Advertisement

வணக்கம் தோழிகளே, சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் அடுத்த பதிவை உடனே பதிவு செய்யமுடியவில்லை. மண்ணிக்கவும். இனி மேல் தொடர் பதிவுகள் தாமதம் இன்றி பதியப்படும்.

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 9

அடுத்தநாள் காலை பரபரப்புடன் தொடங்கியது. எல்லா டி வி சேனல்களும் ஒரே செய்தியை தங்களின் தொகுப்பளர்களை கொண்டு சுவாரசியமக சொல்லிக்கொண்டு இருந்தன.

எல்லா சேனகளிலும் நேத்ரா புகார் அளித்து மற்றும் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளிப்பது என்று அதையே ஒளிபரப்பு செய்துக்கொண்டு இருந்தனர்.

இதில் பெரிய இடத்து பிள்ளைகள் சம்பந்த பட்டு இருப்பதால், டி ஜி பி பத்திரிகை ஆட்களுக்கு புகார் அளிக்கும் போதே தகவல் தெரிவித்துவிட்டார்.

என்னதான் அவர் நேர்மையாக இருந்தாலும், வழக்கை திசை திருப்பும் சாத்தியம் அதிகம் அதனால், அவர் மீடியாவில் அனைத்தையும் பதிவு செய்தார்.

அன்று பார்ட்டி முடிந்து தேவியின் விட்டிற்க்கு சென்றவள், அவள் அண்ணன் மற்றும் அன்னையிடம் நடந்தை கூறி, போலீசில் கம்பிளைண்டு செய்யுமாறு   கூற அவர்களும் முன்வந்தனர்.

ஆனால் அவள் அடுத்தநாள் அவர்களை அழைக்க வந்த போது கையில் கட்டுடன் இருந்த அவள் அண்ணன் குமாரை தான்.

நேற்று இரவு வெளியில் சென்றபோது யாரே இருவர் தன்னை மிரட்டி, இனி எங்கள் விஷயத்தில் தலையிட்டால் யாரையும் உயிரவுடன் விடமாட்டோம் என்று மிரட்டிவிட்டு, தன் கையும் அடித்து உடைத்தையும் கூறினான்.

தேவியின் தாயே இனிமேல் தயவு செய்து இங்கு வர வேண்டாம் என்றும் தாங்கள் இந்த ஊரைவிட்டு செல்வதாகவும் சொல்ல இன்னும் கோபமானவள், 

எவ்வளவோ அவள் எடுத்து சொல்லியும், இது எல்லாம் கேட்க நல்லா இருக்குமா! ஆனா நீ சொல்லமாரி எத்தனால் இந்த டிவியும், பே்பரும், போலிஸ் காரங்களும் எங்களுக்கு சப்போட் பன்னுவாங்க?

அவங்க எல்லாம் பெரிய இடம் இன்னிக்கு இல்லனாலும், நாளைக்கு வெளியில வந்துடுவாங்க. நாங்க அப்படியில்லமா,   எங்களுக்கு இது எல்லாம் வேணாம், 

இனிமே இத பத்தி பேசிக்கிட்டு இங்க வராதே மா. என்று கை எடுத்து கும்பிட்டவரை பார்க்க ஆற்றாமையாக இருந்து நேத்ராவிற்க்கு.

அதனால் தானே கம்பிளைன்டு கொடுக்க முன்வந்தாள்.

அதுவரை தேவியின் விட்டை கண்காணித்தவன், அவர்களுக்கு நேத்ரா வந்து சென்ற விவரத்தை சொல்ல, அவளை பற்றியும் அவள் பின் புலத்தையும் அறிந்தவர்கள், மற்றவர்களை மிரட்டியது போல் இவள் விஷயத்தில் நடக்காது என்பதை உணர்ந்நனர்.

இதை எப்படி கையாள்வது என்ற யோசனையில் இருந்தவர்கள், அவளின் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை. 

அவளே புகார் செய்வாள் அதுவும் டி ஜி பி யிடம், அதுவும் உடனே மீடியாவில் இவ்வளவு பெரிய விஷயமாக விஷ்வர்ரூபம் எடுக்கும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

அதுவும் இது போல் எதையும் எதிர் பார்க்காதால் அவர்களுக்கு எதிர் ஆன ஆதாரம் அனைத்தும் அவர்களின் மையத்தில் இருந்தே எந்த சிரமமும் இல்லாமல் கிடைத்தது. 

அவர் வைத்து இருந்த சர்வேலன்ஸ் கேமராவில் நிறைய ஆதாரம் அவர்களுக்கு எதிராய் இருந்து.

அது மட்டும் இல்லாமல் மானவிகளை மீரட்டியது, அவர்களை வைத்து எடுக்கபட்ட வீடியோக்கள், அவர்களிடம் போச பயண்படுத்திய மொபைல் போன்கள் என எல்லாம் அவர்களுக்கு எதிரான வலுவான சாட்சியம் மானது.

பயிற்சி மையம் சீல் வைக்கபட்டது, எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யபடலாம் என்ற நிலை.

ஆனால் இதில் முதலில் குறி வைக்கபட்டது வளவனுக்குதான்.

மையத்தின் 80% பங்குகள் அவன் பெயரில் இருந்து, அது மட்டும் இல்லாமல். இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் மற்றும் விடியோக்கள், புகைப்படங்கள், அவை இனையதளத்தில் பதிவேற்றபட்டது மற்றும் மின்னஞ்சல் அனுப்பியது என எல்லாம் அவனுக்கு எதிர்ராக போனது.

இங்கே வளவன் டிவியில் செய்தி பார்த்தும், செய்வது அறியாமல் இருந்தான்.

அவன் நன்பர்களை அவனால் தொடர்புக்கொள்ள முடியவில்லை, விட்டில் யார் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை.

அடுத்து என்ன நடக்கும் என்று அவனால் யோசிக்கவே முடியவில்லை, ஆனந்தி ஒரு புறம் அமர்ந்து ஒப்பாரி வைத்துக்கொண்டு இருந்தார்.

 சிவநேசன் தன் வளர்ப்பு எங்கே தவறியது என்ற எண்ணத்தில் அமைதியாகி இருந்தார்.

அவன் தங்கை கல்லூரியில் சுற்றுலா சென்று இருந்தால் நடந்த ஏதும் இது வரை அவளை எட்டவில்லை.

அதியன் தான் வந்த வேலை காரணமாக அவன் அலுவலகத்திலே தங்க நேரிட்டது, அதனால் அவனை தொடர்பு கொள்ளமுடியாமல் போனது. 

ஆனால் அவனுக்கு தகவல் கிடைத்த போது எல்லாம் கைமீறி இருந்து. அவனுக்கும் இங்கு நடக்கும் விஷயங்கள் முழுதாய் சொன்று சேரவில்லை.

…………………………

இந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த டிஜிபி இதை நேர்மையும், துணிச்சலும் கொண்ட ஒருவனிடம் வழக்கை ஒப்டைத்தார்.

அதற்காக அவன் கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றபட்டான்.

அவன் இளமாறன் IPS, கோவையை சேர்ந்த இவன், இவர்கள் குடும்பம் பரம்பரை பணகார்கள், கோவையில் இவர்கள் கால் பதிக்காத தெழிலே இல்லை எனலாம்.

 இவனின் இந்த  போலீஸ் லட்சியத்திற்காக குடும்பத்தொழிலை விட்டுவிட்டு வந்த இவன் மேல் இன்னும் அவன் தந்தைக்கு மனவருத்தம் தான்.

இவர்களின் தொழிகளை இவன் தம்பி வெற்றிமாறன் வசம் உள்ளதால் இவனால் நிம்மதியாக இருக்கமுடிகிறது.

இவனின் இந்த குடும்ப பின்னனி ஒரு வகையில் இவன் மேல் கைவைக்க நினைக்கும் நபரை பின்வாங்க வைக்கும்.

அதை அதவிர இவனுக்கு பணம் ஒர் பெருட்டு அல்ல. அதனால் தான் இவனை இந்த வழக்கு விசாரிக்க இவனை தேர்ந்து எடுத்து இருந்தார்.

அதன் பெருட்டே இவனின் சென்னை விஜயம்.

……………..

இவன் இளமாறன் சென்னை சென்று விட்டாள் தன்னால் அவ்வளவு சீக்கரம் இங்கு வரமுடியாது என்று தெரியும் அதனால் முக்கிய நபரை பார்க்க தன் வாகனத்தில் விரைந்து க்கொண்டு இருந்தான்.

இன்று எப்படியும் எனக்கு முடிவு தெரியவேண்டும் என்ற தீர்மானத்துடன்.

அங்கு அவன் சந்திக்க வந்தவளே ஒரு குடும்பத்தால் பெண்பார்க்க பட்டுக்கொண்டு இருந்தால்.

ஆம் அவள் ஆதிரா, கல்லூரியில் இவனுக்கு ஜூனியர், அவள் தோழி மூலமு இளாவை தெரியும் இருவரும் அதிகமாய் பேசியது இல்லை, இவர்கள் இருவருக்கும் சேர்த்து இவள் தோழி கவிதா அதிகம் போசுவாள்.

அவளுக்கு இளா அண்ணன், தோழன், நலவிரும்பி இப்படி எல்லாமும் அவன்தான்.

எல்லோரையும் போல் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டு இருந்த இவள் வாழ்வில், ஓர் விபத்தில் பொற்றோரை இழந்தவள் பலவகையில் சொந்தங்களால் பந்தாட பட்டு கடைசியில் சேர்ந்து அனாதை ஆஸநரமத்தில்.

அங்கு இவளை போல் வந்து சேர்தவள் தான் ஆதிராவும் அவள் தங்கையும்.

ஆனால் சில மாதங்களில் அவள் தங்கை ஒருவரால் தத்து எடுக்கபட, பின் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆயினர்.

எப்படியோ படித்து முடித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று கோவையில் ஒரு பள்ளியில் அறிவியல்  ஆசிரியை ஆக இருக்கிறாள். 

கவிதா இளாவின் வழிகாட்டுதலின் பேரில் இளகலை முடித்து, லா முடித்து அவன் சிபாரிசு செய்த லீடிங் லாயர்ரிடம் ஜூனியர்ராக உள்ளாள்.

இவளுக்கு தன் தோழிக்கும், இளாவிற்க்கும் நடக்கும் காதல் பரிமாற்றம் தெரியும். ஆனால், இன்னும் இவர்கள் மணம் விட்டு பேசி ஒரு முடிவுக்குவரவில்லை என்பதால் அதில் தலையிட மாட்டாள்.

என்னதான் தோழியின் மற்றும் நன்பனின் மணம் புரிந்தாலும்,  அவர்களுக்கு இருந்த பெருளாதார இடைவெளி அவளை மௌனமாக இருக்க செய்தது.  

இதோ இன்று அவர்களின் முன்னால் தான் அமர்ந்து இருக்கிறாள், இவர்கள் இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, தங்களுக்கு என்று தனியாக ஒரு சிறிய வீட்டிற்க்கு குடியேறி இருந்தனர்.

இப்போது அந்த வீட்டில் தான் பெண் பார்க்கும் படலம் நடந்துக்கொண்டு இருந்து. அது வேறு யாரும் இல்லை அவள் உடன் வேளை செய்யும் அரவிந்தன்.

பல முறை ஆதிராவிடம் தன் காதலை கூறியவன் அவள் விருப்பமு இல்லை என்று கூறிய பின்னும், இன்று தன் குடும்பத்துடன் வந்து இருந்தான் அவளை சம்மதிக்க வைக்க.

குடும்பமே தங்களுக்குள் பேசி நிச்சயம் செய்வது வரை பேச பேச்சின் திவிரம் புரியவும் இளாவை அழைத்துவிட்டாள் ஆதிரா அவன் வரவிற்காக வாசல் பார்த்து நின்றவள்.

அவன் வீட்டின் வாசலை அடைந்தவுடன் ஒடி சென்று அவனை அனைத்துக்கொண்டவள், இதுவரை அவன் முகம் பார்த்துக்கூட பேசியது இல்லை.

ஆனால் இன்று அவள் செயல் அவளின் நிலையை அவனுக்கு தெளிவாக உணர்த்தியது. தான் அவள் வாழ்வில் எத்தனை முக்கியம் என்பதை அவனுக்கும் அங்கு உள்ள அனைவருக்கும் உணர்த்தியது.

அரவிந்தனின் பொற்றோர் அவனை முறைக்க, அவன் செய்வது அறியாது நின்றான், ஆதிராவின் அழகின் மேல் அவனுக்கு ஈர்ப்பு அதை அவளிடம் வெளிபடுத்தவும் செய்தான்.

அவள் அதை மறுப்பாள் என்பதே அவன் எதிர் பார்க்காத ஒன்று , அவன் அழகும், தன் அப்பர் கிளாஸ் குடும்ப பினன்னியும், அவள் சொன்ன நோவில், இவன் ஈகோ பலமாக அடிவாங்க, அவள் இன்றி அவன் இல்லை என்று அவன் வீட்டில் செய்த அலப்பறையில்   அவன் குடும்பம் மொத்தமும் இங்கே இவள் முன்னாள் அவன் அருமை பெருமைகளை விளக்கிக்கொண்டு இருக்க, தப்பிக்கும் வழியறியாது இளாவை அழைத்துவிட்டாள்.

அவன் வீட்டின் வாசலை அடைந்தும், அம்மா வீட்டுச்சென்ற குழந்தை என அவனை கட்டிக்கொள்ள, அங்கு இருந்தவர்களில் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர், என்றால் இளாவும், கவியும் இன்றாவது இவள் இந்த விஷயத்தில் முடிவு எடுத்தாளே என்று ஆனந்த அதிர்ச்சியில் இருந்தனர்.

 இருவர் இருந்த நிலையை பார்ந்த அனைவரும் வெளியேற கவியும் தோழி இன்று பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அவளும் அவர்களுடன் வெளியேறினால்.

அனைத்த நிலையில் இருந்த இருவரும், சிறிது நேரத்தில் தன்னிலை அடைய, ஆதிரா முதலில் ஆரம்பித்தாள்.

இளா நமக்குள்ள இருக்க அந்தஸ்த்து காரணமாக தான் இத்தநாள் சான் தள்ளி யிருந்தேன், கண்டிப்பா என்னால உங்கள தவிர யாரையும் என் வாழ்க்கையில நினச்சிபாக்க முடியாது.

ஆனா உங்க வீட்டில் என்ன ஏத்துகாங்களா?

என்றவள் அவன் முகம் பார்க்க? ஏய் லூசு நிறைய படம் பார்த்து கெட்டு போய் இருக்க, எங்க அப்பாவும் அம்மாவும் மே லவ் மேரேஜ் தான்.

கண்டிப்பா எங்க வீட்டில் எல்லாருக்கும் உன்னை பிடிக்கும், இப்போ அவசரமா சென்னை போகனும் ஒரு கேஸ் விஷயமா அதை போய் பார்த்துட்டு வந்து நம்ம கல்யாணத்தை பத்தி வீட்டுல பேசுறேன்……………….

என்ற இருவரும் அறியவில்லை அவன் திரும்ப வரும் போது எல்லாம் அவன் கைமீறி இருக்கும். அவனுடன் ஆதிரையும் வருவாள் என்று ………………………………. 

நிலவு தேயும்…………

 

 

Advertisement