Advertisement

வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

தேய்வது நிலவல்ல

அத்தியாயம் – 10

அப்பா என்ற அலறல் உடன் தன் கன்னத்தை பிடித்த படி சோபாவில் வந்து விழ்தான் ராகவ்……

அறிவுக்கெட்டவனே எத்தன தடவை சொன்னேன் ஒரு கல்யாணம் முடியிர வர உன் பேர் எந்த பிரச்சனையிலும் மாட்டகூடாதுனு.

என்ன பண்ணி வெச்சி இருக்க பாத்தியா, அந்த எம் எல் ஏ ஒட பெண்ண பேசி முடிச்சி, அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலாம் இருக்கர நிலையில, உன் பேர இப்படி நாரடிச்சு வெச்சு இருக்க.

பெண் வீட்டுல கேக்கற கேள்வி க்கு என்னால பதில் சொல்ல முடியில. என்று சொன்னவரை முறைத்து பார்த்த படி வந்த அவர் மனைவி, இப்படி நினைச்சி இருந்த உங்களுக்கும் எனக்கும் கல்யாண மே நடந்து இருக்காது.

நீங்க எப்படி இருந்திகளே அப்படி தான் உங்க புள்ளையும் இருப்பான், அவன் முன்னாடியே கண்டவளோட இந்த வயசுல நீயே திரியும் போது அவன் மட்டும் எப்படி இருப்பான்.

நடந்த விட்டுட்டு இது இருந்து எப்படி புள்ளைய காப்பத முடியும்னு யோசிங்க, அத விட்டு சும்மா இங்க சத்தம் போட ஆச்ச….

என்ற மனைவியின் பதிலில் இன்னும் கடுப்பானவர், அது ஒன்னும் அவ்வளே ஈசி இல்ல.

யாரே ஒரு ரோட்டுல போறவன் கேஸ் குடுத்து இருக்கான் நினச்சியா, நம்ம போய் மீரட்டி வாப்பஸ் வாங்க வைக்க.

தொழிலில் எனக்கு எதிரியே அவன் தான், அது மட்டும் இல்லாம அந்த டி ஜி பி, இத உடனே மீடியாவில் பிளாஸ் பன்னிடான். எல்லாத்துக்கும் மேல இந்த கேஸ் அந்த இளமாறன் கிட்ட கொடுத்துடான்.

எந்த பக்கதுல இருந்தும் நமக்கு சாதகமா ஒன்னும்மே பன்ன முடியில, எல்லாத்துக்கும் மேல அந்த பெண்ணு மேல லேச கிரல் விழிந்தாலும் அடுத்த நிமிஷம் அதுக்கு நாம தான் காரணம் சொல்லி இன்னும் இந்த கேஸ் ஸ்டாங் ஆகிடும்.

இப்ப என்ன பன்றது தெரியாம நானே முழிச்சுட்டு இருக்கேன்.

சொல்லுடா சொல்லி தொலை முழுசா என்னனா பன்னி இருக்கிங்க சொல்லித்தொல என்று மேலும் மகனிடம் காய்ந்தார்.

………………… 

ரவி வீட்டிலும் இதே நிலை அவன் தந்தை ஆளும் கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர், இத்தனை நாள் மகனின் லீலைகள் தெரிந்தும் கண்டும் காணாமலும் இருந்தவர்.

பெரிய வீட்டு பிள்ளைகளிடம் இது எல்லாம் சாதாரனம் என்ற மனநிலைநிலை இருப்பவர்.

ஆனால் பதவியா குடும்பமா என்றால் அவருக்கு பதவிதான் முக்கியம். ஏன் என்றால் அவருக்கு குடுபத்திற்க்கு பஞ்சம் இல்லை, ஆனால், இவன் அவரின் முறையான வாரிசு.

அந்த வகையில் அவனை காபாற்ற வேண்டிய நிர்பந்தம், தன் சொல்வாக்கையும், பதவியும் காபாற்ற வேண்டும்.

அதே சமயம் எதிரியின் பலம் அறிந்தவர், அவர்களிடம் மேத முடியாது, பணத்துக்கு விலைபோகும் ஆள் இல்லை வழக்கு விசாரிப்பவன்.

அதனால் இவர்கள் இருவரின் ஒரே குறி வளவன் னாகி போனான்.

…………………..

இளமாறன் சென்னை வந்த சுந்தர பாண்டியன் (டி ஜி பி) சந்தித்தான், அவன் வரும் போதே வழக்கை பற்றிய தகவல்களை திரட்டி இருந்தான். ஆனாலும் அவன் வந்த பின் வழக்கு சம்பந்த பட்ட அனைத்தும் ஒப்படைக்கபட்டது.

அதன் படி வளவன், ராகவ் மற்றும் ரவி முவருக்கும் கைது வாரன்டு பிரபிக்கபட்டது, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட  இருந்தனர்.

அதன்  படி  அனைவரும் எப்போது வேண்டுமானாலும்  கைது செய்யப்பட இருந்தனர்.

மறு நாள் காலை எல்லோருக்கும் ஒரு ஒரு விதமாக விடிந்து.

காலையில் ரவி மற்றும் ராகவ்வின் சார்பாக பேச அவர்களின் வக்கீல்கள் வளவன் வீட்டில் இருந்தனர்.

கேஸ்சில் வளவன் பெயர் தான் முக்கிய குற்றவாளி என்ற இடத்தில் இருந்து. பயிற்சி மையம் தொடங்கி மற்றும் பயன்படுத்தபட்ட கைபேசி, கம்பியூட்டர், லப்டாப் என அனைத்தும் வளவன் பெயரில் இருந்து.

இப்போது வரை  எங்கும் ராகவ் மற்றும் ரவி பெயர் பெரிய அளவில் வரவில்லை என்றாலும், வழக்கை விசாரிக்கும் போது எல்லாம் வெளி வந்துவிடும்.

தனக்கு எதும் தெரியாது இவர்கள் இருவரும் திட்டமிட்டு தன்னை இதில் பயன்படுத்திக்கொண்டார்கள் என வளவன் செல்லிவிட்டாள், வழக்கு கண்டிப்பாக இவர்கள் இருவருக்கும் எதிர்ராக திரும்பிவிடும்.

மேலும் அதற்க்கு வலு சேர்ப்பது போல், இதுவரை கிடைத்த அனைத்து வீடியோ ஆதாரத்திலும் வளவன் இல்லை. எல்லாம் அவன் இடத்தில் நடந்தே தவிர அவனை கொண்டு நடக்கவில்லை.

அவன் அப்ரூவர் அகிவிட்டால் வழக்கு மொத்தமாக இவர்கள் இருவர் புறமும் திரும்பிவிடும். அது மட்டும் அல்ல இதில் மேலும் பல பெரிய இடத்து பிள்ளைகள் மற்றும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என ஒரு பெரிய கூட்டமே பிடிபட வேண்டி வரும். 

இத்தனை நாள் வெளி உலகத்திற்க்கு தெரியாத இவர்களின் மற்றோரு பக்கம் வெளிவந்தாள் எல்லாம் முடிந்துவிடும்.  அதற்காக அவர்களே இவர்கள் இருவரையும்  கொன்றாலும் கொல்லாம்.

அதனால் வளவன் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டால், பிரச்சைனையின் வீரியம் குறையும் மேலும் நாட்கள் கடந்து போனால் மக்களூம் மீடியாவும் இந்த விஷயத்தை விட்டு வேறு ஒன்றில் கவனம் சொலுத்துவார்கள்.

அதனால் வளவன் சந்தித்து பேச அவன் வீடு வந்து இருந்தனர், அவன் தாய் மற்றும் தந்தை மட்டும்மே இருக்க, அவன் தங்கை அவளின் மாமா வீட்டில் தங்க வைக்கபட்டு இருந்தாள்.

இங்க பாருங்க வளவன் நாங்க நேர விஷயத்துக்கு வரோம். நீங்க  3 பேரும் எப்பவேனா கைது ஆக வாய்ப்பு இருக்கு. இன்னிக்கு இருக்க நிலையில் ஆதாரம் எல்லாம் உங்களுக்கு எதிராக தான் இருக்கு.

இப்போ இருக்கற நிலையில் உடன்னடியாக வெளிய வர முடியாதுனாலும், இருக்கர ஆதாரத்தை வைத்து எப்படியும் நாங்க இரண்டு பேரையும் வெளியில் எடுத்துடுவோம்.

ஆனா அதுக்கு நீங்க வாய திறக்காம இருந்தா எங்க வேலை சுலபமாக முடியும். எப்படியும் உங்களுக்கு இருக்க வசதிக்கு உங்களா கேஸ் நடத்தி இதுல இருந்து வெளியில் வரமுடியாது.

நாங்க சொல்லுரத கேட்ட கொஞ்ச நாள்ள நாங்களே உங்க வெளிய எடுத்துடுவோம். 

இன்னும் இந்த கேஸ்ல நேரடிய பாதிக்கபட்ட யாரும் புகார் கொடுக்கல இனியும் கொடுக்கமாட்டாங்க.

அதனால இந்த விஷயத்தில் நீ எங்களுக்கு உதவினா உன் லைப் செட்டில் பன்ன வேண்டியது எங்க பொருப்பு. மொத்தமா உனக்கு 5 கோடியும் நீ இந்த நாட்டவிட்டு போக எல்லா ஏற்பாடும் பன்னித்தறோம். வெளிநாட்டு வேலையோட.

இதை ஏன எனக்கு பன்றிங்க இதையே அவங்க இருண்டு பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது தானே என்றான் வளவன், இது வரை அவர்கள் பேசியத்தை கேட்ட அவன் கடும் கோபத்தில் இருந்தான்.

ஆரபத்தில் இருத்தே இது வேண்டாம் என்று நிறை சொல்லி இருந்தான், அவன் நன்பர்களை அவன் இந்த அளவு எதிர்பார்கவில்லை. 

கடைசியாக அவன் தேவியிடம் அந்த பார்ட்டியில் பேசியபிறகு தான் அவனுக்கு பிரச்சனையின் திவிரம் புரிந்து.

அதன்பின் தான் அவன் அலுவலகத்தில் அவன் நன்பர்கள் அறையை பரிசோதித்தான். அதில் அவனுக்கு கிடைத்த தகவல்கள் ஒரு அண்ணன்னாக அவனை நிலை குலைய வைத்து இருந்தது. தான் எப்படிபட்ட இடத்தில் சிக்கி இருக்கிறோம் என அவன் அறிந்த போது தான் பிரச்சையின் வீரியம் புரிந்து. ஆனால் என்ன செய்ய நிலைமை கைமீறி இருந்து.

………………….

இளமாறன் சென்னையை அடைந்தவுதன் டி ஜி பி யை பார்க்க சென்றான். வரும் போதே கேஸின் அனைத்து விவரங்களையும் திரட்டி இருந்தான்.

வழக்கின் முக்கியதுவமும், அதனால் தான் சந்திக்க போகும் எதிர்ப்புகளும் சாதாரனமாக இருக்காது என்று புரிந்து. 

ஏதற்காக தன்னை இந்த வழக்குகாக வரவழைக்கப்பட்டோம் என்றும் புரிந்துக்கொன்டான். 

அலூவலகத்தினுல் நுழைந்தும் அவனை எதிர் கொன்டவர், வழக்கு பற்றி அனைத்து விவரமும் பகிர்ந்துக்கொண்டார். 

இரு நாட்களுக்கு முன்னே நேத்திரா தொடர்பு க்கொள்ளும் போதே அவருக்கு தெரியும், கன்டிப்பாக சரியான அதிகாரியால் வழக்கு விசாரிக்கபடவில்லை என்றால், கண்டிப்பாக வழக்கை உடைத்துவிடு   குற்றவாளிகள் எளிதில் வெளி வந்து விடுவார்கள்.

மேலும் இந்த மாதிரியான வழக்குகளில், வழக்கு  போடும் போது இருக்கும் பரபரப்பும், கோபமும் போக போக மாறிவிடும். பாதிக்கபட்டவர்கள் வழக்கை வாபஸ் வாங்கியும் இருக்கிறார்கள்.

அதிலும் இந்த வழக்கு பாதிக்கபட்டவர்களால் நேரடியாக கொடுக்கபட்ட வழக்கு இல்லை. நேத்ராவின் குடும்ப விவரம் அவர் அறிந்தே அதனால் அவளுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று தொரியாது.

அப்படியே கிடைத்தாலும் ஒரு 18 வயது பெண்னை அவர் இந்த வழக்கில் தனியாக விட விரும்பவில்லை. அதனால் தான் இளவை இங்க அவசரமாக இடம் மாற்றல் வழங்கி, இந்த வழக்கை அவனிடம் ஒப்படைத்தார்.

அவன் வந்து வழக்கை எடுக்கும் வரை அவள் புகார அளிப்பதையும் தள்ளி போட்டார்.

அதன் படி அவன் இங்கு வந்துவிட்டான் என்று அறிந்தபின்தான் அவள் புகார் அளிக்கச்சொன்னது. அதுவும் வழக்கு உடனடியாக அவனுக்கு கொடுக்கபட்டது.

அது வரை எது வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று இருந்த ராகவ் மற்றும் ரவிவின் குடுபத்தினர், அதன் திவிரத்தை உனர்ந்தனர். அதனால் தான் வளவனிடம் பேசியது.

நேத்ரா இளாவிடம் அறிமுக படுத்தியவர், பாத்துக இளா இவளும் என் பெண்ணுமாதிரி தான். இந்த கேஸ்ல எப்ப வேனா என்ன வேனா நடக்கலாம்.

ஆனா எது நடந்தாலும் நேத்ராவா விட்டுடாதே. என்று சென்னவர், எதிர்காலத்தில் நடக்க போவதை அறிந்தே சொன்னாரே என்னவோ!!!

அன்று முழுவதும் போலீஸ் நிலையத்தில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, நேத்ரா மாலை வீட்டினூல் நூழைந்தாள். இது வரை இப்படி ஒரு விஷயம் சொய்ய போவதாக அவள் வீட்டில் யார் இடமும்    சொல்லவில்லை.

அதனால் வீட்டில் என்ன நிலை என்று அவளாள் அனுமானிக்கமுடியவில்லை. உள்ளே நுழைந்தவுடன் வரவேற்ப்பு அறையில் இருந்தனர் தயாளனும், அவர் மனைவி ரேகாவும்.

அவள் நுழைந்தவுடன் உன் மனசில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாய் நேத்ரா, யார கேட்டு இப்படி யெல்லாம் செய்ற, நாளைக்கு எதாவது பிரச்சனை வந்தா யார் பதில் சொல்றது. என்று ஏகத்துக்கும் எகிறினார்.

இதில் எதிலும் தலையிடாமல் இருவரையும் அமைதியாக பார்த்தபடி இருந்தார் தயாளன், பின் நேத்ராவிடம் சொன்று சில விசயங்களை கேட்டவர், பின் அனைவரையும் சாப்பிட்டு உறங்க சென்றனர்.

மறுநாள் காலை யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம் இருந்து நேத்ராவிற்கு ஆதரவு வந்து இருந்து பத்திரிகை செய்திகளில்…………..

நிலவு தேயும்………… 

Advertisement