Advertisement

வணக்கம் தோழிகளே, 

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 21

போலீஸ் வண்டி அந்த Restaurant இல் நுழைந்ததும், ஆனந்தனின் ஆட்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனந்தனும் மீண்டும் அழைப்பு எடுத்தனர், அவனிடம் இங்கு இருக்கும் நிலவரத்தை கூறினர், ஆனந்தன் இப்போது அவளை நெருங்க வேண்டாம் என்றும், போலீஸ் கையில் மாட்டிக்கொள்ளாமல் அங்கு நடப்பவற்றை கண்ணானிக்கவும் சொன்னான்.

இதுவே சென்னையாக இருந்தால் அவர்களின் நடவடிக்கை வேறாக இருக்கும், இங்கு அவர்கள் அரசியல் சொல்வாக்கு சொல்லுபடியாகாது, அதுவும் இல்லாமல், பாண்டிச்சேரி வேறு மாநிலமாக இருப்பதால் இங்கு இவர்களால் போலீஸ் மூலமும் ஏதும் செய்யமுடியாது. 

பெரிய அதிகாரிகளை தெடர்புக்கொண்டு ஏதும் செய்யலாம் தான் ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அது தங்களுக்கே பாதகமாக முடியவாய்ப்புள்ளது.

எனவே தான் அவர்களை கண்ணானிக்க மட்டும் சொன்னது. இங்கு ரிசப்ஷன் நேக்கி வந்த நேத்திரா தன் போனில் குறுந்தகவல் வந்தற்கான சத்தம் கேட்டு அதை எடுத்துரப்பார்த்தாள்.

அது அதியன்னிடம் இருந்து. அது ஓர் வாய்ஸ் மெசேஜ், அதை திறந்தாள், அதில்

ஹாய் நேத்ரா, இன்னும் எனக்காக அங்க நீ இருந்தன  ஐயம் சாரி நான் அங்க இல்ல !!

என்ன நான் சொல்றது புரியலயா?

நான் அங்க இருந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு, நீ என் குடும்பத்துக்கு செய்த தூரோகத்துக்குநான் உன்ன என்ன வேனா செய்து இருக்கலாம். 

ஆனா என் அப்பா என்ன அப்படி வளக்கல, அதுவும் இல்லாம நான் இன்னும் என் அதுமாவ மறக்கல?!!

உன்னால எப்படி என் குடுபத்துக்கு இதை பன்ன முடிஞ்சுது, என்னால முடியல…..

இனி நான் உன் வாழ்கையில் இல்ல, இத நீ கேக்கும் போது நான் இந்த நாட்டவிட்டு கூட போய் இருக்கலாம்.

நான் நினைச்சமாதிரி உன்ன தன்டிக்க முடியில!! ஆனா இந்த ……………

என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே யாரோ அவள் மீது மோதா அவள் அலைபேசியை தவறவிட்டாள், அது ஏதோ ஒர் மூலையில் விழுந்து.

ஏன் எல்லாரும் இப்படி ஒடுகிறார்கள் என்று தெரியாமல் தலையை பிடித்தபடி நின்றாள்.

அப்போது ஒரு பெண் காவலர் அவள் தோள் மீது தட்டி அவள் கையை பற்றி இழுத்தார்.

அவள் என் ஏது என்று உணரும் முன் அங்கு பெரிய ஹாலில் ஆண்கள், பெண்கள் என பலர் நிர்க்கவைக்பட்டு இருந்தனர், அவர்களுடன் இவளும் நற்க வைக்கபட்டாள்.

அங்கு என்ன நடக்கிறது எதற்க்கு தன்னை இங்கு நிற்க வைத்து இருக்கிறார்கள், என்று அறியாமல் தன் அருகில் இருப்பவர்களிடம் கேட்கலாமா என்று நினைத்து திரும்புகையில், அவர்கள் யாரும் அவள் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை, அப்போது தான் உணர்ந்தாள்.

கொஞ்சம் கொஞ்சம் மாக தன் நினைவுகளை இழந்தவள் அருகில் இருக்கும் ஆடவன் மீது மயங்கி இருக்க, அவன் இவளை தாங்கியபடி தள்ளாடி இருக்க, அதை புகைபட கருவிகள் வேகமாக உள்வாங்கியது.

பின் அங்கு இருந்தவர்களை மொத்தமாக வேனில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சொல்ல. அங்கே நேத்தாராவின் கைபையில் அவளின் அடையாள அட்டையும் அவளின் முகவரி மற்ற விவரங்கள் கிடைக்க அதை எல்லாம் பட்டியல் இட்டவர்கள், அதை பிரஸ்க்கு கொடுக்க, அதில் பொம்பாலும் வெளிநாட்டு பயனிகள் மற்றும் சில பொரும்புள்ளிகளின் பிள்ளைகள் இருக்க, அவர்களை ஈர்த்து என்னவே நேத்திராவின விவரங்கள் தான்.

அதுவும் அவள் மருத்து மானவி மற்றும் சென்னையை சேர்ந்தவள், தனியாக வந்து இருந்தாள் என்பதும் அவர்களுக்கு சுலபமாக தெரிய அவளின் விவரங்களே தலைப்பு செய்தியாகியது.

இங்கு நடக்கும் எல்லாவற்றையும் வீடியோவாகவும், புகைப்படம்மாகவும் எடுத்து, அதை ஆனந்தனுக்கு அனுப்பி இருந்தனர்.

இது எல்லாம் இப்படி இருக்க அடுத்தநாள் இது தலைப்பு செய்தியாகி இருக்க, இது எதுவும் அறியாமல் நேத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தால்.

அதை எதை அறியாமல் அதியன் விமானத்தில் தன் பயனத்தை தொடங்கி இருந்தான். 

…………………..

இங்கே இளா செய்தி கேட்டதும் புறப்பட்டு இருந்தான், அவன் வரும் போதே தன்  நன்பர்களை தெடர்புக்கொண்டு அங்கு யார் இருக்கிறார்கள், யாரை தெடர்புக்கொண்டு என்ன செய்யலாம் என்று அலைபேசியில் பேசியபடியே வந்தான்.

ஆனந்தனால் ஏதும் செய்யமுடியவில்லை, முடியவில்லை என்பதைவிட சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இல்லை. முதலில் இது அவர்கள் இடம் இல்லை, அப்படியே ஏதும் செய்து அது சோதப்பிவிட்டால், இப்போது எலக்‌ஷன் நேரம், அதும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் கட்சி ஆட்களே அவர்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.

இரண்டாவது அவர்கள் கொடுத்த போதை மருந்து, எப்படியும் கைதானவர்கள் எல்லாம் மருத்துவ பரிசேதனைக்கு உட்படுத்தபடுவார்கள்.

அப்போது அவரகள் எந்த வகையான போதை மருந்தை எடுத்து இருக்கிறார்கள் என்று தெரியும், அப்படி செய்யும் போது நேத்ரா உட்கொண்ட மருந்து எது என்று தெரியவந்தாள், அது இன்னும் சிக்கல் ஆகிவிடும்.

அது வேறு மருந்து என்று தெரிந்தால், போலீஸ் அதன் நதிமூலம் ரிஷமூலம் ஆராய்ந்தால், அது இன்னும் தேவை இல்லாத பிரச்சனையை கொடுக்கும்.

இவர்கள் கொடுத்த போதை மருந்து இன்னும் சந்தை புழக்கத்தில் வரவில்லை, அதனால் ஆனந்தன் தன் ஆட்களை தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது என்று கண்ணானித்து தகவல் மட்டும் மே தர சொல்லி இருந்தான்.

……………..

அந்த நேரத்தில் இளா பாண்டிச்சேரியை அடைந்து இருந்தான், தன் பயிற்சி காலத்தின் போது இருந்த நன்பன் கார்த்திக் தற்போது போதை பெருள் தடுப்பில் இருப்பதால் அவன் எண்னை தன் நன்பர்கள் மூலம் பெற்றவன்,

அவனுக்கு அழைத்து நிலையை விளக்கி சொல்லி இருந்தான். இளாவை மருத்துவமனைக்கு வரச்சொன்னவன், நேத்ராவை அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு கைது ஆனவர்களில் எல்லாருடைய மருத்துவ அறிக்கையும் பற்றி சொன்னவன், இளா சென்னது போல் நேத்திராவிற்க்கு எடுத்துக்கொண்டது வேறு வகையான போதை மருந்து என்றும், இன்னும் அதன் விரியம் குறையவில்லை என்றும், கார்த்திக் அவளின் நிலையை இளாவிடம் கூறினான்.

இதை எல்லாம் ஆனந்தனிடம் அவனின் ஆட்கள் சொல்ல, அவன் மனதில் வேறு ஒருதிட்டம் உருவானது.

இளா நேத்ராவை வந்து பார்தவன் அவள் நிலையை டிஜிபி க்கு தகவல் சொன்னான்.

நேத்திரா எதற்கு இங்கு வந்தாள், யாரை பார்த்தாள், அவளுக்கு போதை மருந்து எப்போது வழங்கப்பட்டது என்று எந்த தகவளும் இளாவிற்க்கு தெரியவில்லை.

அவள் கல்லூரி விடுதியில் தொடர்புக்கொண்டு அவள் எங்கு சென்றாள் என்ற விவரம் கேட்டால், அவள் எதையும் கூறிபிடவில்லை, காலையில் விடுதியில் இருந்து கிளம்பினால் என்று அவள் அறை தோழி கூறினாள்.

 

பொதுவாக மானவிகள் இரவு 8 மணிக்குள் விடுதிக்கு திரும்பிவிட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை. மானவிகள் ஊருக்கு செல்கிறார்கள், இல்லை ஊரில் இருந்து திரும்பும் போது இந்த நேரம் கடந்துவிடும் என்று தெரிந்தால், முன்கூட்டியே விடுதி காப்பாளர் இடம் அனுமதி பெற்றால் அவர்கள் அனுமதிக்க படுவார்கள்.

ஆனால் நேத்ரா மாலையே திரும்பிவிடும் எண்ணத்தில் கிளம்பியதால் எதுவும் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

அவள் கிளம்பியதில் இருந்து அவள் அலைபேசியை வைத்து டிரேஸ் செய்து அவள் இருந்த இடங்களில் இருந்த சர்வேலன்ஸ் கேமரா பதிவுகளை பார்வை இட்டாலும் அதிலும், ஏதும் கிடைக்கவில்லை.

நேத்தரா பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள், அவள் யாரையும், சந்திக்கவில்லை, அவளையும் யாரும் சந்திக்கவில்லை. பின் அவள் ஆட்டோவில் கிளம்பி இருந்தாள்.

பின் அந்த  Restaurant பதிவுகளை பார்க்கும் போது அங்கு போருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி 15 நிமிடத்தில் இங்கு வந்து இருக்கிறாள், அங்கு வரவேற்பறையில் காத்து இருந்தவள், பின் Restaurant பகுதிக்கு செல்கிறாள். அங்கே ஜூஸ் ஆடர் செய்தவள், அதை பருகி சிறிது நேரத்தில் தன்நிலை இழக்கிறாள், அப்போது போலீஸ் வருகிறது, அதன் பிறகு நடந்த எல்லாம் அறிந்த இளாவால் அவள் யாரை பார்க்க வந்தாள் என்று மட்டும் தெரியவில்லை.

அவள் அடிக்கடி யாரிடமே பேனில் பேசுவதும், தகவல் அனுபுவதும் மாக இருந்து இருக்கிறாள், போலீஸ் உதவியுடன் அந்த எண்ணை டிரேஸ் செய்தால் அந்த எண்ணும்  அனைத்து வைக்கபட்டு இருந்தது.

அந்த இடத்தில் வேறுயாரவது அவளை தொடர்கிறார்களா? என்று பார்தால் அப்படி ஏதும் இல்லை!! அதியன் அது தெரிந்துதான் அவளை தொலைவில் இருந்தே கண்ணானித்தபடி இருந்தான், அவன் பயன்படுத்திய எண்ணைக்கூட அவன் அங்கேயே கடலில் விசிவிட்டு சென்று இருந்தான்.

அது மட்டும் இல்லாமல் இந்த எண்ணில் இருந்து கடந்த 3 மாதமாக தகவல் மற்றும் அழைப்பும் சென்று இருப்பதையும் அறிந்துக்கொண்டான்.

எப்படி அதை கவணிக்காமல் இருந்தேன் என்று யோசனையில் இருந்தவன். அந்த எண்ணை பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான், அவன் நன்பன் அழைத்தில் கவனம் கலைந்தவன், அவன் கூறிய செய்தி எதிர்பாத்து என்றாலும் அடுத்து எண்ண செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.

அது எண் போலியான ஆவனங்களை கொண்டு வாங்க பட்டு இருந்து, அதில் இருந்து எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை.

இனி நேத்திரா கண்விழித்த பிறகுதான் அடுத்து எண்ண என்பது பற்றி முடிவு செய்யவேண்டும்..

ஆனால் அதற்குள் அடுத்த அதிர்ச்சி அவர்களுக்கு காத்து இருந்து, மறுநாள் காலை செய்திதாளில். பிரபல தொழிலதிபர் தான் தவறா முடிவு எடுத்துவிட்டதாகவும். அதற்காக வருந்துவதாகவும் தலைப்பு செய்திகள் இருக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அதன் சாராம்சம், பிரபல தொழிலதிபர் தயாளன் 3 மாத்திற்கு முன், தன் மகள் நேத்திரா பயின்று வந்த பயிற்சி வகுப்பின் உரிமையாளர் மீது புகார் அளித்தார், அவர் நடத்தும் பயிற்சி வகுப்பில் படிக்கும் மானவிகள் பாலியல் தொல்லை செய்யபடுவதாகவும், அதை வைத்து அவர்கள் மீரட்டபடுவதாகவும் புகார் அளித்தார், ஆனால் அவர்  அளித்த புகார் தவறானது என்றும், அவருக்கு சில தவறான பழக்கவழக்கங்கள் இருந்து, அதை வளவன் கண்டித்து இருக்கிறார், அதற்கு பழிவாங்கும் செயல்லாக நேத்திரா அந்த புகார் அளித்து இருக்கிறார், 

முதலில் இது பற்றி அறியாத அவர் தந்தை அவரை ஆதரித்து கருத்தி தெரிவித்தார், தற்போது போதை மருந்து வழக்கில் அவர் கைதான அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது, அதோடு தான் எப்போதும் தவறுக்கு துனை போகமாட்டேன்.

தவறு யார் செய்தலும் அதை மண்ணிக்கமுடியாது என்றும், அதன் நான் நேத்திராவிக்கு ஆதரவாக தெரிவிந்த கருத்தை திரும்பெருகிறேன். என்றும் அதில் இருந்து.

மேலும் நேத்திர தயாளனின் சொந்த மகள் இல்லை, வளர்ப்பு மகள் ஆவார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்றும் செய்தி வெளியாகி இருந்து?????!!!!!!!  

நிலவு தேயும்………… 

Advertisement