒடிக்கொண்டு இருந்து. இதை யார் எப்போது, எப்படி எடுத்து இருப்பார்கள், என்றே அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

அதன் பின் அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் தேடுதல் வேட்டையில் சீக்கியவன் தான் அருண், அவனும் அவர்களின் பயிற்சி பள்ளியில் படித்ததாகவும், அங்கு அவன் ஒர் பெண்ணை காதலித்தாகவும், அவள் இவர்களால் ஏமாற்றபட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியாவன், அவர்களை பழிவாங்க இத்தனை நாள் காத்து இருந்தாகவும், இப்போது இந்த சந்நர்பத்தில் அதை பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் அடித்த அடியில் கூறியிருந்தான்.

அவனை தங்கள் இடத்தில் அடைத்து வைத்துவிட்டு வழக்கு முடிந்தபின் அவனை கவனித்து கொள்ளாம் என்று நினைத்தவர்கள். இன்று எப்படி வழக்கு விசாரனையை தள்ளிவைத்துவிட்டால், அந்த வீடியோ ஆதாரத்தையும் ஒன்னும் இல்லாமல் செய்விடலாம் என்று பலவாறாக வெற்றிகளிப்பில் இருந்தவர்கள்.

இன்று இப்படி மொத்தமாக தங்கள் வாயிலாகவே எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ளூவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

வேறு எந்த சாட்சியும் தேவை இல்லாத படி எல்லாவற்றையும் தாங்களே சொல்லி இப்படி மாட்டிக்கொண்டது அவர்களே எதிர் பார்க்கத ஒன்று.

இவர்களின் இந்த வீடியோவை கண்ட அனைவரும் அடுத்து என்ன நடக்கும் என்று நீதிபதியை பார்த்து இருந்தனர்.

எல்லாவற்றையும் கவனித்தபடி இருந்த ஆர்கேவும், கவிதாவும் கூட ஏதும் கூறவில்லை.

இளாவை இவர்கள் தான் கொன்றார்கள் என்ற சந்தேகம் இருந்த போதிலும், இன்று அவர்கள் வாயிலாக வே அதை கேட்டபின் கவிதா அந்த விஷயத்தை ஏற்க முடியாமல் அதிர்ச்சியில் இருந்தாள்.

அண்ணை கொன்றவர்களை அந்த இடத்திலே கொன்று போட துடித்தாலும் தான் மட்டும் முன்பே அண்ணாவும் இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது என்று வெற்றியும் குற்ற உணர்ச்சியில் இருந்தான்.

இப்படி எல்லோர் மனநிலையும் இருக்க, இந்த வழக்கின் தீர்ப்பை உணவு இடைவேளைக்கு பிறகு என்ற அறிவித்த நீதிபதி சென்று இருந்தார்.         

அதுவரை வழக்கு சம்பந்தபட்ட குற்றவாளிகள் நீதிமன்றவளாகத்தில் காவல் வைக்குபடி காவல் துறைக்கு உத்திரவிட்டு இருந்தார்.

…………………………

உனவு இடைவேளைக்கு பின் மீண்டும் கூடியது நீதிமன்றம்.

சுமார் 7 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கானது, பல நிலைகளை கடந்து இன்று குற்றவாளிகளை இந்த சமுகத்துக்கு சாட்சியங்களுடன் அடையாளம் காட்டி உள்ளது. 

நீதிபதி இந்த வழக்கில் சம்பந்தபட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்க பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல இந்த சமுகத்தில் வாழ தகுதி அற்றவர்கள்.

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள், நன்றாக படிக்கவேண்டும், பல திறமைகளை கொண்டவர்களாக இருக்க வேண்டும், எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணுகிறார்களே தவிர, அவர்கள் நல்ல பன்புள்ளவர்களாக வளர வேண்டும், தன்னை போலவே பிறர்ரையும் நினைக்க வேண்டும்.

சமுதாயத்தில் ஆனோ பெண்னே எதிர்பாலர் சக மனிதாக, மனுஷியாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்   வளர்க்கபடுவதில்லையோ, என்ற ஐயம் தேன்றுகிறது. இன்றும் பல வீடுகளில் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் சமமாக நடத்தபடவது இல்லை. சமம் என்றால் இங்கு பொருளாதார வசதியே மற்றவையோ இல்லை. தேர்ந்து எடுப்பதில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் சுகந்திரமும், வாய்ப்பும் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கபடுவதில்லை.

இன்னும் பெண்கள் எல்லா வேலைகளிம் தடம் பதித்த பின்னும், பாலியல் ரிதியான துன்புத்தல்களை கடந்து வரதா பெண்களே இல்லை எணலாம்.

ஆனால் எல்லோரும் இதை பற்றி வெளியில் சொல்வது இல்லை, ஏன் என்றால் இங்கே தவறு செய்பவனைவிட, பாதிக்கபட்டவர்கள் தான் குற்றவாளிகள் போல் இந்த சமுகம் நடத்துகிறது. 

குழந்தைகள் தவறு செய்யும் போது நாம் அவர்களிடம் அது தவறு என்று சுட்டிகாட்டுகிறோம், மறுபடியும் செய்தால் அதற்க்கு தக்கவாறு தண்டனைகள் தருகிறோம்…

ஏன் மீண்டும் குழந்தைகள் அந்த தவறை செய்ய கூடாது என்பதற்காக, ஆனால் இங்கு தவறு செய்தவர்களை விட பாத்திக்கபட்டவர்கள் தான் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

மனதாலும், உடலாலும் துன்படுகிறார்கள். அதனாலே பாதிக்கபட்டவர்கள் அதை வெளியில் சொல்ல முன் வருவது இல்லை. 

இங்கு குற்றங்கள் வெளிபடுத்தபடவில்லை என்றால், அதற்கு தண்டனையும் இல்லை, அதனால் குற்றவாளிகள் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்.

ஒரு குழந்தை அது ஆணோ / பெணோ தன் தாய் தந்தையிடம், ஒரு பொம்மை வேண்டும், சாக்லேட் வேண்டும், என்னை அவன் / அவள் அடித்துவிட்டான் என்று சுலபமாக சொல்லமுடிகிற குழந்தையால் ஏன் தவறான தொடுகையோ / செய்கையோ சொல்லமுடிவது இல்லை.

ஏன் என்றால் அந்த குழந்தைக்கு பெற்றோர் இடத்தில் அந்த நம்பிக்கை வரவில்லை. தான் சொன்னால் அம்மா அப்பா அந்த தவறை கேட்பார்கள், அதில் இருந்து தன்னை காப்பார்கள் என்ற நம்பிக்கையை அந்த குழந்தைக்கு ஏற்படுத்துவது பொறோர் கடமையாகும்.

அதை விடுத்து அதை குடும்பத்தின் கௌரத்துடனும், மானம், மரியாதையுடன் தொடர்பு படுத்தி அதை அப்படியே விட்டுவிடவே நினைக்கிறார்கள்.

தனிக்குடும்பங்கள் பொருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், நம் முன் இரண்டு வழிகள் தான் உள்ளது, ஓன்று தவறை சுட்டிகாட்டி தட்டிக்கேட்பது, மற்றோன்று தன்னை தற்காத்துக்கொள்வது அதற்கான உடல் வலிமையும், மனவலிமையும் குழந்தைபருவத்தில் இருந்தே உண்டாக்குவது.

இது தான் எதிர்காலத்தில் இதுபோல் பெண்கள் பாதிக்கபடாமல் காப்பாறக்கூடிய வழியாகும்.

என்றவர் வழக்கின் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

Advertisement