Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 28

ஆர் கே சொல்லி சென்ற விஷயத்தில் மறுபடியும் இருவரும் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தனர். 

இவன் என்ன சொல்லிவிட்டு போகிறான், ஏதோ பள்ளி மானவர்களுக்கு வீட்டு பாடம் கொடுப்பது போல் இதை எல்லாம் முடித்துவிடுங்கள் என்று சொல்கிறான்.

இவன் சொன்ன கதையே இன்னும் முழுசா மனசுல பதியல, இதுல இது எல்லாத்துக்கும், திரைகதை, வசனம், நடிகர்கள ஏற்பாடு பன்னுங்க சொல்றான்.

என்ன தான் நினச்சு இருக்கான் இவன்.

ஏத்துனது எல்லாம் இறங்கிடுச்சு, என்று தலையில் கைவைத்தபடி புலம்பிக்கொண்டு இருந்தார் அருணாச்சலம்.

ஆனால் அருகில் இருந்த கேஷ்வ், அவன் சென்ற திசையை யே பார்த்து இருந்தவர், தன் அலைபேசியை எடுத்து, அந்த நபருக்கு அழைத்தார்.

நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு என்றார்.

அந்த பக்கம் சொல்லபட்ட பதில் சரி நான் பார்கிறேன் என்றவர் இனைப்பை துண்டித்தார்.

அவர் தன் அலைபேசியில் வந்து இருந்த பைலை பார்த்தார், அது ஆர் கே பற்றி அவர் திரட்ட சொன்ன தகவல்கள், எல்லாவற்றையும் பார்தவர், ஏதும் வித்தியாசமாக இல்லை. அவன் படித்து எல்லாம் தமிழ்நாட்டில் என்றாலும், டெல்லியில் உள்ள பிரபல கிரிமினல் லாயர் சுனில் குமார்ரிடம் ஜூனியர் ஆக பனியாற்றி இருக்கிறான், அதன் பின் அவன் எடுத்த எந்த வழக்கிலும் தோல்வி என்பது இல்லை, அவன் எடுத்த வழக்குகள் எல்லாம் நியாமானவை என்று சொல்லமுடியாது பல சமயம் அவன் குற்றவாளிகளுக்காக கூட வாதாடி இருக்கிறான்.

ஆனால் ஏதிலு வெற்றி தான் அவன் குறிக்கோள். அவன் ஒரு தடவை வாதாட லட்சகனக்கில் பீஸ் வாங்குவன். மற்றபடி அவன் இந்த கேஸ்சில் தன் எதிர்ராகவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

முழுக்க நம்பிக்கையான ஆள் என்றே அந்த ரிப்போட் கூறுகிறது. ஆனால் இன்று அவன் கோட்டில் நடந்து கொண்டதும், இங்கு இப்போது பேசினது, ஏதோ முரண்படுகிறதோ என்று அவருக்கு தோன்றியது.

ஏன் எனில் கிடைசி தடவையாக அவர்கள் இருவரும் ஆனந்தனிடமு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு அவனை அழைக்கவில்லை. அதற்கு மற்றோரு காரணம், ரவி இது தான் சமயம் என்று அவனை எப்படியாவது தன் வழியில் இருந்து அகற்றிட அவனை கொள்வதற்க்கு ஏற்பாடு செய்து அது அவனுக்கு தெரிந்தோடு மட்டும் அல்லாமல், அதன் பின் அவர்கள் உடன் ஆன தொடர்புகளையும் அவன் துண்டித்துக்கொண்டான்.

அதை பற்றி அருணாச்சலம் பெரிதாக கவலை கொள்ளவில்லை என்றாலும், கேஷ்வ் அது பெரும் இழப்புதான், அவனின் பலம் அவர் அறிவார், அவனை போல் தங்கள் வாரிசுகள் இல்லை என்று அவருக்கு நிறைய வருத்தமுன்டு.

ஆனால் முக்கியத்துவம் என்று பார்த்தால் ஆனந்தன் இரண்டாம் பச்சம் தான், தன்னிடம் இல்லாத பணமா அதை வைத்து இது மாதிரு ஆயிரம் திறமைசாலிகளை விலைக்கு வாங்கலாம் என்பது அவரின் எண்ணமாக இருந்து.

ஆனந்தனும் விலகிய நிலையில் அடுத்து எண்ண செய்வது என்று தெரியாமல் இருந்த போது தான், தன் தொழில் முறை நன்பர் ஒருவர் மூலம் ஆர் கே வை தொடர்புக்கொண்டார்.

அவனும் ஒர் இரு முறை பேசியபின் வழக்கில் இவர்கள் பக்கம் ஆஜர் அக ஒத்தகொண்டான்.

ஆனால் இப்போது இவன் நடவடிக்கைகள் அவர்கள் கூட இருந்தே குழிபறிக்கறானே என்று தோன்றியது. அதற்காக தான் அவனை பற்றி விசாரிக்க சொன்னார், ஆனால் அதில் சந்தோகபடும் படி ஏதும் இல்லை.

அடுத்து என்ன என்ற எண்ணத்தில் விடு வந்தார்.

……………………………..    

இங்கே அதியன் மிக குழப்பதில் இருந்தான், இந்த வக்கீல் எங்கு இருந்து வந்தான், வந்த ஒரே நாளில் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டான். இனி எண்ண நடக்கும்.

நான் நினைத்த மாதிரி இந்த வழக்கு முடியாதோ?

என்ற சிந்தனையில் இருந்தவன் அலைபேசி அழைப்பில் கலைந்தான், அழைப்பது அவன் அண்னை தான் எதற்காக அழைக்கிறார் என்றும் அறிவான், ஆனால் அவனுக்கு தான் அழைப்பை ஏற்க மணம் இல்லை.

அமெரிக்கா சென்றவன் தன் அண்ணையின் நச்சரிப்புகாகவும், தன் உடன் பணிப்புரியும்    பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்து அதற்கான வேளைகளை பார்பதற்காதான்  இந்தியா வந்தான்.

இங்கு அவன் தந்தையின் பழைய பெருட்களில் அவர்களின் உறவினர்கள் முகவரியை தன் தந்தை குறித்து வைத்து இருக்கும் டைரியை தேடும் போது தான் அவனுக்கு அவன் தந்தை விட்டு சென்ற தடையங்கள் மற்றும் கடிதம் சிக்கியது ஆனால் அதில் வளவன் சொன்ன தகவல்கள் மட்டுமே இருக்க, அவன் அதை கொண்டு ஆதிரை தேட தொடங்கினான், அவளை கண்டுபிடித்து எல்லாவற்றையும் அவளிடம் ஒப்படைத்து மண்ணிப்பு கேட்டகவே நினைத்தான்.

ஆனால் அதற்க்குள் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இதில் அவன் திருமன வேலை மறந்தே போனான் என்பதை விட திருமணம் என்ற எண்ணத்தையே கைவிட்டு இருந்தான்.

ஆனால் அதை அவன் அம்மா விடுவதாக இல்லை, அவருக்கு பெண்விட்டில் இருக்கும் வசதியும், அவள் ஒரே பெண் என்பதும் மேலும் அவன் தன் மகனுடன் லட்ச கணக்கில் சம்பாதிக்கறாள் என்ற தகவல்கள் அந்த கல்யாணத்தை நடத்த போதுமானதாக இருந்து. அதனால் அடிக்கடி அதியனுக்கு தொடர்புக்கொண்டு கல்யாணத்தை பற்றி பேசினார் ஆனால் அவன் அதில் பிடி கொடுக்கவில்லை.

இன்னும் தன் மகளுடன் பெங்களூரில் இருக்கும் அவருக்கு மகன் இந்த அளவில் ஆதிரை தேடி போனது எல்லாம் தெரியாது, அவருக்கு கணவன் எழுதி வைத்த அந்த கடிதம் பற்றியும், வளவனின் அந்த தடயம் பற்றியும் அவர் அறிவில்லை. அவர்கள் கிளம்பும் போது எல்லாவற்றையும் முட்டைகட்டி ஒர் அறையில் அடைத்துவிட்டு போய்யிருந்தனர்.

மகன் சென்னை போவதாக சொல்லும் போது கூட அவர் அவன் இந்த அளவிற்க்கு இல்லை எல்லாம் எடுத்து பார்பான் என்று அவர்க எதிர்பார்க்கவில்லை.

அவன் சென்னை சென்ற இந்த 6 மாதத்தில், அவன் இங்க தனக்கு வேலை யிருப்பதால் இப்போது வரமுடியாது என்று தெரிவித்து இருந்தான். அவர் அந்த பெண்ணிடம் கேட்ட போது அப்போத் அங்கு ஒர் வேலை விஷயமாக தான் கம்பொனி அவனை அனுப்பி இருந்து, அதனால் அவளும் ஆமாம் என்றாள், அதனால் அதை பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

  

ஆனால் இன்று காலை செய்தி தொலைகாட்சியில் அவர் இந்த வழக்கு விசாரனை பற்றி சொன்ன போது, அவர் தலையில் இடி விழுந்த நிலை தான். அதிலும் அதில் அதியனும் இதில் சம்பந்தபட்டு இருக்கிறான் என்றதில் அவருக்கு வயிற்றில் புளி கரைத்த உணர்வு.

எல்லாவற்றையும் விட பெண்விட்டார் கேட்கும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவி்லை. அதனால் தான் அவன் தொடர்புக்கொண்ட வண்ணம் இருக்கிறார். ஆனால் அவன் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இது எல்லாவற்றிக்கும் காரணமானவனே தன் அலைபேசியில் கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

இல்லைடா குட்டிமா

கண்டிப்பா நான் இன்னும் 20 டேஸ்ல அங்க இருப்பேன். ப்ளிஸ் செல்லம் நான் சொன்ன கேட்கமாட்டியா?

என் செல்லமா, கண்ணமா என்று தன் 5 வயது மகளுடன் கொஞ்சிக்கொண்டு இருந்தான். அவன் இந்த வழக்கு சம்பந்தமாக இங்க கிளம்பி வந்தாள் அவனின் செல்ல மகள் அவன் மீது கடும் கோவத்தில் இருந்தாள். 

சரி செல்லம் அம்மாகிட்ட போன் கொடுங்க என்றான்.

அவள் அவள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு நான் மாமா கூட விளாட போறேன் என்று ஒடிவிட்டால்.

அவள் கைக்கு போன்வந்தும், என்னடி பொண்டாட்டி என்ன பன்ற என்றான் அவளை வம்பு இழுக்கும் நேக்குடன்.

எத்தனவாட்டி சொல்லி இருக்கேன் டி போடாதீங்க அப்படினு என்றாள் கண்டிப்புடன்.

என்ன பன்றது அப்படி கூப்பிட்டாதான் எனக்கு நல்லா இருக்கு என்றான் புன்னகையுடன்.

இருக்கும் இருக்கும் எப்படியும் இங்க தானே வரனும் அப்ப இருக்கு என்றவள், எண்ண பன்ரா சப்பியா இன்னிக்கு எப்படி போச்சு ம்ம் நல்லா போச்சு…… என்று நீண்ட அவர்களின் பேச்சு முடிக்க அடுத்து அரை மணி நேரம் ஆனாது.

பேசி முடித்தவன் அடுத்து செய்து முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியல் ஈட்டான். பின் தன் உதவியாளர்களுக்கு அழைத்து அடுத்து என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறியவன், படுக்கைக்கு போனான்.

…………………………    

இங்கு வழக்கு மறுபடியும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள், என்ற செய்தி கேட்டவுடன் ஆனந்தி நிலை குலைந்து போனார். இத்தனை நாட்கள் நடந்து எல்லாம் மறந்து இருக்க, மகனின் திருமணம் தான் நினைத்த படி நடக்கவிருக்க, ஆதிரை, இளா என்று இந்த வழக்கு சம்பந்த பட்டவர்கள் எல்லாம் நடுவில் காணாமல் போய்யிருக்க, எல்லாம் தனக்கு சாதகமாக இருக்கிறது, என்று மகிழ்ந்து இருந்தார்.

ஆனால் இன்று காலை டிவியில் செய்தியை பார்த்தவர், அடுத்து என் என்று அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை, அதுவும் வழக்கின் போக்கை பார்த்தவர், இன்னுமே அதிர்ந்து போனார், இது என்ன புதுக்கதை அடுத்து தன்னை இந்த வழக்கில் விசாரிப்பார்களோ, அப்படி விசாரித்தால் என் சொல்ல வேண்டும், இதற்கு முன்னால் சொன்ன வற்றைகேட்டால் என் பதில் சொல்வது.

எல்லாவற்றிக்கும் மேல் சென்னை சென்றதில் இருந்து அதியன் நடந்துக்கொள்ளும் விதம் அவனுக்கு ஏதும் தெரிந்து இருக்குமொ?

அப்படி என்றால் அவனுக்கு எது வரைக்கும் தெரியும், அதுவும் அதியன் இப்போது ஆதிரையின் பக்கம் அனுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் தன் கதி என்னவாகும். என கலக்கமாக இருந்து.

இதில் பெண்வீட்டில் அவர்கள் கேட்கும் கேள்விகள் ஒர் புறம். எல்லாவற்றையும் விட இது வரை அவர் அருணாச்சலம் மற்றும் கேஷ்வ் இடம் அவர் வாங்கிய தொகை அது பற்றி இதுவரை யாருக்கும் தொரியாது அவர் மகள் உட்பட.

இதுவரை தான் செய்தது யாருக்கும் தொரியாது என்று என்று தைரியத்துடன் இருந்தவர், எப்போது தலை மேல் தொங்கும் கத்தி மேல விழுமோ என்ற பயத்தில் இருந்தார்.

அவர் பயந்தது போல் தான் நடந்துக்கொண்டு இருந்து. ஆம் ஆர் கே சொல்லிவிட்டு சென்றது போல் அடுத்து என்ன செய்யலாம் என்ற விவாத்தில் இருந்தனர் அருணாச்சலமும், கேஷ்வ்வும், முதலில் வளவனின் தாய்யிடம் பேசியது போல் இந்த முறையும் பேசி ஆர் கே நீதிமன்றத்தில் சொன்னது எல்லாம் உண்மை தான் என்றும், அது தெரிந்து தான் தன் கனவருக்கு நெஞ்சுவலி வந்து என்றும் அந்த அம்மாவே கூறினாள் மேற் கொண்டு இந்ந வழக்கில் வேறு எந்த சாட்சிமும் தேவை இல்லை என்றும் முடிவு செய்தனர்.

இதனை ஆர் கே விடம் பகிர்ந்துக்கொண்ண்டனர்.

எல்லாவற்றையும் கேட்ட ஆர் கே அது எப்படி அந்த அம்மா நமக்கு சாதகமாக பேசும், அந்த அம்மா மாத்தி சொல்லிட்டா என்றான் அவர்களை கேள்வியாக?

அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை அந்த அம்மாவுக்கு பணம் தான் முதல, அதுக்காக அந்த அம்மா எந்த எல்லைக்கும் போகும் என்றனர் இருவரும்.

புரியல?

என்றான்.

இருவரும் தயங்கினார்கள்? இங்க பாருங்க இந்த கேஸ்ல என்ன நடந்து முழுசா தெரிஞ்சா தான் என்னால எதாவது பன்ன முடியும் என்றான் முடிவாக

பின் அருணாசலம் சொல்ல ஆரம்பித்தார்……….

போனவாட்டி இந்த கேஸ் கோட்டுல நடந்துகிட்டு இருந்தப்ப, அந்த இளாமாறன் இங்க இல்லாத அப்ப, வளவன நாங்க தான் ஆள் வெச்சி கொன்னோம். 

அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் தான் அங்க அவனோட அப்பா வந்தா ஒர் காண்ஸ்டேபிள் சொன்னான்.  அவனோட அப்பாகிட்ட எதாவது சொல்லி இருந்தா என்பன்றது அதுக்காக தான் நாங்க அவன் வீட்டுக்கு போனோம்.

ஆனா அங்க வளவனோட அப்பா நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல வளவன கொன்னது நாங்க தான் அப்படி பாத்து இருக்கார். அத அந்த ஆள் அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லிகிட்டு இருக்கும் போது தான். நாங்க  அனுப்பின ஆளுங்க எல்லாத்தையும் கேட்டுடாங்க.

அவனுங்க எங்குளுக்கு கால் பண்ணி என்ன பண்ண அப்படினு கேட்க. அப்போ ஆனந்தன் தான் அந்த அம்மாகிட்ட பேச சொன்னான், அந்த அம்மா பணத்துமேல தான் குறி அதனால பணத்தகூடுத்து அந்த விஷயத்தை முடிக்க சொன்னான்.

நாங்களும் ஊர் அடங்கினதும் அந்த விட்டுக்கு போனோம். அந்த அம்மாகிட்ட வளவன் கிட்ட பேசி எல்லா குற்றத்தையும் ஒத்துக்க நிறைய பணம் தறோம்னு பேசினோம் ஆனா அவன் ஒத்துக்கலை அதுவும் இல்லாம எங்களயும் இளாகிட்டா மாட்டிவிட்டுவான் அப்படினு, வேற வழியில்லாம அவன கொல்ல வேண்டியதா போய்டுச்சு.

நீங்களும் இப்போ எங்களுக்கு எதிரா போனா உங்களையும் கொன்னுட்டு வளவன் இறந்த துக்கம் தாங்காம குடும்பத்தோட தற்கொலைனு கேஸ்ச முடிச்சுடுவோம். ஒழுங்க நாங்க சொல்லற மாதிரி கேட்ட 5 கோடி தரோம் சொன்னோம்.

முதல அமைதியா இருந்த பொம்பள அப்பறம் சரி சொல்லுச்சு, ஆனா அந்த நேரத்துல யாரும் எதிர் பார்க்காம அந்த சிவநேசன் வெளிய வந்து நாங்க பேசினது எல்லாம் போன்ல ரொக்காடு பன்னி எங்கள மிரட்ட ஆரம்பிச்சான்.

அப்போ எங்க ஆட்கள் பின்னால் இருந்து அவரை பிடித்து தள்ள, அவர் விழுந்த வேகத்துல பலமான அடி, அந்த நேரத்துல அங்க இளா காவலுக்கு வெச்ச போலீஸ்  வந்துடுதனால எங்களா ஏதும் பன்ன முடியல.

அவங்க உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி போய்டாங்க, அங்க அவருக்கு நினைவு இல்லாம இருந்தார். எங்களுக்கு வேண்டிய டாக்டர்ஸ் வெச்சு அவருக்கு நெஞ்சுவலினு பொய்யா சொல்ல சொன்னோம்.

அதுக்கு அப்புறம் அங்கயே எங்க ஆட்கள் இருந்தாங்க, அப்பதான் அந்த பெணு அவர பார்க்க வந்துச்சு, அவர் அந்த பெண்ணுக்கிட்ட பேசினத அந்த அம்மாவும் கேட்டு இருக்கும் போல, எங்க ஆட்களும் வந்து   சொன்னாங்க, நாங்க அவர முடிச்சுடலாம் முடிவு பன்னோம்.

ஆனா………

ஆனா? 

ஆனா அதுக்கு முன்னால அந்த அம்மா அவர்கிட்ட இத பத்தி பேசி அவங்களுக்குள்ள சண்ட வந்து அந்த அம்மா அவர புடிச்சு கீழதள்ளிவிட்டுச்சு அந்த சமயத்துல போன எங்க ஆட்கள் அவரை கொல்ல முயற்சி பன்ன அந்த அம்மா அங்க தான் இருந்து, ஆனா தடுக்கல, நீங்களும் உங்க புள்ளையும் இருந்தப்ப எனக்கு என்ன லாபம். நீ செத்தாவது எனக்கு நல்லது செய்ங்க அப்படி சொல்லிட்டு, அந்த அம்மா ஏதும் செய்யல.

அந்த ஆள கொண்ணதுக்கு அப்புறம் அந்த அம்மா இந்த இரண்டு கொலைய பத்தி ஏதும் பேசாம இருக்கனும் னா எனக்கு      10 கோடி வேணும் கேட்டுச்சு.

என்னது 10 கோடி பேசாம இதையும் முடிச்சுடுலமா ? யோசிச்சோம். ஆனா என் விட்டுகார்கிட்ட வளவன் முக்கியமான ஆதாரம் கொடுத்து வைச்சி இருக்கார், நாங்க 2 போரும் இறந்துட்டா என் மகன் அதியன் கண்டிப்பா இதை சும்மாவிடமாட்டான். என்று அவர்களிடம் கூறினாள்.

அதை கேட்ட ஆனந்தன். அந்த குடும்பத்தில் எல்லாரையும் முடிப்பது பெரியவிஷயம் இல்லை என்றாலும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் இது தேவை இல்லாத தலைவலி என்று அந்த அம்மா சொன்ன தொகையை கொடுத்தோம்.

ஆனா அந்த அம்மா அதோட விடாம அவன் பையன் கிட்ட என்ன சொல்லுச்சோ அந்த பையன் தான் அந்த பெண்ண பாண்டிச்சேரி வர வெச்சு அந்த கேஸ்ல மாட்டி வெச்சான். அதுக்கு அப்புறம் எல்லாம் எங்களுக்கு சாதகமா இருந்தால நாங்களும் அதோட விட்டுடோம். ஆனா அந்த பெண்ண மட்டும் எங்க கிட்ட சிக்கல, சிக்கி இருந்தா இப்போ இந்த நிலை வந்து இருக்காது. என்று சொல்லி முடித்து இருநனர்.

சரி இப்போ அந்த அம்மா இதுக்கு ஒத்துக்குமா, இப்போ அந்த அதியன் வேற அந்த பக்கம் இருக்கான். 

அன்னிக்கு நாங்க பணம் கொடுத்து, பேசினது எல்லாம் விடியோ எடுத்து வைச்சி இருக்கோம்.

இப்பவும் பணம் தரதா சொல்லி பாப்போம், ஒத்துக்கலைனா, இந்த விடியோவை வைச்சி மிரட்டுவோம் என்றனார் இருவரும்.

வினை வதைத்தவன் வினை அருப்பான், தினை விதைத்தவன் தினை அருப்பான்………………..

நிலவு தேயும்…………

Advertisement